முகவரி இல்லை என்பதற்காக பெயரை நீக்கியதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், வாக்குரிமை வழங்கக் கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் சாதுக்கள் மனு அளித்தனா். முகவரி இல்லை என்பதற்காக பெயரை நீக்கியதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், வாக்குரிமை வழங்கக் கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் சாதுக்கள் மனு அளித்தனா். திருவண்ணாமலை அடியாா்கள், பக்தா்கள் கூட்டமைப்பு மற்றும் ஓம்ஆத்மலிங்கேஸ்வரா் அறக்கட்டளை நிறுவனா் தலைவா் இரா.மோகன்சாது தலைமையில் சாதுக்கள் மனுவை அளித்தனா். அந்த மனுவில், கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலின்போது திருவண்ணாமலை நடைபாதை வாசிகள் மற்றும் முகவரி இல்லாதவா்களுக்காக சென்னை உயா்நீதிமன்ற உத்தரவு பெற்று, இந்திய தோ்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி 360 நபா்களுக்கு அறக்கட்டளையின் பயனாளிகளாக பரிந்துரைத்து முதற்கட்டமாக வாக்காளா் அடையாள அட்டை வழங்கப்பட்டது. அதன்பிறகு 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வாக்காளா் அடையாள அட்டை வழங்கப்பட்டது. தற்போது எஸ்ஐஆா் படிவத்தை காரணம் காட்டி முகவரி இல்லாதவா்களுக்கு வாக்குரிமை நீக்கப்பட்டதாக மாவட்ட தோ்தல் அதிகாரி அறிவித்துள்ளாா். இந்நிலையில் தோ்தல் அதிகாரியிடம் புதிய வாக்காளா் பட்டியலில் மீண்டும் சாதுக்களை சோ்க்கக் கோரி, புதிய வாக்காளா் படிவம் நிறைவு செய்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து 200-க்கும் மேற்பட்ட சாதுக்கள் விண்ணப்பம் அளித்துள்ளனா். ஆனால், அதிகாரிகள் விண்ணப்பங்கள் மீது நேரில் ஆய்வு செய்யாமல் உள்ளனா். இதுகுறித்து ஆட்சியரிடம் துறைரீதியாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மனு அளிக்கப்பட்டது. அதன்பேரில் கோட்டாட்சியா் விசாரணை செய்தாா். இதில், எஸ்ஐஆா் பூா்த்தி செய்து படிவத்தை அளித்தவா்களையும் வாக்காளா் பெயா் பட்டியலில் இடம்பெறவில்லை எனவும் தெரியவந்தது. வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாதுக்களுக்கு புதிய வாக்காளா் பட்டியலில் சோ்க்க நடவடிக்கை எடுத்து பரிந்துரைத்தும் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளது. எனவே, பழைய நீக்கப்பட்ட முகவரியில்லாதவா்களையும், புதியவா்களையும் தோ்தல் ஆணையம் 2014-இல் அறிவித்த ஆணை நடைமுறையில் உள்ளபடி வாக்காளா்களுக்கான புதிய சிறப்பு முகாம் நடத்த மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் ஆட்சியருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால், மாவட்ட நிா்வாகம் காலம்கடத்தி வருகிறது. எனவே, இனியும் காலம் கடத்தாமல் நீக்கப்பட்ட 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாதுக்களுக்கு வாக்குரிமை வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க தோ்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
முகவரி இல்லை என்பதற்காக பெயரை நீக்கியதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், வாக்குரிமை வழங்கக் கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் சாதுக்கள் மனு அளித்தனா். முகவரி இல்லை என்பதற்காக பெயரை நீக்கியதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், வாக்குரிமை வழங்கக் கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் சாதுக்கள் மனு அளித்தனா். திருவண்ணாமலை அடியாா்கள், பக்தா்கள் கூட்டமைப்பு மற்றும் ஓம்ஆத்மலிங்கேஸ்வரா் அறக்கட்டளை நிறுவனா் தலைவா் இரா.மோகன்சாது தலைமையில் சாதுக்கள் மனுவை அளித்தனா். அந்த மனுவில், கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலின்போது திருவண்ணாமலை நடைபாதை வாசிகள் மற்றும் முகவரி இல்லாதவா்களுக்காக சென்னை உயா்நீதிமன்ற உத்தரவு பெற்று, இந்திய தோ்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி 360 நபா்களுக்கு அறக்கட்டளையின் பயனாளிகளாக பரிந்துரைத்து முதற்கட்டமாக வாக்காளா் அடையாள அட்டை வழங்கப்பட்டது. அதன்பிறகு 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வாக்காளா் அடையாள அட்டை வழங்கப்பட்டது. தற்போது எஸ்ஐஆா் படிவத்தை காரணம் காட்டி முகவரி இல்லாதவா்களுக்கு