logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய உடைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. ஒணம் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்! 🌼 ஒணம் பண்டிகையை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் கேரள மாநிலத்தின் பாரம்பரிய கலாசார உடை அணிந்து, பாரம்பரிய நடனமாடி உற்சாகமாக கொண்டாடினர். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய உடைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

23 hrs ago
user_G Krishnan
G Krishnan
பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
23 hrs ago

மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய உடைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. ஒணம் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்! 🌼 ஒணம் பண்டிகையை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் கேரள மாநிலத்தின் பாரம்பரிய கலாசார உடை அணிந்து, பாரம்பரிய நடனமாடி உற்சாகமாக கொண்டாடினர். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய உடைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

More news from Tamil Nadu and nearby areas
  • தமிழ்நாடு மக்கள் இயக்கம் அனைத்து தொழிற்சங்கங்களில் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..! தமிழ்நாடு மக்கள் இயக்கம் அனைத்து தொழிற்சங்கங்களில் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..! தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மக்கள் இயக்கம் அனைத்து தொழிற்சங்கங்களில் சார்பில் மாணவர்கள் இளைஞர்கள் பெண்கள் தொழிலாளர்கள் விவசாயிகள் விவசாய தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும், ஜனநாயக உரிமைகள் மற்றும் ஜனநாயக நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும், வேலையின்மை மற்றும் ஒப்பந்த தொழிலாளர் சுரண்டல் வேண்டாம், நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு மக்கள் இயக்கம் தொழிற்சங்கங்களில் அனைத்து அமைப்பினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    1
    தமிழ்நாடு மக்கள் இயக்கம் அனைத்து தொழிற்சங்கங்களில் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!
தமிழ்நாடு மக்கள் இயக்கம் அனைத்து தொழிற்சங்கங்களில் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!
தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மக்கள் இயக்கம் அனைத்து தொழிற்சங்கங்களில் சார்பில் மாணவர்கள் இளைஞர்கள் பெண்கள் தொழிலாளர்கள் விவசாயிகள் விவசாய தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும், ஜனநாயக உரிமைகள் மற்றும் ஜனநாயக நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும், வேலையின்மை மற்றும் ஒப்பந்த தொழிலாளர் சுரண்டல் வேண்டாம், நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு மக்கள் இயக்கம் தொழிற்சங்கங்களில் அனைத்து அமைப்பினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    9 hrs ago
  • குடிநீர், சாலை வசதி கேட்டு காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு மழைக்காலத்தில் சகதியான சாலையால் அவதி – வீடுகள் மீது சாய்ந்து நிற்கும் மின்கம்பங்களால் அச்சம் குடிநீர் வசதியும், முறையான சாலை வசதியும் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக கூறி, காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள், அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மொன்னையன் கொட்டாய் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நீண்ட காலமாக முறையான குடிநீர் வசதியும், சாலை வசதியும் இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறுவதால், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுள்ளது வாகனங்கள் செல்வதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது மேலும், சாலையின் நடுவே சுமார் 10 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டுள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது அதேபோல், 10 அடி ஆழத்தில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ள நிலையில், முறையான குடிநீர் விநியோகம் இல்லாததால் தண்ணீருக்காக அவதிப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி, அப்பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையிலும், மற்றொரு மின்கம்பம் வீட்டு மீது சாய்ந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது எனவே, அபாயகரமாக உள்ள மின்கம்பங்களை உடனடியாக அப்புறப்படுத்தி, பாதுகாப்பான மின்கம்பங்களை அமைக்க வேண்டும். மேலும், மழைக்காலத்திலும் பொதுமக்கள் சிரமமின்றி பயன்படுத்தும் வகையில் முறையான சாலை வசதியும், தடையின்றி குடிநீர் கிடைக்கும் வகையில் குடிநீர் வசதியும் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி, மொன்னையன் கொட்டாய் கிராம மக்கள் காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். அடிப்படை வசதிகளுக்காக பல ஆண்டுகளாக போராடி வரும் தங்களின் கோரிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    1
    குடிநீர், சாலை வசதி கேட்டு காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு

மழைக்காலத்தில் சகதியான சாலையால் அவதி – வீடுகள் மீது சாய்ந்து நிற்கும் மின்கம்பங்களால் அச்சம்
