logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை இன்று (21.06.2026) தொடங்கி வைத்து, வேலை நாடுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 20 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் பேசிய அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா, மாவட்டத்தில் பல தொழில் நிறுவனங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றுக்குத் தேவையான திறன்மிக்க ஊழியர்கள் இல்லாத நிலை நிலவுவதாகக் குறிப்பிட்டார். இந்தப் போதாமையை நீக்குவதற்காக, உள்ளூர் கல்லூரிகளுடன் இணைந்து, நிறுவனங்களுக்குத் தேவையான திறன்களை மாணவர்களுக்குக் கற்பித்து பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், எந்த இளைஞரும் "வேலைவாய்ப்பு இல்லை" என்று சொல்லாத நிலையை உருவாக்குவதே மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் கனவு என்றும் அவர் தெரிவித்தார். வேலை இன்றித் தான் காத்திருந்த அனுபவம் தனக்கும் இருப்பதால், வேலை தேடும் இளைஞர்களின் சிரமங்களை தான் புரிந்துகொள்ள முடிவதாகவும், அதனால்தான் அரசு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவையான திட்டங்களை உருவாக்கி வருவதாகவும், திறன் பயிற்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் விளக்கினார். வின்ஃபாஸ்ட் போன்ற நிறுவனங்கள் தூத்துக்குடியில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதும், ஹூண்டாய் நிறுவனம் வருவதால் குடியிருப்பு வசதிகள் மேம்படும் வாய்ப்புகளும் உருவாவதையும் அவர் எடுத்துக்காட்டினார். மேலும், பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும், யாரும் வேலை இன்றி இருக்கக்கூடாது என்பதே அரசின் நோக்கம் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். வேலை தேடுபவர்கள் தங்களது திறன்களைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், பட்டப்படிப்புடன் நிறுத்திக்கொள்ளாமல் பல்வேறு திறன் வளர்ப்புப் பயிற்சிகளிலும், இணையம் மூலம் இலவசமாக வழங்கப்படும் சான்றிதழ் பயிற்சிகளிலும் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். செயற்கை நுண்ணறிவு காலத்தில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தையும், தகவல்களின் உண்மைத்தன்மையை இருமுறை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், திறன் வளர்ச்சிக்கான சிறந்த கருவிகளும் இலவச சான்றிதழ் பயிற்சிகளும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த வேலைவாய்ப்பு முகாம், 8 ஆம் வகுப்பு முதல் பொறியியல் பட்டதாரிகள் வரை பல்வேறு கல்வித் தகுதி கொண்ட இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கிறது; 75-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் இதில் பங்கேற்றன. தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் தங்கள் குடும்பம் மற்றும் நலன்களைக் கருத்தில் கொண்டு பணியில் சேர வேண்டும் என்றும், அதன் மூலம் கிடைக்கும் வருவாயை உயர்பணிகளுக்கும் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார். படித்த இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப அரசுப் பணியை வழங்குவதற்காக, அனைத்துப் பணியிடங்களையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நேர்மையான முறையில் திறமையானவர்களை நியமிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், அதனடிப்படையில் போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அத்துடன், தொழில் வளர்ச்சியின் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி, நிரந்தர வருவாய் ஈட்டவும், பொருளாதார இடையூறுகளின்றி வாழ்க்கை நிலையை உயர்த்திக்கொள்ளவும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுவதாக அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொது) திருமதி சு.ஞானபிரபா, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதிக் கழக மாவட்ட மேலாளர், மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர், ஆர்.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளி முதல்வர் திருமதி முத்துலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

12 hrs ago
user_குமார்
குமார்
Kariapatti, Virudhunagar•
12 hrs ago
20dff954-1d5d-4451-981f-12e2e37224d5

மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை இன்று (21.06.2026) தொடங்கி வைத்து, வேலை நாடுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 20 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் பேசிய அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா, மாவட்டத்தில் பல தொழில் நிறுவனங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றுக்குத் தேவையான திறன்மிக்க ஊழியர்கள் இல்லாத நிலை நிலவுவதாகக் குறிப்பிட்டார். இந்தப் போதாமையை நீக்குவதற்காக, உள்ளூர் கல்லூரிகளுடன் இணைந்து, நிறுவனங்களுக்குத் தேவையான திறன்களை மாணவர்களுக்குக் கற்பித்து பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், எந்த இளைஞரும் "வேலைவாய்ப்பு இல்லை" என்று

