logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடத்துப்பட்டி சந்திப்பு பகுதியில், இன்று (மே 31) காவல்துறையினர் நடத்திய தீவிர வாகன சோதனையின்போது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்திச் சென்ற மாருதி ஸ்விஃப்ட் கார் (TN 58 BK 7502) பிடிபட்டது. இதில் தொடர்புடைய சிவகாசி விஸ்வநத்தம் ரோடு பகுதியைச் சேர்ந்த 42 வயதான கிருஷ்ணமூர்த்தி என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாகக் கடத்தி வந்தது உறுதியானது. இதையடுத்து, அவரிடமிருந்து 110.250 கிலோ எடையுள்ள 490 பாக்கெட் கணேஷ் புகையிலை, 12 கிலோ எடையுள்ள 100 பாக்கெட் புல்லட் ராணி, 9 கிலோ எடையுள்ள 150 பாக்கெட் விமல் உள்ளிட்ட மொத்தம் 131.250 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மாருதி ஸ்விஃப்ட் கார் மற்றும் ரூ.6.80 லட்சம் ரொக்கப் பணத்தையும் காவல்துறையினர் கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக வெம்பக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 hr ago
user_குமார்
குமார்
Kariapatti, Virudhunagar•
1 hr ago

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மடத்துப்பட்டி சந்திப்பு பகுதியில், இன்று (மே 31) காவல்துறையினர் நடத்திய தீவிர வாகன சோதனையின்போது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்திச் சென்ற மாருதி ஸ்விஃப்ட் கார் (TN 58 BK 7502) பிடிபட்டது. இதில் தொடர்புடைய சிவகாசி விஸ்வநத்தம் ரோடு பகுதியைச் சேர்ந்த 42 வயதான கிருஷ்ணமூர்த்தி என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாகக் கடத்தி வந்தது உறுதியானது. இதையடுத்து, அவரிடமிருந்து 110.250 கிலோ எடையுள்ள 490 பாக்கெட் கணேஷ் புகையிலை, 12 கிலோ எடையுள்ள 100 பாக்கெட் புல்லட் ராணி, 9 கிலோ எடையுள்ள 150 பாக்கெட் விமல் உள்ளிட்ட மொத்தம் 131.250 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மாருதி ஸ்விஃப்ட் கார் மற்றும் ரூ.6.80 லட்சம் ரொக்கப் பணத்தையும் காவல்துறையினர் கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக வெம்பக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More news from Tamil Nadu and nearby areas
  • மதுரையில் உள்ள பெரியார் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் கோயிலின் வைகாசி பெருந்திருவிழா கடந்த மே 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று (மே 31) காலை நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் “கோவிந்தா”, “கோபாலா” என பக்தி முழக்கங்களை எழுப்பியவாறே தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர். கூடலழகர் பெருமாள் கோயில் தேரோட்டத்தைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
    1
    மதுரையில் உள்ள பெரியார் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் கோயிலின் வைகாசி பெருந்திருவிழா கடந்த மே 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று (மே 31) காலை நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் “கோவிந்தா”, “கோபாலா” என பக்தி முழக்கங்களை எழுப்பியவாறே தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர். கூடலழகர் பெருமாள் கோயில் தேரோட்டத்தைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    9 hrs ago
  • மே 28 அன்று உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் பகுதியில் CM விஜய் அவர்களின் கட்டளைப்படியும், மதுரை அமைச்சர் CTR நிர்மல் குமார் அவர்களின் வலியுறுத்தலின்படியும் ஏழை மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன. மதுரையின் அண்ணன் மருதுபாண்டி அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திருப்பரங்குன்றம் பகுதி TVK தொண்டர்கள் அனைவரும் பங்கேற்றனர். இவர்களின் இந்த சிறப்பான சேவை மக்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
    1
    மே 28 அன்று உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் பகுதியில் CM விஜய் அவர்களின் கட்டளைப்படியும், மதுரை அமைச்சர் CTR நிர்மல் குமார் அவர்களின் வலியுறுத்தலின்படியும் ஏழை மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன. மதுரையின் அண்ணன் மருதுபாண்டி அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திருப்பரங்குன்றம் பகுதி TVK தொண்டர்கள் அனைவரும் பங்கேற்றனர். இவர்களின் இந்த சிறப்பான சேவை மக்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
    user_நிசார் அஹமது
    நிசார் அஹமது
    மதுரை மேற்கு, மதுரை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • சிவகங்கை மாவட்டம், எஸ்.எஸ். கோட்டை அருகே உள்ள எருமைப்பட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி எல்லைப் பந்தயம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மொத்தம் 20 ஜோடி மாடுகள் பங்கேற்றன. மேலூர் - காரைக்குடி சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தில், பெரிய மாட்டுப் பிரிவிற்கு ஏழு மைல் தூரமும், சிறிய மாட்டுப் பிரிவிற்கு ஐந்து மைல் தூரமும் எல்லையாக நிர்ணயிக்கப்பட்டது. போட்டியில் மாட்டு வண்டிகள் சீறிப் பாய்ந்து ஒன்றை ஒன்று முந்திச் சென்று ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தன. இதில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். எஸ்.எஸ். கோட்டை, எருமைப்பட்டி, மேலூர், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான ரசிகர்கள் சாலையின் இருபுறமும் கூடி நின்று, இந்த மாட்டு வண்டி பந்தயத்தை உற்சாகமாக கண்டுகளித்தனர்.
    1
    சிவகங்கை மாவட்டம், எஸ்.எஸ். கோட்டை அருகே உள்ள எருமைப்பட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி எல்லைப் பந்தயம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மொத்தம் 20 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

