logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

எழுத்தாளர் டி ராஜநாராயணன் 104 வது பிறந்தநாள் தூத்துக்குடி எழுத்தாளருக்கு ராஜநாராயணன் அவர்களை 14 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அண்ணா அனைவரங்கத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் 📰 எழுத்தாளர் கி.ராஜநாராயணன் 104-வது பிறந்தநாள் தூத்துக்குடி: எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (16.09.2026) தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அண்ணா நினைவரங்கத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் திரு. விஷு மகாஜன், இ.ஆ.ப., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கி.ரா. என அன்புடன் அழைக்கப்பட்ட கி.ராஜநாராயணன், 16.09.1922 அன்று கோவில்பட்டி அருகே இடைசெவல் கிராமத்தில் பிறந்தவர். “கரிசல் காட்டுக் கதை” இலக்கியத்தின் முன்னோடியாக விளங்கிய இவர், பேச்சுத் தமிழில் சாகாவரம் பெற்ற படைப்புகளை வழங்கியவர். அவரது உழைப்பாளிகள், விவசாயிகள், பிஞ்சுக் குழந்தைகள், கதை மற்றும் நாட்டுப்புறக் கலைகள் குறித்த படைப்புகள் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. 1958 முதல் 2021 வரை இலக்கியப் பணியாற்றிய அவர், “கோபல்லபுரத்து மக்கள்” நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். 2016–17ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் கி.ரா. பெற்றுள்ளார். 2021ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் நாள் தனது 99ஆவது வயதில் புதுச்சேரியில் இயற்கை எய்தினார். அவரது நினைவைப் போற்றும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், இ.ஆ.ப., மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது மகன் திரு. ரா. திவாகர் மற்றும் மருமகள் திருமதி விஜயலட்சுமி ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். —

41 min ago
user_N balu Nbalu
N balu Nbalu
Journalist Thoothukkudi, Tuticorin•
41 min ago
38dcda11-a72d-4acd-b811-f7c10306c7de

எழுத்தாளர் டி ராஜநாராயணன் 104 வது பிறந்தநாள் தூத்துக்குடி எழுத்தாளருக்கு ராஜநாராயணன் அவர்களை 14 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அண்ணா அனைவரங்கத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் 📰 எழுத்தாளர் கி.ராஜநாராயணன் 104-வது பிறந்தநாள் தூத்துக்குடி: எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (16.09.2026) தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அண்ணா நினைவரங்கத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் திரு. விஷு மகாஜன், இ.ஆ.ப., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கி.ரா. என அன்புடன் அழைக்கப்பட்ட கி.ராஜநாராயணன், 16.09.1922 அன்று கோவில்பட்டி அருகே இடைசெவல் கிராமத்தில் பிறந்தவர். “கரிசல் காட்டுக் கதை” இலக்கியத்தின் முன்னோடியாக விளங்கிய இவர், பேச்சுத் தமிழில் சாகாவரம் பெற்ற படைப்புகளை வழங்கியவர். அவரது உழைப்பாளிகள், விவசாயிகள், பிஞ்சுக் குழந்தைகள், கதை மற்றும் நாட்டுப்புறக் கலைகள் குறித்த படைப்புகள் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. 1958 முதல் 2021 வரை இலக்கியப் பணியாற்றிய அவர், “கோபல்லபுரத்து மக்கள்” நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். 2016–17ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் கி.ரா. பெற்றுள்ளார். 2021ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் நாள் தனது 99ஆவது வயதில் புதுச்சேரியில் இயற்கை எய்தினார். அவரது நினைவைப் போற்றும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், இ.ஆ.ப., மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது மகன் திரு. ரா. திவாகர் மற்றும் மருமகள் திருமதி விஜயலட்சுமி ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். —

More news from தமிழ்நாடு and nearby areas
  • தூத்துக்குடி சின்னக்கண்ணு புரம் அருள்மிகு ஸ்ரீ லட்சிய விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது தூத்துக்குடி சின்னக்கண்ணு புரம் அருள்மிகு ஸ்ரீ லட்சிய விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது அன்னதானத்தை 14 வது வார்டு வட்டச்செயலாளர் காளிதுரை, மீளவிட்டான் மெயின் ரோடு வியாபாரிகள் சங்க தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர்கள் துவக்கி வைத்தார்கள். உடன் கோவிந்தராஜ், மாரிமுத்து, பழனிகுமார், முத்து,நடராஜன், கண்ணன், பாலகுமார்,செல்வம்,கோவில் பிள்ளை, மகளிரணிகள் மாரிச்செல்வி, பாக்யலக்ஷ்மி,பூ இசக்கி,பத்மா, கனிஷா,கனிகா மற்றும் இளைஞரணி சிவா,விஷால், சந்தோஷ், சஞ்சய், பாலசரவணன், பால காமராஜ்,தினேஷ்,பிரிதிவி, சஞ்ஜித் உடன் இருந்தனர்கள்.
