logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 32 வயதான கூலித் தொழிலாளி விஜயகுமார், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து ஐடிஐ பைபாஸ் சாலையில் தனது ஸ்ப்ளெண்டர் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஈரோட்டிலிருந்து பழனி நோக்கி தாராபுரம் வழியாக வந்து கொண்டிருந்த தினேஷ் (24) மற்றும் அவரது நண்பர்கள் சென்ற வாகனம், விஜயகுமாரின் பைக் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட விஜயகுமார் சாலையோரத்தில் விழுந்து உயிருக்கு போராடிய நிலையில், அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த ஈரோட்டைச் சேர்ந்த தினேஷ், தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்ற பின், மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

12 hrs ago
user_Jagan
Jagan
தாராபுரம், திருப்பூர், தமிழ்நாடு•
12 hrs ago

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 32 வயதான கூலித் தொழிலாளி விஜயகுமார், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து ஐடிஐ பைபாஸ் சாலையில் தனது ஸ்ப்ளெண்டர் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஈரோட்டிலிருந்து பழனி நோக்கி தாராபுரம் வழியாக வந்து கொண்டிருந்த தினேஷ் (24) மற்றும் அவரது நண்பர்கள் சென்ற வாகனம், விஜயகுமாரின் பைக் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட விஜயகுமார் சாலையோரத்தில் விழுந்து உயிருக்கு போராடிய நிலையில், அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த ஈரோட்டைச் சேர்ந்த தினேஷ், தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்ற பின், மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More news from Dindigul and nearby areas
  • திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள அ. கலையமுத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மதுரை வீரன் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவில் இடைப்பட்ட பகுதியில் காவிரி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் வீணாக விவசாய நிலங்களுக்குள் செல்வதாக மாவட்ட ஆட்சியர் திருமதி துர்கா தேவி அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவலைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உடனடியாக களமிறங்கி குழாயைச் சீரமைக்க உத்தரவிட்டார். மாவட்ட நிர்வாகத்தின் இந்த விரைவான நடவடிக்கையை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள அ. கலையமுத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மதுரை வீரன் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவில் இடைப்பட்ட பகுதியில் காவிரி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் வீணாக விவசாய நிலங்களுக்குள் செல்வதாக மாவட்ட ஆட்சியர் திருமதி துர்கா தேவி அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தகவலைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உடனடியாக களமிறங்கி குழாயைச் சீரமைக்க உத்தரவிட்டார். மாவட்ட நிர்வாகத்தின் இந்த விரைவான நடவடிக்கையை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
    user_Sudharsan
    Sudharsan
    Palani, Dindigul•
    15 hrs ago
  • கரூர் மாவட்டத்தில் உள்ள 3,084 ஏக்கர் கோயில் நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, புகழிமலை முருகன் கோயில் மற்றும் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களின் பத்திரப்பதிவுக்கான தடையும் விலக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட ஆட்சியர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், அறநிலையத்துறை ஆணையர் இந்த தடை நீக்க உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
    1
    கரூர் மாவட்டத்தில் உள்ள 3,084 ஏக்கர் கோயில் நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, புகழிமலை முருகன் கோயில் மற்றும் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களின் பத்திரப்பதிவுக்கான தடையும் விலக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட ஆட்சியர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், அறநிலையத்துறை ஆணையர் இந்த தடை நீக்க உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
    user_Karur Wood's Tv
    Karur Wood's Tv
    Photographer கரூர், கரூர், தமிழ்நாடு•
    3 hrs ago
  • கோயம்புத்தூர் பகுதியில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில், தனது தாயுடன் இருந்த குட்டி அதன் பாதுகாவலருடன் விளையாடும் காட்சி வெளியாகியுள்ளது.
