logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில், மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் மாவட்ட மையக்குழு கூட்டம் மற்றும் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநில சுற்றுப்பயண நிகழ்ச்சி பொறுப்பாளர்களான கே.ஆர். நந்தகுமார், கே.எஸ். பாலமுருகன், எஸ். நேரு ஆகியோர் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு வழிகாட்டினர். இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், மண்டல் தலைவர்கள், அணி மற்றும் பிரிவு நிர்வாகிகள் எனப் பலரும் திரளாக பங்கேற்றனர்.

1 hr ago
user_Farmers joint Liability Group
Farmers joint Liability Group
Farmer குஜிலியம்பாறை, திண்டுக்கல், தமிழ்நாடு•
1 hr ago
2e838962-5a56-4d12-9426-672d8af74265

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில், மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் மாவட்ட மையக்குழு கூட்டம் மற்றும் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநில சுற்றுப்பயண நிகழ்ச்சி பொறுப்பாளர்களான கே.ஆர். நந்தகுமார், கே.எஸ். பாலமுருகன், எஸ். நேரு ஆகியோர் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு வழிகாட்டினர். இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், மண்டல் தலைவர்கள், அணி மற்றும் பிரிவு நிர்வாகிகள் எனப் பலரும் திரளாக பங்கேற்றனர்.

More news from Dindigul and nearby areas
  • தமிழகத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் தாக்கப்படுவதைக் கண்டித்து, வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று மருத்துவர்களின் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும் என மகப்பேறு மாநில மருத்துவர் தலைவர் அமலா தேவி அவர்கள் இன்று திண்டுக்கல்லில் தெரிவித்தார்.
    1
    தமிழகத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் தாக்கப்படுவதைக் கண்டித்து, வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று மருத்துவர்களின் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும் என மகப்பேறு மாநில மருத்துவர் தலைவர் அமலா தேவி அவர்கள் இன்று திண்டுக்கல்லில் தெரிவித்தார்.
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    3 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள துர்வாசபுரத்தில் அமைந்துள்ள சுந்தரேஸ்வரர் மற்றும் காலபைரவர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாத திருமஞ்சனம் திருவிழா வழக்கமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆனி திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இந்நிலையில், இன்று ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு, விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள துர்வாசபுரத்தில் அமைந்துள்ள சுந்தரேஸ்வரர் மற்றும் காலபைரவர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாத திருமஞ்சனம் திருவிழா வழக்கமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆனி திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இந்நிலையில், இன்று ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு, விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
    user_Mayilvaganan
    Mayilvaganan
    திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தேனி பங்களாமேட்டில், தமிழக முதல்வர் அளித்த தேர்தல் வாக்குறுதியான கூட்டுறவு பயிர்க் கடன்களை முழுமையாக ரத்து செய்யக் கோரி, தேனி மாவட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரதம் மற்றும் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டம் முழுவதிலும் இருந்து 50க்கும் மேற்பட்ட பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்தப் போராட்டத்தில், இன்று தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்து இனிப்புகளை வழங்கினர். தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னமான விசில்களை ஊதி முதல்வரின் கவனத்தை ஈர்த்த விவசாயிகள், பின்னர் அந்த விசில்களை சாலையில் தூக்கி எறிந்தனர். மேலும், தலையில் துண்டால் முக்காடு போட்டு மண் சட்டியில் யாசகம் கேட்டும், உடலில் சாட்டையால் அடித்தும் தங்கள் எதிர்ப்பை வித்தியாசமான முறையில் பதிவு செய்தனர். பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், பயிர்க்கடனை ரத்து செய்யும் அரசின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
    1
    தேனி பங்களாமேட்டில், தமிழக முதல்வர் அளித்த தேர்தல் வாக்குறுதியான கூட்டுறவு பயிர்க் கடன்களை முழுமையாக ரத்து செய்யக் கோரி, தேனி மாவட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரதம் மற்றும் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டம் முழுவதிலும் இருந்து 50க்கும் மேற்பட்ட பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில், இன்று தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்து இனிப்புகளை வழங்கினர். தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னமான விசில்களை ஊதி முதல்வரின் கவனத்தை ஈர்த்த விவசாயிகள், பின்னர் அந்த விசில்களை சாலையில் தூக்கி எறிந்தனர். மேலும், தலையில் துண்டால் முக்காடு போட்டு மண் சட்டியில் யாசகம் கேட்டும், உடலில் சாட்டையால் அடித்தும் தங்கள் எதிர்ப்பை வித்தியாசமான முறையில் பதிவு செய்தனர்.

பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், பயிர்க்கடனை ரத்து செய்யும் அரசின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • மதுரை ஐராவதநல்லூர் வேலன் தெரு பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 35 வயதுடைய பெண் ஒருவர், தனது வீட்டின் அறைக்குள் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு, கதவைத் திறக்க முடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டார். அவரை மீட்க குடும்பத்தினர் மற்றும் அருகிலிருந்தவர்களால் முடியவில்லை. இதையடுத்து, அனுப்பானடி தீயணைப்பு நிலைய தீயணைப்பு மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இயந்திரங்கள் மற்றும் கடப்பாறை உள்ளிட்ட மீட்பு உபகரணங்களின் உதவியுடன் கதவைத் திறந்து, சிக்கியிருந்த அப்பெண்ணை எந்தவித காயமும் இன்றி பத்திரமாக மீட்டனர்.
    1
    மதுரை ஐராவதநல்லூர் வேலன் தெரு பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 35 வயதுடைய பெண் ஒருவர், தனது வீட்டின் அறைக்குள் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு, கதவைத் திறக்க முடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டார். அவரை மீட்க குடும்பத்தினர் மற்றும் அருகிலிருந்தவர்களால் முடியவில்லை. இதையடுத்து, அனுப்பானடி தீயணைப்பு நிலைய தீயணைப்பு மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இயந்திரங்கள் மற்றும் கடப்பாறை உள்ளிட்ட மீட்பு உபகரணங்களின் உதவியுடன் கதவைத் திறந்து, சிக்கியிருந்த அப்பெண்ணை எந்தவித காயமும் இன்றி பத்திரமாக மீட்டனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    3 hrs ago
  • தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள சண்முகசுந்தரபுரம் கிராமத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினம் தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி இந்த விழாவில் கலந்துகொண்டார். அவர் கேக் வெட்டி முதலமைச்சரின் பிறந்தநாளை கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்திற்குப் பிறகு, கிராம மக்களுக்கு அன்னதான உணவுகள் வழங்கப்பட்டன. மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி, உணவுகளை வழங்கியதோடு மட்டுமல்லாமல், கிராம மக்களுடன் அமர்ந்து தானும் அன்னதான உணவை சாப்பிட்டார். இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
    1
    தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள சண்முகசுந்தரபுரம் கிராமத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினம் தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி இந்த விழாவில் கலந்துகொண்டார். அவர் கேக் வெட்டி முதலமைச்சரின் பிறந்தநாளை கொண்டாடினார்.

இந்த கொண்டாட்டத்திற்குப் பிறகு, கிராம மக்களுக்கு அன்னதான உணவுகள் வழங்கப்பட்டன. மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி, உணவுகளை வழங்கியதோடு மட்டுமல்லாமல், கிராம மக்களுடன் அமர்ந்து தானும் அன்னதான உணவை சாப்பிட்டார். இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
    user_Ramesh
    Ramesh
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் லென்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம், காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற போரில் வீர தீரத்துடன் சண்டையிட்டார். வாய் பகுதியில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்ட போதிலும், அவர் காயத்தைப் பொருட்படுத்தாமல் போரிட்டு 5 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று தனது சக வீரர்களைக் காப்பாற்றினார். அவரது இந்த வீர தீர செயலைப் பாராட்டி, இந்திய நாட்டின் உயரிய விருதான 'கீர்த்தி சக்கரா' விருதை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு வழங்கினார். இந்த உயரிய விருதைப் பெற்றதைத் தொடர்ந்து, தனது சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு ஊர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு மற்றும் பாராட்டு விழாக்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள தர்மாபுரி கிராமத்தில், முன்னாள் படை வீரர் நல சங்கம் மற்றும் தர்மாபுரி ஊர் பொதுமக்கள் சார்பில் ராணுவ வீரருக்கு ஒரு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு விழாவில், தேவராட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்களை ஆடிய ஊர் பொதுமக்கள், ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு மாலை அணிவித்து வரவேற்றனர். முன்னாள் ராணுவ வீரர்களும், ஊர் பொதுமக்களும் இணைந்து, வீர தீர செயலுக்காக நாட்டின் உயரிய விருதான 'கீர்த்தி சக்கரா' விருது பெற்ற அவருக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
    1
    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் லென்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம், காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற போரில் வீர தீரத்துடன் சண்டையிட்டார். வாய் பகுதியில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்ட போதிலும், அவர் காயத்தைப் பொருட்படுத்தாமல் போரிட்டு 5 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று தனது சக வீரர்களைக் காப்பாற்றினார். அவரது இந்த வீர தீர செயலைப் பாராட்டி, இந்திய நாட்டின் உயரிய விருதான 'கீர்த்தி சக்கரா' விருதை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு வழங்கினார்.