மேலூர் - காரைக்குடி சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தில், பெரிய மாட்டுப் பிரிவிற்கு ஏழு மைல் தூரமும், சிறிய மாட்டுப் பிரிவிற்கு ஐந்து மைல் தூரமும் எல்லையாக நிர்ணயிக்கப்பட்டது. போட்டியில் மாட்டு வண்டிகள் சீறிப் பாய்ந்து ஒன்றை ஒன்று முந்திச் சென்று ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தன. இதில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

எஸ்.எஸ். கோட்டை, எருமைப்பட்டி, மேலூர், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான ரசிகர்கள் சாலையின் இருபுறமும் கூடி நின்று, இந்த மாட்டு வண்டி பந்தயத்தை உற்சாகமாக கண்டுகளித்தனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    19 hrs ago
  • தேனி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக வைத்திநாதன் இன்று பொறுப்பேற்றார். இதற்கு முன் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனராகப் பணியாற்றி வந்த வைத்திநாதன், தேனி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த ரஞ்சித் சிங் தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவன நிர்வாக இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நியமிக்கப்பட்டுள்ளார். வைத்திநாதன் தேனி மாவட்டத்தின் 20வது ஆட்சியராகப் பதவி ஏற்றுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். ஆட்சியர் அலுவலகத்தில் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்கப்பட்டது. தொடர்ந்து, அவர் கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணியைத் தொடங்கினார். அரசு அலுவலர்கள் புதிய மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
    1
    தேனி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக வைத்திநாதன் இன்று பொறுப்பேற்றார். இதற்கு முன் செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனராகப் பணியாற்றி வந்த வைத்திநாதன், தேனி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த ரஞ்சித் சிங் தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவன நிர்வாக இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நியமிக்கப்பட்டுள்ளார். வைத்திநாதன் தேனி மாவட்டத்தின் 20வது ஆட்சியராகப் பதவி ஏற்றுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து தனது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். ஆட்சியர் அலுவலகத்தில் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்கப்பட்டது. தொடர்ந்து, அவர் கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணியைத் தொடங்கினார். அரசு அலுவலர்கள் புதிய மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தேனி மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக இரா.வைத்திநாதன் நேற்று (31.05.2026) தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2015ஆம் ஆண்டு அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வில் இந்திய அளவில் 37வது இடத்தையும், தமிழ்நாட்டில் இரண்டாவது இடத்தையும் பிடித்து இவர் தேர்ச்சி பெற்றார். 2016ஆம் ஆண்டு பிரிவு அதிகாரியான இவர், சேலம் மாவட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆகவும், தேனி (உத்தமபாளையம் வருவாய் கோட்டம்) மற்றும் கோயம்புத்தூர் (பொள்ளாச்சி வருவாய் கோட்டம்) மாவட்டங்களில் சார் ஆட்சியராகவும், தர்மபுரி மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆகவும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மாநகராட்சி ஆணையராகவும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனின் (TACTV) நிர்வாக இயக்குநராகவும், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். புதுச்சேரி மாநிலம் மதுக்கரையைச் சேர்ந்த இரா.