ஆம்பூரில் உள்ள மதுக்கடையை அகற்ற எட்டு மாதங்களாக மனு அளிக்க வருகிறோம். திங்கட்கிழமைகளில் மக்கள் குறை தீர்க்க கூட்டத்தில் ஆட்சியர் இருப்பதே இல்லை. பொதுமக்கள் ஆவேச பேட்டி. ஆம்பூரில் உள்ள மதுக்கடையை அகற்ற எட்டு மாதங்களாக மனு அளிக்க வருகிறோம். திங்கட்கிழமைகளில் மக்கள் குறை தீர்க்க கூட்டத்தில் ஆட்சியர் இருப்பதே இல்லை. பொதுமக்கள் ஆவேச பேட்டி. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியை சார்ந்த சுகுணா என்ற பெண்மணி ஊர் பொதுமக்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்து கன்னிகாபுரம் பகுதியில் சுமார் 500 வீடுகள் இருப்பதாகவும் இது அனைத்தும் அரசாங்கம் கட்டி கொடுத்த வீடுகளாக உள்ளது. அதற்குப் போக வருவதற்கு வழி கூட இல்லை. எட்டு வருடங்களுக்கு மேல் வீடு இல்லாமல் இருந்தது. அங்கு மது கடை நடத்தி வந்தார்கள். ஒரு வீட்டிற்கு மூன்று நான்கு பெண் பிள்ளைகள் உள்ளனர். எட்டு மாத காலமாக தொடர்ந்து திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வருகிறோம். மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைகளில் இருப்பதே இல்லை எங்க போகிறது என்றே தெரியவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் கலெக்டர் வருவார்கள் என்று தான் சொல்கிறார்கள். மனுவை பக்கத்தில் உள்ள அதிகாரிகள் வாங்கி வைத்துக் கொள்கின்றனர். மனுவின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. காவல் நிலையம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தோம். வேலூரிலும் புகார் அளித்தோம். நான்கு முறை சாலை மறியல் செய்துள்ளோம். வீட்டு வழியாக சாலை வசதியும் இல்லை அதே வழியாக ஒயின்ஷாப்பிற்கு அனைவரும் சென்று வருகின்றனர். மதுக்கடைக்குச் சென்று வரக்கூடிய நபர்கள் குடித்துவிட்டு வீட்டு வழியாக வரும் பொழுது அநாகரிகமான வார்த்தைகளால் பேசுகின்றனர். வீடுகளில் அடிக்கடி திருடு போகிறது வேலை வெட்டிக்கு போகாமல் வீட்டில் இருக்கின்றேன் நான். மது குடித்துவிட்டு துணி இல்லாமல் நடுரோட்டில் படுத்து கொண்டிருக்கின்றார்கள். குடித்துவிட்டு எங்கள் வீட்டிற்கு வந்து போதையாக உள்ளது கொஞ்ச நேரம் படுத்து உறங்கி விட்டு செல்கிறேன் என்று கூறுகின்றனர். அசிங்க அசிங்கமாக பேசுகின்றனர். எங்களிடம் ஆதாரம் உள்ளது. அந்த இடங்களில் கறிக்கடைகளை வைத்துக்கொண்டு அசிங்க அசிங்கமாக பேசி வருகின்றனர். மதுக்கடையில் ஒரு வாட்ச்மேன் ஆக ஒரு ஆண் தான் இருக்க வேண்டும். ஆனால் அங்கு ஒரு வயதான பாட்டி இருக்கிறார். நாங்கள் சென்ற இடமெல்லாம் கலெக்டர் அனுமதி தந்தால்தான் மதுக்கடையை அகற்ற முடியும் இல்லையெனில் எடுக்க முடியாது நீ யாருக்கு வேண்டுமானாலும் போய் சொல் ஒயின்ஷாப்பை எடுக்க முடியாது என்று ஒயின்ஷாப் வைத்து நடத்துபவர் கூறுபவவதாக சுகுணா அளித்த பேட்டியில் தெரிவித்தனர்.