07dbb017-eeac-4fb8-952a-ba69acb4b7b8

சொல்லாத நிலையை உருவாக்குவதே மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் கனவு என்றும் அவர் தெரிவித்தார். வேலை இன்றித் தான் காத்திருந்த அனுபவம் தனக்கும் இருப்பதால், வேலை தேடும் இளைஞர்களின் சிரமங்களை தான் புரிந்துகொள்ள முடிவதாகவும், அதனால்தான் அரசு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவையான திட்டங்களை உருவாக்கி வருவதாகவும், திறன் பயிற்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் விளக்கினார். வின்ஃபாஸ்ட் போன்ற நிறுவனங்கள் தூத்துக்குடியில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதும், ஹூண்டாய் நிறுவனம் வருவதால் குடியிருப்பு வசதிகள் மேம்படும் வாய்ப்புகளும் உருவாவதையும் அவர் எடுத்துக்காட்டினார். மேலும், பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும், யாரும் வேலை இன்றி இருக்கக்கூடாது என்பதே அரசின் நோக்கம் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். வேலை தேடுபவர்கள் தங்களது திறன்களைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், பட்டப்படிப்புடன் நிறுத்திக்கொள்ளாமல் பல்வேறு

067cdc4c-9593-419b-8e89-aa74ae81cb6e

திறன் வளர்ப்புப் பயிற்சிகளிலும், இணையம் மூலம் இலவசமாக வழங்கப்படும் சான்றிதழ் பயிற்சிகளிலும் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். செயற்கை நுண்ணறிவு காலத்தில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தையும், தகவல்களின் உண்மைத்தன்மையை இருமுறை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், திறன் வளர்ச்சிக்கான சிறந்த கருவிகளும் இலவச சான்றிதழ் பயிற்சிகளும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த வேலைவாய்ப்பு முகாம், 8 ஆம் வகுப்பு முதல் பொறியியல் பட்டதாரிகள் வரை பல்வேறு கல்வித் தகுதி கொண்ட இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கிறது; 75-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் இதில் பங்கேற்றன. தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றவர்கள் தங்கள் குடும்பம் மற்றும் நலன்களைக் கருத்தில் கொண்டு பணியில் சேர வேண்டும் என்றும், அதன் மூலம் கிடைக்கும் வருவாயை உயர்பணிகளுக்கும் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார். படித்த இளைஞர்களின் நலனைக்

5c92ac36-462f-414f-9b6e-4732be429221

கருத்தில் கொண்டு, அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப அரசுப் பணியை வழங்குவதற்காக, அனைத்துப் பணியிடங்களையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நேர்மையான முறையில் திறமையானவர்களை நியமிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், அதனடிப்படையில் போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அத்துடன், தொழில் வளர்ச்சியின் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி, நிரந்தர வருவாய் ஈட்டவும், பொருளாதார இடையூறுகளின்றி வாழ்க்கை நிலையை உயர்த்திக்கொள்ளவும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுவதாக அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொது) திருமதி சு.ஞானபிரபா, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதிக் கழக மாவட்ட மேலாளர், மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர், ஆர்.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளி முதல்வர் திருமதி முத்துலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

More news from Tamil Nadu and nearby areas
  • மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்ரமணியசாமி கோவிலில் நேற்று (ஜூன் 20) மாலை ஆனி ஊஞ்சல் திருவிழா காப்பு கட்டுகளுடன் கோலாகலமாக தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா, ஆன்மிகச் சிறப்புடன் கொண்டாடப்படவுள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற ஜூன் 29ஆம் தேதி மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள் வைத்து சிறப்பு பூஜை நடத்தப்படவுள்ளது. அன்றைய தினம் மாலை முருகப் பெருமான் சிம்மாசன வாகனத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வீதியுலா வருவார்.
    1
    மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்ரமணியசாமி கோவிலில் நேற்று (ஜூன் 20) மாலை ஆனி ஊஞ்சல் திருவிழா காப்பு கட்டுகளுடன் கோலாகலமாக தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா, ஆன்மிகச் சிறப்புடன் கொண்டாடப்படவுள்ளது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற ஜூன் 29ஆம் தேதி மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள் வைத்து சிறப்பு பூஜை நடத்தப்படவுள்ளது. அன்றைய தினம் மாலை முருகப் பெருமான் சிம்மாசன வாகனத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வீதியுலா வருவார்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    19 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மன்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான கோபாலகிருஷ்ணன் நேற்று மாலை பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும், அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு, இன்று காலை 6 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது குடும்பத்தார் கோபாலகிருஷ்ணனின் கண்களை தானம் செய்ய முடிவு செய்தனர். கோபாலகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டதால், வழக்கு விசாரணைக்காக மன்னவனூர் கிராம போலீசார் வர கால தாமதம் ஏற்பட்டது. இதனால் உடற்கூராய்வு செய்யாமல் உடலை வாங்க முடியாத சூழல் உருவானதால், நீண்ட நேரம் காத்திருந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆத்திரமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற நிலையில், போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, உடலைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து, அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து கோபாலகிருஷ்ணனின் உறவினர் ஒருவர் கூறுகையில், கொடைக்கானலில் போதுமான மருத்துவ வசதி இருந்திருந்தால், தாங்கள் ஏன் தேனி மருத்துவமனைக்கு வந்திருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். மேலும், காலை 6 மணியளவில் உயிரிழந்த நிலையில், தற்போது வரை தங்களிடம் உடலை ஒப்படைக்காமல் இருப்பதாகவும், கண் தானம் செய்யப்பட்ட பின்பும் கூட போலீசார் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியத்துடன் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். எனவே, விரைவில் உடற்கூராய்வு செய்து உயிரிழந்த கோபாலகிருஷ்ணனின் உடலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    3
    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மன்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான கோபாலகிருஷ்ணன் நேற்று மாலை பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும், அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு, இன்று காலை 6 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது குடும்பத்தார் கோபாலகிருஷ்ணனின் கண்களை தானம் செய்ய முடிவு செய்தனர். 

கோபாலகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டதால், வழக்கு விசாரணைக்காக மன்னவனூர் கிராம போலீசார் வர கால தாமதம் ஏற்பட்டது. இதனால் உடற்கூராய்வு செய்யாமல் உடலை வாங்க முடியாத சூழல் உருவானதால், நீண்ட நேரம் காத்திருந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆத்திரமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்ற நிலையில், போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, உடலைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து, அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

இதுகுறித்து கோபாலகிருஷ்ணனின் உறவினர் ஒருவர் கூறுகையில், கொடைக்கானலில் போதுமான மருத்துவ வசதி இருந்திருந்தால், தாங்கள் ஏன் தேனி மருத்துவமனைக்கு வந்திருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். மேலும், காலை 6 மணியளவில் உயிரிழந்த நிலையில், தற்போது வரை தங்களிடம் உடலை ஒப்படைக்காமல் இருப்பதாகவும், கண் தானம் செய்யப்பட்ட பின்பும் கூட போலீசார் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியத்துடன் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். எனவே, விரைவில் உடற்கூராய்வு செய்து உயிரிழந்த கோபாலகிருஷ்ணனின் உடலை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    20 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைக்கப்பட்டு வரும் விமானப் பயிற்சி மையத்தின் (Flying Training Organization - FTO) கட்டுமானப் பணிகளைக் கண்காணிப்பதற்கான முக்கிய நடவடிக்கையை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் (TIDCO) மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசின் நிறுவனமான TIDCO, இந்தப் பணிகளை மேற்பார்வையிட ஒரு சுயாதீன பொறியாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான மின்னணு டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, கட்டுமானப் பணிகளின் தரம், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் திட்ட முன்னேற்றத்தைத் தொடர்ந்து கண்காணித்து ஆலோசனை வழங்கும் தகுதியான நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள நிறுவனங்கள் டெண்டர் ஆவணங்களை TIDCO மற்றும் தமிழ்நாடு அரசின் மின்னணு டெண்டர் இணையதளங்களிலிருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஒப்பந்தப் புள்ளிகள் மற்றும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற ஜூலை 15ஆம் தேதி மதியம் 3 மணி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விமானப் பயிற்சி மையம் கோவில்பட்டி வட்டம் கயத்தாறு பகுதியில் அமைய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் உயர்தரத்துடன் பணிகள் நிறைவேறுவதை உறுதி செய்வதே இந்த டெண்டரின் முக்கிய நோக்கம் என்று TIDCO தெரிவித்துள்ளது. கோவில்பட்டியில் உருவாகி வரும் இந்த விமானப் பயிற்சி மையம் செயல்பாட்டுக்கு வந்தால், தமிழகத்தில் விமானப் பயிற்சி மற்றும் விமானத் துறை சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் வலுப்பெறும் எனக் கருதப்படுகிறது. மேலும், தென் தமிழக இளைஞர்களுக்கு விமானப் பயிற்சி பெறும் புதிய வாய்ப்புகள் உருவாகும் என்பதுடன், அப்பகுதியின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் இது ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    1
    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைக்கப்பட்டு வரும் விமானப் பயிற்சி மையத்தின் (Flying Training Organization - FTO) கட்டுமானப் பணிகளைக் கண்காணிப்பதற்கான முக்கிய நடவடிக்கையை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் (TIDCO) மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசின் நிறுவனமான TIDCO, இந்தப் பணிகளை மேற்பார்வையிட ஒரு சுயாதீன பொறியாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான மின்னணு டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, கட்டுமானப் பணிகளின் தரம், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் திட்ட முன்னேற்றத்தைத் தொடர்ந்து கண்காணித்து ஆலோசனை வழங்கும் தகுதியான நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள நிறுவனங்கள் டெண்டர் ஆவணங்களை TIDCO மற்றும் தமிழ்நாடு அரசின் மின்னணு டெண்டர் இணையதளங்களிலிருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஒப்பந்தப் புள்ளிகள் மற்றும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற ஜூலை 15ஆம் தேதி மதியம் 3 மணி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விமானப் பயிற்சி மையம் கோவில்பட்டி வட்டம் கயத்தாறு பகுதியில் அமைய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் உயர்தரத்துடன் பணிகள் நிறைவேறுவதை உறுதி செய்வதே இந்த டெண்டரின் முக்கிய நோக்கம் என்று TIDCO தெரிவித்துள்ளது.

