logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கும்பகோணம் அருகே வண்ணக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ இரட்டை விநாயகர், அருள்மிகு ஸ்ரீ கருமாரியம்மன், ஸ்ரீ பாலவிநாயகர் மற்றும் பாலமுருகன் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி திருவிழா இந்த ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழா கடந்த 15ஆம் தேதி சக்தி கரகம் புறப்பாடு மற்றும் பூச்சொரிதலுடன் தொடங்கி, தினமும் பல்வேறு வாகனங்களில், பலவிதமான அலங்காரங்களுடன் சுவாமி வீதியுலா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீக்குழி இறங்குதல், அதாவது தீமிதி, இன்று நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இந்த தீமிதி திருவிழாவைக் காண சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா நாளை மஞ்சள் நீராட்டு விடையாற்றியுடன் நிறைவுபெறுகிறது. நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகக் கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.

6 hrs ago
user_A. Mathankumar
A. Mathankumar
கும்பகோணம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
6 hrs ago
cd988bfa-7154-4802-ae44-3b29a5d9234a

கும்பகோணம் அருகே வண்ணக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ இரட்டை விநாயகர், அருள்மிகு ஸ்ரீ கருமாரியம்மன், ஸ்ரீ பாலவிநாயகர் மற்றும் பாலமுருகன் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி திருவிழா இந்த ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழா கடந்த 15ஆம் தேதி சக்தி கரகம் புறப்பாடு மற்றும் பூச்சொரிதலுடன் தொடங்கி, தினமும் பல்வேறு வாகனங்களில், பலவிதமான அலங்காரங்களுடன் சுவாமி வீதியுலா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீக்குழி இறங்குதல், அதாவது தீமிதி, இன்று நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இந்த தீமிதி திருவிழாவைக் காண சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா நாளை மஞ்சள் நீராட்டு விடையாற்றியுடன் நிறைவுபெறுகிறது. நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகக் கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்காவுக்குட்பட்ட அய்யம்பேட்டையில் உள்ள ஜமாஅத்தே இஸ்லாம் கிளையின் அரபி வகுப்புகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவிகளுக்கு சமத்துவத்தைப் போதிக்கும் வகையில், கடந்த மூன்று ஆண்டுகளாக உண்டியல் ஒன்று வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அளிக்கும் பணத்தைச் சேமிக்கும் பழக்கத்தை அந்தச் சிறுமிகள் கற்றுக்கொள்கின்றனர். ஒரு வருட முடிவில், சேமித்த உண்டியலைத் திறந்து, அதில் இருக்கும் பணத்தை ஜாதி மத பேதமின்றி ஏழைகளுக்கு உதவும் பழக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி, முதல் ஆண்டில் பாலஸ்தீனத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுமிகள் சேர்த்த பணம் வழங்கப்பட்டது. இரண்டாம் ஆண்டில், ஆதரவற்றோர் இல்லத்திற்கு சிறுமிகளை அழைத்துச் சென்று, அவர்களது கைகளால் உணவுப் பொருட்கள் மற்றும் பணமாக ஆதரவற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து தற்போது, பண்டாரவாடையில் சிறுமிகள் சேகரித்த உண்டியல் பணத்தில், ஊராட்சியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு சிறுமிகளின் கைகளால் இனிப்புகள் மற்றும் ரொக்கம் வழங்கப்பட்டுள்ளது. இச்செயலை பெண்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அய்யம்பேட்டை பகுதியில், கடந்த மூன்று ஆண்டுகளாக சிறுமிகளுக்கு உண்டியல் வழங்கி பணம் சேமிக்கும் பழக்கத்தை பெற்றோர்கள் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர்.
    1
    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்காவுக்குட்பட்ட அய்யம்பேட்டையில் உள்ள ஜமாஅத்தே இஸ்லாம் கிளையின் அரபி வகுப்புகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவிகளுக்கு சமத்துவத்தைப் போதிக்கும் வகையில், கடந்த மூன்று ஆண்டுகளாக உண்டியல் ஒன்று வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அளிக்கும் பணத்தைச் சேமிக்கும் பழக்கத்தை அந்தச் சிறுமிகள் கற்றுக்கொள்கின்றனர்.

