தூத்துக்குடி விமான நிலையத்தின் மிக அருகில் அமைந்து பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து என்பதால், முறைகேடாக வழங்கப்பட்ட தனியார் பட்டாக்களை உடனடியாக ரத்து செய்து, ‘சர்க்கார் தரிசு’ நிலத்தை அரசு முழுமையாக மீட்க வேண்டும் தூத்துக்குடி விமான நிலையம் அருகே ரூ.100 கோடி மதிப்பிலான 32.38 ஏக்கர் அரசு தரிசு நிலம் தனியார் பட்டாவாக மாற்றப்பட்ட விவகாரம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.  பழனி கோவில் நில விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதேபோன்று தூத்துக்குடி விமான நிலையம் அருகே ரூ.100 கோடி மதிப்பிலான 32.38 ஏக்கர் அரசு தரிசு நிலம் தனியார் பட்டாவாக மாற்றப்பட்ட விவகாரம் தற்போது மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சேர்வைக்காரன்மடம் கிராமத்தில் உள்ள சர்வே எண் 37 மற்றும் 136 ஆகிய நிலங்கள் பழைய வருவாய் ஆவணங்களில் ‘சர்க்கார் தரிசு’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட பதிவுகளின் போது இவை ‘ரயத்துப் புன்செய்’ என மாற்றப்பட்டுத் தனியாருக்குப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசு நிலம் எந்த ஆவணத்தின் அடிப்படையில் தனியார் பட்டாவாக மாறியது, அதற்கு உத்தரவிட்ட அதிகாரி யார், மூல ஆவணங்கள் எங்கே எனப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. கடந்த 09.07.2025 அன்று வருவாய் கோட்டாட்சியர் அளித்த அறிக்கையில், தவறான UDR பதிவுகளை ரத்து செய்துவிட்டு, பழைய பதிவுகளின் அடிப்படையில் அந்த நிலங்களை மீண்டும் ‘சர்க்கார் தரிசு’ நிலமாக மாற்றப் பரிந்துரை செய்தார். அதேவேளையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் தூத்துக்குடி வட்டத்தில் UDR-க்கு பிறகு பஞ்சமி நிலங்கள் இல்லை எனக் கூறப்படும் நிலையில், பட்டாவிற்கு ஆதாரமாகக் காட்டப்படும் ‘DC.1/93, 29.11.1983’ என்ற அசல் கோப்பு மாயமாகி உள்ளதும் சர்ச்சையை அதிகரித்துள்ளது. முன்னதாக, 12.03.2026 அன்று மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) வெளியிட்ட உத்தரவில், இந்நில விவகாரம் குறித்துச் சிவில் நீதிமன்றத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அரசு நிலத்தைக் காப்பாற்றப் பொதுமக்கள் ஏன் நீதிமன்றம் செல்ல வேண்டும் என எதிர்ப்புகள் கிளம்பின. இதனைத் தொடர்ந்து, அடிப்படை வருவாய் பதிவுகள் குறித்து நிர்வாக ரீதியான மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இவ்வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். செப்டம்பர் 15 அன்று நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், மனுதாரர்களான தமிழ்நாடு லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ஜெபஸ்டின் அற்புதராஜ் மற்றும் முன்னாள் ஊராட்சி உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா ஆகியோர் ஆட்சியர் முன் ஆஜராகினர். அவர்கள் சார்பில் A-Register, SLR, UDR பதிவுகள், பத்திரப் பதிவுகள், வில்லங்கச் சான்று (EC), RTI ஆவணங்கள் மற்றும் தற்போது அந்த நிலங்களில் கட்டிடங்கள் எதுவுமில்லை என்பதை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டன. தூத்துக்குடி விமான நிலையத்தின் மிக அருகில் அமைந்து பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து என்பதால், முறைகேடாக வழங்கப்பட்ட தனியார் பட்டாக்களை உடனடியாக ரத்து செய்து, ‘சர்க்கார் தரிசு’ நிலத்தை அரசு முழுமையாக மீட்க வேண்டும் என மனுதாரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தூத்துக்குடி விமான நிலையத்தின் மிக அருகில் அமைந்து பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து என்பதால், முறைகேடாக வழங்கப்பட்ட தனியார் பட்டாக்களை உடனடியாக ரத்து செய்து, ‘சர்க்கார் தரிசு’ நிலத்தை அரசு முழுமையாக மீட்க வேண்டும் தூத்துக்குடி விமான நிலையம் அருகே ரூ.100 கோடி மதிப்பிலான 32.38 ஏக்கர் அரசு தரிசு நிலம் தனியார் பட்டாவாக மாற்றப்பட்ட விவகாரம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.  