ஆம்பூரில் உள்ள மதுக்கடையை அகற்ற எட்டு மாதங்களாக மனு அளிக்க வருகிறோம். திங்கட்கிழமைகளில் மக்கள் குறை தீர்க்க கூட்டத்தில் ஆட்சியர் இருப்பதே இல்லை. பொதுமக்கள் ஆவேச பேட்டி. ஆம்பூரில் உள்ள மதுக்கடையை அகற்ற எட்டு மாதங்களாக மனு அளிக்க வருகிறோம். திங்கட்கிழமைகளில் மக்கள் குறை தீர்க்க கூட்டத்தில் ஆட்சியர் இருப்பதே இல்லை. பொதுமக்கள் ஆவேச பேட்டி. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியை சார்ந்த சுகுணா என்ற பெண்மணி ஊர் பொதுமக்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்து கன்னிகாபுரம் பகுதியில் சுமார் 500 வீடுகள் இருப்பதாகவும் இது அனைத்தும் அரசாங்கம் கட்டி கொடுத்த வீடுகளாக உள்ளது. அதற்குப் போக வருவதற்கு வழி கூட இல்லை. எட்டு வருடங்களுக்கு மேல் வீடு இல்லாமல் இருந்தது. அங்கு மது கடை நடத்தி வந்தார்கள். ஒரு வீட்டிற்கு மூன்று நான்கு பெண் பிள்ளைகள் உள்ளனர். எட்டு மாத காலமாக தொடர்ந்து திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வருகிறோம். மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைகளில் இருப்பதே இல்லை எங்க போகிறது என்றே தெரியவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் கலெக்டர் வருவார்கள் என்று தான் சொல்கிறார்கள். மனுவை பக்கத்தில் உள்ள அதிகாரிகள் வாங்கி வைத்துக் கொள்கின்றனர். மனுவின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. காவல் நிலையம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தோம். வேலூரிலும் புகார் அளித்தோம். நான்கு முறை சாலை மறியல் செய்துள்ளோம். வீட்டு வழியாக சாலை வசதியும் இல்லை அதே வழியாக ஒயின்ஷாப்பிற்கு அனைவரும் சென்று வருகின்றனர். மதுக்கடைக்குச் சென்று வரக்கூடிய நபர்கள் குடித்துவிட்டு வீட்டு வழியாக வரும் பொழுது அநாகரிகமான வார்த்தைகளால் பேசுகின்றனர். வீடுகளில் அடிக்கடி திருடு போகிறது வேலை வெட்டிக்கு போகாமல் வீட்டில் இருக்கின்றேன் நான். மது குடித்துவிட்டு துணி இல்லாமல் நடுரோட்டில் படுத்து கொண்டிருக்கின்றார்கள். குடித்துவிட்டு எங்கள் வீட்டிற்கு வந்து போதையாக உள்ளது கொஞ்ச நேரம் படுத்து உறங்கி விட்டு செல்கிறேன் என்று கூறுகின்றனர். அசிங்க அசிங்கமாக பேசுகின்றனர். எங்களிடம் ஆதாரம் உள்ளது. அந்த இடங்களில் கறிக்கடைகளை வைத்துக்கொண்டு அசிங்க அசிங்கமாக பேசி வருகின்றனர். மதுக்கடையில் ஒரு வாட்ச்மேன் ஆக ஒரு ஆண் தான் இருக்க வேண்டும். ஆனால் அங்கு ஒரு வயதான பாட்டி இருக்கிறார். நாங்கள் சென்ற இடமெல்லாம் கலெக்டர் அனுமதி தந்தால்தான் மதுக்கடையை அகற்ற முடியும் இல்லையெனில் எடுக்க முடியாது நீ யாருக்கு வேண்டுமானாலும் போய் சொல் ஒயின்ஷாப்பை எடுக்க முடியாது என்று ஒயின்ஷாப் வைத்து நடத்துபவர் கூறுபவவதாக சுகுணா அளித்த பேட்டியில் தெரிவித்தனர்.
- .ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெடி குண்டு மிரட்டல் விடுத்து மாவட்ட முதன்மை நீதிமன்ற இமெயில் முகவரிக்கு வந்த குறுந்தககளால் பரபரப்பு நீதிபதிகள் உட்பட- நீதிமன்ற பணியாளர்கள் ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றம் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டை தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட தடங்கும் பகுதியில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்களான மாவட்ட நீதிமன்றம், மாவட்ட அமர்வு முதன்மை நீதிமன்றம், மகிலா நீதிமன்றம் மாவட்ட சார்பு நீதிமன்றம் உள்ளிட்ட 16 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு மாவட்ட நீதிமன்ற இமெயில் முகவரிக்கு வந்த குறும் தகவலில் இன்று 12:020 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என வந்த தகவலை அடுத்து அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்ததின் பேரில் அதியமான் கோட்டை காவல் துறையினர் விரைந்து வந்து நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் 2000 ஊழியர்கள் 700 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை வெளியேற்றி 16 நீதிமன்றங்களையும் பூட்டி தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர் பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் லூபி உதவியுடன் நீதிமன்ற வளாகத்திற்குள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது இந்த சம்பவத்தால் நீதிமன்றம் வாழாகும் பரபரப்பாக காணப்பட்டது. இதேபோல் தருமபுரி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கடந்த வருடம் செப்டம்பர் 26 ஆம் தேதியும், மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 19. 12. 2025 தேதியும், தருமபுரி பழைய கோர்ட் வாலாகத்திற்கு கடந்த 9ம் தேதியும் இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.1
