"இந்தியாவின் 79வது சுதந்திர தினம்… நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. ஆனால்… சுதந்திரம் என்றால் வெறும் விடுமுறைதானா? "ஒரு காலத்தில், சுதந்திரம் என்பது உயிரை பணயம் வைத்து போராடிய வீரர்களின் கனவு. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் – ‘எனக்கு இரத்தம் கொடு, நான் உங்களுக்கு சுதந்திரம் கொடுப்பேன்’ என்றார். வ.உ.சி – தனது வாழ்வையும் சொத்தையும் தியாகம் செய்தார். பாரதியார் – கவிதை வழியே புரட்சியின் தீயை மூட்டினார். வீரமங்கை வேலுநாச்சியார் – தன் உயிரை அர்ப்பணித்தார். இவர்களின் தியாகம் தான் இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திரத்தின் காரணம்." "ஆனால் இன்று… பல தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் தேசப்பற்று நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பதிலாக, விடுமுறை அறிவிக்கின்றன. மாணவர்கள் – ‘இது விடுமுறை நாள்’ என நினைத்து தங்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். அவர்கள் மனதில் தேசப்பற்றின் விதை விதைக்கப்படாமல் போகிறது." "இந்த முடிவுகளுக்கு காரணம் – மின்சாரச் சிக்கனம், விடுதி உணவுச் சிக்கனம், போக்குவரத்து எரிபொருள் சிக்கனம், சுகாதாரச் சிக்கனம் போன்ற சுயநலக் காரணங்கள். ஆனால்… இந்த சிக்கனத்தால் இழப்பது – மாணவர்களின் மனதில் தேசப்பற்று!" ‘இனிமேல் சுதந்திர தினம், குடியரசு தினம் – வெறும் விடுமுறை நாளாக இருக்கக்கூடாது. அது மாணவர்களின் மனதில் வீரத்தையும் தேசப்பற்றையும் வளர்க்கும் நாளாக இருக்க வேண்டும்.’ மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து, வருங்கால சந்ததிகளுக்கு சுதந்திரத்தின் அர்த்தத்தை உணர்த்தும் வகையில், இந்த நாட்களை நடைமுறையில் கொண்டாடச் செய்ய வேண்டும்." "சுதந்திரம் – அது ஒரு பரிசு அல்ல. அது ஒரு தியாகத்தின் பலன். அதை மதிக்க கற்றுக் கொடுப்பதே – நம் உண்மையான கடமை.
"இந்தியாவின் 79வது சுதந்திர தினம்… நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. ஆனால்… சுதந்திரம் என்றால் வெறும் விடுமுறைதானா? "ஒரு காலத்தில், சுதந்திரம் என்பது உயிரை பணயம் வைத்து போராடிய வீரர்களின் கனவு. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் – ‘எனக்கு இரத்தம் கொடு, நான் உங்களுக்கு சுதந்திரம் கொடுப்பேன்’ என்றார். வ.உ.சி – தனது வாழ்வையும் சொத்தையும் தியாகம் செய்தார். பாரதியார் – கவிதை வழியே புரட்சியின் தீயை மூட்டினார். வீரமங்கை வேலுநாச்சியார் – தன் உயிரை அர்ப்பணித்தார். இவர்களின் தியாகம் தான் இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திரத்தின் காரணம்." "ஆனால் இன்று… பல தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் தேசப்பற்று நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பதிலாக, விடுமுறை அறிவிக்கின்றன. மாணவர்கள் – ‘இது விடுமுறை நாள்’ என
நினைத்து தங்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். அவர்கள் மனதில் தேசப்பற்றின் விதை விதைக்கப்படாமல் போகிறது." "இந்த முடிவுகளுக்கு காரணம் – மின்சாரச் சிக்கனம், விடுதி உணவுச் சிக்கனம், போக்குவரத்து எரிபொருள் சிக்கனம், சுகாதாரச் சிக்கனம் போன்ற சுயநலக் காரணங்கள். ஆனால்… இந்த சிக்கனத்தால் இழப்பது – மாணவர்களின் மனதில் தேசப்பற்று!" ‘இனிமேல் சுதந்திர தினம், குடியரசு தினம் – வெறும் விடுமுறை நாளாக இருக்கக்கூடாது. அது மாணவர்களின் மனதில் வீரத்தையும் தேசப்பற்றையும் வளர்க்கும் நாளாக இருக்க வேண்டும்.’ மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து, வருங்கால சந்ததிகளுக்கு சுதந்திரத்தின் அர்த்தத்தை உணர்த்தும் வகையில், இந்த நாட்களை நடைமுறையில் கொண்டாடச் செய்ய வேண்டும்." "சுதந்திரம் – அது ஒரு பரிசு அல்ல. அது ஒரு தியாகத்தின் பலன். அதை மதிக்க கற்றுக் கொடுப்பதே – நம் உண்மையான கடமை.