பழனி கோவில் நில விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதேபோன்று தூத்துக்குடி விமான நிலையம் அருகே ரூ.100 கோடி மதிப்பிலான 32.38 ஏக்கர் அரசு தரிசு நிலம் தனியார் பட்டாவாக மாற்றப்பட்ட விவகாரம் தற்போது மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சேர்வைக்காரன்மடம் கிராமத்தில் உள்ள சர்வே எண் 37 மற்றும் 136 ஆகிய நிலங்கள் பழைய வருவாய் ஆவணங்களில் ‘சர்க்கார் தரிசு’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட பதிவுகளின் போது இவை ‘ரயத்துப் புன்செய்’ என மாற்றப்பட்டுத் தனியாருக்குப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசு நிலம் எந்த ஆவணத்தின் அடிப்படையில் தனியார் பட்டாவாக மாறியது, அதற்கு உத்தரவிட்ட அதிகாரி யார், மூல ஆவணங்கள் எங்கே எனப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. கடந்த 09.07.2025 அன்று வருவாய் கோட்டாட்சியர் அளித்த அறிக்கையில், தவறான UDR பதிவுகளை ரத்து செய்துவிட்டு, பழைய பதிவுகளின் அடிப்படையில் அந்த நிலங்களை மீண்டும் ‘சர்க்கார் தரிசு’ நிலமாக மாற்றப் பரிந்துரை செய்தார். அதேவேளையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் தூத்துக்குடி வட்டத்தில் UDR-க்கு பிறகு பஞ்சமி நிலங்கள் இல்லை எனக் கூறப்படும் நிலையில், பட்டாவிற்கு ஆதாரமாகக் காட்டப்படும் ‘DC.1/93, 29.11.1983’ என்ற அசல் கோப்பு மாயமாகி உள்ளதும் சர்ச்சையை அதிகரித்துள்ளது. முன்னதாக, 12.03.2026 அன்று மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) வெளியிட்ட உத்தரவில், இந்நில விவகாரம் குறித்துச் சிவில் நீதிமன்றத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அரசு நிலத்தைக் காப்பாற்றப் பொதுமக்கள் ஏன் நீதிமன்றம் செல்ல வேண்டும் என எதிர்ப்புகள் கிளம்பின. இதனைத் தொடர்ந்து, அடிப்படை வருவாய் பதிவுகள் குறித்து நிர்வாக ரீதியான மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இவ்வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். செப்டம்பர் 15 அன்று நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில், மனுதாரர்களான தமிழ்நாடு லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ஜெபஸ்டின் அற்புதராஜ் மற்றும் முன்னாள் ஊராட்சி உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா ஆகியோர் ஆட்சியர் முன் ஆஜராகினர். அவர்கள் சார்பில் A-Register, SLR, UDR பதிவுகள், பத்திரப் பதிவுகள், வில்லங்கச் சான்று (EC), RTI ஆவணங்கள் மற்றும் தற்போது அந்த நிலங்களில் கட்டிடங்கள் எதுவுமில்லை என்பதை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டன. தூத்துக்குடி விமான நிலையத்தின் மிக அருகில் அமைந்து பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து என்பதால், முறைகேடாக வழங்கப்பட்ட தனியார் பட்டாக்களை உடனடியாக ரத்து செய்து, ‘சர்க்கார் தரிசு’ நிலத்தை அரசு முழுமையாக மீட்க வேண்டும் என மனுதாரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- எட்டயபுரம் பாரதியார் கூட்டுறவு நூற்பாலை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் தூத்துக்குடி Thursday எட்டையாபுரத்தில் பாரதியார் கூட்டுறவு உட்பட ஒன்று உள்ளது. இந்த ஆலையை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் விஜய பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளிடம் ஆலையின் செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்தார்.1
- ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு1
- தமிழக வெற்றிக்கழக அமைச்சர் வெங்கட்ராமன் அவர்கள் திடீர் ஆய்வு ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பா.வெங்கட்ராமன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, ஆறுமுகநேரி பேரூர் கழகச் செயலாளர் ஜே.பி.வி. நிவாஸ் கண்ணன், காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்த நிலையில் காந்திபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் குறிப்பாக முதியோர்கள் மற்றும் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு காந்திபுரம் பகுதியில் புதிய நியாய விலைக் கடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் பா . வெங்கட்ராமனிடம் நிவாஸ் கண்ணன் வலியுறுத்தினார்.2