குடிநீர் வசதியும், முறையான சாலை வசதியும் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக கூறி, காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள், அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மொன்னையன் கொட்டாய் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் நீண்ட காலமாக முறையான குடிநீர் வசதியும், சாலை வசதியும் இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக மழைக்காலங்களில் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறுவதால், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுள்ளது வாகனங்கள் செல்வதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது 
மேலும், சாலையின் நடுவே சுமார் 10 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டுள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
அதேபோல், 10 அடி ஆழத்தில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ள நிலையில், முறையான குடிநீர் விநியோகம் இல்லாததால் தண்ணீருக்காக அவதிப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமின்றி, அப்பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையிலும், மற்றொரு மின்கம்பம் வீட்டு மீது சாய்ந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளது
எனவே, அபாயகரமாக உள்ள மின்கம்பங்களை உடனடியாக அப்புறப்படுத்தி, பாதுகாப்பான மின்கம்பங்களை அமைக்க வேண்டும். மேலும், மழைக்காலத்திலும் பொதுமக்கள் சிரமமின்றி பயன்படுத்தும் வகையில் முறையான சாலை வசதியும், தடையின்றி குடிநீர் கிடைக்கும் வகையில் குடிநீர் வசதியும் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி, மொன்னையன் கொட்டாய் கிராம மக்கள் காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.
அடிப்படை வசதிகளுக்காக பல ஆண்டுகளாக போராடி வரும் தங்களின் கோரிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • பாலக்கோட்டில் கேப்டன் விஜயகாந்த் 74வது பிறந்தநாள் விழா தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில், தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாள் விழா கட்சி சார்பில் சிறப்பாக நடைபெற்றது. பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தேமுதிக தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் விஜயசங்கர் தலைமை வகித்தார். நகர செயலாளர் முருகன் வரவேற்றார். மாவட்ட இளைஞரணி செயலாளர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் ரத்தினம், மத்திய ஒன்றிய செயலாளர் முயற்சி முருகேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் ஞானவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் முனுசாமி, ஒன்றிய பொருளாளர் ரங்கன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விழாவில், பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அவைத்தலைவர் கிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் இந்திராணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை கொண்டாடினர்.
    1
    பாலக்கோட்டில் கேப்டன் விஜயகாந்த் 74வது பிறந்தநாள் விழா
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில், தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாள் விழா கட்சி சார்பில் சிறப்பாக நடைபெற்றது.
பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தேமுதிக தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் விஜயசங்கர் தலைமை வகித்தார். நகர செயலாளர் முருகன் வரவேற்றார்.
மாவட்ட இளைஞரணி செயலாளர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் ரத்தினம், மத்திய ஒன்றிய செயலாளர் முயற்சி முருகேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் ஞானவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் முனுசாமி, ஒன்றிய பொருளாளர் ரங்கன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அவைத்தலைவர் கிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் இந்திராணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை கொண்டாடினர்.
    user_SURENDIRAVARMA. C
    SURENDIRAVARMA. C
    Local News Reporter Palakkodu, Dharmapuri•
    16 hrs ago
  • பாலக்கோட்டில் கேப்டன் விஜயகாந்த் 74வது பிறந்தநாள் விழா பாலக்கோட்டில் கேப்டன் விஜயகாந்த் 74வது பிறந்தநாள் விழா தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில், தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாள் விழா கட்சி சார்பில் சிறப்பாக நடைபெற்றது. பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தேமுதிக தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் விஜயசங்கர் தலைமை வகித்தார். நகர செயலாளர் முருகன் வரவேற்றார். மாவட்ட இளைஞரணி செயலாளர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் ரத்தினம், மத்திய ஒன்றிய செயலாளர் முயற்சி முருகேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் ஞானவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் முனுசாமி, ஒன்றிய பொருளாளர் ரங்கன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விழாவில், பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அவைத்தலைவர் கிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் இந்திராணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை கொண்டாடினர்.