ஒரு வருட முடிவில், சேமித்த உண்டியலைத் திறந்து, அதில் இருக்கும் பணத்தை ஜாதி மத பேதமின்றி ஏழைகளுக்கு உதவும் பழக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி, முதல் ஆண்டில் பாலஸ்தீனத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுமிகள் சேர்த்த பணம் வழங்கப்பட்டது. இரண்டாம் ஆண்டில், ஆதரவற்றோர் இல்லத்திற்கு சிறுமிகளை அழைத்துச் சென்று, அவர்களது கைகளால் உணவுப் பொருட்கள் மற்றும் பணமாக ஆதரவற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து தற்போது, பண்டாரவாடையில் சிறுமிகள் சேகரித்த உண்டியல் பணத்தில், ஊராட்சியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு சிறுமிகளின் கைகளால் இனிப்புகள் மற்றும் ரொக்கம் வழங்கப்பட்டுள்ளது. இச்செயலை பெண்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

அய்யம்பேட்டை பகுதியில், கடந்த மூன்று ஆண்டுகளாக சிறுமிகளுக்கு உண்டியல் வழங்கி பணம் சேமிக்கும் பழக்கத்தை பெற்றோர்கள் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர்.
    user_சிவகுமார்.மு
    சிவகுமார்.மு
    பத்திரிகையாளர் பாபநாசம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    12 hrs ago
  • தஞ்சாவூரில் உள்ள அய்யம்பேட்டையைச் சேர்ந்த தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியின் வேன் ஓட்டுநர் முகமது யாஷின், 25 மாணவர்களை ஏற்றிச் சென்றபோது மதுபோதையில் அதிவேகமாக வாகனம் ஓட்டிய புகாரில் கைது செய்யப்பட்டார். இந்த ஓட்டுநர், கிரிக்கெட் போட்டிக்காக 25 மாணவர்களை தஞ்சாவூர் அரண்மனை மைதானத்திற்கு அழைத்துச் சென்றிருந்தார். மீண்டும் மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வழியில்தான் குடிபோதையில் அதிவேகமாகச் சென்றதாகப் பொதுமக்கள் புகார் அளித்தனர். பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து, போலீசார் வேனை நிறுத்திச் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில், ஓட்டுநர் முகமது யாஷின் மதுபோதையில் இருந்தது உறுதியானதால், போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
    1
    தஞ்சாவூரில் உள்ள அய்யம்பேட்டையைச் சேர்ந்த தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியின் வேன் ஓட்டுநர் முகமது யாஷின், 25 மாணவர்களை ஏற்றிச் சென்றபோது மதுபோதையில் அதிவேகமாக வாகனம் ஓட்டிய புகாரில் கைது செய்யப்பட்டார்.

இந்த ஓட்டுநர், கிரிக்கெட் போட்டிக்காக 25 மாணவர்களை தஞ்சாவூர் அரண்மனை மைதானத்திற்கு அழைத்துச் சென்றிருந்தார். மீண்டும் மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வழியில்தான் குடிபோதையில் அதிவேகமாகச் சென்றதாகப் பொதுமக்கள் புகார் அளித்தனர்.

பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து, போலீசார் வேனை நிறுத்திச் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில், ஓட்டுநர் முகமது யாஷின் மதுபோதையில் இருந்தது உறுதியானதால், போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
    user_Thanjavurnews
    Thanjavurnews
    Local News Reporter தஞ்சாவூர், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    17 hrs ago
  • மல்காவ் உயர்நிலைப் பள்ளியில் ஜூன் 21, ஞாயிற்றுக்கிழமை அன்று உலக யோகா தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. சமூக சேவகர் நிதேஷ் தேலி அவர்களின் எண்ணத்தில், சாவந்த்வாடியின் ஃபிட்னஸ் யோகா அகாடமி மற்றும் கோவாவின் ஸ்ரீ தத்தா பத்மநாப் பீடம், சத்குரு யோகா குருகுலம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கமாக, முக்கிய விருந்தினர்கள் தீபம் ஏற்றினர். நிகழ்வில், யோகாவின் முக்கியத்துவம், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அதன் அவசியம், மற்றும் வழக்கமான யோகா பயிற்சி செய்வதால் ஏற்படும் உடல் மற்றும் மன நலன்கள் குறித்து விரிவான வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. மாணவர்கள் பல்வேறு யோகாசனங்கள், பிராணாயாமம் மற்றும் தியானப் பயிற்சிகளை செய்து காட்டி, அங்கிருந்த பார்வையாளர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றனர். மல்காவ் ஆங்கிலப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாருதி ஃபாலே, மேற்பார்வையாளர் விட்டல் சாவந்த், சமூக சேவகர் நிதேஷ் தேலி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஃபிட்னஸ் யோகா அகாடமி, சாவந்த்வாடியைச் சேர்ந்த யோகா ஆசிரியர் ராமநாத் சாவந்த், மாவட்டத் தலைவர் ராசிகா சாவந்த், சேத்னா ஷிண்டே, அருண் பவார், நிஷா கவ்லி, சமீர் ஹட்கர், மகேஷ் பரப், தர்ஷனா பெட்னேகர், பிரகதி பாம்னே, அனிஷா காடி, ரூபாலி பெட்னேகர், காசிநாத் பெட்னேகர் ஆகியோரும் இதில் பங்கேற்றனர். மேலும், கோவாவின் ஸ்ரீ தத்தா பத்மநாப் பீடம், சத்குரு யோகா குருகுலத்தைச் சேர்ந்த யோகா ஆசிரியர்களான பூத்நாத் பாசோல்கர், தினநாத் காலோஜி மற்றும் கனக் காலோஜி ஆகியோருடன் பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத ஊழியர்கள் மற்றும் திரளான மாணவர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். யோகா என்பது இந்திய கலாச்சாரத்தின் விலைமதிப்பற்ற பாரம்பரியம் என்றும், ஆரோக்கியமான, மன அழுத்தமில்லாத மற்றும் சமச்சீரான வாழ்க்கைக்கு யோகாவை மேற்கொள்வது காலத்தின் தேவை என்றும் இந்த நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது. மாணவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு ஆர்வத்துடன் பதிலளித்தனர்.
    1
    மல்காவ் உயர்நிலைப் பள்ளியில் ஜூன் 21, ஞாயிற்றுக்கிழமை அன்று உலக யோகா தினம் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. சமூக சேவகர் நிதேஷ் தேலி அவர்களின் எண்ணத்தில், சாவந்த்வாடியின் ஃபிட்னஸ் யோகா அகாடமி மற்றும் கோவாவின் ஸ்ரீ தத்தா பத்மநாப் பீடம், சத்குரு யோகா குருகுலம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கமாக, முக்கிய விருந்தினர்கள் தீபம் ஏற்றினர்.

நிகழ்வில், யோகாவின் முக்கியத்துவம், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அதன் அவசியம், மற்றும் வழக்கமான யோகா பயிற்சி செய்வதால் ஏற்படும் உடல் மற்றும் மன நலன்கள் குறித்து விரிவான வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. மாணவர்கள் பல்வேறு யோகாசனங்கள், பிராணாயாமம் மற்றும் தியானப் பயிற்சிகளை செய்து காட்டி, அங்கிருந்த பார்வையாளர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றனர்.

மல்காவ் ஆங்கிலப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாருதி ஃபாலே, மேற்பார்வையாளர் விட்டல் சாவந்த், சமூக சேவகர் நிதேஷ் தேலி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஃபிட்னஸ் யோகா அகாடமி, சாவந்த்வாடியைச் சேர்ந்த யோகா ஆசிரியர் ராமநாத் சாவந்த், மாவட்டத் தலைவர் ராசிகா சாவந்த், சேத்னா ஷிண்டே, அருண் பவார், நிஷா கவ்லி, சமீர் ஹட்கர், மகேஷ் பரப், தர்ஷனா பெட்னேகர், பிரகதி பாம்னே, அனிஷா காடி, ரூபாலி பெட்னேகர், காசிநாத் பெட்னேகர் ஆகியோரும் இதில் பங்கேற்றனர். மேலும், கோவாவின் ஸ்ரீ தத்தா பத்மநாப் பீடம், சத்குரு யோகா குருகுலத்தைச் சேர்ந்த யோகா ஆசிரியர்களான பூத்நாத் பாசோல்கர், தினநாத் காலோஜி மற்றும் கனக் காலோஜி ஆகியோருடன் பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத ஊழியர்கள் மற்றும் திரளான மாணவர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

