கீழக்கரை அருகே உள்ள சின்ன மாயாகுளம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த இருவர் மர்மமான முறையில் இறந்தது கிடந்தது அதிர்ச்சி அளிக்கும் இருந்தது #சாலைமறியல் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள சின்ன மாயாகுளம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பட்டியலின பரையர் சமூக சகோதரர் கோபி மற்றும் இசுலாமியர் சமூக சகோதரர் ரியாசுதின் இருவர் மர்மமான முறையில் இறந்தது கிடந்தது பெரும் அதிர்ச்சி அளிக்கும் இருந்தது..குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கக் கோரி. ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் மாவட்டச் செயலாளர்கள் சிறுத்தை முத்து வாப்பா விசிக Sathiya Iniya Siruthai Yosa இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில செயலாளர் தோழர் #சீனிமுகம்மதுசபீர் மண்டல செயலாளர் தோழர் #விடுதலைசேகரன் உள்ளிட்ட முன்னணி பொருப்பாளர்கள் தொண்டர்கள் உறவினர்கள் கலந்து கொண்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.. மாவட்ட நிர்வாகம் உடனடியாக குற்றவாளிகளைக் கண்டறிந்து தக்க தண்டனை வழங்கிடவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி பெற்றிட விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வேண்டுகோள் வைக்கின்றோம்... Thol.Thirumavalavan Vanni Arasu VCK S.S.Balaji
கீழக்கரை அருகே உள்ள சின்ன மாயாகுளம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த இருவர் மர்மமான முறையில் இறந்தது கிடந்தது அதிர்ச்சி அளிக்கும் இருந்தது #சாலைமறியல் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள சின்ன மாயாகுளம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பட்டியலின பரையர் சமூக சகோதரர் கோபி மற்றும் இசுலாமியர் சமூக சகோதரர் ரியாசுதின் இருவர் மர்மமான முறையில் இறந்தது கிடந்தது பெரும் அதிர்ச்சி அளிக்கும் இருந்தது..குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கக் கோரி. ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் மாவட்டச் செயலாளர்கள் சிறுத்தை முத்து வாப்பா விசிக Sathiya Iniya Siruthai Yosa இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில செயலாளர் தோழர் #சீனிமுகம்மதுசபீர் மண்டல செயலாளர் தோழர் #விடுதலைசேகரன் உள்ளிட்ட முன்னணி பொருப்பாளர்கள் தொண்டர்கள் உறவினர்கள் கலந்து கொண்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.. மாவட்ட நிர்வாகம் உடனடியாக குற்றவாளிகளைக் கண்டறிந்து தக்க தண்டனை வழங்கிடவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி பெற்றிட விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வேண்டுகோள் வைக்கின்றோம்... Thol.Thirumavalavan Vanni Arasu VCK S.S.Balaji
- தவெகாவின் நிலைப்பாடு பிடிக்காததன் காரணமாகவே இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிடுகிறது- சிவகாசிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி... தவெக ஆட்சிக்கு, கூட்டணி கட்சிகள் கொடுக்கின்ற முட்டுக்கட்டை நிலையானது அல்ல, எந்த நேரத்திலும் தவெக ஆட்சிக்கு பேராபத்து வரக்கூடிய சூழலில்தான் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் விமர்சனம்... அறிஞர் அண்ணா அவர்களின் 118 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சிவகாசி காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள அவரது திருவுருவர் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மக்கள் விரும்புகின்ற ஆட்சியாகவும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டும் என்பதுதான் மக்கள் மனதில் ஆழமாக