திண்டுக்கல் காரில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் அருகே காரில் கடத்திவரப்பட்ட 250 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கா்நாடக மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்துக்கு காா், சரக்கு வாகனங்கள் மூலம் புகையிலைப் பொருள்கள் கடத்தி வரப்படுகின்றன. குறிப்பிட்ட சில இடங்களில் பதுக்கி வைக்கப்படும் இந்த புகையிலைப் பொருள்கள், முகவா்கள் மூலம் சில்லரை வியாபாரத்துக்கு கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.இந்த நிலையில், ரெட்டியாா்சத்திரம் அடுத்த புதுச்சத்திரம் நரிப்பட்டி பிரிவு அருகே உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் செல்வம், ஜாபா் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீா் சோதனை நடத்தினா். அப்போது ஒரு காரில் 250 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து, காரில் வந்த இருவா்கள் தப்பிச் சென்றனா். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் மதிப்பு ரூ.ஒரு லட்சம் என உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் தெரிவித்தனா். புகையிலைப் பொருள்களுடன் காரை பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள், காவல் துறை உதவியுடன் அடுத்தக் கட்ட விசாரணையில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் காரில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் அருகே காரில் கடத்திவரப்பட்ட 250 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கா்நாடக மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்துக்கு காா், சரக்கு வாகனங்கள் மூலம் புகையிலைப் பொருள்கள் கடத்தி வரப்படுகின்றன. குறிப்பிட்ட சில இடங்களில் பதுக்கி வைக்கப்படும் இந்த புகையிலைப் பொருள்கள், முகவா்கள் மூலம் சில்லரை வியாபாரத்துக்கு கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.இந்த நிலையில், ரெட்டியாா்சத்திரம் அடுத்த புதுச்சத்திரம் நரிப்பட்டி பிரிவு அருகே உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் செல்வம், ஜாபா் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீா் சோதனை நடத்தினா். அப்போது ஒரு காரில் 250 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்தப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து, காரில் வந்த இருவா்கள் தப்பிச் சென்றனா். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் மதிப்பு ரூ.ஒரு லட்சம் என உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் தெரிவித்தனா். புகையிலைப் பொருள்களுடன் காரை பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள், காவல் துறை உதவியுடன் அடுத்தக் கட்ட விசாரணையில் ஈடுபட்டனா்.
- திண்டுக்கல் மாவட்டம் நாகல்புதூரில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் (குட்டவாத்தியார் பள்ளி) 100வது ஆண்டுவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள். மேலும் தற்போது பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.1
- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுநல ஆர்வலர் காளிராஜ் என்பவர் மனு அளித்தார். அந்த மனுவில்:- திண்டுக்கல்லை அடுத்த ரெட்டியார் சத்திரம் பகுதியில் அமைந்துள்ளது பாதாள செம்பு முருகன் கோவில். இக்கோயிலில் உள்ள சிலையை பற்றிய வரலாற்றின் உண்மைத் தன்மையை தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்திடவும், மேலும் தவறான வரலாற்று செய்திகளை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பி பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு கோவிலை நடத்தி வருகின்றனர். மேலும் கருங்காலி மாலை என்று சொல்லி ஒரு மாலை ரூ.1000 முதல் ரூ.5000 வரை விற்று பணம் சம்பாதிப்பதோடு மட்டுமல்லாமல், அந்த மாலையை அணிந்தால் பணம், புகழும் கிடைக்கும் பிரச்சனைகள் தீரும் என்று தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1
- வேடசந்தூர் பூதிபுரம் ஊராட்சியில் தைலா கவுண்டனூர் சீதப்பட்டி பூதிபுரம் குரும்பபட்டி மகாலட்சுமிபுரம் இந்தப் பகுதிகளில் நிறைய தெரு விளக்குகள் பழுதடைந்து இரவு நேரங்களில் பெண்கள் குழந்தைகள் நடமாட அச்சமடைந்து வந்தனர் இதை மாற்றிக் கொடுக்க ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர் அதன் அடிப்படையில் இன்று அனைத்து தெருவிளக்குகளையும் மாற்றி கொடுத்தனர் இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்1
- Post by RAJA news1
- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குமாரம் பகுதியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் முன்னாள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டு பேசினார்1
- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த சிறுகனூரில் நேற்று திமுக மாநாடு நடைபெற்றது . இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார் . பின்னர் விமானம் மூலம் சென்னை திரும்பினார். அதேநேரம் முதல்வர் விமான நிலையம் செல்லும் திருச்சி -புதுக்கோட்டை சாலையில் நாளை 11 ஆம் தேதி திருச்சி வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்று, வைக்கப்பட்டிருந்த பேனர்களை மாநகராட்சியினர் மற்றும் போலீசார் அகற்றி சாலையில் வீசி எறிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.1
- மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அழகர் கோவில் பயங்கர தீபத்தில் உரிய நடவடிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் அறநிலைத்துறையில் கேட்டுக்கொள்கிறீர்களா1
- Post by RAJA news1