    1
    கோயம்புத்தூர் பகுதியில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில், தனது தாயுடன் இருந்த குட்டி அதன் பாதுகாவலருடன் விளையாடும் காட்சி வெளியாகியுள்ளது.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    3 hrs ago
  • திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்றிரவு தங்கியிருந்த ஜெபகுமார் (35) மற்றும் சக்கரவர்த்தி (34) ஆகிய இருவரும் மது அருந்திய நிலையில் முதல் மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஜெபகுமார் முதல் மாடியிலிருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விடுதி மேலாளர் அளித்த தகவலின் பேரில், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஜெபகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள தாராபுரம் போலீசார், விடுதி மேலாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஜெபகுமார் மது போதையில் தற்செயலாகக் கீழே விழுந்தாரா அல்லது அவரது நண்பர் தள்ளிவிட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுதியில் தங்கியிருந்த வாலிபர் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    1
    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்றிரவு தங்கியிருந்த ஜெபகுமார் (35) மற்றும் சக்கரவர்த்தி (34) ஆகிய இருவரும் மது அருந்திய நிலையில் முதல் மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஜெபகுமார் முதல் மாடியிலிருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விடுதி மேலாளர் அளித்த தகவலின் பேரில், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஜெபகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள தாராபுரம் போலீசார், விடுதி மேலாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், ஜெபகுமார் மது போதையில் தற்செயலாகக் கீழே விழுந்தாரா அல்லது அவரது நண்பர் தள்ளிவிட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுதியில் தங்கியிருந்த வாலிபர் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    user_Jagan
    Jagan
    தாராபுரம், திருப்பூர், தமிழ்நாடு•
    9 hrs ago
  • திருப்பூர் மாவட்டம் குண்டடம் காவல் எல்லைக்குட்பட்ட வேங்கிப்பாளையம் செங்காட்டுத் தோட்டம் ராமநாதபுரம் அருகே நந்தகோபால் (47) என்பவருக்குச் சொந்தமான கோகுல் காட்டன் பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இன்று மதியம் சுமார் 1.30 மணியளவில் குடோனில் திடீரென கரும்புகை எழுந்ததை அங்கு பணியாற்றி வந்த உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களான சிவா (29) மற்றும் அரவிந்த் (28) ஆகியோர் கவனித்து உடனடியாக வெளியேறினர். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவலறிந்த தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஆ. ரவிச்சந்திரன் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ வேகமாக பரவியதால், காங்கேயம் தீயணைப்பு நிலைய அலுவலர் மு. கார்த்திகேஷன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவும் அவர்களுடன் இணைந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தது. இந்த விபத்தில் உயிரிழப்போ அல்லது காயமோ ஏற்படவில்லை என்றாலும், ₹1 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசமாகியுள்ளதாக குடோன் உரிமையாளர் நந்தகோபால் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், உரிய நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    1
    திருப்பூர் மாவட்டம் குண்டடம் காவல் எல்லைக்குட்பட்ட வேங்கிப்பாளையம் செங்காட்டுத் தோட்டம் ராமநாதபுரம் அருகே நந்தகோபால் (47) என்பவருக்குச் சொந்தமான கோகுல் காட்டன் பஞ்சு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இன்று மதியம் சுமார் 1.30 மணியளவில் குடோனில் திடீரென கரும்புகை எழுந்ததை அங்கு பணியாற்றி வந்த உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களான சிவா (29) மற்றும் அரவிந்த் (28) ஆகியோர் கவனித்து உடனடியாக வெளியேறினர். மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்த தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஆ. ரவிச்சந்திரன் தலைமையிலான 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ வேகமாக பரவியதால், காங்கேயம் தீயணைப்பு நிலைய அலுவலர் மு. கார்த்திகேஷன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவும் அவர்களுடன் இணைந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தது. இந்த விபத்தில் உயிரிழப்போ அல்லது காயமோ ஏற்படவில்லை என்றாலும், ₹1 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசமாகியுள்ளதாக குடோன் உரிமையாளர் நந்தகோபால் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், உரிய நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    user_Jagan
    Jagan
    தாராபுரம், திருப்பூர், தமிழ்நாடு•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.