- திருநெல்வேலிஅரசு மருத்துவமனை பிணவறையில் குளிர்பதன வசதி பராமரிப்பு… சடலங்கள் பாதுகாப்பில் கேள்வி எழுப்பும் நிலை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால், இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகள் பழைய சவக்கிடங்கிற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன. பிணவறையில் உள்ள குளிர்பதன வசதிகளுக்கு ஆண்டு பராமரிப்பு ஒப்பந்தம் (AMC) செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுப்பணித்துறை மின் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் ஏசி மற்றும் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரித்து வரும் சூழலில் பிணவறையின் குளிர்பதன வசதிகள் தொடர்பாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்றும் நாளையும் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்படும் சடலங்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய சவக்கிடங்கில் வைத்து பரிசோதனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குளிர்பதன அறையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், குளிர்பதன வசதி தொடர்ந்து இயங்கி வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், பிணவறையின் குளிர்பதன வசதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் சூழல் பொதுமக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது. சடலங்களை பாதுகாப்பாக பராமரிப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதா என்பதையும், பராமரிப்புப் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்பதையும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். பராமரிப்புப் பணிகளை விரைந்து முடித்து வழக்கமான முறையில் பிரேத பரிசோதனைகள் நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1
- கோவில்பட்டியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில் சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், வேடம் அணிந்து,பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது கிராமத்தில் அமைந்துள்ள சக்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா ஊர்வலம் ரயில் நிலையம் முன்பு மத நல்லிணக்கத்தையும்,ஒற்றுமையும் வலியுறுத்தும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் - சிறுவர் சிறுமியர் விநாயகர், முருகன், மேடம் அணிந்து,பக்தர்கள் 1008 பால்குடம், மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பால்குடம் ஊர்வலத்தை கோவில்பட்டி திமுக கிழக்கு நகர செயலாளர் சுரேஷ்,தலைமையில் கோவில்பட்டி ரஜினிகாந்த் நற்பணி மன்றம் நகர செயலாளர் மகேஷ் பாலா முன்னணியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் இந்த ஊர்வலம் சாத்தூர் மெயின் ரோடு புது கிராமம் மெயின் ரோடு வழியாக வந்து ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவிலுக்கு வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேத்திக்கடனை செலுத்தினர். இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.1
- கல்லிடைக்குறிச்சி புனித அந்தோனியார் திருத்தல திருவிழா கோலாகலம் நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற புனித அந்தோனியார் திருத்தல திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. முக்கிய நாளான இன்று கூட்டுத் திருப்பலி நடைபெற்றது ஏராளமான பொதுமக்கள் மற்றும் அந்தோணியாரின் பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்1
- தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பரன்குன்றாபுரம் டிடிடிஏ நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள டிஎஸ் டேனியல் ராஜம்மாள் நினைவு கட்டடம் திறப்பு விழா நடந்தது விழாவிற்கு தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் பிரபாகரன் தலைமை வகித்து திறந்து வைத்து வாழ்த்தி பேசினார் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராஜீவ், தென்காசி கலெக்டர் ரஞ்சித் சிங் ரெட்டியபட்டி நாராயணன் எம்எல்ஏ சென்னை டிஎஸ் குரூப்ஸ் ஜெயசிங், சௌந்திரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்1
- தூத்துக்குடியில் அண்ணா பிறந்தநாள் விழா அதிமுகவினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 118வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு கழக அமைப்புச் செயலாளரும்,தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளரும்,முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார்.1