    1
    பாலக்கோட்டில் கேப்டன் விஜயகாந்த் 74வது பிறந்தநாள் விழா
பாலக்கோட்டில் கேப்டன் விஜயகாந்த் 74வது பிறந்தநாள் விழா
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில், தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் 74வது பிறந்தநாள் விழா கட்சி சார்பில் சிறப்பாக நடைபெற்றது.
பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தேமுதிக தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் விஜயசங்கர் தலைமை வகித்தார். நகர செயலாளர் முருகன் வரவேற்றார்.
மாவட்ட இளைஞரணி செயலாளர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் ரத்தினம், மத்திய ஒன்றிய செயலாளர் முயற்சி முருகேசன், வடக்கு ஒன்றிய செயலாளர் ஞானவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் முனுசாமி, ஒன்றிய பொருளாளர் ரங்கன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அவைத்தலைவர் கிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் இந்திராணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை கொண்டாடினர்.
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    19 hrs ago
  • கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் கிருஷ்ணகிரியில் போட்டித் தேர்வு பயிற்றுநர்கள் தேர்வு மதிப்பீட்டுக் குழு மூலம் திறமையான பயிற்றுநர்கள் தேர்வு. கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில், மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வர்களுக்கு சிறந்த தரமான பயிற்சியை வழங்கும் நோக்கில் போட்டித் தேர்வு பயிற்றுநர்களைத் தேர்வு செய்யும் சிறப்பு மதிப்பீட்டு நிகழ்வு நடைபெற்றது. மாணவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC), காவல்துறை, ஆசிரியர் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளில் சிறப்பாகத் தயாராகும் வகையில், தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைத் தேர்வு செய்வதற்காக இம்மதிப்பீட்டு நடைமுறை மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தேர்வு மற்றும் மதிப்பீட்டுக் குழுவிற்கு சேலம் மண்டல இணை இயக்குநர் திருமதி கவிதா அவர்கள் தலைமையேற்றார். மதிப்பீட்டுக் குழுவில், திரு. குப்புசாமி, துணை இயக்குநர், மாவட்ட புள்ளியியல் துறை, கிருஷ்ணகிரி, திரு. கௌரிசங்கர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், கிருஷ்ணகிரி, திரு. விஜயகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஓசூர், திரு. ஏ.ஜி. ஜாய், கிருஷ்ணகிரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழு உறுப்பினர் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் & பயிற்சி இயக்குநர் ஆகியோர் இடம்பெற்று, போட்டித் தேர்வு பயிற்றுநர்களின் கல்வித் தகுதி, பாட அறிவு, கற்பித்தல் திறன், தேர்வு முறைகள் குறித்த புரிதல், மாணவர்களை வழிநடத்தும் திறன் மற்றும் பயிற்சி அனுபவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்தனர். பயிற்றுநர்களை வெறும் பாட அறிவின் அடிப்படையில் மட்டுமல்லாமல், “மாணவர்களுக்கு எளிமையாகப் புரிய வைக்கும் திறன், தேர்வை எதிர்கொள்ளும் நம்பிக்கையை உருவாக்கும் திறன் மற்றும் சமகால போட்டித் தேர்வு முறைகளுக்கு ஏற்ப பயிற்சி வழங்கும் திறன்” ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளித்து மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய பயிற்சிகள் மூலம் கிராமப்புறம் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களும் தரமான போட்டித் தேர்வு பயிற்சியைப் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகிறது. “திறமையான பயிற்றுநர்கள் – தரமான பயிற்சி – தன்னம்பிக்கையான மாணவர்கள் – வெற்றிகரமான அரசு பணியாளர்கள்” என்ற நோக்கில் நடைபெற்ற இம்மதிப்பீட்டு நிகழ்வு, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டுதலை வழங்குவதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் இம்முயற்சி, அரசு வேலைவாய்ப்பை எதிர்நோக்கும் இளைஞர்களுக்கு தரமான பயிற்சி, சம வாய்ப்பு மற்றும் வெற்றிக்கான வழிகாட்டுதலை வழங்கும் முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது.
