தேனி, வீரபாண்டி கோயில் திருவிழாவை முன்னிட்டு, நடைபெற்று வரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு தேனி, வீரபாண்டி கோயில் திருவிழாவை முன்னிட்டு, நடைபெற்று வரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சிப் பகுதியில் அமைந்துள்ள கௌமாரியம்மன் திருக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா நடைபெறவுள்ளதையொட்டி, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், (11.05.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். வீரபாண்டியில் அமைந்துள்ள கௌமாரியம்மன் திருக்கோயில் திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 12.05.2026 முதல் 19.05.2026 வரை திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் இலட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்ய உள்ளார்கள். மேலும், தேரோட்ட திருவிழா 15.05.2025 அன்று நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி தரிசனம் செய்திட ஏதுவாக போக்குவரத்து வசதி, சுகாதார வசதி, தற்காலிக பந்தல்கள், தற்காலிக கழிப்பிட வசதி, தற்காலிக பேருந்து நிலையம், கட்டணமில்லா இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதையும், பக்தர்கள் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதையும், அனைத்து முக்கிய சந்திப்புகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அளவு மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள இருப்பதால், அவசரகால முதலுதவி சிகிச்சைக்காக பொதுசுகாதாரத்துறையின் சார்பில் இலவச மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதையும் நேரில் பார்வையிட்டார். மேலும், குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்களுடன் அமைக்கப்பட்டு வரும் இராட்டினங்கள் மற்றும் தற்காலிக கடைகளை பார்வையிட்டு, அனைத்திற்கும் காப்பீடு (insurance) கட்டாயம் வேண்டும் என்றும், அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு இராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளதை அலுவலர்கள் உறுதி செய்த பின்னரே அதனை இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து, திருவிழா நடைபெறும் நாட்களில் பக்தர்களுக்கு எந்தஒரு இடையூறும் ஏற்படாத வகையில், வாகன அனுமதிச்சீட்டு பெற்ற வாகனங்கள் செல்லுக்கூடிய வழித்தடங்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்லும் வழித்தடங்களை நேரில் பார்வையிட்டு, பின்னர், தேனியிலிருந்து சாலைமார்க்கமாக வீரபாண்டி நோக்கி செல்லக்கூடிய பக்தர்களின் வசதிக்காக போடேந்திரபுரம் விலக்கில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தினையும், கம்பத்திலிருந்து வீரபாண்டி நோக்கி செல்லும் பக்தர்களின் வசதிக்காக வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹாப்ரியா, பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தமிழரசி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலைக்கதிரவன், உதவி ஆணையர் (இந்துசமய அறநிலையத்துறை) ஜெயதேவி, உதவி செயற்பொறியாளர் மணிமாறன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.எடிசன், வட்டாட்சியர் (தேனி) சதீஸ்குமார், செயல் அலுவலர்கள் இளங்கோவன், சுபிதா உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
தேனி, வீரபாண்டி கோயில் திருவிழாவை முன்னிட்டு, நடைபெற்று வரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு தேனி, வீரபாண்டி கோயில் திருவிழாவை முன்னிட்டு, நடைபெற்று வரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சிப் பகுதியில் அமைந்துள்ள கௌமாரியம்மன் திருக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா நடைபெறவுள்ளதையொட்டி, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், (11.05.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். வீரபாண்டியில் அமைந்துள்ள கௌமாரியம்மன் திருக்கோயில் திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 12.05.2026 முதல் 19.05.2026 வரை திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் இலட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்ய உள்ளார்கள். மேலும், தேரோட்ட திருவிழா 15.05.2025 அன்று நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றி தரிசனம் செய்திட ஏதுவாக போக்குவரத்து வசதி, சுகாதார வசதி, தற்காலிக பந்தல்கள், தற்காலிக கழிப்பிட வசதி, தற்காலிக பேருந்து நிலையம், கட்டணமில்லா இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதையும், பக்தர்கள் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதையும், அனைத்து முக்கிய சந்திப்புகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அளவு மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள இருப்பதால், அவசரகால முதலுதவி சிகிச்சைக்காக பொதுசுகாதாரத்துறையின் சார்பில் இலவச
மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதையும் நேரில் பார்வையிட்டார். மேலும், குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்களுடன் அமைக்கப்பட்டு வரும் இராட்டினங்கள் மற்றும் தற்காலிக கடைகளை பார்வையிட்டு, அனைத்திற்கும் காப்பீடு (insurance) கட்டாயம் வேண்டும் என்றும், அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு இராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளதை அலுவலர்கள் உறுதி செய்த பின்னரே அதனை இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து, திருவிழா நடைபெறும் நாட்களில் பக்தர்களுக்கு எந்தஒரு இடையூறும் ஏற்படாத வகையில், வாகன அனுமதிச்சீட்டு பெற்ற வாகனங்கள் செல்லுக்கூடிய வழித்தடங்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்லும் வழித்தடங்களை நேரில் பார்வையிட்டு, பின்னர், தேனியிலிருந்து சாலைமார்க்கமாக வீரபாண்டி நோக்கி செல்லக்கூடிய பக்தர்களின் வசதிக்காக போடேந்திரபுரம் விலக்கில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தினையும், கம்பத்திலிருந்து வீரபாண்டி நோக்கி செல்லும் பக்தர்களின் வசதிக்காக வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹாப்ரியா, பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தமிழரசி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலைக்கதிரவன், உதவி ஆணையர் (இந்துசமய அறநிலையத்துறை) ஜெயதேவி, உதவி செயற்பொறியாளர் மணிமாறன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.எடிசன், வட்டாட்சியர் (தேனி) சதீஸ்குமார், செயல் அலுவலர்கள் இளங்கோவன், சுபிதா உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
