கிருஷ்ணகிரி பழையபேட்டையில், பருவதராஜா குல மீனவர் சமூக நல அறக்கட்டளை மற்றும் மீன் வியாபாரிகளின் நல சங்கம் இணைந்து ஆறாம் ஆண்டு முப்பெரும் விழாவை அங்காளம்மன் திருக்கோயில் சன்னதியில் நடத்தியது. இந்த விழாவிற்கு அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். ம. இளங்கோ, குமாரவடிவேல், ஸ்ரீரங்கன், ஜெயக்குமார், முனுசாமி, ராஜாகணேசன், கோவிந்தராஜ், செந்தில்குமார், ஜெகநாதன், நாகராஜ் மற்றும் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினர். அறக்கட்டளையின் வளர்ச்சி செயலாளர் வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசுகையில், பள்ளி மாணவ மாணவிகள் செல்போன்களைக் கைகளில் எடுப்பதை விட புத்தகங்களை கையில் எடுத்தால் வாழ்வில் வெற்றி பெறுவதுடன் மிக உயர்ந்த இடத்திற்கும் செல்ல முடியும் என்று வலியுறுத்தினார். பெற்றோர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் படிப்பில் அதிக கவனம் செலுத்தி, வாழ்வு மேம்படுவதோடு நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடந்து முடிந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் மட்டுமின்றி, அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகள் அனைவருக்கும் நற்சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த முப்பெரும் விழாவில் சங்கர், விஜயலட்சுமி, ஸ்ரீ கணேஷ், ஆதித்யா, பாலகிருஷ்ணன், மெதிலேஷ், மீனாட்சி மனசீனிவாசன் ஆறுமுகம், அகமித்திரா, சீனிவாசன் பாலமுருகன், ஸ்ரீரங்கன், கோவில் பூசாரி கோவிந்தராஜ், சொக்கலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கிருஷ்ணகிரி பழையபேட்டையில், பருவதராஜா குல மீனவர் சமூக நல அறக்கட்டளை மற்றும் மீன் வியாபாரிகளின் நல சங்கம் இணைந்து ஆறாம் ஆண்டு முப்பெரும் விழாவை அங்காளம்மன் திருக்கோயில் சன்னதியில் நடத்தியது. இந்த விழாவிற்கு அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். ம. இளங்கோ, குமாரவடிவேல், ஸ்ரீரங்கன், ஜெயக்குமார், முனுசாமி, ராஜாகணேசன், கோவிந்தராஜ், செந்தில்குமார், ஜெகநாதன், நாகராஜ் மற்றும் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினர். அறக்கட்டளையின் வளர்ச்சி செயலாளர் வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசுகையில், பள்ளி மாணவ மாணவிகள் செல்போன்களைக் கைகளில் எடுப்பதை விட புத்தகங்களை கையில் எடுத்தால் வாழ்வில் வெற்றி பெறுவதுடன் மிக உயர்ந்த இடத்திற்கும் செல்ல முடியும் என்று வலியுறுத்தினார். பெற்றோர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் படிப்பில் அதிக கவனம் செலுத்தி, வாழ்வு மேம்படுவதோடு நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடந்து முடிந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் மட்டுமின்றி, அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகள் அனைவருக்கும் நற்சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த முப்பெரும் விழாவில் சங்கர், விஜயலட்சுமி, ஸ்ரீ கணேஷ், ஆதித்யா, பாலகிருஷ்ணன், மெதிலேஷ், மீனாட்சி மனசீனிவாசன் ஆறுமுகம், அகமித்திரா, சீனிவாசன் பாலமுருகன், ஸ்ரீரங்கன், கோவில் பூசாரி கோவிந்தராஜ், சொக்கலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
- திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி - ஆலங்காயம் சாலையில் உள்ள ஆலங்காயம் பெரிய ஏரியில் இருந்து, இன்று இரவு 8 மணியளவில் அரிய வகை பெண் ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக வெளியேறி வருகின்றன. ஏரிக் கரை பகுதியில் இருந்து வெளிவரும் இந்த ஆமைகள், சாலையில் செல்லும் வாகனங்களில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளதால், ஆலங்காயம் வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவற்றை பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- காரிமங்கலம் அருகே ஒரு இருசக்கர வாகனம் மீது மாங்காய் ஏற்றி வந்த பிக்கப் வாகனம் நேருக்கு நேர் மோதியது. இந்த பயங்கரமான விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.1
- தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மாங்காய் லோடு ஏற்றி வந்த பிக்கப்வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி இருவர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பாலக்கோடு அடுத்த சூடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிக்கப்வேன் ஓட்டுநர் சுமன் (30), வெள்ளிச்சந்தை தோட்டத்தில் இருந்து மாம்பழங்களை ஏற்றி மாம்பழத் தொழிற்சாலைக்கு காரிமங்கலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, முதலிப்பட்டி தனியார் பட்டாசுக் கடை அருகே இந்த விபத்து ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்த சொன்னம்பட்டியைச் சேர்ந்த வேடியப்பன் (45) மற்றும் கேத்தனஅள்ளியைச் சேர்ந்த ராஜப்பன் (55) ஆகியோர் படுகாயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த இருவரையும் காரிமங்கலம் போலீசார் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.1
- திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட புதுமனை பகுதியில், ரஜினிகாந்தி என்பவர் உரிய மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு பொதுமருத்துவம் பார்த்து வருவதாக ஆம்பூர் அரசு மருத்துவமனை, மருத்துவ அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், மருத்துவ அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை நடத்தினர். சோதனையில், ரஜினிகாந்தி முறையான மருத்துவ படிப்பு இல்லாமல் மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, மருத்துவ அதிகாரிகள் அவரை ஆம்பூர் நகர காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர், மேலும் அவரது கிளினிக்கிற்கு சீல் வைத்தனர். பின்னர், ரஜினிகாந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.1
- சேலம் மாவட்டம், தாரமங்கலம் சின்னப்பம்பட்டி பகுதியில் நீட் தேர்வு பயத்தால் உயிரிழந்த மாணவி கோபிகாவின் இல்லத்திற்கு திமுகவினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். முன்னாள் அமைச்சர் திரு. இரா. ராஜேந்திரன், திமுக எம்பிக்களான எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் செல்வகணபதி ஆகியோர் நிர்வாகிகளுடன் இணைந்து பேரணியாகச் சென்று மாணவி கோபிகாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்ததோடு, சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டது.1
- கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையின் வெள்ளிமலை அருகே அமைந்துள்ள மொட்டையனூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் நூலகத்தை சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் ராகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, அப்பகுதி பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், நீண்ட நாட்களாக பயன்பாடின்றி மூடப்பட்டிருக்கும் நூலகத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் உறுதியளித்தார். அத்துடன், மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் புதிய விளையாட்டு மைதான வசதியை ஏற்படுத்தவும், போதிய பாதுகாப்பு இல்லாத அரசுப் பள்ளிக்கு தடுப்புச் சுவர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினரின் இந்த ஆய்வு மற்றும் அவர் அளித்த வாக்குறுதிகளால் அப்பகுதி மக்களும், மாணவர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது.1
- தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த பிக்கல்நாயக்கனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த 35 வயது அங்கமுத்து, தவெக பிரமுகராகவும், பாத்திர வியாபாரியாகவும் உள்ளார். இன்று மதியம், மாரண்டஅள்ளியில் உள்ள ஹோண்டா ஷோரூமில் புதிய இருசக்கர வாகனம் ஒன்றை வாங்குவதற்காக அவர் ரூ.31,000 முன் பணமாகச் செலுத்தினார். பணம் சரிபார்க்கப்பட்டபோது, அவர் அளித்த நோட்டுகளில் ரூ.9,500 மதிப்புள்ள நோட்டுகள் கள்ள நோட்டுகள் எனத் தெரியவந்தது. இதனையடுத்து, ஷோரூம் மேலாளர் ரஞ்சித் உடனடியாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த மாரண்டஅள்ளி இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் பிற போலீசார், நோட்டுகளைச் சோதனை செய்ததில், 19 ஐநூறு ரூபாய் நோட்டுகளும் கள்ள நோட்டுகள் என்பதை உறுதி செய்தனர். போலீசார் கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்து, அங்கமுத்துவைக் கைது செய்து தர்மபுரி சிறையில் அடைத்தனர்.1
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டணம் அருகே கோசமேடு முதல் சாப்பரம் செல்லும் சாலை பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் உள்ளது. குறிப்பாக கோசமேடு அன்னா கொட்டாய் அருகே சாலை கடுமையாகச் சேதமடைந்து, மழை பெய்யும்போது தண்ணீர் குளம் போலத் தேங்கி நிற்கும் அவல நிலை நீடிக்கிறது. இந்தச் சாலையின் மேடு பள்ளங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துடன் திணறிச் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இது குறித்து பலமுறை கோரிக்கைகள் வைக்கப்பட்டும், அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதுடன் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். வாகன ஓட்டிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள இந்தச் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.1