செம்பட்டியை சேர்ந்த வாலிபர், கொலை செய்யப்பட்டு திருமங்கலம் அருகே தண்ணீர் தொட்டியில் உடல் வீச்சு. 15 நாட்களுக்கு பிறகு உடல் கண்டுபிடிப்பு. திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே சீவல்சரகு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கிலிமுருகன் (38) கட்டிடத் தொழிலாளியான இவருக்கு, திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில் உறவினர் வீட்டில் இருந்து கட்டிடத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 29-ஆம் தேதி மாலை, இதே ஊரைச் சேர்ந்த இவரது நண்பர்கள் 4 பேருடன் சீவல்சரகு அருகே தனியார் பிளாட்டில் மது அருந்தியுள்ளனர். இந்நிலையில் கடந்த 15 தினங்களாக சங்கிலி முருகனை காணவில்லை என, அவரது தம்பி முத்துப்பாண்டி செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். செம்பட்டி காவல்துறையினரும் கடந்த 10-ஆம் தேதி வழக்கு பதிவு செய்து, சங்கிலி முருகனை தேடி வந்தனர். இந்நிலையில், சங்கிலி முருகனுடன் மது குடித்த நபர்கள், சீவல்சரகு அருகே நின்று பேசிக்கொண்டிருந்தபோது, சங்கிலி முருகனின் தம்பி முத்துப்பாண்டி அவர்களை மடக்கி வைத்துக் கொண்டு, செம்பட்டி காவல்துறையினருக்கு கொடுத்த தகவலின் பெயரில், விரைந்து சென்ற காவல்துறையினர் நான்கு பேரிடமும் செம்பட்டி காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சங்கிலி முருகனை காரில் கடத்தி செல்லும் போது கழுத்து வயிறு உள்ளிட்ட பகுதிகளில் குத்தி கொலை செய்து, அவரை திருமங்கலம் அருகே பயன்பாடு இல்லாத தண்ணீர் தொட்டியில் உடலை வீசியதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர். அங்கு விரைந்து சென்ற, செம்பட்டி காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் காவல் துறையினர் கொலை செய்யப்பட்டு தண்ணீர் தொட்டியில் வீசப்பட்ட கட்டிடத் தொழிலாளி சங்கிலி முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டு 15 தினங்களுக்கு பிறகு சங்கிலிமுருகனின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர், திண்டுக்கல் ஏ.டி.எஸ்.பி., தெய்வம் தலைமையிலான காவல்துறையினர் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செம்பட்டியை சேர்ந்த வாலிபர், கொலை செய்யப்பட்டு திருமங்கலம் அருகே தண்ணீர் தொட்டியில் உடல் வீச்சு. 15 நாட்களுக்கு பிறகு உடல் கண்டுபிடிப்பு. திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே சீவல்சரகு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கிலிமுருகன் (38) கட்டிடத் தொழிலாளியான இவருக்கு, திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில் உறவினர் வீட்டில் இருந்து கட்டிடத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 29-ஆம் தேதி மாலை, இதே ஊரைச் சேர்ந்த இவரது நண்பர்கள் 4 பேருடன் சீவல்சரகு அருகே தனியார் பிளாட்டில் மது அருந்தியுள்ளனர். இந்நிலையில் கடந்த 15 தினங்களாக சங்கிலி முருகனை காணவில்லை என, அவரது தம்பி முத்துப்பாண்டி செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். செம்பட்டி காவல்துறையினரும் கடந்த 10-ஆம் தேதி வழக்கு பதிவு செய்து, சங்கிலி முருகனை தேடி வந்தனர். இந்நிலையில், சங்கிலி முருகனுடன் மது குடித்த நபர்கள், சீவல்சரகு அருகே நின்று பேசிக்கொண்டிருந்தபோது, சங்கிலி முருகனின் தம்பி முத்துப்பாண்டி அவர்களை மடக்கி வைத்துக் கொண்டு, செம்பட்டி காவல்துறையினருக்கு கொடுத்த தகவலின் பெயரில், விரைந்து சென்ற காவல்துறையினர் நான்கு பேரிடமும் செம்பட்டி காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சங்கிலி முருகனை காரில் கடத்தி செல்லும் போது கழுத்து வயிறு உள்ளிட்ட பகுதிகளில் குத்தி கொலை செய்து, அவரை திருமங்கலம் அருகே பயன்பாடு இல்லாத தண்ணீர் தொட்டியில் உடலை வீசியதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர். அங்கு விரைந்து சென்ற, செம்பட்டி காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் காவல் துறையினர் கொலை செய்யப்பட்டு தண்ணீர் தொட்டியில் வீசப்பட்ட கட்டிடத் தொழிலாளி சங்கிலி முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டு 15 தினங்களுக்கு பிறகு சங்கிலிமுருகனின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர், திண்டுக்கல் ஏ.டி.எஸ்.பி., தெய்வம் தலைமையிலான காவல்துறையினர் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- குடிதண்ணீர் இல்லாமல் தவிக்கும் திண்டுக்கல் மாவட்ட வனவிலங்குகள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தண்ணீருக்காக சாலையில் திரியும் அரிய வகை சிங்கவால் குரங்குகள் சாலையில் ஓடிய மழைநீரை குரங்குகள் அருந்திய நிலையில், வனவிலங்குகளுக்கு குடிநீர் வசதி அமைத்து தர விலங்கு நல ஆர்வலர்கள் கோரிக்கை1