    1
    கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் 
கிருஷ்ணகிரியில் போட்டித் தேர்வு பயிற்றுநர்கள் தேர்வு மதிப்பீட்டுக் குழு மூலம் திறமையான பயிற்றுநர்கள் தேர்வு.

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில், மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வர்களுக்கு சிறந்த தரமான பயிற்சியை வழங்கும் நோக்கில் போட்டித் தேர்வு பயிற்றுநர்களைத் தேர்வு செய்யும் சிறப்பு மதிப்பீட்டு நிகழ்வு நடைபெற்றது.

மாணவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC), காவல்துறை, ஆசிரியர் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளில் சிறப்பாகத் தயாராகும் வகையில், தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைத் தேர்வு செய்வதற்காக இம்மதிப்பீட்டு நடைமுறை மேற்கொள்ளப்பட்டது.

இந்தத் தேர்வு மற்றும் மதிப்பீட்டுக் குழுவிற்கு சேலம் மண்டல இணை இயக்குநர் திருமதி கவிதா அவர்கள் தலைமையேற்றார்.
மதிப்பீட்டுக் குழுவில்,
திரு. குப்புசாமி, துணை இயக்குநர், மாவட்ட புள்ளியியல் துறை, கிருஷ்ணகிரி,
திரு. கௌரிசங்கர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், கிருஷ்ணகிரி,
திரு. விஜயகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஓசூர்,
திரு. ஏ.ஜி. ஜாய், கிருஷ்ணகிரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழு உறுப்பினர் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் & பயிற்சி இயக்குநர்
ஆகியோர் இடம்பெற்று, போட்டித் தேர்வு பயிற்றுநர்களின் கல்வித் தகுதி, பாட அறிவு, கற்பித்தல் திறன், தேர்வு முறைகள் குறித்த புரிதல், மாணவர்களை வழிநடத்தும் திறன் மற்றும் பயிற்சி அனுபவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்தனர்.

பயிற்றுநர்களை வெறும் பாட அறிவின் அடிப்படையில் மட்டுமல்லாமல், “மாணவர்களுக்கு எளிமையாகப் புரிய வைக்கும் திறன், தேர்வை எதிர்கொள்ளும் நம்பிக்கையை உருவாக்கும் திறன் மற்றும் சமகால போட்டித் தேர்வு முறைகளுக்கு ஏற்ப பயிற்சி வழங்கும் திறன்” ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளித்து மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.  இத்தகைய பயிற்சிகள் மூலம் கிராமப்புறம் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களும் தரமான போட்டித் தேர்வு பயிற்சியைப் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகிறது.

“திறமையான பயிற்றுநர்கள் – தரமான பயிற்சி – தன்னம்பிக்கையான மாணவர்கள் – வெற்றிகரமான அரசு பணியாளர்கள்” என்ற நோக்கில் நடைபெற்ற இம்மதிப்பீட்டு நிகழ்வு, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டுதலை வழங்குவதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் இம்முயற்சி, அரசு வேலைவாய்ப்பை எதிர்நோக்கும் இளைஞர்களுக்கு தரமான பயிற்சி, சம வாய்ப்பு மற்றும் வெற்றிக்கான வழிகாட்டுதலை வழங்கும் முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது.
