லஞ்சம் பெற்று வருட கணக்கில் மண் கொள்ளைக்கு அனுமதி அளித்த கனிமவளத்துறை குமரி. லஞ்சம் பெற்று வருட கணக்கில் மண் கொள்ளைக்கு அனுமதி அளித்த கனிமவளத்துறை. ஒரு டெம்போ மண் எடுக்க அனுமதிக்கு 600 ரூபாய் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு. அழிக்கப்படும் மலைக் குன்றுகளால் இயற்கையே அழியும் அபாயம் சட்டவிரோதமாக கொடுக்கப்பட்ட மண்கொள்ளை அனுமதி குறித்து விவசாய குறைதீர் கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளால் பரபரப்பு கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமோடி மற்றும் குழித்துறை அருகே பாலவிளை உட்பட பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக ஒரு வருடம் மண் எடுக்க குமரி மாவட்ட கனிம வள துறை உதவி இயக்குநர் அனுமதி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு உள்ள மலை குன்று அழிக்கப்பட்டு அதில் இருந்த பாறைகளும் மற்றும் விவசாயத்திற்கு செல்லும் கால்வாய் பகுதிகளும் உடைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒரு டெம்போ மண் எடுக்க 600 ரூபாயை ஒரு வெளியூர் கும்பல் ஒன்று குழுவாக இருந்து வசூலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்க கூட கடுமையான சட்ட விதிகளை பின்பற்றி மாவட்ட ஆட்சியரின் உத்தரவு பெற வேண்டி இருக்கும் நிலையில், சுற்று சூழல் அனுமதி இன்றி மலை குன்று பகுதியை முழுமையாக அழித்து அதில் இருந்து சட்ட விரோதமாக மண் கொள்ளை நடத்த மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனரே மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறாமல் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் ரகசியம் காத்து வருட கணக்கில் மண் எடுத்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . மேலும் எந்த அனுமதியும் இன்றி அதில் இருந்த பாறைகளையும் உடைத்து எடுத்து சட்ட விரோதமாக பாறைகளையும் உடைத்து கால்வாய்களையும் அழித்து மண் கடத்தி வருகின்றனர். இதற்கு பெரும் லஞ்சம் கைமாறி உள்ளதாக கூறப்படுகிறது. சாதாரணமாக 5 செட் 10 சென்ட் இடங்களில் வீடு கட்டுவதற்கு நிலத்தை சரி சமன் செய்ய அனுமதி கேட்கும் போது மிக கடினமான சட்ட வழிமுறைகளை பின்பற்றும் கனிமவளத்துறை பெரும் மண் கொள்ளை நடத்த விதிகளை தளர்த்தி பெருமளவு லஞ்சம் பெற்று அனுமதி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் எழுப்பப்பட்டு உள்ளது. இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அமைச்சர்கள் மற்றும் குமரி மாவட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு லஞ்சம் கொடுப்பதற்காக பணம் பெறுவதாக மேற்படி பணம் வசூல் செய்யும் கும்பல் கூறியதாகவும் அந்த குற்றச்சாட்டுகளை கேட்டு மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி அடைந்து கனிமவளத்துறை அதிகாரிகளிடம் விபரங்கள் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. சாதாரணமாக அனுமதி கொடுக்கும் போது 5 லிருந்து 7 நாட்களுக்குள்ளாக நிலத்தை சமன் செய்து மண் எடுக்க அனுமதி வழங்குவது வழக்கம். அந்த மண்ணை கூட விற்பனை செய்ய அனுமதி இல்லை என்பதும் அவர்களின் மாற்று விவசாய நிலங்களில் போட மட்டுமே அனுமதி என்பது குறிப்பிடத்தக்கது. மண் தேவைக்கு குமரி மாவட்ட குளங்களில் இருந்து மண் எடுத்து பயன்படுத்தலாம். அதனால் குமரி மாவட்ட பாசன குளங்கள் கூடுதல் நீரை தேக்கி வைக்கும் நிலையும் உருவாகும். ஆனால் தற்போது மண்ணை விற்று கொள்ளை லாபம் பார்க்க மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் விரோதமாக அனுமதி கொடுத்து மண்கொள்ளைக்கு உடந்தையாக செயல்பட்டு உள்ளது குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விவசாய சங்கங்கள் தற்போது வரும் 24ம் தேதி குமரி மாவட்டத்திற்கு வர இருக்கும் தமிழக முதல்வரிடம் நேரில் மண் கொள்ளை குறித்து முறையிடுவது என தீர்மானிக்கப்பட்டதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆகவே சட்ட விரோதமாக லஞ்சத்திற்காக கொடுக்கப்பட்டுள்ள மண் கொள்ளை மற்றும் பாறைகளை உடைத்து கடத்தும் செயலை தடுக்கவும் கால்வாயை உடைத்து சேதப்படுத்தியவர்கள் மீது உடனடியாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து சட்டவிரோதமாக கனிமவளத்துறை உதவி இயக்குனரால் கொடுக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 600 ரூபாய் வீதம் ஒரு டெம்போ மண்ணுக்கு லஞ்சம் பெறும் கும்பல் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