- திண்டுக்கல் மற்றும் திண்டுக்கல் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி. திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான செட்டிநாயக்கன்பட்டி, சிலப்பாடி, தாடிக்கொம்பு , சின்னாளப்பட்டி, காந்திகிராமம், ஆத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நீண்ட நாட்களாக போதிய மழையில்லாமல் வறண்ட வானிலை காரணமாக கடும் வெப்பம் இருந்து வந்த நிலையில் இன்று மாலை 5 மணி முதல் கனமழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து சற்று குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- ஒட்டன்சத்திரம் 2 வது வார்டு பெரியாஞ் செட்டி பட்டியில் கண் திருஸ்டி கணபதியை இளைஞர் அணி சார்பாக வழிபாடு செய்தனர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு, பெரியாஞ்செட்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கண்திருஷ்டி கணபதியை சிறப்பு வழிபாடு செய்தனர். இக்கண்திருஸ்டி கணபதி இராஜகணபதியாய் சிம்மாசனத்தில் அமர்ந்து கம்பீரமாய் கண்திருஷ்டி களை நீக்குவதை தம் பணியாய் வைத்திருப்பது போல் சிலை அமைந்திருந்தது. இன்று கணபதிக்கு சிறப்புபூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். அதன் பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் இருந்து கண்திருஷ்டி கணபதியை தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு விழா கமிட்டியாரின் சார்பாக கொழுக்கட்டை, சுண்டல், தக்காளி சாதம், அவல் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பி.கண்ணன் ,நா.மதன்குமார், ப.முருகானந்தம் ,விஷ்ணு,சரவணன்,தமிழரசன்,அருண்குமார்,பிரவீன்,ஆ.இ.ஹரிகிருஷ்ணன், ஆ.ஹரிகிருஸ்ணன் தலைமையிலான விழாக்கமிட்டியார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.2
- தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் குடிநீர் வேண்டி பெண்கள் சாலை மறியல் முயற்சி காவல் நிலையத்தில் பேரூராட்சி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சாத்தா கோவில்பட்டி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகச் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்துப் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிப் பெண்களும் பொதுமக்களும், தேவதானப்பட்டி காவல் நிலையம் அருகே திரண்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், மறியலில் ஈடுபட முயன்றவர்களைத் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து காவல் நிலையத்திற்குள் குவிந்த பொதுமக்கள், தங்களின் கோரிக்கையைக் கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அதிகாரிகளுடன் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, பேரூராட்சி அலுவலர்களைக் காவல் நிலையத்திற்கு வரவழைத்துக் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாத்தா கோவில்பட்டி பகுதிக்கு உடனடியாகக் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பேரூராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர். அதிகாரிகளின் இந்த உறுதியை ஏற்றுப் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.1
- தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம் வராக நதியில் சிலைகள் கரைப்பு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இந்து முன்னணி சார்பில் 37-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள காமாட்சிபுரம், எ.புதுப்பட்டி, தாமரைக்குளம், தெ.கள்ளிப்பட்டி, வடுகபட்டி, மேல்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்று காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆனைத் தொடர்ந்து இன்று மாலை வேளையில் அனைத்துச் சிலைகளும் பெரியகுளம் மதுரை சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டன. அதைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டம் சுருள் கத்தி, வால் சுற்றுதல், உள்ளிட்ட விளையாட்டுக்களுடன் அரண்மனைத் தெரு, வி.