    2
    தூத்துக்குடி சின்னக்கண்ணு புரம் அருள்மிகு ஸ்ரீ லட்சிய விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது
தூத்துக்குடி சின்னக்கண்ணு புரம் அருள்மிகு ஸ்ரீ லட்சிய விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது அன்னதானத்தை 14 வது வார்டு வட்டச்செயலாளர் காளிதுரை, மீளவிட்டான் மெயின் ரோடு வியாபாரிகள் சங்க தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர்கள் துவக்கி வைத்தார்கள். உடன் கோவிந்தராஜ், மாரிமுத்து, பழனிகுமார், முத்து,நடராஜன், கண்ணன், பாலகுமார்,செல்வம்,கோவில் பிள்ளை, மகளிரணிகள் மாரிச்செல்வி, பாக்யலக்ஷ்மி,பூ இசக்கி,பத்மா, கனிஷா,கனிகா மற்றும் இளைஞரணி சிவா,விஷால், சந்தோஷ், சஞ்சய், பாலசரவணன், பால காமராஜ்,தினேஷ்,பிரிதிவி, சஞ்ஜித் உடன் இருந்தனர்கள்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • எட்டயபுரம் பாரதியார் கூட்டுறவு நூற்பாலை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் தூத்துக்குடி Thursday எட்டையாபுரத்தில் பாரதியார் கூட்டுறவு உட்பட ஒன்று உள்ளது. இந்த ஆலையை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் விஜய பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளிடம் ஆலையின் செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்தார்.
    1
    எட்டயபுரம் பாரதியார்  கூட்டுறவு நூற்பாலை நேரில் ஆய்வு செய்த அமைச்சர்
தூத்துக்குடி Thursday எட்டையாபுரத்தில் பாரதியார் கூட்டுறவு உட்பட ஒன்று உள்ளது. இந்த ஆலையை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் விஜய பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளிடம் ஆலையின் செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்தார்.
    user_Mithun
    Mithun
    City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு
    1
    ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Local News Reporter ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    20 hrs ago
  • தமிழக வெற்றிக்கழக அமைச்சர் வெங்கட்ராமன் அவர்கள் திடீர் ஆய்வு ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பா.வெங்கட்ராமன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, ஆறுமுகநேரி பேரூர் கழகச் செயலாளர் ஜே.பி.வி. நிவாஸ் கண்ணன், காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்த நிலையில் காந்திபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் குறிப்பாக முதியோர்கள் மற்றும் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் பா . வெங்கட்ராமனிடம் நிவாஸ் கண்ணன் வலியுறுத்தினார்.
    2
    தமிழக வெற்றிக்கழக அமைச்சர் வெங்கட்ராமன் அவர்கள் திடீர் ஆய்வு 
ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பா.வெங்கட்ராமன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, ஆறுமுகநேரி பேரூர் கழகச் செயலாளர் ஜே.பி.வி. நிவாஸ் கண்ணன், காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த நிலையில் காந்திபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் குறிப்பாக முதியோர்கள் மற்றும் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அமைச்சர் பா . வெங்கட்ராமனிடம் நிவாஸ் கண்ணன் வலியுறுத்தினார்.
    user_Jegan
    Jegan
    திருச்செந்தூர், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • திருநெல்வேலிஅரசு மருத்துவமனை பிணவறையில் குளிர்பதன வசதி பராமரிப்பு… சடலங்கள் பாதுகாப்பில் கேள்வி எழுப்பும் நிலை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகள் பழைய சவக்கிடங்கிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன. பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளுக்கு ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் (AMC) செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுப்பணித்துறை மின் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் ஏசி மற்றும் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரித்து வரும் சூழலில் பிணவறையின் குளிர்பதன வசதிகள் தொடர்பாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்றும் நாளையும் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்படும் சடலங்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய சவக்கிடங்கில் வைத்து பரிசோதனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குளிர்பதன அறையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், குளிர்பதன வசதி தொடர்ந்து இயங்கி வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், பிணவறையின் குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் சூழல் பொதுமக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது. சடலங்களை பாதுகாப்பாக பராமரிப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதா என்பதையும், பராமரிப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பதையும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். பராமரிப்புப் பணிகளை விரைந்து முடித்து வழக்கமான முறையில் பிரேத பரிசோதனைகள் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    1
    திருநெல்வேலிஅரசு மருத்துவமனை பிணவறையில் குளிர்பதன வசதி பராமரிப்பு… சடலங்கள் பாதுகாப்பில் கேள்வி எழுப்பும் நிலை
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகள் பழைய சவக்கிடங்கிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன.
பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளுக்கு ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் (AMC) செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுப்பணித்துறை மின் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் ஏசி மற்றும் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரித்து வரும் சூழலில் பிணவறையின் குளிர்பதன வசதிகள் தொடர்பாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது 
பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்றும் நாளையும் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்படும் சடலங்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய சவக்கிடங்கில் வைத்து பரிசோதனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே குளிர்பதன அறையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், குளிர்பதன வசதி தொடர்ந்து இயங்கி வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், பிணவறையின் குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் சூழல் பொதுமக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது. சடலங்களை பாதுகாப்பாக பராமரிப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதா என்பதையும், பராமரிப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பதையும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
பராமரிப்புப் பணிகளை விரைந்து முடித்து வழக்கமான முறையில் பிரேத பரிசோதனைகள் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    user_Subramanian
    Subramanian
    திருநெல்வேலி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • திருச்செந்தூர் அருகே அம்மன்புரத்தில் வீடு கட்டுவதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தவெக நிர்வாகியை, திமுகவை சேர்ந்த 5 பேர் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அம்மன் புறம் கீழ புதுகுடியை சேர்ந்த பீட்டர்(48). இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் திருச்செந்தூர் மேற்கு ஒன்றிய பொருளாளராக பதவி வகித்து வருகிறார். இவருக்கும் வீட்டின் அருகில் உள்ள திமுகவை சேர்ந்த ஞானராஜ் என்பவருக்கும், பீட்டருக்கும் வீடு கட்டுவது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் பீட்டர் கடந்த 10-ம் தேதி காலையில் தனது மகனை அம்மன்புரத்தில் பஸ் ஏற சென்று விட்டு விட்டு வீடு திரும்பியபோது அங்குள்ள சர்ச் நுழைவாயில் அருகே சென்றதில் ஞானராஜ் தம்பி மகன் ஆல்வின் மற்றும் அவருடன் பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய நான்கு பேர் உட்பட மொத்தமா ஐந்து பேர் பீட்டர் இருசக்கர வாகனத்தை மறித்து தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது. இதில் காயமடைந்த பீட்டர் அவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து குரும்பூர் காவல் நிலைய போலீசார் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஐந்து பேரை தேடி வருகின்றனர்.
    2
    திருச்செந்தூர் அருகே  அம்மன்புரத்தில் வீடு கட்டுவதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக  தவெக நிர்வாகியை, திமுகவை சேர்ந்த 5 பேர் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. 
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அம்மன் புறம் கீழ புதுகுடியை சேர்ந்த பீட்டர்(48). இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் திருச்செந்தூர் மேற்கு ஒன்றிய பொருளாளராக பதவி வகித்து வருகிறார். இவருக்கும் வீட்டின் அருகில் உள்ள திமுகவை சேர்ந்த ஞானராஜ் என்பவருக்கும், பீட்டருக்கும் வீடு கட்டுவது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் பீட்டர் கடந்த 
10-ம் தேதி காலையில் தனது மகனை அம்மன்புரத்தில் பஸ் ஏற சென்று விட்டு விட்டு வீடு திரும்பியபோது அங்குள்ள சர்ச் நுழைவாயில் அருகே சென்றதில் ஞானராஜ் தம்பி மகன் ஆல்வின் மற்றும் அவருடன் பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய நான்கு பேர் உட்பட மொத்தமா ஐந்து பேர் பீட்டர் இருசக்கர வாகனத்தை மறித்து தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.
இதில் காயமடைந்த பீட்டர் அவர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து குரும்பூர் காவல் நிலைய போலீசார் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஐந்து பேரை தேடி வருகின்றனர்.
    user_News
    News
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    41 min ago
  • தூத்துக்குடியில் அண்ணா பிறந்தநாள் விழா அதிமுகவினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 118வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு கழக அமைப்புச் செயலாளரும்,தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளரும்,முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார்.
    1
    தூத்துக்குடியில் அண்ணா பிறந்தநாள் விழா அதிமுகவினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை 
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 118வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணாவின்  திருவுருவச்சிலைக்கு கழக அமைப்புச் செயலாளரும்,தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளரும்,முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார்.
    user_Mithun
    Mithun
    City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    1 day ago
  • சென்னை பெசண்ட் நகரில் த.வெ.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள். சென்னை பெசண்ட் நகரில் த.வெ.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச் போயிருக்கிறது என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.
    1
    சென்னை பெசண்ட் நகரில் த.வெ.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்.
சென்னை பெசண்ட் நகரில் த.வெ.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச்  போயிருக்கிறது என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.
    user_நெல்லை வீரபாண்டியன்
    நெல்லை வீரபாண்டியன்
    Local News Reporter பாளையங்கோட்டை, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.