கோவில்பட்டியில் உருவாகி வரும் இந்த விமானப் பயிற்சி மையம் செயல்பாட்டுக்கு வந்தால், தமிழகத்தில் விமானப் பயிற்சி மற்றும் விமானத் துறை சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் வலுப்பெறும் எனக் கருதப்படுகிறது. மேலும், தென் தமிழக இளைஞர்களுக்கு விமானப் பயிற்சி பெறும் புதிய வாய்ப்புகள் உருவாகும் என்பதுடன், அப்பகுதியின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் இது ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    user_கோ.ரெங்கசாமி
    கோ.ரெங்கசாமி
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    20 hrs ago
  • இந்திய நாட்டின் உயரிய விருதான 'கீர்த்தி சக்கரா' விருதைப் பெற்ற ராணுவ வீரர் லென்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்திற்கு அவரது சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்த இவர், ஜம்மு-காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த போரில் தாக்குதலுக்கு உள்ளானார். அப்போது அவரது வாயில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பலத்த காயமடைந்த நிலையிலும், தனது காயத்தைப் பொருட்படுத்தாமல் சண்டையிட்டு ஐந்து தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றதோடு, தனது சக வீரர்களையும் காப்பாற்றினார். அவரது இந்த வீர தீர செயலைப் பாராட்டி, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு 'கீர்த்தி சக்கரா' விருதை வழங்கினார். இந்த நிலையில், விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் தேனி மாவட்டத்திற்குத் திரும்பியபோது, ஊர் பொதுமக்கள் மற்றும் முன்னாள் படை வீரர்கள் சார்பில் பாராட்டு விழா மற்றும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, தேனி மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள தர்மாபுரி கிராமத்தில், முன்னாள் படை வீரர் நலச் சங்கம் மற்றும் தர்மாபுரி ஊர் பொதுமக்கள் இணைந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பின் ஒரு பகுதியாக, தேவராட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்கள் ஆடப்பட்டு, ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு பொதுமக்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, நாட்டின் உயரிய விருதைப் பெற்ற அவருக்குத் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
    1
    இந்திய நாட்டின் உயரிய விருதான 'கீர்த்தி சக்கரா' விருதைப் பெற்ற ராணுவ வீரர் லென்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்திற்கு அவரது சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்த இவர், ஜம்மு-காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த போரில் தாக்குதலுக்கு உள்ளானார். அப்போது அவரது வாயில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பலத்த காயமடைந்த நிலையிலும், தனது காயத்தைப் பொருட்படுத்தாமல் சண்டையிட்டு ஐந்து தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றதோடு, தனது சக வீரர்களையும் காப்பாற்றினார்.