வைத்திநாதன், கடலூரில் உள்ள பாபா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து, காரைக்காலில் உள்ள விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார். சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் இளநிலை உறைவிட மருத்துவராகப் பணியில் சேர்ந்தபோது, தனது ஐஏஎஸ் தேர்வுக்கான பயிற்சியைத் தொடங்கினார். வார்டுப் பணிகள் முடிந்த பிறகு கிடைக்கும் நேரத்தைப் படிப்பிற்காகப் பயன்படுத்திய இவர், பின்னர் டெல்லிக்குச் சென்று 24 முதல் 36 மணி நேரம் உழைத்துவிட்டு, படிப்பதற்காக இரண்டு நாட்கள் ஓய்வெடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர் தனது விருப்பப் பாடமாக மருத்துவ அறிவியலுக்குப் பதிலாக சமூகவியலைத் தேர்ந்தெடுத்தார். எம்பிபிஎஸ் மருத்துவர் ஆன இவர், மருத்துவத் துறையிலிருந்து குடிமைப் பணிக்கு மாறியது தேசிய அளவில் தலைப்புச் செய்தியானதுடன், யு.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராகும் பணிபுரியும் நிபுணர்களுக்கு முக்கிய உத்வேகமாகவும் விளங்கினார். இவரது தந்தை தமிழ்நாட்டின் கடலூரைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் ஆவார். இவரது மூத்த சகோதரி பொன்னி, 2008ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக இருந்தபோது, இவர் நகர்ப்புற மேம்பாடு மற்றும் பசுமைதிருச்சி மரம் நடும் முன்னெடுப்புகளில் தீவிரமாகப் பங்கேற்றார். தற்போது, இரா.வைத்திநாதன் தேனி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித்தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
    3
    தேனி மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக இரா.வைத்திநாதன் நேற்று (31.05.2026) தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2015ஆம் ஆண்டு அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வில் இந்திய அளவில் 37வது இடத்தையும், தமிழ்நாட்டில் இரண்டாவது இடத்தையும் பிடித்து இவர் தேர்ச்சி பெற்றார். 2016ஆம் ஆண்டு பிரிவு அதிகாரியான இவர், சேலம் மாவட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆகவும், தேனி (உத்தமபாளையம் வருவாய் கோட்டம்) மற்றும் கோயம்புத்தூர் (பொள்ளாச்சி வருவாய் கோட்டம்) மாவட்டங்களில் சார் ஆட்சியராகவும், தர்மபுரி மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆகவும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மாநகராட்சி ஆணையராகவும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனின் (TACTV) நிர்வாக இயக்குநராகவும், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

புதுச்சேரி மாநிலம் மதுக்கரையைச் சேர்ந்த இரா.வைத்திநாதன், கடலூரில் உள்ள பாபா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து, காரைக்காலில் உள்ள விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார். சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் இளநிலை உறைவிட மருத்துவராகப் பணியில் சேர்ந்தபோது, தனது ஐஏஎஸ் தேர்வுக்கான பயிற்சியைத் தொடங்கினார். வார்டுப் பணிகள் முடிந்த பிறகு கிடைக்கும் நேரத்தைப் படிப்பிற்காகப் பயன்படுத்திய இவர், பின்னர் டெல்லிக்குச் சென்று 24 முதல் 36 மணி நேரம் உழைத்துவிட்டு, படிப்பதற்காக இரண்டு நாட்கள் ஓய்வெடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர் தனது விருப்பப் பாடமாக மருத்துவ அறிவியலுக்குப் பதிலாக சமூகவியலைத் தேர்ந்தெடுத்தார்.