ஆர்.பி தெரு, தென்கரை சுதந்திர வீதி மற்றும் அக்ரகாரம் வழியாக முக்கிய வீதிகளில் விநாயகர் சிலை ஊர்வலம் சென்றது. சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்த ஊர்வலத்தின் முடிவில், அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி கோவில் அருகே உள்ள வராக நதி ஆற்றில் சிலைகள் அனைத்தும் பாதுகாப்பாகக் கரைக்கப்பட்டன. அமைதியான முறையில் ஊர்வலம் நடைபெறுவதற்காக, பெரியகுளம் காவல்துறை கண்காணிப்பாளர் நல்லு தலைமையில், 18 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 650 -க்கும் மேற்பட்ட காவலர்கள் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.1
- கிணற்றில் விழுந்த நாய் உயிருடன் மீட்பு: தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு! திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள சீகம்பட்டி கிராமம், பழைய காலனி, பூசாரி பண்ணை பகுதியில் திறந்தவெளி கிணறு ஒன்று உள்ளது. இந்த நிலையில், அவ்வழியாகச் சென்ற நாய் ஒன்று எதிர்பாராதவிதமாகத் தவறி கிணற்றுக்குள் விழுந்தது. கிணற்றுக்குள் நாய் உயிருக்குப் போராடிக் குரல் எழுப்புவதைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக இதுகுறித்து மணப்பாறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்புப் படையினர், துரிதமாகச் செயல்பட்டு கிணற்றில் இறங்கினர். மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்தி, கிணற்றுக்குள் தவித்துக் கொண்டிருந்த நாயைப் பாதுகாப்பாக உயிருடன் மீட்டனர். சமயத்தில் வந்து நாயின் உயிரைக் காப்பாற்றிய தீயணைப்புத் துறையினரின் இந்த அதிவிரைவு நடவடிக்கையைப் பாராட்டி, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.2
- இந்து எழுச்சி முன்னணி 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் தேனியில் விமர்சியாக நடந்தது தேனியில் செயல்பட்டு வரும் இந்து எழுச்சி முன்னணி அமைப்பு சார்பில் 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது இந்த ஊர்வலத்திற்கு நிறுவனத் தலைவர் பொன் ரவி வழிகாட்டிட மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை வகிக்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் முன்னிலையில் 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது இந்த ஊர்வலத்தில் செண்டா மேளம் முழங்க அரிசி கொம்பன் யானை முன் நின்று வழிநடத்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் முளைப்பாரி சுமந்தும், 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்கள் ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது போலீசாரால் அனுமதி வழங்கப்பட்டிருந்த அரண்மனை புதூர் முல்லை ஆற்றில் கரைக்க இந்த ஊர்வலமானது அல்லிநகரம் சாலை பிள்ளையார் கோவிலில் தொடங்கி பெரியகுளம் சாலை நேரு சிலை மதுரை சாலை வழியாக அரண்மனை புதூர் முல்லை ஆற்று பாலம் வந்தடைந்து அங்கு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு நகர் முழுவதும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனிகள் முல்லை ஆற்றில் கரைக்கப்பட்டது இந்த ஊர்வலத்திற்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலெக்ஸாண்டர் ஜெரால்டு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்1
- மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் மறைந்த முன்னாள் முதல்வரும் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் தேனி மாவட்டம் பெரியகுளம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ வெங்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இந்நிகழ்ச்சியில் தெற்கு நகரக் கழகச் செயலாளர் VDR,பாலா, வடக்கு நகர் கழக செயலாளர் VS.தினேஷ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலாஜி, நகர் மன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன் பால்பாண்டி, மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் மாஞ்சோலை செல்வம், அம்மா பேரவை இணைச் செயலாளர் முருகன்,நகர அவை தலைவர் மோகன், தொழிற்சங்க செயலாளரா ஜீவானந்தம் அடுத்து,மாவட்டத் துணைத் தலைவர் தர்மலிங்கம் வார்டு செயலாளர்கள் சார்பணி நிர்வாகிகள் உள்ளிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமான கலந்துகொண்டு அறிஞர் அண்ணாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்1