யோகா என்பது இந்திய கலாச்சாரத்தின் விலைமதிப்பற்ற பாரம்பரியம் என்றும், ஆரோக்கியமான, மன அழுத்தமில்லாத மற்றும் சமச்சீரான வாழ்க்கைக்கு யோகாவை மேற்கொள்வது காலத்தின் தேவை என்றும் இந்த நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது. மாணவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு ஆர்வத்துடன் பதிலளித்தனர்.
    user_मालवणी Express
    मालवणी Express
    Iam writer and editor India•
    10 hrs ago
  • கடலூர் மாவட்டம், விருதாச்சலம் பெரியார் நகர் பகுதியில், தீயணைப்பு நிலையம் எதிரில் அமைந்துள்ள வள்ளலார் தெருவில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் இலைகள், பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகள் மற்றும் பாலிதீன் குப்பைகள் போன்ற பொருட்களால் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அடைப்பின் காரணமாக அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கழிவுநீர் வாய்க்காலை முறையாகப் பராமரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
    1
    கடலூர் மாவட்டம், விருதாச்சலம் பெரியார் நகர் பகுதியில், தீயணைப்பு நிலையம் எதிரில் அமைந்துள்ள வள்ளலார் தெருவில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் இலைகள், பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகள் மற்றும் பாலிதீன் குப்பைகள் போன்ற பொருட்களால் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அடைப்பின் காரணமாக அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கழிவுநீர் வாய்க்காலை முறையாகப் பராமரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
    user_Premkumar prem Prem
    Premkumar prem Prem
    Engineer விருத்தாசலம், கடலூர், தமிழ்நாடு•
    13 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பள்ளி வளாகத்தில் மாணவ-மாணவிகள் யோகா பயிற்சி மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் கருணாநிதி தலைமை தாங்கினார். மேலும், பள்ளி வளர்ச்சிக் குழு தலைவர் சசிலாபானுசாதிக் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உடற்கல்வி ஆசிரியர் சரவணன், யோகா செய்வதன் மூலம் மனம் மற்றும் உடல் பலம் பெறுவதாகவும், நினைவுத்திறன் அதிகரிப்பதால் பாடங்களை எளிதில் புரிந்துகொள்ள முடியும் என்றும் எடுத்துரைத்தார். அத்துடன், யோகாசனப் பயிற்சி நினைவுத்திறனை மேம்படுத்தி, மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவும் என்றும், கவனச்சிதறல் ஏற்படாது என்றும், உடல் ஆரோக்கியமாக இருக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து விழிப்புணர்வு அளித்தார். அதனைத் தொடர்ந்து, மாணவ மாணவிகள் தரையில் அமர்ந்து மூச்சுப் பயிற்சி, சூரிய நமஸ்காரம், பத்மாசனம், புஜங்காசனம் உள்ளிட்ட யோகாசனங்களை செய்தனர். இதில் ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பள்ளி வளாகத்தில் மாணவ-மாணவிகள் யோகா பயிற்சி மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் கருணாநிதி தலைமை தாங்கினார். மேலும், பள்ளி வளர்ச்சிக் குழு தலைவர் சசிலாபானுசாதிக் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உடற்கல்வி ஆசிரியர் சரவணன், யோகா செய்வதன் மூலம் மனம் மற்றும் உடல் பலம் பெறுவதாகவும், நினைவுத்திறன் அதிகரிப்பதால் பாடங்களை எளிதில் புரிந்துகொள்ள முடியும் என்றும் எடுத்துரைத்தார். அத்துடன், யோகாசனப் பயிற்சி நினைவுத்திறனை மேம்படுத்தி, மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவும் என்றும், கவனச்சிதறல் ஏற்படாது என்றும், உடல் ஆரோக்கியமாக இருக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து விழிப்புணர்வு அளித்தார். அதனைத் தொடர்ந்து, மாணவ மாணவிகள் தரையில் அமர்ந்து மூச்சுப் பயிற்சி, சூரிய நமஸ்காரம், பத்மாசனம், புஜங்காசனம் உள்ளிட்ட யோகாசனங்களை செய்தனர். இதில் ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    13 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள துர்வாசபுரத்தில் அமைந்துள்ள சுந்தரேஸ்வரர் மற்றும் காலபைரவர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாத திருமஞ்சனம் திருவிழா வழக்கமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆனி திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இந்நிலையில், இன்று ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு, விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள துர்வாசபுரத்தில் அமைந்துள்ள சுந்தரேஸ்வரர் மற்றும் காலபைரவர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாத திருமஞ்சனம் திருவிழா வழக்கமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆனி திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இந்நிலையில், இன்று ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு, விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
