குடிபோதையில் அபாயகரமாக ஓட்டி வரப்பட்ட மூன்று தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் மீது தலா ரூ.15000 அபராதம் விதித்து, ஓட்டுநர் உரிமத்தையும் போக்குவரத்து காவல் துறையினர் ரத்து செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் போக்குவரத்து காவல்துறை மூலம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி எஸ்.பி. மதன், டி.எஸ்.பி. சுனில் ஆகியோர் மேற்பார்வையில் நகர போக்குவரத்து காவல் துறையினர் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் ஆம்னி பேருந்து நிலையத்தில் இன்று மாலை இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெளியூர் செல்லும் பேருந்துகளை நிறுத்தி ஓட்டுநர்களை மூச்சு பரிசோதனை கருவி மூலம் சோதனை செய்தனர். அதில் சென்னை செல்லும் மூன்று ஆம்னி பேருந்துகளை ஓட்டி வந்த ஓட்டுநர்கள் மது போதையில் இருப்பது கண்டறியப்பட்டு அபாயகரமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் குடிபோதை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தலா ரூ.15000 அபராதம் விதிக்கப்பட்டது. திருச்செந்தூர் உடன்குடி பகுதியில் இருந்து பயணிகளுடன் ஓட்டி வரப்பட்ட மூன்று ஆம்னி பேருந்துகளையும் மாற்று ஓட்டுநர்கள் மூலம் இயக்க அனுமதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., மேற்படி ஓட்டுநர்களின் வாகன ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்கள். தூத்துக்குடி போக்குவரத்து காவல்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கை பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகளிடையேயும், பொதுமக்களிடையும் பெரும் வரவேற்பை பெற்ற்றுள்ளது.
குடிபோதையில் அபாயகரமாக ஓட்டி வரப்பட்ட மூன்று தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் மீது தலா ரூ.15000 அபராதம் விதித்து, ஓட்டுநர் உரிமத்தையும் போக்குவரத்து காவல் துறையினர் ரத்து செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் போக்குவரத்து காவல்துறை மூலம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி எஸ்.பி. மதன், டி.எஸ்.பி. சுனில் ஆகியோர் மேற்பார்வையில் நகர போக்குவரத்து காவல் துறையினர் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் ஆம்னி பேருந்து நிலையத்தில் இன்று மாலை இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெளியூர் செல்லும் பேருந்துகளை நிறுத்தி ஓட்டுநர்களை மூச்சு பரிசோதனை கருவி மூலம் சோதனை செய்தனர். அதில் சென்னை செல்லும் மூன்று ஆம்னி பேருந்துகளை ஓட்டி வந்த ஓட்டுநர்கள் மது போதையில் இருப்பது கண்டறியப்பட்டு அபாயகரமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் குடிபோதை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தலா ரூ.15000 அபராதம் விதிக்கப்பட்டது. திருச்செந்தூர் உடன்குடி பகுதியில் இருந்து பயணிகளுடன் ஓட்டி வரப்பட்ட மூன்று ஆம்னி பேருந்துகளையும் மாற்று ஓட்டுநர்கள் மூலம் இயக்க அனுமதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி., மேற்படி ஓட்டுநர்களின் வாகன ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்கள். தூத்துக்குடி போக்குவரத்து காவல்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கை பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகளிடையேயும், பொதுமக்களிடையும் பெரும் வரவேற்பை பெற்ற்றுள்ளது.
- தூத்துக்குடி: அண்ணா பேருந்து நிலையத்தில் புதிய சிசிடிவி கேமராக்கள் - எஸ்.பி. துவக்கி வைப்பு! இதனால் மக்கள் மகிழ்ச்சி தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் காவல்துறை சார்பில் புதிதாக நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஒலிபெருக்கி அமைப்பை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று தொடங்கி வைத்தார். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் குற்றச் செயல்களைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பேருந்து நிலைய வளாகம் முழுவதும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.1
- தூத்துக்குடியில், இணையதளம் ஒன்றின் மூலம் மக்களை தன்வசப்படுத்தி ஏமாற்றும் ஒரு நபர் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நபர் 'நாளைத் திருடன்' என அறியப்பட்டு, மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.1
- செங்கோட்டையில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தி.மு.இராசேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அண்ணாவின் கொள்கைகளையும் நினைவையும் போற்றும் விதமாக இந்த நிகழ்வு அமைந்தது.1
- தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றதை அடுத்து, நாகர்கோவிலில் தவெக நகரக் கழகத்தினர் கோலாகலமாக கொண்டாடினர். வேப்பமூடு சந்திப்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி மேள தாளங்களுடன் ஆரவாரம் செய்தனர். இந்த கொண்டாட்டத்தில் தவெக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் திரளாகப் பங்கேற்றனர்.1
- தமிழகத்தின் 9வது முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், மேளதாளங்களுடன் பேரணி சென்றும் பொதுமக்கள் மற்றும் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.1
- திமுக கூட்டணி கட்சியின் ஆதரவுடன் நடிகர் விஜய் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி மாநில அரசியல் களத்தில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.1
- TVK கட்சித் தலைவர் விஜய் 2026 மே 10 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்த நிகழ்வு மாநில அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.1
- தூத்துக்குடி: போதையில் வாகனம் ஓட்டிய 3 ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது! இதனால் மக்கள் மகிழ்ச்சி தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் நடந்த சோதனையில், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 3 ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் பிடிபட்டனர். அவர்களுக்குத் தலா ₹15,000 அபராதம் விதிக்கப்பட்டதோடு, ஓட்டுநர் உரிமங்களும் ரத்து செய்யப்பட்டன. பயணிகளின் பாதுகாப்பைக் கருதி எடுக்கப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையைப் பொதுமக்கள் பாராட்டியுள்ளனர். விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.1