அண்ணாமலையை பற்றி அவதூறாகவும், இழிப்படுத்தும் வகையிலும் பேசி வரும் பா.ஜ., முன்னாள் நிர்வாகி மீது போலீசில் புகார் அண்ணாமலை, அவருடைய மனைவி குறித்து அவதூறாகவும், பெண்களை இழிப்படுத்தும் வகையிலும் பேசி வரும் பா.ஜ., முன்னாள் நிர்வாகி கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தன்னார்வலர் விராலிமலை ராஜ்குமார் போலீசில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: வீ.தி., லீடர்ஸ் இயக்கத்தின் தன்னார்வலர்களாக சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் இயக்கத்தின் தலைவரான அண்ணாமலை மற்றும் அவரது மனைவியை குறி வைத்து சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கல்யாணராமன் என்பவர் தரக்குறைவான மற்றும் அவதூறான கருத்துகளை வெளியிட்டு வருவதாக அறிகிறோம். குறிப்பாக, அண்ணாமலை மனைவியை இழிவுப்படுத்தும் வகையில் கூறப்படும் கருத்துகள் பெண்களின் கண்ணியத்தையும், சமூகத்தின் பொதுமரியாதை மற்றும் நல்லிணக்கத்தையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக கருதுகிறோம். இத்தகைய பேச்சுகள் எங்கள் இயக்கத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை, மன உளச்சலை ஏற்படுத்தி வருகின்றன. இவ்வாறான கருத்துகள் சமூக ஊடகங்கள் வாயிலாக பரவுவதால் ஆதரவாளர்களிடையே கோபமும், பதற்றமும் உருவாகி சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகக்கூடும் என்பதை தங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறோம். மேலும், முன்னாள் காவல்துறை அதிகாரியாகவும், சமூக நலனில் அக்கறை கொண்டவராகவும் விளங்கும் அண்ணாமலை மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றி அவதூறாகவும், பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலான கருத்துகள் இனி தொடராமல் இருக்க சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக சட்டம், ஒழுங்கை பாதிக்காத வகையில் அமைதியான முறையில், ஜனநாயக ரீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தேவையான காவல்துறை அனுமதி வழங்க கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
அண்ணாமலையை பற்றி அவதூறாகவும், இழிப்படுத்தும் வகையிலும் பேசி வரும் பா.ஜ., முன்னாள் நிர்வாகி மீது போலீசில் புகார் அண்ணாமலை, அவருடைய மனைவி குறித்து அவதூறாகவும், பெண்களை இழிப்படுத்தும் வகையிலும் பேசி வரும் பா.ஜ., முன்னாள் நிர்வாகி கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தன்னார்வலர் விராலிமலை ராஜ்குமார் போலீசில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: வீ.தி., லீடர்ஸ் இயக்கத்தின் தன்னார்வலர்களாக சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் இயக்கத்தின் தலைவரான அண்ணாமலை மற்றும் அவரது மனைவியை குறி வைத்து சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கல்யாணராமன் என்பவர் தரக்குறைவான மற்றும் அவதூறான கருத்துகளை வெளியிட்டு வருவதாக அறிகிறோம். குறிப்பாக, அண்ணாமலை மனைவியை இழிவுப்படுத்தும் வகையில் கூறப்படும் கருத்துகள் பெண்களின் கண்ணியத்தையும், சமூகத்தின் பொதுமரியாதை மற்றும் நல்லிணக்கத்தையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக கருதுகிறோம். இத்தகைய பேச்சுகள் எங்கள் இயக்கத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை, மன உளச்சலை ஏற்படுத்தி வருகின்றன. இவ்வாறான கருத்துகள் சமூக ஊடகங்கள் வாயிலாக பரவுவதால் ஆதரவாளர்களிடையே கோபமும், பதற்றமும் உருவாகி சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகக்கூடும் என்பதை தங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறோம். மேலும், முன்னாள் காவல்துறை அதிகாரியாகவும், சமூக நலனில் அக்கறை கொண்டவராகவும் விளங்கும் அண்ணாமலை மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றி அவதூறாகவும், பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலான கருத்துகள் இனி தொடராமல் இருக்க சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக சட்டம், ஒழுங்கை பாதிக்காத வகையில் அமைதியான முறையில், ஜனநாயக ரீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தேவையான காவல்துறை அனுமதி வழங்க கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
- அடையாள அட்டை வாங்க ஒரே நேரத்தில் குவிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்ததால் வட்டார வளர்ச்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது புதுக்கோட்டை. விதவை அடையாள அட்டை வாங்க ஒரே நேரத்தில் குவிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்ததால் வட்டார வளர்ச்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது புதுக்கோட்டை திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறையில் விதவைகளுக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பம் பெறப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அடையாள அட்டை இருந்தால்தான் தமிழக அரசின் உதவித்தொகை வழங்கப்படும் மற்றும் அரசின் உதவிகளை பெறுவதற்கு அடையாள அட்டை கட்டாயம் என்று வதந்தி பரவியதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குவிந்து விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர் தமிழக முதல்வரின் வெற்றி பயணம் திட்டத்திற்கு 60 வயதுக்குட்பட்ட விதவைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் அந்த அட்டையால் அவர்களுக்கு உதவித்தொகை மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படும் என்ற அறிவிப்பால் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனு கொடுக்க வந்திருந்தனர் இந்நிலையில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களும் விண்ணப்பங்கள் வழங்க வருகை தந்ததால் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பெரிதும் பரபரப்பாக காணப்பட்டது1
- புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் பெரிய அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாபெரும் குதிரை வண்டி பந்தயம் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் பெரிய அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா இரண்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 21 ஜோடி குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. இறுதியில் வெற்றி பெற்ற குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்க பணம் மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது.1
- கறம்பக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட 108 ஆம்புலன்ஸ் *புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்ட 108 ஆம்புலன்ஸ் அவசர தேவைக்கு செல்ல முடியாத சூழ்நிலை கூடுதல் காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையை நியமிக்க கோரி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை* புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சுப முகூர்த்த தினங்கள் மற்றும் கோயில் விசேஷ நாட்களில் அதிகளவில் பொதுமக்கள் கூடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் 108 ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கியது. இதனால் அவசர தேவைக்காக செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கறம்பக்குடியில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் காவல்துறையினர் போதிய அளவில் பணியில் இல்லாததே போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே கறம்பக்குடி காவல் நிலையத்திற்கு கூடுதல் காவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- சிங்கம்புணரி அருகே பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள சுற்றுப்புற கிராமங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த சூறைக்காற்று, இடிமின்னலுடன் கனமழை பெய்தது. மார்ச் முதல் ஆறு மாதங்களாக கடுமையான வெப்பத்தால் வாடிய மக்களுக்கு இன்று மாலை திடீர் மழை நிவாரணம் அளித்தது. கோழிக்குடிபட்டி, ஆறுகுடிபட்டி, சூரக்குடி, அய்யாபட்டி, கரடிபட்டி, வையாபுரிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர் மழையால் நகர் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.1
- திருவாடானையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை ஏற்பட்டது மக்கள் மகிழ்ச்சி ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தாங்க முடியாத வெப்பம் மற்றும் புழுக்கத்தால் மக்கள் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டனர். வெளியில் செல்ல முடியாமல், அன்றாடப் பணிகளைச் செய்வதிலும் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். மேலும் இரவு நேரங்களில் வெட்கை அதிக அளவில் இருந்தது இந்த நிலையில், தற்போது அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வருகிறது. வெப்பத்தின் தாக்கமும் குறைந்தது இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, மழையை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.1
- குப்பைத் தொட்டியைப் பயன் படுத்தாத மக்கள் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் வெள்ளலூர் ஊராட்ச்சியைச் சேர்ந்த கட்டைச் சோலைப்பட்டி என்ற கிராமத்தில் குப்பைத்தொட்டி இருந்தும் அதைப் பயன் படுத்தாமல் அந்த கிராம மக்கள் குப்பைத் தொட்டி அருகிழே யே குப்பையை கொட்டு கின்றனர்1
- கறம்பக்குடி அருகே வெள்ளாள கொல்லை வடுவச்சியம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வெள்ளாளகொல்லை ஸ்ரீ.வடுவச்சியம்மன் கோயில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்றது இதில் திரளான பெண்கள் பங்கேற்று முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா பிலாவிடுதி ஊராட்சி வெள்ளாளகொல்லை கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த ஸ்ரீ.வடுவச்சியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு வள்ளுவர் திடலில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் பெண்கள் முளைப்பாரியை வைத்து நல்ல மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், உலக ஒற்றுமை வேண்டியும் சிறப்பு வழிபாடு செய்து செண்டை மேளங்கள் முழங்க, குதிரை நடனத்துடன் பெண்கள் திரளானோர் பங்கேற்று முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் கருப்பர் மற்றும் முத்துமாரியம்மன் வேடம் அணிந்து நடனமாடிய நிகழ்வு பொதுமக்களையும், விழாவைக் காண வந்தவர்களையும் வெகுவாக கவர்ந்தது.1
- फ़िरोज़ाबाद में बंजारा समाज पर धारदार हथियारों से हमला, बाल-बाल बची जान पीड़ितों ने थाना एका में दी तहरीर कार्रवाई की मांग फ़िरोज़ाबाद जनपद के एका थाना एका थाना के क्षेत्र के हरी सिंह पुर गाँव में बंजारा समाज की महिलाओं एवं लोगों पर दबंगों द्वारा धारदार हथियारों से जानलेवा हमला करने का मामला सामने आया है जहां बंजारा समाज को दबाने वाली बात सामने आयी है घटना का एक वीडियो भी सोशल मीडिया पर वायरल हो रहा है, जिसमें महिलाएं और बच्चे सड़क पर भागते हुए दिखाई दे रहे हैं पीड़ितों के अनुसार दिनांक 22 अगस्त 2026 को दोपहर के समय गाँव के ही कुछ लोग लाठी-डंडा और धारदार हथियार लेकर उनके घरों पर आ गए और गाली-गलौज करते हुए हमला कर दिया अचानक हुए इस हमले से पूरे गाँव में अफरा-तफरी मच गई। महिलाओं और बच्चों ने भाग कर किसी तरह अपनी जान बचाई पीड़ित गांव वालो का आरोप है कि वे गरीब बंजारा समाज से हैं इसलिए उन्हें आए दिन डराया-धमकाया जाता है। इस घटना के बाद से पूरा समाज दहशत में है ग्रामीणों ने बताया कि बड़ी मुश्किल से उन लोगों ने कर मामला शांत कराया गया इस संबंध में पीड़ित गाँव के लोगों ने थाना एका पुलिस को लिखित तहरीर दी है और आरोपियों के खिलाफ सख्त कार्रवाई व सुरक्षा की मांग की है लिखे हुए आरोपी बार बार गांव पर चढ़ाई करते हुए जान से मारने की धमकी दे रहे हैं पुलिस द्वारा मामले की जांच ही नहीं की जा रही है। थाना प्रभारी एका से बात करने पर बताया कि तहरीर मिलने पर जाँच कर उचित कार्रवाई की जाएगी2