    user_Mayilvaganan
    Mayilvaganan
    திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    12 hrs ago
  • தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே இராஜகிரி, பண்டாரவாடை, வழுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி, அக்கட்சியினர் பேண்ட் வாத்தியங்கள் முழங்க இராஜகிரி பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் ஊர்வலமாகச் சென்று பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, ஏராளமானவர்களுக்கு காலை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. மேலும், பாபநாசம் தொகுதியைச் சுற்றியுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்குக் கல்வி உபகரணங்களும் விநியோகிக்கப்பட்டன. பாபநாசம் தொகுதியின் பொறுப்பாளர் அசாருதீன் உதுமான் அலி தலைமையில் நடைபெற்ற இந்த முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
    1
    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே இராஜகிரி, பண்டாரவாடை, வழுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி, அக்கட்சியினர் பேண்ட் வாத்தியங்கள் முழங்க இராஜகிரி பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் ஊர்வலமாகச் சென்று பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, ஏராளமானவர்களுக்கு காலை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. மேலும், பாபநாசம் தொகுதியைச் சுற்றியுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்குக் கல்வி உபகரணங்களும் விநியோகிக்கப்பட்டன. பாபநாசம் தொகுதியின் பொறுப்பாளர் அசாருதீன் உதுமான் அலி தலைமையில் நடைபெற்ற இந்த முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
    user_சிவகுமார்.மு
    சிவகுமார்.மு
    பத்திரிகையாளர் பாபநாசம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    12 hrs ago
  • கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலைப் பகுதியில் அமைந்துள்ள வெள்ளிமலை வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இன்று ஒரு சாலை விபத்து நிகழ்ந்தது. மேழாத்துகுழி கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி தனது மனைவி பழனியம்மாள் மற்றும் மகன் ஹரிகிருஷ்ணனுடன், பள்ளி மாணவரின் ஆதார் விவரங்களில் பெயர் இணைப்பு பணிக்காக நெட் சென்டருக்குச் சென்றுவிட்டு சாலையில் நடந்து வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. கருமந்துறை பகுதியில் இருந்து அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம், சாலையில் நடந்து கொண்டிருந்த பழனியம்மாள் மீது மோதியது. இந்த வாகனத்தை நடுதொரடிபட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கதிர்வேல் (20) ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பழனியம்மாள், கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கல்வராயன் மலைப் பகுதியில் சில இளைஞர்கள் அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். உயிரிழப்புகள் மற்றும் விபத்துகளைத் தடுக்க போக்குவரத்து விதிகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், அதிவேக வாகன ஓட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலைப் பகுதியில் அமைந்துள்ள வெள்ளிமலை வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இன்று ஒரு சாலை விபத்து நிகழ்ந்தது. மேழாத்துகுழி கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி தனது மனைவி பழனியம்மாள் மற்றும் மகன் ஹரிகிருஷ்ணனுடன், பள்ளி மாணவரின் ஆதார் விவரங்களில் பெயர் இணைப்பு பணிக்காக நெட் சென்டருக்குச் சென்றுவிட்டு சாலையில் நடந்து வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. கருமந்துறை பகுதியில் இருந்து அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம், சாலையில் நடந்து கொண்டிருந்த பழனியம்மாள் மீது மோதியது. இந்த வாகனத்தை நடுதொரடிபட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கதிர்வேல் (20) ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பழனியம்மாள், கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கல்வராயன் மலைப் பகுதியில் சில இளைஞர்கள் அதிவேகமாக வாகனங்களை இயக்குவதால் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். உயிரிழப்புகள் மற்றும் விபத்துகளைத் தடுக்க போக்குவரத்து விதிகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், அதிவேக வாகன ஓட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    கல்வராயன் மலைகள், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    16 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.