- 2026 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை சென்னை அணி தட்டி சென்றது* *4 நாட்களாக நடைபெற்று வந்த போட்டியில் காஞ்சிபுரம் இரண்டாம் இடமும், மதுரை அணி மூன்றாம் இடத்தையும் பெற்றது* *2026 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை சென்னை அணி தட்டி சென்றது* *4 நாட்களாக நடைபெற்று வந்த போட்டியில் காஞ்சிபுரம் இரண்டாம் இடமும், மதுரை அணி மூன்றாம் இடத்தையும் பெற்றது* தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் மற்றும் தேனி மாவட்ட அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் சார்பில் 2026 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி தேனியில் நடைபெற்றது தேனி மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் கடந்த 7ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியானது இன்று 10-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்று முடிந்தது இந்த போட்டியில் சென்னை, காஞ்சிபுரம், சேலம், மதுரை, திருச்சி, திண்டுக்கல், அரியலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இருந்து சுமார் 1000 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு வயது வாரியாக பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது நான்கு நாட்களாக நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணி முதலாவது இடம் பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டி சென்றது, அவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது தொடர்ந்து இரண்டாம் இடத்தில் காஞ்சிபுரம் அணியும் மற்றும் மூன்றாம் இடத்தில் மதுரை அணியும் வெற்றி பெற்றது போட்டியில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களுக்கும் பாராட்டுச் சான்றிதல் வழங்கப்பட்டது இந்த போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு வரக்கூடிய மாதங்களில் தொடர்ந்து நடைபெறும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என கிக் பாக்ஸிங் அசோசியேஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது1
- தர்பூசணி பழத்தில் முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை செதுக்கி வடிவமைத்து வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த சிற்பக் கலைஞர்* *தர்பூசணி பழத்தில் முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை செதுக்கி வடிவமைத்து வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த சிற்பக் கலைஞர்* தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று காலை முதலமைச்சராக பதவி ஏற்றார் அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றனர் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முதல் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டாடினர் இந்த நிலையில் தேனி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த காய்கறி சிற்பக் கலைஞரான இளஞ்செழியன் முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தர்பூசணி பழத்தில் விஜயின் முகத்தை வடிவமைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் "தமிழ்நாடு அரசு" சின்னத்துடன் "முதலமைச்சர்" என்கிற வாசகத்துடனும் மற்றொரு தர்ப்பூசணி பழத்தில் விஜயின் புகைப்படத்துடன் வாழ்த்துக்கள் "தமிழ்நாடு சிஎம் 2026" என ஆங்கிலத்தில் வடிவமைத்து வித்தியாசமான முறையில் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்1
- தர்பூசணி பழத்தில் முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை செதுக்கி வடிவமைத்து வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த சிற்பக் கலைஞர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை முதலமைச்சராக பதவி ஏற்றார் அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றனர் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும் பொது மக்களுக்கு இடுப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டாடினர் இந்த நிலையில் தேனி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த காய்கறி சிற்பக் கலைஞரான இளஞ்செழியன் முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தர்பூசணி பழம் விஜயின் முகத்தை வடிவமைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் "தமிழ்நாடு அரசு" சின்னத்துடன் "முதலமைச்சர்" என்கிற வாசகத்துடனும் மற்றொரு தர்ப்பூசணி பழத்தில் விஜயின் புகைப்படத்துடன் வாழ்த்துக்கள் தமிழ்நாடு சிஎம் என ஆங்கிலத்தில் வடிவமைத்து வித்தியாசமான முறையில் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்1
- தேனியில் தமிழ்நாடு மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. சென்னை, காஞ்சிபுரம் உட்பட 24 மாவட்டங்களிலிருந்து சுமார் 1000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெறுவார்கள்.2
- அன்புVsதொல்லை !! உண்மையான அன்புக்கு இயங்குபவர்களுக்கு அது தொல்லையாக தெரியாது !!!1
- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு மாதங்களுக்கு பிறகு துவங்கிய மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் - அதிகாரிகள் செல்போன் பார்க்கும் அவலம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு 2 மாதங்களுக்கு பின்பு இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது பிரச்சனைகளை மனுக்களாக அளிக்க வந்தவர்களுக்கு போதுமான இருக்கை வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை மேலும் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள ஒரு சில அதிகாரிகள் செல்போன் பார்த்து கொண்டும், செல்போன் பேசிக் கொண்டும் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- மாவட்ட ஆட்சித்தலைவர் மக்கள் குறைதீர்க்கும் நாளில் அலுவலர்களின் அலட்சியம். நீண்ட நாட்களுக்கு பின்பாக நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியில் அலுவலர்கள் அனைவரும் செல்போனை பயன்படுத்தியவாறு மக்கள் குறைதீர்க்கும் நாளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அலுவலர்கள் அதிர்ச்சியில் மக்கள்1
- கௌமாரியம்மன் கோவில் அருகே ராட்டினம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது தேனி அருகே உள்ள வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா நாளை முதல் எட்டு நாட்கள் நடைபெற உள்ளது இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வருகை தர உள்ளனர் இதனால் கோவில் அருகே உள்ள மைதானத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மாணவர்கள் பொழுதுபோக்குக்காக ராட்டினம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது1