நோன்பு கஞ்சிக்கான விலையில்லா அரிசி: முதல்வர் ஸ்டாலினுக்கு தர்கா க்கள் பள்ளிவாசல்கள் அசோசியேசன் சார்பாக நன்றி! - கலீபா சாஹிப் தமிழ்நாடு அரசு கடந்த வருடத்தைவிட இந்த வருடம் நோன்பு கஞ்சிக்கான அரிசி வழங்கியமைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தர்கா க்கள் பள்ளிவாசல்கள் அசோசியேசன் சார்பாக நாகூர் தர்கா கலீபா சாஹிப் நன்றி கூறினார். சென்னையை தலைமை இடமாகக் கொண்ட தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேஷன் சார்பாக தமிழ்நாடு அரசுக்கு ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக்கான (விலையில்லா) அரிசியினை தமிழக அரசு கடந்த வருடத்தைவிட அதிகமாகவும், உரிய நேரத்திலும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அசோசியேசன் தலைவர் ஹாஜி செய்யது முகம்மது கலிபா ஷாஹிப் காதிரி நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். "வருடா வருடம் தமிழ்நாடு அரசு இஸ்லாமிய மக்களுக்காக புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக்கான (விலையில்லா) அரிசியினை பள்ளி வாசல்களுக்கும் தர்காக்களுக்கும் வழங்கி வருகிறது. இதனால் தமிழ்நாடு அரசுக்கு தமிழக இஸ்லாமிய மக்கள் மனதார நன்றி செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பள்ளி வாசல்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி சமைத்திட கடந்த 2021 ஆம் ஆண்டு 5500 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இஸ்லாமிய பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் முழுமையாக இந்த பயன்பாட்டினை அடைவதில்லை ஒரு குறிப்பிட்ட பள்ளிவாசல்கள் தர்காக்கள் மற்றும் தைக்காக்கள் மட்டுமே இந்த பயன்பாட்டினை பெற்று வருகின்றனர். மாவட்ட தோறும் இருக்கின்ற அனைத்து பள்ளிவாசல்கள் தர்காக்களில் இத்தகைய திட்டத்தை எடுத்துக் கூறி தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல் தர்காக்களுக்கும் இந்த ரமலான் அரிசி வழங்கிட வேண்டும், மேலும் இந்த இஸ்லாமிய மக்கள் விகிதாச்சாரப்படி கடந்த வருடத்தை விட அதிகப்படுத்தி ரமலான் கஞ்சிக் கான அரிசி வழங்குதலை உயர்த்த வேண்டும், இதனை நாங்கள் தமிழக பள்ளிவாசல்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கோரிக்கை விடுத்திருந்தோம். அதனை பரிசிலீப்பதாக தமிழக அரசு கூறியது, அதன்படி தமிழக அரசு கடந்த 2022ம் ஆண்டு 6000 மெட்ரிக் டன் அரிசியும், 2023ம் ஆண்டு 6500 மெட்ரிக் டன் அரிசியும், 2024ம் ஆண்டு 7040 மெட்ரிக் டன் அரிசியும், 2025ம் ஆண்டு 7920 மெட்ரிக் டன் அரிசியும் வழங்கியது இந்த வருடம் கூடுதலாக 8700 மெட்ரிக் டன் அரிசி வழங்கியுள்ளது. அரசு இந்த செலவினத்திற்காக சுமார் 20 கோடியே 88 லட்சம் செலவிட்டு உள்ளது. இதற்காக தென்னிந்திய பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் அசோசியேசன் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்" என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நோன்பு கஞ்சிக்கான விலையில்லா அரிசி: முதல்வர் ஸ்டாலினுக்கு தர்கா க்கள் பள்ளிவாசல்கள் அசோசியேசன் சார்பாக நன்றி! - கலீபா சாஹிப் தமிழ்நாடு அரசு கடந்த வருடத்தைவிட இந்த வருடம் நோன்பு கஞ்சிக்கான அரிசி வழங்கியமைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தர்கா க்கள் பள்ளிவாசல்கள் அசோசியேசன் சார்பாக நாகூர் தர்கா கலீபா சாஹிப் நன்றி கூறினார். சென்னையை தலைமை இடமாகக் கொண்ட தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேஷன் சார்பாக தமிழ்நாடு அரசுக்கு ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக்கான (விலையில்லா) அரிசியினை தமிழக அரசு கடந்த வருடத்தைவிட அதிகமாகவும், உரிய நேரத்திலும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அசோசியேசன் தலைவர் ஹாஜி செய்யது முகம்மது கலிபா ஷாஹிப் காதிரி நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். "வருடா வருடம் தமிழ்நாடு அரசு இஸ்லாமிய மக்களுக்காக புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக்கான (விலையில்லா) அரிசியினை பள்ளி வாசல்களுக்கும் தர்காக்களுக்கும் வழங்கி வருகிறது. இதனால் தமிழ்நாடு அரசுக்கு தமிழக இஸ்லாமிய மக்கள் மனதார நன்றி செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பள்ளி வாசல்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி சமைத்திட கடந்த 2021 ஆம் ஆண்டு 5500 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள
அனைத்து இஸ்லாமிய பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் முழுமையாக இந்த பயன்பாட்டினை அடைவதில்லை ஒரு குறிப்பிட்ட பள்ளிவாசல்கள் தர்காக்கள் மற்றும் தைக்காக்கள் மட்டுமே இந்த பயன்பாட்டினை பெற்று வருகின்றனர். மாவட்ட தோறும் இருக்கின்ற அனைத்து பள்ளிவாசல்கள் தர்காக்களில் இத்தகைய திட்டத்தை எடுத்துக் கூறி தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல் தர்காக்களுக்கும் இந்த ரமலான் அரிசி வழங்கிட வேண்டும், மேலும் இந்த இஸ்லாமிய மக்கள் விகிதாச்சாரப்படி கடந்த வருடத்தை விட அதிகப்படுத்தி ரமலான் கஞ்சிக் கான அரிசி வழங்குதலை உயர்த்த வேண்டும், இதனை நாங்கள் தமிழக பள்ளிவாசல்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கோரிக்கை விடுத்திருந்தோம். அதனை பரிசிலீப்பதாக தமிழக அரசு கூறியது, அதன்படி தமிழக அரசு கடந்த 2022ம் ஆண்டு 6000 மெட்ரிக் டன் அரிசியும், 2023ம் ஆண்டு 6500 மெட்ரிக் டன் அரிசியும், 2024ம் ஆண்டு 7040 மெட்ரிக் டன் அரிசியும், 2025ம் ஆண்டு 7920 மெட்ரிக் டன் அரிசியும் வழங்கியது இந்த வருடம் கூடுதலாக 8700 மெட்ரிக் டன் அரிசி வழங்கியுள்ளது. அரசு இந்த செலவினத்திற்காக சுமார் 20 கோடியே 88 லட்சம் செலவிட்டு உள்ளது. இதற்காக தென்னிந்திய பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்கள் அசோசியேசன் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்" என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- कैमरे पर: तमिलनाडु के वेल्लोर में मयाना कोल्लाई के दौरान 60 फुट लंबा मंदिर रथ गिरने से 7 लोग घायल। वेल्लोर के मयाना कोल्लाई उत्सव के दौरान, 60 फुट लंबा मंदिर का रथ गिर गया, जिससे सात लोग घायल हो गए और दहशत फैल गई। वेल्लोर में वार्षिक मयाना कोल्लाई उत्सव के दौरान 16 फरवरी की रात को उस समय नाटकीय घटना घटी जब श्रद्धालुओं की भारी भीड़ के बीच 60 फुट लंबा मंदिर रथ पलट गया। इस घटना में कम से कम सात लोग घायल हो गए और भीड़ में कुछ देर के लिए अफरा-तफरी मच गई।1
- Post by Vinayagam Vinayagam1
- காஞ்சிபுரம் வையாவூர் சாலையில் அமைந்துள்ள காஞ்சி புத்த விகாருக்கு இலங்கையில் இருந்து பகவான் புத்தருடைய தாதுக்கள் (அஸ்தியை) இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழில் முதல் பட்டம் பெற்ற சிங்கள பிக்கு ரத்தின தேரர் அவர்கள் காஞ்சிபுரத்திற்கு எடுத்து வந்தார்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது அவரை தமிழகத்தில் உள்ள அனைத்து பிக்குகளும் ஒன்று சேர்ந்து வரவேற்பு அளித்தார்கள் காஞ்சி புத்த விகாரை சார்ந்த தலைவர் ஆர். திருநாவுக்கரசு செயலாளர் ஜி. நாகராஜன் பொருளாளர் எம். கௌதமன் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.1
- நெல்மணிகளை பறவைகளிடமிருந்து காப்பாற்ற, களக்காட்டூர் பெண் விவசாயி ஒருவர் நாள் முழுவதும் பாத்திரத்தை டமால் டமால்’ என தட்டி சத்தம் எழுப்பி குருவிகளை ஓட்ட பெரும்பாடு பட்டு வருகிறார். __________ காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர், பகுதியில் பெண் விவசாயி ஒருவரின் வித்தியாசமான முயற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பயிர் செய்த நெற்பயிர் முளைத்து வளரும் இந்த நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் குருவிகள் கூட்டமாக வந்து நெல்மணிகளைத் தின்றுவிட்டு செல்வதாக அவர் கூறுகிறார். இதைத் தடுக்க, தண்ணீர் நிரப்ப பயன்படுத்தப்படும் காலி அன்னக்கூடையை கையில் பிடித்து, குச்சியால் ‘டமால் டமால்’ எனத் தட்டி சத்தமிட்டு குருவிகளை விரட்டுகிறார். “சத்தம் போடாமல் இருந்தால் முளைத்துள்ள நெல்மணிகளை குருவிகள் முழுவதும் சேதப்படுத்தி விடும். அதனால் தினமும் இரண்டு வேளையும் இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது,” என்று அந்த பெண் விவசாயி வேதனையுடன் தெரிவித்தார். தன் உழைப்பின் பலனை காக்க, இயற்கையோடு போராடும் இந்த பெண் விவசாயியின் விடாமுயற்சி, கிராமப்புற விவசாய வாழ்க்கையின் சவால்களை வெளிப்படுத்துகிறது.1
- .ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெடி குண்டு மிரட்டல் விடுத்து மாவட்ட முதன்மை நீதிமன்ற இமெயில் முகவரிக்கு வந்த குறுந்தககளால் பரபரப்பு நீதிபதிகள் உட்பட- நீதிமன்ற பணியாளர்கள் ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றம் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டை தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட தடங்கும் பகுதியில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்களான மாவட்ட நீதிமன்றம், மாவட்ட அமர்வு முதன்மை நீதிமன்றம், மகிலா நீதிமன்றம் மாவட்ட சார்பு நீதிமன்றம் உள்ளிட்ட 16 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு மாவட்ட நீதிமன்ற இமெயில் முகவரிக்கு வந்த குறும் தகவலில் இன்று 12:020 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என வந்த தகவலை அடுத்து அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்ததின் பேரில் அதியமான் கோட்டை காவல் துறையினர் விரைந்து வந்து நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் 2000 ஊழியர்கள் 700 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை வெளியேற்றி 16 நீதிமன்றங்களையும் பூட்டி தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர் பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் லூபி உதவியுடன் நீதிமன்ற வளாகத்திற்குள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது இந்த சம்பவத்தால் நீதிமன்றம் வாழாகும் பரபரப்பாக காணப்பட்டது. இதேபோல் தருமபுரி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கடந்த வருடம் செப்டம்பர் 26 ஆம் தேதியும், மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 19. 12. 2025 தேதியும், தருமபுரி பழைய கோர்ட் வாலாகத்திற்கு கடந்த 9ம் தேதியும் இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.1
- குமாரசாமிபேட்டை அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயானக் கொள்ளை பெருவிழா: மேளதாளத்துடன் அந்தரங்கத்தில் தொங்கியபடி பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலம் தருமபுரி குமாரசாமிபேட்டை அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் சிவராத்திரியையொட்டி மயானக் கொள்ளை நிகழ்ச்சி பெருவிழா இன்று காலை மேளதாளத்துடன் பக்தர்கள் அலகு குத்தியும் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது அம்மன் கோவிலில் இருந்து துவங்கிய ஊர்வலத்தில் அலங்கரிகப்பட்ட ரதத்தில் அம்மன் ஊர்வலமாக மயானம் வரை சென்றது கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவின் 5ம் நாளான இன்று மயானக்கொள்ள திருவிழா ஊர்வல நிகழ்ச்சி நடைபெற்றது பக்தர்கள் அலகு குத்தி அந்தரங்கத்தில் தொங்கியபடியும் பென் பக்தர்கள் வாயில் அலகு குத்தியும் அம்மன், காளி வேடங்களுடன் மேளதாளத்துடன் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக மயானம் வரை சென்றனர் பின்னர் நன்பகல் மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது1
- நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலக மைதானத்தில் செவ்வாய் தோறும் நாட்களில் வாரச்சந்தை நடைபெறும் வழக்கம். இன்று (பிப்.17) காலை கூடிய வார சந்தையில் பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர். ஆடுகள் தரம் மற்றும் ரகத்தை பொறுத்து 3,000ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை என, இன்று 45 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.1
- Post by Vinayagam Vinayagam1