வாக்குரிமை நீக்கப்பட்டதாக மாவட்ட தோ்தல் அதிகாரி அறிவித்துள்ளாா். இந்நிலையில் தோ்தல் அதிகாரியிடம் புதிய வாக்காளா் பட்டியலில் மீண்டும் சாதுக்களை சோ்க்கக் கோரி, புதிய வாக்காளா் படிவம் நிறைவு செய்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து 200-க்கும் மேற்பட்ட சாதுக்கள் விண்ணப்பம் அளித்துள்ளனா். ஆனால், அதிகாரிகள் விண்ணப்பங்கள் மீது நேரில் ஆய்வு செய்யாமல் உள்ளனா். இதுகுறித்து ஆட்சியரிடம் துறைரீதியாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மனு அளிக்கப்பட்டது. அதன்பேரில் கோட்டாட்சியா் விசாரணை செய்தாா். இதில், எஸ்ஐஆா் பூா்த்தி செய்து படிவத்தை அளித்தவா்களையும் வாக்காளா் பெயா் பட்டியலில் இடம்பெறவில்லை எனவும் தெரியவந்தது. வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாதுக்களுக்கு புதிய வாக்காளா் பட்டியலில் சோ்க்க நடவடிக்கை எடுத்து பரிந்துரைத்தும் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளது. எனவே, பழைய நீக்கப்பட்ட முகவரியில்லாதவா்களையும், புதியவா்களையும் தோ்தல் ஆணையம் 2014-இல் அறிவித்த ஆணை நடைமுறையில் உள்ளபடி வாக்காளா்களுக்கான புதிய சிறப்பு முகாம் நடத்த மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் ஆட்சியருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால், மாவட்ட நிா்வாகம் காலம்கடத்தி வருகிறது. எனவே, இனியும் காலம் கடத்தாமல் நீக்கப்பட்ட 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாதுக்களுக்கு வாக்குரிமை வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க தோ்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
- Post by Vinayagam Vinayagam1
- திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் வசிப்பவர் மோகன்தாஸ் இவரது மனைவி ரஞ்சிதா இவர்களது மகன் ரித்தீஷ் திருப்பத்தூர் நகராட்சிக்கு அருகாமையில் உள்ள அரசு நிதி உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இவர் அதே பள்ளியில் உதவி மாணவத் தலைவராகவும் (ASPL) இருந்து உள்ளார் இந்நிலையில் பள்ளி விடுமுறை நாள் என்பதால் ரித்தீஷ் தன்னுடைய சக மாணவர்களுடன் வெளியே சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டு மீண்டும் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது யாரும் வீட்டில் இல்லாத நிலையில் பள்ளி மாணவன் ரித்தீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்த குடும்பத்தார் கத்தி கூச்சலிட்டு ரித்தீஷின் சடலத்தை மீட்டு உள்ளனர். பின்பு தகவல் அறிந்த திருப்பத்தூர் கிராமிய காவல்துறை ரித்தீஷின் சடலத்தை உடற்கூறு ஆய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சந்தேகப்படும்படியான காரணங்கள் ஏதேனும் உள்ளதா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.1
- தங்க தாரகை, புரட்சி தலைவி அம்மா 78 வது பிறந்த நாளை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்ட கழகம், காஞ்சிபுரம் கிழக்கு பகுதி கழகம்,23 வது வார்டு சார்பில் திருவள்ளூவர் தெரு பகுதியில் கிழக்கு பகுதி கழக கைத்தறி பிரிவு செயலாளர் குமார் ஏற்பாட்டில் பகுதி கழக செயலாளர் பாலாஜி முன்னிலையில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் அம்மா திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் உடன் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி,பகுதி கழக செயலாளர் கோல்டு ரவி,பொது குழு உறுப்பினர் ஒ.வி.ரமேஷ்,மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சிந்தன், மாவட்ட கைத்தறி பிரிவு இணை செயலாளர் கோபால்,மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் விஸ்வநாதன்,பகுதி கழக துணை செயலாளர் கபாலி, உத்திரமேரூர் நகர செயலாளர் ஜெய விஷ்ணு,பகுதி கழக இணை செயலாளர் கோல்டு கணேஷ்,பகுதி எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் செல்வகுமார், பகுதி அம்மா பேரவை செயலாளர் வினோத் பாபு சிங்,பகுதி அம்மா பேரவை தலைவர் காஞ்சி ராஜா, பகுதி கழக இளைஞர் அணி செயலாளர் என்.எஸ்.கே. ஸ்ரீதர்,பகுதி வர்த்தக அணி செயலாளர் ராஜா,வட்ட செயலாளர்கள் சம்பத் தனபால், சிவகுமார் ,மோத்திலால், ஆர்.டி.சேகர்,அம்மா பாலு,ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பார்த்தசாரதி,மற்றும் வட்ட நிர்வாகிகள் சந்திரசேகர்,ராதா பூபதி, சக்திவேல், பாலமுருகன்,தம்பிகா, சந்தானம், ராமசாமி, மகளிரணி நீலாவதி, மாதவி உள்ளிட்டோர் உள்ளனர்1
- கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அருகே உள்ள செந்தாரப்பள்ளியில் அமைந்துள்ள ஆக்ஃபோர்டு பப்ளிக் பள்ளியில் யு.கே.ஜி. முடித்த முதல் வகுப்புக்கு அடியெடுத்து வைக்கும் பள்ளி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் அவார்டு வழங்கும் விழா நடைப்பெற்றது.1
- கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர்அருகே கடந்த பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலையை மீண்டும் தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுத்திட வேண்டும், இல்லையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் பேட்டி. கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தோலம்பதி கிராமத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆனந்தூர் பிரதான சாலையை கடந்த பலத்தலை முறைகளாக பயன்படுத்தி வந்தனர். இந்த சாவை மிகவும் குண்டு குளியுமாக இருப்பதால் இந்த சாலையை தார்சாலையாக மாற்றிட வேண்டும் என்று கிராம சபைக் கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பல லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்றுள்ளது. ஆனால் தீடிரென அந்தப்பணிகளும் நிறுத்தப்படுள்ளதால் அந்த சாலையில் வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வண்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆகையால் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலையை தார்சாலையாக மாற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை கிராம மக்கள் பல முறை அனுகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் ராமன் தலைமையில் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கிடப்பில் போட்ட சாலைப்பணிகளை மீண்டும் செயல்படுத்திட வேண்டி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமாரிடம் புகார் மனுவினைக் கெடுத்தனர். இது குறித்து பேசிய கிராம மக்கள் மத்தூர் ஒன்றியம் தோலம்பதி கிராத்தில் வசித்து வரும் எங்களுக்கு முறையான சாலை வசதிகள் இன்றி வசித்து வருகிறோம். இந்த நிலையில் கரடுமுரடான சாலையை தார் சாலையாக மாற்றிடும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாசாலையாக மாற்றிட உரிய நிதியும் ஒதிக்கீடு செய்யபட்டும் அதற்கான பணிகளும் நடைப்பெற்ற நிலையில் தீடிரென அந்தபணியும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரியிடமும் கேட்டால் முறையான தகவல் ஏதும் இல்லை ஆகையால் கிடப்பில் போடப்பட சாலப்பணியை விரைவாக செயல்படுத்திட வேண்டும் இல்லையில் வீடுகளில் கறுப்பு கொடிகளை கட்டியும், குடும்ப அட்டை, அதார் அட்டைகளை அரசிடம் கொடுத்து விட்டு வருகின்ற சட்ட மன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்தனர்.1
- Post by Kuppusamy4
- தமிழ்நாடு பௌத்த அறநெறியாளர் சங்கம், புதிய புரட்சி கழகம் இனைந்து, நடத்திய மகளிர் தின கொண்டாட்டம், பெண்களுக்கு, புடவை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது, தருமபுரியில் புதிய புரட்சி கழகம், மற்றும் தமிழ்நாடு பெளத்த அறநெறியாளர் சங்கம் சார்பில், தருமபுரி அருகே உள்ள, நாயகன் கொட்டாய் கிராமத்தில், மகளீர் தின கொண்டாட்டம் நடைபெற்றது, மகளீர் தினத்தையொட்டி, புதிய புரட்சி கழக மாநில இளைஞரணி துணை செயலாளர், சுரேஸ் தலைமையில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில், பங்கேற்று பெளத்த அறநெறியாளர் சங்க, தலைவர் தினகரன், பொதுச்செயலாளர், பொன் சசிகுமார், பெளத்த அறநெறி பற்றியும் மகளீர் பெருமை குறித்து பேசினார், பின்னர் நடைபெற்ற, மகளீர் தின விழா, கேக் வெட்டி 100 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு, இனிப்புடன் கூடிய புடவைகள் வழங்கப்பட்டன, மேலும் இந்நிகழ்ச்சியில், புதிய புரட்சி கழக நிர்வாகிகள், தலித்குமார், பாவை அஜித், M சுரேஷ், கோவிந்தசாமி, முருகன்,பிரகாஷ், உள்ளிட்ட, நிர்வாகிகள், 100க்கும் மேற்பட்ட, பெண்கள் பங்கேற்று சிறப்பித்தனர்,1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1