லஞ்சம் பெற்று வருட கணக்கில் மண் கொள்ளைக்கு அனுமதி அளித்த கனிமவளத்துறை குமரி. லஞ்சம் பெற்று வருட கணக்கில் மண் கொள்ளைக்கு அனுமதி அளித்த கனிமவளத்துறை. ஒரு டெம்போ மண் எடுக்க அனுமதிக்கு 600 ரூபாய் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு. அழிக்கப்படும் மலைக் குன்றுகளால் இயற்கையே அழியும் அபாயம் சட்டவிரோதமாக கொடுக்கப்பட்ட மண்கொள்ளை அனுமதி குறித்து விவசாய குறைதீர் கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளால் பரபரப்பு கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமோடி மற்றும் குழித்துறை அருகே பாலவிளை உட்பட பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக ஒரு வருடம் மண் எடுக்க குமரி மாவட்ட கனிம வள துறை உதவி இயக்குநர் அனுமதி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு உள்ள மலை குன்று அழிக்கப்பட்டு அதில் இருந்த பாறைகளும் மற்றும் விவசாயத்திற்கு செல்லும் கால்வாய் பகுதிகளும் உடைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒரு டெம்போ மண் எடுக்க 600 ரூபாயை ஒரு வெளியூர் கும்பல் ஒன்று குழுவாக இருந்து வசூலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. குளங்களில் இருந்து வண்டல் மண் எடுக்க கூட கடுமையான சட்ட விதிகளை பின்பற்றி மாவட்ட ஆட்சியரின் உத்தரவு பெற வேண்டி இருக்கும் நிலையில், சுற்று சூழல் அனுமதி இன்றி மலை குன்று பகுதியை முழுமையாக அழித்து அதில் இருந்து சட்ட விரோதமாக மண் கொள்ளை நடத்த மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனரே மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறாமல் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் ரகசியம் காத்து வருட கணக்கில் மண் எடுத்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . மேலும் எந்த அனுமதியும் இன்றி அதில் இருந்த பாறைகளையும் உடைத்து எடுத்து சட்ட விரோதமாக பாறைகளையும் உடைத்து கால்வாய்களையும் அழித்து மண் கடத்தி வருகின்றனர். இதற்கு பெரும் லஞ்சம் கைமாறி உள்ளதாக கூறப்படுகிறது. சாதாரணமாக 5 செட் 10 சென்ட் இடங்களில் வீடு கட்டுவதற்கு நிலத்தை சரி சமன் செய்ய அனுமதி கேட்கும் போது மிக கடினமான சட்ட வழிமுறைகளை பின்பற்றும் கனிமவளத்துறை பெரும் மண் கொள்ளை நடத்த விதிகளை தளர்த்தி பெருமளவு லஞ்சம் பெற்று அனுமதி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் எழுப்பப்பட்டு உள்ளது. இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அமைச்சர்கள் மற்றும் குமரி மாவட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு லஞ்சம் கொடுப்பதற்காக பணம் பெறுவதாக மேற்படி பணம் வசூல் செய்யும் கும்பல் கூறியதாகவும் அந்த குற்றச்சாட்டுகளை கேட்டு மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி அடைந்து கனிமவளத்துறை அதிகாரிகளிடம் விபரங்கள் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. சாதாரணமாக அனுமதி கொடுக்கும் போது 5 லிருந்து 7 நாட்களுக்குள்ளாக நிலத்தை சமன் செய்து மண் எடுக்க அனுமதி வழங்குவது வழக்கம். அந்த மண்ணை கூட விற்பனை செய்ய அனுமதி இல்லை என்பதும் அவர்களின் மாற்று விவசாய நிலங்களில் போட மட்டுமே அனுமதி என்பது குறிப்பிடத்தக்கது. மண் தேவைக்கு குமரி மாவட்ட குளங்களில் இருந்து மண் எடுத்து பயன்படுத்தலாம். அதனால் குமரி மாவட்ட பாசன குளங்கள் கூடுதல் நீரை தேக்கி வைக்கும் நிலையும் உருவாகும். ஆனால் தற்போது மண்ணை விற்று கொள்ளை லாபம் பார்க்க மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் விரோதமாக அனுமதி கொடுத்து மண்கொள்ளைக்கு உடந்தையாக செயல்பட்டு உள்ளது குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விவசாய சங்கங்கள் தற்போது வரும் 24ம் தேதி குமரி மாவட்டத்திற்கு வர இருக்கும் தமிழக முதல்வரிடம் நேரில் மண் கொள்ளை குறித்து முறையிடுவது என தீர்மானிக்கப்பட்டதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆகவே சட்ட விரோதமாக லஞ்சத்திற்காக கொடுக்கப்பட்டுள்ள மண் கொள்ளை மற்றும் பாறைகளை உடைத்து கடத்தும் செயலை தடுக்கவும் கால்வாயை உடைத்து சேதப்படுத்தியவர்கள் மீது உடனடியாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து சட்டவிரோதமாக கனிமவளத்துறை உதவி இயக்குனரால் கொடுக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 600 ரூபாய் வீதம் ஒரு டெம்போ மண்ணுக்கு லஞ்சம் பெறும் கும்பல் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- கன்னியாகுமரி மாவட்ட அரசு பேருந்துகளில் பெண் நடத்துனர்கள் இவர்கள் பயணிகளின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளனர். புன்முறுவலுடன் டிக்கெட் வழங்கி, கனிவான சொற்களால் பேசும் அவர்கள் சேவை பாராட்டுதலுக்குரியது. ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும் இடத்தின் பெயரை தெளிவாகச் சொல்லி பயணிகளை இறக்கிவிடும் பொறுப்புணர்வு குறிப்பிடத்தக்கது. முதியவர்கள், பெண்கள், மாணவர்கள் என அனைவரிடமும் நட்பாக பழகும் விதம் பயணிகளுக்கு புதிய அனுபவமாக அமைந்துள்ளது. பாதுகாப்பும், மரியாதையும் கலந்த சேவை மூலம் பொதுப் போக்குவரத்தில் மனிதநேயத்தின் அழகை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.1
- தென்காசி மாவட்டம், ஆயிரப்பேரி சாலை,புதிய கோர்ட் வளாகம் அருகில் 17/02/2026 நேற்றைய தினம், சுபாஷ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் 31 வது ஆண்டு விழா நடைபெற்றது.இவ்விழாவில் முன்னாள் குழந்தைகள் நல குழு உறுப்பினர் திருநெல்வேலி .Dr. R.S.K.துரை அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பள்ளியின் சேர்மன் முருகன், பிரின்சிபால் M. சிவசுந்தர வடிவு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் SC துறை மாநிலச் செயலாளர் நல்லூர் நாயகன் K.S. கணேசன், ஆயிரப்பேரி லட்சுமணன், கடைய நல்லூர் விசிக நகரச் செயலாளர் இ. பாக்கியநாதன்மற்றும் ஆசிரியர் பெருமக்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.1
- தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி மாநகராட்சிகளில் மண்டல வாரியாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் (18-2-2026) புதன்கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. தெருவிளக்கு மற்றும் தார்சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த கூட்டத்தில் ஆணையாளர் பிரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1
- தூத்துக்குடி: மாநகராட்சி பகுதியில் வசிக்கின்ற பொதுமக்கள் பக்கிள் ஓடையில் கேரி பைகளையும் குப்பைகளையும் நேரிடையாகவும் சாக்குபைகளில் உள்ளே வைத்து மறைமுகமாகவும் போடுவதை தவிர்க்க வேண்டும் மேயர் ஜெகன் வேண்டுகோள். மாநகராட்சி மேயர் ஜெகன் தலைமையில் கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட மேயர் பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் தொடர்ந்து பேசிய அவர் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் மேம்படுத்தி விரிவாக்கம் செய்யப்பட உள்ளது திருவிளக்குகள் மற்றும் பாதாள சாக்கடை வசதிகள் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்குவதை தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் நிரந்தர தீர்வு காணும் வகையில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார் புதிதாக 278 சாலைகள் போடும் பணிகள் நடைபெற்று வருகிறது வரும் மே மாதத்திற்குள்ளாக இந்த பணிகள் நிறைவடையும் மாநகராட்சி