    user_CONSUMER CHAIRMAN CHAIRMAN
    CONSUMER CHAIRMAN CHAIRMAN
    NGO Worker கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • தமிழகத்தில் முதல்முறையாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகததில் AI தொழிற் நுட்பத்துடன் மக்கள் குறைத் தீர்ப்பு முகாம். தமிழகத்தில் முதல்முறையாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகததில் AI தொழிற் நுட்பத்துடன் மக்கள் குறைத் தீர்ப்பு முகாம். மனுக்கள் பதிவு செய்யும் முறையினை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார், இந்த தொழில் நுட்பத்தின் மூலமாக பொது மக்களின் காத்திருப்பை வெகுவாக குறைக்க படும் என்று குறிப்பிட்டார்.
    1
    தமிழகத்தில் முதல்முறையாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகததில்
AI தொழிற் நுட்பத்துடன் மக்கள் குறைத் தீர்ப்பு முகாம்.


தமிழகத்தில் முதல்முறையாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகததில்
AI தொழிற் நுட்பத்துடன் மக்கள் குறைத் தீர்ப்பு முகாம். மனுக்கள் பதிவு செய்யும் முறையினை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார், இந்த தொழில் நுட்பத்தின் மூலமாக
பொது மக்களின் காத்திருப்பை வெகுவாக குறைக்க படும் என்று குறிப்பிட்டார்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • 9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட பள்ளி கல்வித்துறை தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..! 9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட பள்ளி கல்வித்துறை தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..! தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட பள்ளி கல்வித்துறை தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தர்மபுரி, பென்னாகரம், கடத்தூர், பாலக்கோடு, மொரப்பூர், அரூர் ஆகிய வட்டாரங்களில் 11 மாத முடிவு காரிமங்கலத்தில் மூன்று மாத நிறைவு தொகையை உடனே வழங்க வேண்டும், தருமபுரி மாவட்டத்தில் பதினோரு மாதம் நிலுவைதொகையான தொடக்கப்பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு 5,500 ரூபாய், நடுநிலைப்பள்ளிக்கு 8,800 ரூபாய், உயர்நிலைப்பள்ளிக்கு 12,650 ரூபாய், மேல்நிலைப் பள்ளிக்கு 16,500 ரூபாயையும், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் பள்ளி தலைமையாசிரியர்கள், வங்கி சேமிப்பு கணக்கில் செலுத்தியும், இதனைப் பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு வங்கியில் இருந்து எடுத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழங்காமல் இருப்பது மீது நடவடிக்கை எடுத்து வழங்க வேண்டும், அரசு பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு வழங்கும் மாத சம்பளத்தினை பள்ளி தூய்மை பணியாளர்களின் வங்கிக் கணக்கில் மாத மாதம் சம்பளம் வழங்க தமிழ்நாடு அரசு ஆவண செய்ய வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறை தூய்மை பணியாளர்கள் சங்கம் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், துணைச் செயலாளர்கள் பிரதாபன், மாதையன், சேலம் சத்யபாமா, கிருஷ்ணகிரி ஸ்ரீபிரியா, ஊத்தங்கரை அன்பரசு ஆகியோர் கோரிக்கையை விளக்கிப் பேசினார்கள். இதில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒன்றிய தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    1
    9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட பள்ளி கல்வித்துறை தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..!
9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட பள்ளி கல்வித்துறை தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..!