எம்பிபிஎஸ் மருத்துவர் ஆன இவர், மருத்துவத் துறையிலிருந்து குடிமைப் பணிக்கு மாறியது தேசிய அளவில் தலைப்புச் செய்தியானதுடன், யு.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராகும் பணிபுரியும் நிபுணர்களுக்கு முக்கிய உத்வேகமாகவும் விளங்கினார். இவரது தந்தை தமிழ்நாட்டின் கடலூரைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் ஆவார். இவரது மூத்த சகோதரி பொன்னி, 2008ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக இருந்தபோது, இவர் நகர்ப்புற மேம்பாடு மற்றும் பசுமைதிருச்சி மரம் நடும் முன்னெடுப்புகளில் தீவிரமாகப் பங்கேற்றார். தற்போது, இரா.வைத்திநாதன் தேனி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித்தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
    user_Theni Godwin
    Theni Godwin
    பத்திரிகையாளர் தேனி, தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை உழவர் சந்தை பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தனது உடன் பிறந்த சகோதரியின் இல்ல விழாவில் கலந்துகொண்டார். இந்த விழாவுக்கு, வெடி வெடித்து, மேளதாளங்கள் முழங்க, சீர்வரிசைகளுடன் ஓர் ஊர்வலம் நடைபெற்றது. விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் கீர்த்தனாவை, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்தும், சால்வை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர். அவரது உறவினர்கள் மேளதாளத்துடன் சீர்வரிசைகளைச் சுமந்து வந்தபோது, அமைச்சர் கீர்த்தனாவும் அவர்களுடன் இணைந்து சீர் சுமந்து ஊர்வலமாக வந்து விழாவில் பங்கேற்றார். திருமண மண்டபத்தில் நடந்த இவ்விழாவில், அமைச்சர் தனது சகோதரியின் மகளுக்கு மலர் தூவி வாழ்த்து தெரிவித்தார். விழாவில் கலந்துகொண்டு புறப்படத் தயாரான அமைச்சர் கீர்த்தனாவிடம் செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்ப முயன்றனர். ஆனால், அமைச்சர் கீர்த்தனா செய்தியாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டு, அங்கிருந்து வேகமாகச் சென்றுவிட்டார்.
    1
    தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை உழவர் சந்தை பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தனது உடன் பிறந்த சகோதரியின் இல்ல விழாவில் கலந்துகொண்டார். இந்த விழாவுக்கு, வெடி வெடித்து, மேளதாளங்கள் முழங்க, சீர்வரிசைகளுடன் ஓர் ஊர்வலம் நடைபெற்றது.

விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் கீர்த்தனாவை, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்தும், சால்வை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர். அவரது உறவினர்கள் மேளதாளத்துடன் சீர்வரிசைகளைச் சுமந்து வந்தபோது, அமைச்சர் கீர்த்தனாவும் அவர்களுடன் இணைந்து சீர் சுமந்து ஊர்வலமாக வந்து விழாவில் பங்கேற்றார். திருமண மண்டபத்தில் நடந்த இவ்விழாவில், அமைச்சர் தனது சகோதரியின் மகளுக்கு மலர் தூவி வாழ்த்து தெரிவித்தார்.

விழாவில் கலந்துகொண்டு புறப்படத் தயாரான அமைச்சர் கீர்த்தனாவிடம் செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்ப முயன்றனர். ஆனால், அமைச்சர் கீர்த்தனா செய்தியாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டு, அங்கிருந்து வேகமாகச் சென்றுவிட்டார்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலூகா பகுதியில் கடும் வெயிலின் காரணமாக அதிக வெப்பம் நிலவி வந்த நிலையில், தற்போது சித்தரேவு ஊராட்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது. மேலும், விவசாயத்திற்கு மிகவும் ஏற்ற மழையாக இது அமைந்திருப்பதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலூகா பகுதியில் கடும் வெயிலின் காரணமாக அதிக வெப்பம் நிலவி வந்த நிலையில், தற்போது சித்தரேவு ஊராட்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது. மேலும், விவசாயத்திற்கு மிகவும் ஏற்ற மழையாக இது அமைந்திருப்பதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    21 hrs ago
  • தேனி மாவட்டத்தில் இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது, இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில், மாலை நேரத்தில் தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், சிறிது நேரத்திலேயே இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது. தேனி, பெரியகுளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. சுமார் ஒரு மணி நேரமாக பெய்த இந்த கனமழையால், கடுமையாக இருந்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், கடும் வெப்பத்தால் வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தற்போது நீர்வரத்து வரத் தொடங்கி இருப்பதால் விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    1
    தேனி மாவட்டத்தில் இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது, இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில், மாலை நேரத்தில் தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், சிறிது நேரத்திலேயே இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது.

தேனி, பெரியகுளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. சுமார் ஒரு மணி நேரமாக பெய்த இந்த கனமழையால், கடுமையாக இருந்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், கடும் வெப்பத்தால் வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தற்போது நீர்வரத்து வரத் தொடங்கி இருப்பதால் விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.