இந்த உயரிய விருதைப் பெற்றதைத் தொடர்ந்து, தனது சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு ஊர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு மற்றும் பாராட்டு விழாக்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள தர்மாபுரி கிராமத்தில், முன்னாள் படை வீரர் நல சங்கம் மற்றும் தர்மாபுரி ஊர் பொதுமக்கள் சார்பில் ராணுவ வீரருக்கு ஒரு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த வரவேற்பு விழாவில், தேவராட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்களை ஆடிய ஊர் பொதுமக்கள், ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு மாலை அணிவித்து வரவேற்றனர். முன்னாள் ராணுவ வீரர்களும், ஊர் பொதுமக்களும் இணைந்து, வீர தீர செயலுக்காக நாட்டின் உயரிய விருதான 'கீர்த்தி சக்கரா' விருது பெற்ற அவருக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • திண்டுக்கல் முள்ளிப்பாடி பகுதியில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மொத்தம் ஆயிரம் நபர்கள் உணவு பெற்று பயனடைந்தனர்.
    1
    திண்டுக்கல் முள்ளிப்பாடி பகுதியில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மொத்தம் ஆயிரம் நபர்கள் உணவு பெற்று பயனடைந்தனர்.
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    3 hrs ago
  • தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்து தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக சாலையில் தேங்காய்களை உடைத்தனர். விவசாயிகள் விளைவிக்கும் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக கூறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உரித்த தேங்காய் ஒரு கிலோவுக்கு 60 ரூபாயும், உரிக்காத தேங்காய் ஒரு கிலோவுக்கு 30 ரூபாயும், கொப்பரை ஒரு கிலோவுக்கு 180 ரூபாயும் தமிழக அரசு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும், விளைவிக்கப்பட்ட தேங்காயை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்து எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
    1
    தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்து தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக சாலையில் தேங்காய்களை உடைத்தனர்.

விவசாயிகள் விளைவிக்கும் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக கூறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உரித்த தேங்காய் ஒரு கிலோவுக்கு 60 ரூபாயும், உரிக்காத தேங்காய் ஒரு கிலோவுக்கு 30 ரூபாயும், கொப்பரை ஒரு கிலோவுக்கு 180 ரூபாயும் தமிழக அரசு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும், விளைவிக்கப்பட்ட தேங்காயை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்து எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தமிழக முதல்வர் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் உள்ள கட்சியினரும் ரசிகர்களும் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மதுரை சிந்தாமணி பகுதியில் தவெக மாவட்டச் செயலாளர் மருதுபாண்டி தலைமையில் கட்சித் தொண்டர்கள் வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்டுகள் மற்றும் இனிப்புகளை விநியோகித்தனர். மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து பயணிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர். இதைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வளாகத்தில் முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் அங்கமாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் திரளாக பங்கேற்று பிறந்தநாள் நிகழ்ச்சிகளை சிறப்பித்தனர்.
    1
    தமிழக முதல்வர் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் உள்ள கட்சியினரும் ரசிகர்களும் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மதுரை சிந்தாமணி பகுதியில் தவெக மாவட்டச் செயலாளர் மருதுபாண்டி தலைமையில் கட்சித் தொண்டர்கள் வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்டுகள் மற்றும் இனிப்புகளை விநியோகித்தனர். மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து பயணிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.

இதைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வளாகத்தில் முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் அங்கமாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் திரளாக பங்கேற்று பிறந்தநாள் நிகழ்ச்சிகளை சிறப்பித்தனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.