அவரது இந்த வீர தீர செயலைப் பாராட்டி, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு 'கீர்த்தி சக்கரா' விருதை வழங்கினார். இந்த நிலையில், விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் தேனி மாவட்டத்திற்குத் திரும்பியபோது, ஊர் பொதுமக்கள் மற்றும் முன்னாள் படை வீரர்கள் சார்பில் பாராட்டு விழா மற்றும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, தேனி மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள தர்மாபுரி கிராமத்தில், முன்னாள் படை வீரர் நலச் சங்கம் மற்றும் தர்மாபுரி ஊர் பொதுமக்கள் இணைந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வரவேற்பின் ஒரு பகுதியாக, தேவராட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்கள் ஆடப்பட்டு, ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு பொதுமக்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, நாட்டின் உயரிய விருதைப் பெற்ற அவருக்குத் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • ஒரு நபர் விலகிச் செல்லும் தருணம் எதுவென்று தெரியுமா என்று இடுகை கேள்வி எழுப்புகிறது, மேலும் அதைப் புரிந்துகொள்ளுமாறு வலியுறுத்துகிறது.
    1
    ஒரு நபர் விலகிச் செல்லும் தருணம் எதுவென்று தெரியுமா என்று இடுகை கேள்வி எழுப்புகிறது, மேலும் அதைப் புரிந்துகொள்ளுமாறு வலியுறுத்துகிறது.
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • திண்டுக்கல்லில் இன்று பெய்த மழையின் காரணமாக, திண்டுக்கல் மலைக்கோட்டையில் புதிதாக ஓர் அருவி உருவாகியுள்ளது. இந்த இயற்கைக் காட்சியை அப்பகுதி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.
    1
    திண்டுக்கல்லில் இன்று பெய்த மழையின் காரணமாக, திண்டுக்கல் மலைக்கோட்டையில் புதிதாக ஓர் அருவி உருவாகியுள்ளது. இந்த இயற்கைக் காட்சியை அப்பகுதி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    8 hrs ago
  • நாளை கொண்டாடப்பட உள்ள முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தேனியில் தமிழ்நாடு சிலம்பம் அசோசியேஷன் குழு சார்பில் சிலம்பாட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகம் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இதன் ஒரு பகுதியாக தேனியில் நடைபெற்ற இந்த சிலம்பாட்ட நிகழ்ச்சியினை தவெக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் பாண்டி ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர். இந்த சிலம்பாட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுமார் 20க்கும் மேற்பட்ட சிலம்பாட்ட குழுவினர் இணைந்து சிலம்பாட்டம் போட்டிகளை நடத்தினர். இதில் 7 வயது முதல் 21 வயது வரையிலான 300க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகள் பங்கேற்றனர். தேனி பங்களாமேடு பகுதியில் இருந்து நேரு சிலை வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த சிறுவர் சிறுமிகள் சிலம்பம் சுற்றியவாறே ஊர்வலமாகச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த சிலம்பம் சுற்றி ஊர்வலமாகச் செல்லும் நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
    1
    நாளை கொண்டாடப்பட உள்ள முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தேனியில் தமிழ்நாடு சிலம்பம் அசோசியேஷன் குழு சார்பில் சிலம்பாட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகம் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இதன் ஒரு பகுதியாக தேனியில் நடைபெற்ற இந்த சிலம்பாட்ட நிகழ்ச்சியினை தவெக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் பாண்டி ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.

இந்த சிலம்பாட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுமார் 20க்கும் மேற்பட்ட சிலம்பாட்ட குழுவினர் இணைந்து சிலம்பாட்டம் போட்டிகளை நடத்தினர். இதில் 7 வயது முதல் 21 வயது வரையிலான 300க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகள் பங்கேற்றனர். தேனி பங்களாமேடு பகுதியில் இருந்து நேரு சிலை வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த சிறுவர் சிறுமிகள் சிலம்பம் சுற்றியவாறே ஊர்வலமாகச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த சிலம்பம் சுற்றி ஊர்வலமாகச் செல்லும் நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளம் அருகே இன்று, அதாவது ஜூன் 21, 2026 அன்று, வானில் டொர்னடோ போன்ற தோற்றத்துடன் திடீரென சுழல் காற்று தோன்றியது. இந்த அசாதாரண நிகழ்வைக் கண்ட பொதுமக்கள் ஆச்சரியத்துடனும் அச்சத்துடனும் பார்த்தனர். இந்த சுழல் காற்றின் தாக்கத்தால் வாகைக்குளம் சுங்கச்சாவடியின் கூரைகள் பெயர்ந்து முற்றிலும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, சுங்கச்சாவடியின் செயல்பாடுகள் தற்காலிகமாக முடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், சேத மதிப்பீட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    1
    தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளம் அருகே இன்று, அதாவது ஜூன் 21, 2026 அன்று, வானில் டொர்னடோ போன்ற தோற்றத்துடன் திடீரென சுழல் காற்று தோன்றியது. இந்த அசாதாரண நிகழ்வைக் கண்ட பொதுமக்கள் ஆச்சரியத்துடனும் அச்சத்துடனும் பார்த்தனர். 

இந்த சுழல் காற்றின் தாக்கத்தால் வாகைக்குளம் சுங்கச்சாவடியின் கூரைகள் பெயர்ந்து முற்றிலும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, சுங்கச்சாவடியின் செயல்பாடுகள் தற்காலிகமாக முடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சம்பவம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், சேத மதிப்பீட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Photographer ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.