Shuru
Apke Nagar Ki App…
திருச்சி மாவட்டம், வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்த சின்னராசு என்பவர், தனது லாரியை அஜாக்கிரதையாக இயக்கி விபத்தை ஏற்படுத்தியதோடு, அதில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றவாளியாகக் கருதப்பட்ட சின்னராசுவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவருக்கு ரூ. 6,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
Usha arun News
திருச்சி மாவட்டம், வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்த சின்னராசு என்பவர், தனது லாரியை அஜாக்கிரதையாக இயக்கி விபத்தை ஏற்படுத்தியதோடு, அதில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றவாளியாகக் கருதப்பட்ட சின்னராசுவிற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவருக்கு ரூ. 6,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
More news from தமிழ்நாடு and nearby areas
- திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் ஏற்பட்டுள்ள ஆட்கள் பற்றாக்குறை காரணமாகப் பொதுமக்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர். இந்த மையத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே ஆதார் பதிவு மற்றும் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டைகளில் திருத்தங்களைச் செய்ய முடியாமல் பெரும் தாமதம் ஏற்படுகிறது. இதனால், தொட்டியம் காட்டுப்புத்தூர் பேரூராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 26 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆட்கள் குறைப்பு காரணமாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆதார் மையத்தில் உள்ள ஆட்கள் பற்றாக்குறையை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள கல்குவாரி மற்றும் கிரசர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஜெயங்கொண்டநிலை, மல்லாக்கோட்டை, சித்தமல்லிப்பட்டி, கிருஷ்ணாபுரம் மற்றும் மலம்பட்டி ஆகிய பகுதிகளில் அமையவிருக்கும் கல்குவாரி மற்றும் கிரசர்களை எதிர்த்து கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிங்கம்புணரி மற்றும் மேலூர் பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.1
- கரூர் மாவட்டத்தில் உள்ள 3,084 ஏக்கர் கோயில் நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, புகழிமலை முருகன் கோயில் மற்றும் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களின் பத்திரப்பதிவுக்கான தடையும் விலக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட ஆட்சியர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், அறநிலையத்துறை ஆணையர் இந்த தடை நீக்க உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம், திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோடிக்கோட்டை சுங்கச்சாவடி பகுதியில் தெரு மின்விளக்குகளுக்காகப் பதிக்கப்பட்ட மின்சாரக் கேபிள்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் அமைந்துள்ள மின்விளக்குகளுக்கு நிலத்திற்கு அடியில் கொண்டு செல்லப்பட்ட மின்சாரக் கேபிள்கள், தொடர் பழுதுகளால் தரைக்கு மேல் மாற்றப்பட்டுள்ளன. தற்போது கேபிள்கள் தரையின் மேற்பகுதியில் இருப்பதால், அவ்வழியாகச் செல்லும் கனரக வாகனங்களால் மின் வயர்கள் சேதமடைந்து மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் மின் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் நிலவுவதாகப் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். பெரும் விபத்துக்கள் நிகழும் முன்பாக, சம்பந்தப்பட்ட மின் கேபிள்களையும், தெரு மின்விளக்குகளையும் உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் எனத் தேசிய நெடுஞ்சாலைப் பயனாளிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்வதற்காக 'மகளிர் விடியல் பயணம்' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஐந்தாண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வந்த இந்தத் திட்டத்தில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் பெயரிலிருந்து 'விடியல்' என்ற வார்த்தை நீக்கப்பட்டு, இனி 'மகளிர் பயணம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றத்துடன் திருச்சியில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.1
- தேவகோட்டை நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், திடீர் மாற்றமாக மதிய வேளையில் கருமேகங்கள் சூழ்ந்தன. அதனைத் தொடர்ந்து மாலை நேரத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த திடீர் மழையினால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இருப்பினும், நீண்ட நாட்களாக நிலவிய கடுமையான வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், இப்பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- திருச்சியில் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் சிவகுமார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டலம், தீரன் நகர் கிளையைச் சேர்ந்த 88p பேருந்தை ஓட்டுநர் சிவகுமார் கே.கே.நகர் வழித்தடத்தில் இயக்கி வந்துள்ளார். இன்று காலை பேருந்து நிலையம் வந்தபோது, அங்கு தனியார் நிறுவனத்திற்குச் (MRF) சொந்தமான பேருந்து நிலையத்தின் நடுவே நிறுத்தப்பட்டிருந்தது. தனியார் பேருந்தை நகர்த்தி விடுமாறு ஓட்டுநர் சிவகுமார் கேட்டுக்கொண்ட போது, தனியார் நிறுவன பேருந்து ஓட்டுநர் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் சேர்ந்து அவரை கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். இந்த மோதலின் போது, பின்னால் வந்த மற்றொரு அரசு பேருந்தின் ஓட்டுநர் சதீஷ்குமார் மற்றும் நடத்துனர் பரமானந்தம் ஆகியோர் தடுக்க முயன்றனர். அப்போது, அந்த தனியார் நிறுவன ஓட்டுநர் அவர்களையும் தாக்க முயற்சி செய்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ஓட்டுநர் சிவகுமார் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன பேருந்தைக் கைப்பற்றியுள்ள காவல்துறை, தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் அவரது மகன் மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1