- வேடசந்தூர் பூதிபுரம் ஊராட்சி மஹாலட்சுமிபுரத்தில் கடந்த 15 வருடமாக குடிதண்ணீர் இன்றி சிரமம் அடைந்து வந்தனர் அங்கு மேல் நிலைத் தொட்டி கட்டுவதற்கும் இடமில்லை தற்போது புதியதாக போடப்பட்டுள்ள வீட்டுமனை பிரிவில் காவிரி கூட்டு குடிநீர் மேல்நிலைத் தொட்டி பணி நடைபெற்றுகொண்டிருக்கிறது பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்தத் தொட்டி பணியை விரைந்து முடித்து பொது மக்களுக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.1
- Tn38dh5214. அனைவருக்கும் வணக்கம் 19. 12. 2025. அன்று திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா கீரனூர் டு நால்ரோடு சாலை கவலை காட்டு வலசு என்னும் இடத்தில் இரு கார்கள் வாகன விபத்தில் காயம் பட்ட நபரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளித்து பின்பு கோவை நீலாம்பூர் ராயல் கேர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அளித்து சென்ற பொழுது பல்லடத்தில் இருந்து சூலூர் செல்லும் வரை மிகவும் ஆபத்தான முறையில் நெருங்கி நெருங்கி வாகனத்தை இயக்கியதால் நாம் ஆம்புலன்ஸ் ஓட்டும் போது பதட்டத்தில் ஓட்டப்படுகின்றனர் திடீரென்று நாம் பிரேக் அடித்தால் பின்னாடி வந்து அடித்து விடுவாரோ என்ற ஒரு பயத்துடன் வாகனத்தை இயக்கினேன் இதைப் பற்றி தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் நிர்வாகியிடம் வீடியோ மற்றும் வாகன பதிவு எண் ஒப்படைக்கப்பட்டது இதை காவல்துறை அவர்கள் தக்க நடவடிக்கை எடுத்து இதுபோல் வாகனங்கள் ஆம்புலன்சை பின் தொடர்ந்து வருவதை சரி செய்து தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்1
- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (19.12.2025) வெளியிட்டார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, உதவி தேர்தல் அலுவலர்கள் ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப., கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா ராணி, உதவி ஆணையர் (ஆயம்) பழனி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அபிநயா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவக்குமார், தனி வட்டாட்சியர் (தேர்தல்) சம்பத் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.1
- Post by Manoj Sriveerapathiran1
- இரவின் மடியில்.1
- Post by Santhosh Santhosh3
- Romance ❤️🫶1
- அரசு மருத்துவமனையில் உப்பு மாத்திரை கிடைக்க கோரிக்கை வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சுற்றுவட்டார 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நோயாளிகள் இங்கு வந்து மருத்துவம் பார்த்து செல்லுகின்றனர் தற்போது இங்கு உப்பு மாத்திரை கிடைப்பதில்லை வெளிகடையில் வாங்கி சாப்பிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே அரசு மருத்துவமனைக்கு தடை இன்றி உப்பு மாத்திரை கிடைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1