- குமாரசாமிபேட்டை அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயானக் கொள்ளை பெருவிழா: மேளதாளத்துடன் அந்தரங்கத்தில் தொங்கியபடி பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலம் தருமபுரி குமாரசாமிபேட்டை அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் சிவராத்திரியையொட்டி மயானக் கொள்ளை நிகழ்ச்சி பெருவிழா இன்று காலை மேளதாளத்துடன் பக்தர்கள் அலகு குத்தியும் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது அம்மன் கோவிலில் இருந்து துவங்கிய ஊர்வலத்தில் அலங்கரிகப்பட்ட ரதத்தில் அம்மன் ஊர்வலமாக மயானம் வரை சென்றது கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவின் 5ம் நாளான இன்று மயானக்கொள்ள திருவிழா ஊர்வல நிகழ்ச்சி நடைபெற்றது பக்தர்கள் அலகு குத்தி அந்தரங்கத்தில் தொங்கியபடியும் பென் பக்தர்கள் வாயில் அலகு குத்தியும் அம்மன், காளி வேடங்களுடன் மேளதாளத்துடன் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக மயானம் வரை சென்றனர் பின்னர் நன்பகல் மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது1
- நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலக மைதானத்தில் செவ்வாய் தோறும் நாட்களில் வாரச்சந்தை நடைபெறும் வழக்கம். இன்று (பிப்.17) காலை கூடிய வார சந்தையில் பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர். ஆடுகள் தரம் மற்றும் ரகத்தை பொறுத்து 3,000ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை என, இன்று 45 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.1
- कैमरे पर: तमिलनाडु के वेल्लोर में मयाना कोल्लाई के दौरान 60 फुट लंबा मंदिर रथ गिरने से 7 लोग घायल। वेल्लोर के मयाना कोल्लाई उत्सव के दौरान, 60 फुट लंबा मंदिर का रथ गिर गया, जिससे सात लोग घायल हो गए और दहशत फैल गई। वेल्लोर में वार्षिक मयाना कोल्लाई उत्सव के दौरान 16 फरवरी की रात को उस समय नाटकीय घटना घटी जब श्रद्धालुओं की भारी भीड़ के बीच 60 फुट लंबा मंदिर रथ पलट गया। इस घटना में कम से कम सात लोग घायल हो गए और भीड़ में कुछ देर के लिए अफरा-तफरी मच गई।1
- Post by Vinayagam Vinayagam1
- நாமகிரிப்பேட்டை அடுத்த புதுப்பட்டி பகுதியில் புதுப்பட்டி அருள்மிகு ஸ்ரீ துலுக்க சூடாமணி மாரியம்மன் திருக்கோவிலில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நேற்று இரவு தேர் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு கம்பம் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டு கம்பம் நடப்பட்டன. இந்த நிகழ்வில் பொதுமக்கள் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- எடப்பாடி அருகே அன்னை ஆனந்தாயி அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது... சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஒட்டப்பட்டி அருள்மிகு ஸ்ரீ அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி திருக்கோவில் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தெப்பத்தேரில் அலங்கரித்து தாலாட்டு பாடலை பாடி தெப்பத்தேரை வலம் பிடித்து ஆட்டினர்... மேலும் ஸ்ரீ அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி சாமிக்கு தீபாரனதை அளிக்கப்பட்டு சுவாமியை விழா குழுவினர் முக்கிய வீதி வழியாக எடுத்துச் சென்று வழிபட்டனர்... அதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாக சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்...1
- அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி மயான கொள்ளை திருவிழாவில் பக்தர்கள் அழகு குத்தி நேர்த்திக்கடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம். தருமபுரி குமாரசாமி பேட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயியில் மயான கொள்ளை பெருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் கடந்த 12 ம் தேதி சக்தி கரகம் அழைத்து கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைதொடர்ந்து ஸ்ரீ மகா கணபதி, சுப்ரமணியர், அம்மாளுக்கு சிறப்பு யாகங்கள் நடைந்தேறியது. அதனைதொடர்ந்து கடந்த 14 ம் தேதி ஏராளமான பெண்கள், ஆண் பக்தர்கள் தீக்குண்டத்தல் இறங்கி சுவாமி தரிசனம் சேய்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். நேற்று பால் குடம் ஊர்வலமும் நடைபெற்றது. அதனைதொடர்ந்து இன்று மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக மயான கொள்ளை புறப்பாடு நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தும் வகையில் அலகு குத்தியும், நூதன முறையில் அழகு குத்தி கிரேனில் அந்தரத்தில் தொங்கியபடி ஊர்வலமாக வந்து நேர்த்தி கடனை செலுத்தினர். குழுவாக சேர்ந்து கோலட்டம் ஆடியும், காளி வேடம் அணிந்தும் ஊர்வலமாக வந்து மயான கொள்ளை நடைபெரும் மயானத்திற்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். மேலும் பக்தர்கள் தங்களது வீட்டில் இருந்து கொண்டு வந்த மிளகு, உப்பு உள்ளிட்ட நவதானியங்களை அம்மன் மீது வீசினர். பின்னர் மயானத்தில் நவதானியங்கள் படையலிட்டு பண்டைய கால வழக்கபடி மயானத்தில் உள்ள எலும்புகளை சேகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது. அதே போல் தருமபுரி எஸ்.வி.ரோடு, உள்ளிட்ட பகுதிகளில் மயான கொள்ளை திருவிழா வெகு விமர்ச்சியாக நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மனை வழிபட்டு தங்களது நேரத்தி கடனை செலுத்தினர்.1