இருக்கிறது இடையில் ஏற்பட்ட சில சருக்கல்கள், கருத்து திணிப்புகள், அரசியல் கோல்மால்கள், வாட்ஸாப், பேஸ்புக், இன்டஸ்ட்ராகிராம் போன்ற குழப்பங்க அண்ணா திமுக ளால் ஆட்சி மாற்றம் வந்துள்ளது தற்போது நடைபெறும் ஆட்சி மக்களால் விரும்பும் ஆட்சி கிடையாது நகைப்புக்குரிய ஆட்சியாக விஜய் ஆட்சி உள்ளது இடைத்தேர்தலில் அதிமுக முதன்மையான கட்சியாக வெற்றி பெறும், தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் பெற்று அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் எடப்பாடியார் தலைமை தமிழகத்திற்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு மக்கள் வாக்களிக்க தயாராகிவிட்டார்கள் தவெக ஆட்சிக்கு இடைத்தேர்தல் பாடம் புகட்டும் முதல்வரின் லண்டன் பயணம் குறித்து முதல்வர் சார்பில் வெளியிட்டுள்ள புகைப்படம் பேசுபொருளாக தமிழகத்தில் உலாவி வருகிறது, அதை தார்மீகமாக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, ஒரு நாட்டின் முதல்வர் எப்படி வாழ வேண்டும், எப்படி இருக்க வேண்டும், பிறருக்கு முன் உதாரணமாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு இருக்க வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள் ஆனால் அந்த நிலைப்பாட்டில் வாழக்கூடியவராக இன்றைய தமிழக முதல்வர் இருக்கவில்லை முதல்வரின் லண்டன் பயணத்தை சந்தேக கண்ணோடு தமிழக மக்கள் பார்க்கிறார்கள் வெளிநாட்டில் முதலீடை ஈர்க்க சென்றுள்ள முதல்வர், தொழில்துறை அமைச்சர் இல்லாமல் சென்றாலும் சம்பந்தப்பட்ட பணிகளை செய்து வெற்றிகரமாக திரும்பினால் சந்தோஷம் ஆனால் முதல்கட்டமாக ஊடகத்தில் வந்த செய்திகளை பார்க்கும்போது முதல்வர் வெளிநாடு சென்ற நோக்கமே வேறாக தெரிகிறது மக்கள், அரசியல் கட்சி தலைவர்களின் எதிர்ப்புகளை தொடர்ந்து சில பணிகளை செய்வதாக கேள்விப்படுகிறோம் மொத்தத்தில் முதல்வர் தடம் மாறி, தடம் புரண்டு நடவடிக்கையில் ஈடுப்பட்டுக்கொண்டிருப்பதாக தமிழக மக்கள் எண்ணுகிறார்கள், இதை முதல்வர் மாற்றிக்கொள்ள வேண்டும் தமிழக முதலமைச்சராக வந்த பின்னர், அனைத்து முதலமைச்சர்களும் முதல்வர்களுக்கான பண்போடும், தகுதியோடும், தன்மையோடு வாழ்ந்துகொண்டு தமிழகத்தை ஆண்டிருக்கிறார்கள் அதேபோல் விஜயும் முதல்வருக்கான பண்போடும், தகுதியோடும் தன்மையோடும் வாழ்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள், ஆனால் அதற்கு எதிர்மறையான நிலைப்பாட்டோடு முதல்வர் விஜய்யின் ஆட்சியும் அவரது செயல்பாடும் இருக்கிறது முதல்வர் விஜய் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகிறார்கள் தவெக ஆட்சி விளையாட்டுத்தனமான ஆட்சி காவல்துறையினர் மானிய கோரிக்கையின் போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் சார்பாக பல்வேறு கேள்விகளை முன் வைத்தபோது, எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காத முதல்வர் விஜய் அவருக்கே தெரிந்த பாணியில் வசனத்தை பேசி பதில் உரையை முடித்து விட்டார் முதல்வர் விஜயின் பதிலுரை பார்ப்பதற்கு வேண்டுமானால் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும், சிரிப்பாகவும், ஜோக்காகவும் இருக்கலாமே தவிர நல்ல விவரம் தெரிந்த, அரசியல் தெரிந்தவர்கள் முதல்வர் விஜயின் பேச்சை எள்ளி நகையாடுகிறார்கள் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள், முன்னாள் ஆட்சியாளர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு கூட முதல்வர் விஜய் பதிலளிக்கவில்லை காவல்துறை உள்ளிட்ட சீருடை பணியாளர்களுக்கு எந்தவிதமான முன்னேற்ற அறிவிப்புகளும் காவல்துறை மானிய கோரிக்கையில் வரவில்லை