Shuru
Apke Nagar Ki App…
காலைக்கதிர் இன்றைய தலைப்புச் செய்தி/ஓட்டு போட ஊர் திரும்பிய மூவர் பலி
R. Suresh
காலைக்கதிர் இன்றைய தலைப்புச் செய்தி/ஓட்டு போட ஊர் திரும்பிய மூவர் பலி
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by Salem_Updates1
- மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட வடபழஞ்சி வாக்குச்சாவடிக்கு மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு மிண்ணனு எந்திரங்கள் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் பாதுகாப்பாக வடபழஞ்சி துவக்கப்பள்ளியில் வந்தடைந்தது.1
- தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர் என தருமபுரி சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளர் முனைவர் சௌமியா அன்புமணி வாக்குச்சாவடி மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு தகவல். தமிழகம் முழுவதும இன்று காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்கு சாவடி மையங்களுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். தருமபுரி சட்டமன்ற தொகுதியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி கடந்த 15 தினங்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார் தொடர்ந்து இன்று வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் சென்று வாக்குச்சாவடி முகவர்கள் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாக்குப்பதிவு குறித்து கேட்டு அறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகம் முழுவதும் இன்று விறுவிறுப்பாக பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்கு சாவடி மையங்களுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதியிலும் காலை முதலே வாக்களித்து வருகின்றனர். தருமபுரி மாவட்டம் முழுவதும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என அவர் தெரிவித்தார். பேட்டி - சௌமியா அன்புமணி - பாமக வேட்பாளர்1
- தமிழகத்தில் இன்று (ஏப்.23) காலை 7 மணி முதல் தமிழக சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் செல்லூர் பகுதியில் உள்ள பள்ளியில் குடும்பத்துடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.1
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மானாமதுரை சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் தமிழரசி ரவிக்குமார் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்குப்பதிவிற்காக காலை முதலே வாக்குச்சாவடிக்கு வந்த அவர், பொதுமக்களுடன் வரிசையில் நின்று ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். தமிழரசி ரவிக்குமார் கடந்த மானாமதுரை சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் வாக்களிப்பு அப்பகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. வாக்குச்சாவடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், தேர்தல் அதிகாரிகள் மேற்பார்வையில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.1
- மக்கள்_Vs_ஜனநாயகம் !!! மறவாதீர் ஓட்டு உங்கள் உரிமை !!! #publicintrest #publicresponse #election1
- வாக்குச்சாவடி மையங்களில் போதிய அடிப்படை வசதி இல்லாததால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதில் சிரமம்* *வாக்குச்சாவடி மைய அதிகாரிகளின் அலட்சியத்தால் சிரமப்பட்டு தங்கள் வாக்கை செலுத்த வந்த மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள்* தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதிகளில் தமிழக சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு இன்று காலை முதல் வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள், இளைஞர்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர் இந்நிலையில் பெரியகுளம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் உரிய அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்யாமல் உள்ளது இந்நிலையில் வாக்குச்சாவடி மையங்களில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சக்கர நாற்காலி இருந்தும் அதற்கு ஆட்கள் நியமனம் செய்யாததால் வாக்குச்சாவடி மையங்களுக்கு வருகை தந்த மாற்றுத்திறனாளி மற்றும் முதியோர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்ய வாக்குச்சாவடிக்கு செல்வதற்கு படிக்கட்டில் ஏறி சிரமத்துடன் செல்லும் நிலை உள்ளதால் மாற்றுத்திறனாளிகள் படிக்கட்டில் ஏறி இறங்க முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு சென்று தங்கள் வாக்கை பதிவு செய்துள்ளனர் மேலும் வாக்குச்சாவடி மையங்களில் உள்ள அதிகாரிகள் தேர்தல் அலுவலர்கள் மாற்றுத்திறனாளி மற்றும் முதியோர்கள் எளிய முறையில் சென்று வாக்கு செலுத்துவதற்கான எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்யாமல் மெத்தனப் போக்கில் செயல்பட்டதால் வயதான வாக்காளர்கள் அதிருப்தி அடைந்தனர்1
- தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப் பேரவை தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நேற்று தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்கு சாவடிகளுக்கும் வாக்குப்பதிவிற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் இதர பொருட்கள் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டு அனைத்து வாக்கு சாவடிகளுக்கும் சென்று சேர்ந்தது. இன்று அதிகாலை முதலே வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டது. தர்மபுரி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட எர்ரப்படி வாக்குச்சாவடியில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியரமான சதீஷ் தனது வாக்கினை பதிவு செய்தார். தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) என 5 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 12,52,019 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 6,29,980 ஆண் வாக்காளர்களும், 6,21,887 பெண் வாக்காளர்களும், 152 மூன்றாம் பாலினத்தாவரும் உள்ளனர். இவர்கள் வாக்காளிக்க 957 இடங்களில் மொத்தம் 1596 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. இதில் 150 பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும், கண்டறியப்பட்டு அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.1
- மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் சித்திரை திருவிழாவின் நான்காம் நாளான இன்று (ஏப்.22) காலை தங்கப்பல்லாக்கில் சுவாமியும் , அம்மனும் தெற்கு வாசல் வில்லாபுரம் பகுதியில் உள்ள பாவற்காய் மண்டபத்திற்கு எழுந்தருளினார்கள். மீண்டும் மாலையில் அங்கிருந்து புறப்பட்டு தெற்கு வாசல் சின்னக்கடை தெரு, தொட்டியகிணறு தெரு, தெற்காவணிமூலவீதி, வழியாக நான்கு சித்திரை வீதிகளை பவனி வந்து திருக்கோவில் சென்று அடைந்தது. சுவாமியும் அம்மனும் தெற்கு வாசல் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் முன்பாக சென்றபோது அங்கிருந்த இஸ்லாமியர்கள் மத வேற்றுமையை கடந்து ரோஸ்மில்க் வழங்கி இந்து முஸ்லீம் ஒற்றுமையை பறைசாற்றினார்கள்1