வக்கீல் ஓடையில் பொதுமக்கள் கேரி பை உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகள் போடுவதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது ஆனால் தற்பொழுது அவற்றை சிறிய சாக்கு பைகளில் வைத்து கேரிப்பை உள்ளே வைத்து போடுகின்றனர் இதை தவிர்க்க வேண்டும் பத்தில்வோடையானது வரும் காலத்தில் மழை பெய்தால் மட்டும் மலை வெள்ள நீர் செல்வதற்காக வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது மற்ற நேரங்களில் பாதாள சாக்கடை மூலமாக மட்டுமே கழிவுநீர் வெளியேற்றப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவே பொதுமக்கள் முழுமையான உண்மையான ஒத்துழைப்பை தர வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் பிரியங்கா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்1
- (18-2-2026) புதன் #சோதிடம் #ராசிபலன்இன்று #கிரகபலன் #நட்சத்திரம் #maatramworld #tamil #god1
- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேனி மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பாக ஆர்ப்பாட்டம் திமுக அரசை கண்டித்து நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக முழுவதும் பட்டியல்சமுதாய மக்களுக்காக மத்திய அரசு வழங்கிய 400 கோடி ரூபாயை திமுக அரசு அனுப்பியதாக கூறி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தேனி மாவட்ட பாஜக தலைவர் இராஜபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்1
- தேனி நகரத்தின் நீண்டகால பிரச்சினையை தீர்த்து தர இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் பெத்தாச்சி ஆசாத் தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். தேனி நகரத்தில் நீண்ட கால பிரச்சனையும் 3000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள பிரச்சனையுமான நத்தமா வால் கரடா என்பதை தீர்த்து வைக்குமாறு பேட்டி மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.1
- தூத்துக்குடி: கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதை முன்னிட்டு தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி வழிபாடு நடைபெற்றது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் வகையில். ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்கால திருநாளாக கடைபிடித்து வருகின்றனர். அதன்படி நிகழாண்டுக்கான தவக்காலம் இன்று சாம்பல் புதனாக கடைபிடிக்கப்பட்டு தொடங்கியது. அதனைத் தொடர்ந்து. தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியை பங்குத்தந்தை. செல்வன் பெர்னாண்டோ நிறைவேற்றினார். பின்னர் கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பலால் திருச்சிலுவை அடையாளம் வரையப்பட்டது. இதே போல் தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா தேவாலயம், திரு இருதய பேராலயம், புனித அந்தோணியார் திருத்தலம், யூதா ததேயூ ஆலயம், மிக்கேல் அதிதூதர் தேவாலயம், சிஎஸ்ஐ தேவாலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலிகள், சாம்பல் புதன் பிரார்த்தனைகள் நடைபெற்றன இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் திருச்சிலுவை வழிபாடு நடைபெறுகிறது. மேலும் தவக்கால திருப்பயணம், தியானம் உள்ளிட்டவை நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 29ஆம் தேதி குருதோலை ஞாயிறு அதனைத் தொடர்ந்து. ஏப்ரல் 02-04-26ஆம் தேதி புனித வியாழன் கடைபிடிக்கப்படுகிறது. அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் சடங்கும், அடுத்த நாள் புனித வெள்ளி இயேசு சிலுவையில் அறையப்பட்டதை தியானிக்கும் புனித வெள்ளி சிலுவைப்பாதை சடங்குகளும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான இயேசு உயிர்த்தெழுந்ததை கொண்டாடும். ஈஸ்டர் பண்டிகை வரும் ஏப்ரல் 05-04-26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் ஏராளமானோர் தேவ ஆலயங்களில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.1