இதை காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை சங்கடத்துடன் வாழ்வதை காண முடிகிறது தமிழக மக்களுக்காக 24 மணி நேரமும் உழைக்கின்ற காவல் துறைக்கு எந்தவிதமான அறிவிப்புகளோ சலுகைகளோ வழங்கப்படாததை தமிழக மக்கள், காவல்துறையினரால் ஏற்றுக்கொள்ளவில்லை மொத்தத்தில் பிறரை ஏளனமாக பேசுவதற்கும், தமக்கு பிடிக்காதவர்களை எள்ளி நகையாடுவதற்கும் சட்டமன்றத்தை ஒரு கருவியாக முதல்வர் விஜய் பயன்படுத்திக்கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி ஆண்ட காலத்திலும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்திலும் சட்டமன்றத்தின் புனிதத் தன்மை காக்கப்பட்டது தற்போது சட்டமன்றத்தின் புனிதத் தன்மை குறைந்து பாலாகிவிட்டது, இந்த நிலை மாற வேண்டும் என்றால் முதல்வர் விஜய் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் தவெக ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள், அதே நேரத்தில் தவெக ஆட்சிக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் பணி செய்ய விரும்பவில்லை தவெகாவின் நிலைப்பாடு பிடிக்காததன் காரணமாகவே இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிடுகிறது ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது, மத்திய அரசின் மறைமுக ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காக மட்டுமே தவெகவிற்கு ஆதரவு கொடுத்தோமே தவிர தவெகாவின் தலைவரை பிடித்தோ, தவெகவின் கொள்கையை பிடித்தோ ஆதரவு கொடுக்கவில்லை என கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சொல்லிவிட்டார்கள் தவெக ஆட்சிக்கு, கூட்டணி கட்சிகள் கொடுக்கின்ற முட்டுக்கட்டை நிலையானது அல்ல, எந்த நேரத்திலும் தவெக ஆட்சிக்கு பேராபத்து வரக்கூடிய சூழலில்தான் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது நிலையான ஆட்சியமைக்கும் தன்மை முதல்வர் விஜய்கோ, தவெக கட்சிக்கோ கிடையாது ஆட்சி நிலைக்க முதல்வர் விஜய் தனது நிலைய மாற்றிக்கொள்ள வேண்டும் பிறரை பழி வாங்குவதற்கோ, பிறரை இகழ்ந்து, புகழ்ந்து பேசுவதற்கோ, தன்னை புகழ்ந்து பேசுவதற்கோ சட்டமன்றத்தை கருவியாக பயன்படுத்த நினைத்தால் தமிழக மக்கள் காலப்போக்கில் தூக்கி எறிந்து விடுவார்கள் இதற்கு ஆதரவு தர மாட்டார்கள் தமிழக மக்கள் எப்பொழுதும் முழிப்போடும் இருக்கக்கூடியவர்கள், தமிழக மக்களும், தமிழ் அறிஞர்கள், அரசியல் அறிந்தவர்கள் எள்ளி நகையாட கூடிய சூழ்நிலையை பார்க்கிறோம் இந்த நிலை மாற வேண்டும் என்றால் சட்டமன்றம் தனி சிறப்போடு இயங்க வேண்டும் சட்டமன்றத்தில் இன்றைக்கு என்ன பாடல் பாடப்போகிறார்கள், யார் பாடப் போகிறார்கள் என பட்டிமன்றம் போல் செயல்படும் சட்டமன்றத்தின் நிலையை மாற்ற வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள், முதல்வர் விஜய் அதனை மாற்றுவாரா என்றால் அது கேள்விகுறியாகவே இருக்கிறது1
- தூத்துக்குடி சின்னக்கண்ணு புரம் அருள்மிகு ஸ்ரீ லட்சிய விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது தூத்துக்குடி சின்னக்கண்ணு புரம் அருள்மிகு ஸ்ரீ லட்சிய விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது அன்னதானத்தை 14 வது வார்டு வட்டச்செயலாளர் காளிதுரை, மீளவிட்டான் மெயின் ரோடு வியாபாரிகள் சங்க தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர்கள் துவக்கி வைத்தார்கள். உடன் கோவிந்தராஜ், மாரிமுத்து, பழனிகுமார், முத்து,நடராஜன், கண்ணன், பாலகுமார்,செல்வம்,கோவில் பிள்ளை, மகளிரணிகள் மாரிச்செல்வி, பாக்யலக்ஷ்மி,பூ இசக்கி,பத்மா, கனிஷா,கனிகா மற்றும் இளைஞரணி சிவா,விஷால், சந்தோஷ், சஞ்சய், பாலசரவணன், பால காமராஜ்,தினேஷ்,பிரிதிவி, சஞ்ஜித் உடன் இருந்தனர்கள்.2