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட பள்ளி கல்வித்துறை தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தர்மபுரி, பென்னாகரம், கடத்தூர், பாலக்கோடு, மொரப்பூர், அரூர் ஆகிய வட்டாரங்களில் 11 மாத முடிவு காரிமங்கலத்தில் மூன்று மாத நிறைவு தொகையை உடனே வழங்க வேண்டும், தருமபுரி மாவட்டத்தில் பதினோரு மாதம் நிலுவைதொகையான தொடக்கப்பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு 5,500 ரூபாய், நடுநிலைப்பள்ளிக்கு 8,800 ரூபாய், உயர்நிலைப்பள்ளிக்கு 12,650 ரூபாய், மேல்நிலைப் பள்ளிக்கு 16,500 ரூபாயையும், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் பள்ளி தலைமையாசிரியர்கள், வங்கி சேமிப்பு கணக்கில் செலுத்தியும், இதனைப் பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு வங்கியில் இருந்து எடுத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழங்காமல் இருப்பது மீது நடவடிக்கை எடுத்து வழங்க வேண்டும், அரசு பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு வழங்கும் மாத சம்பளத்தினை பள்ளி தூய்மை பணியாளர்களின் வங்கிக் கணக்கில் மாத மாதம் சம்பளம் வழங்க தமிழ்நாடு அரசு ஆவண செய்ய வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
தருமபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறை தூய்மை பணியாளர்கள் சங்கம் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், துணைச் செயலாளர்கள் பிரதாபன், மாதையன், சேலம் சத்யபாமா, கிருஷ்ணகிரி ஸ்ரீபிரியா, ஊத்தங்கரை அன்பரசு ஆகியோர் கோரிக்கையை விளக்கிப் பேசினார்கள். இதில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒன்றிய தலைவர்கள்,  செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    16 hrs ago
  • ஊத்தங்கரை அருகே அனுமதி பெறாத செங்கல் சூளை. லோடு ஏற்றும்போது செங்கல் சரிந்து விழுந்து ஒருவர் உயிரிலப்பு. ஊத்தங்கரை அருகே அனுமதி பெறாத செங்கல் சூளை. லோடு ஏற்றும்போது செங்கல் சரிந்து விழுந்து ஒருவர் பலி. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சென்னப்பநாய்க்கனூர் அருகே கலைஞர் நகரைச் சேர்ந்த நாகலிங்கம் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது, இந்த செங்கல் சூளை அனுமதி பெறாமல் நடைபெறுவது மட்டுமின்றி இரவு நேரங்களில் சூளைக்கு தேவையான செம்மண்னை இரவு நேரங்களில் அனுமதியின்றி திருடுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை டிராக்டரில் செங்கல் லோடு ஏற்றிக்கொண்டிருக்கும் போது திப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் மீது செங்கல் சரிந்து விழுந்தது, அருகில் இருந்தவர் சேகரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஆனால் மருத்துவர் இறந்துவிட்டதாக தெரிவித்தாக கூறப்படுகிறது. இதுபோன்று ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதி பெறாத பாதுகாப்பின்றி செயல்படும் செங்கல் சூலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    ஊத்தங்கரை அருகே அனுமதி பெறாத செங்கல் சூளை.
லோடு ஏற்றும்போது செங்கல் சரிந்து விழுந்து ஒருவர் உயிரிலப்பு.
ஊத்தங்கரை அருகே அனுமதி பெறாத செங்கல் சூளை.
லோடு ஏற்றும்போது செங்கல் சரிந்து விழுந்து ஒருவர் பலி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சென்னப்பநாய்க்கனூர் அருகே கலைஞர் நகரைச் சேர்ந்த நாகலிங்கம் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது, இந்த செங்கல் சூளை அனுமதி பெறாமல் நடைபெறுவது மட்டுமின்றி இரவு நேரங்களில் சூளைக்கு தேவையான செம்மண்னை இரவு நேரங்களில் அனுமதியின்றி  திருடுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்  செவ்வாய்க்கிழமை காலை டிராக்டரில் செங்கல் லோடு ஏற்றிக்கொண்டிருக்கும் போது திப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் மீது செங்கல் சரிந்து விழுந்தது, அருகில் இருந்தவர் சேகரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஆனால் மருத்துவர் இறந்துவிட்டதாக தெரிவித்தாக கூறப்படுகிறது. இதுபோன்று ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் 
அனுமதி பெறாத பாதுகாப்பின்றி செயல்படும் செங்கல் சூலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_செல்வம்
    செல்வம்
    பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
    12 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.