- எட்டயபுரம் பாரதியார் கூட்டுறவு நூற்பாலை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் தூத்துக்குடி Thursday எட்டையாபுரத்தில் பாரதியார் கூட்டுறவு உட்பட ஒன்று உள்ளது. இந்த ஆலையை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் விஜய பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளிடம் ஆலையின் செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்தார்.1
- ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு1
- பொன்னமராவதியில் திமுக சார்பாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் பொன்னமராவதி திமுக நகரச் செயலாளர் அழகப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில் தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டன. அதில் திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- கோவில்பட்டியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில் சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், வேடம் அணிந்து,பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது கிராமத்தில் அமைந்துள்ள சக்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா ஊர்வலம் ரயில் நிலையம் முன்பு மத நல்லிணக்கத்தையும்,ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் - சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், மேடம் அணிந்து,பக்தர்கள் 1008 பால்குடம், மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பால்குடம் ஊர்வலத்தை கோவில்பட்டி திமுக கிழக்கு நகர செயலாளர் சுரேஷ்,தலைமையில் கோவில்பட்டி ரஜினிகாந்த் நற்பணி மன்றம் நகர செயலாளர் மகேஷ் பாலா முன்னணியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் இந்த ஊர்வலம் சாத்தூர் மெயின் ரோடு புது கிராமம் மெயின் ரோடு வழியாக வந்து ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவிலுக்கு வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேத்திக்கடனை செலுத்தினர். இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.1
- விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நடைபெற்று வருவதை விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பார்வையிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் விருதுநகர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் சமூக நீதி மற்றும் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் பிரச்சார இயக்கம் தொடங்கப்பட உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் தெரிவித்து உள்ளார். மேலும் ஜாதிவாரி கணக்கெடுப்பில் மோடி அரசு செய்துவரும் துரோகத்தை மக்களிடம் அம்பலப்படுத்தவும், அதன் விளைவாக 69% இடஒதுக்கீட்டுக்கு உருவாகியுள்ள ஆபத்தைத் தடுக்கவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஓபிசி பிரிவு சார்பில் செப்டம்பர் 17 அன்று மாலை 4 மணிக்குச் சென்னை சத்தியமூர்த்தி பவனில் பிரச்சார இயக்கம் தொடங்கப்படுகிறது. இந்த பிரச்சார இயக்கத்தை திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இந்த இயக்கத்தைத் தொடங்கி வைக்கிறார். மேலும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் குலாம் அகமது மீர், செயலாளர் நவீன் தீத் ஆல்வா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர் மேலும் 2022-23-இல் நடைபெற்ற பாரத் ஜோடா நியாய யாத்திரையின் போதிருந்தே காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஜாதிவாரி கணக்கெடுப்பைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) மற்றும் ஆதிதிராவிட சமூகங்களின் உண்மையான எண்ணிக்கையையும், அவர்களின் வாழ்வாதாரம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நிலையை அறிந்துகொள்ளவும், இடஒதுக்கீடு கிடைக்காத சமூகங்களுக்குச் சமமான வாய்ப்பை அளிக்கவும் (Equal Distribution) நம்பகமான தரவுகள் அவசியமாகும். மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களில் ஜாதிவாரி தகவல்களை 'Open-ended' ஆகப் பதிவிடாமல், 'Drop-down Drop-box' முறையில் துல்லியமாகப் பதிவுசெய்ய வேண்டும் என்று ஆகஸ்ட் 12 அன்று ராகுல் காந்தி கடிதம் எழுதியும் மத்திய அரசு அதை நிராகரித்துள்ளது. மேலும் மத்திய பாஜக அரசின் ஏமாற்று வேலையை கண்டித்துத் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் கீழ்க்கண்டவாறு கூட்டங்கள் நடைபெற உள்ளன என்றார். மேலும் மழை காலத்திற்குப் பிறகு 2027 ஜனவரி மாதத்தில் ராகுல் காந்தியைத் தமிழகத்திற்கு அழைத்துவந்து, அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் பிரம்மாண்ட சமூக நீதி மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரித்த நிலையில், அன்றைய தினம் திமுக செய்த அமளி காரணமாக அவையில் இருந்து வெளியேற்றப்பட்டு அந்த தீர்மானத்தில் பங்கெடுக்க முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது என்றார். தமிழகத்தில் த.வெ.க தலைமையில் நேர்மையான, லஞ்சமற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்கு ஆதரவளிக்கும் இடதுசாரி கட்சிகள், இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட எடுத்த முடிவு ஆச்சரியமளித்தாலும், அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மேலும் சட்டமன்றத்தில் ஆதரவு தரும் இடதுசாரிகள் மக்கள் மன்றத்தில் ஆதரவு தருவதை யோசிப்பது என்பதும் இடைத்தேர்தலில் தனித்து நிற்பதும் என்னை போன்றவர் களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது மேலும் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதை இடதுசாரிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விருப்பம் இருந்தாலும் அவற்றை அவர்கள் செய்ய மாட்டார்கள் என்றார் எனவும் அவர்களின் முடிவை கனத்த இதயத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். மேலும் வரவிருக்கும் இடைத் தேர்தலில் த.வெ.க வேட்பாளரின் வெற்றிக்கு காங்கிரஸ் கட்சித் தோழர்கள் தீவிரமாக பணியாற்று வார்கள் என்றார் மேலும் அரசு பேருந்துகளில் தவெக கட்சி கொடியின் வண்ணம் அடிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மாணிக்கம் தாகூர் எம்பி அரசு பேருந்துகளில் வண்ணம் மாற்றப்பட்டு உள்ளதை பார்க்காமல் பேருந்தினுள் இருக்கக்கூடிய வசதிகளை பார்க்க வேண்டும் முந்தைய காலங்களில் குடை பிடித்து சென்ற காலம் இருக்கிறதும் அப்படியில்லாமல் பேருந்தின் வசதிகள் முன்னேற்றப்பட்டு இருக்கிறது என பார்க்க வேண்டும். என்றும் தெரிவித்தார்1
- தூத்துக்குடியில் அண்ணா பிறந்தநாள் விழா அதிமுகவினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 118வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு கழக அமைப்புச் செயலாளரும்,தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளரும்,முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார்.1
- புதுக்கோட்டை பெரியா நகரை சேர்ந்த சாய் திவ்யாஉலக சாதனை படைத்த சிறுமி புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார் நகரை சேர்ந்த கண்ணன் ராதா தம்பதிகளில் 6 வயது குழந்தை சாய் திவ்யா ஐஸ் கட்டியில் பரதநாட்டியம் ஆடும் உலக சாதனை திகழ்ந்தார்4