காஞ்சிபுரத்தில் மயான கொள்ளை திருவிழா முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் உடம்பு முழுவதும் எலுமிச்சை பழம் குத்தியும், அலகு குத்தியும் காளி வேடம் அணிந்து நேர்த்தி கடன் செலுத்தினர் 64 திருக்கரங்களுடன் மகிஷாசுரவர்த்தினி அலங்காரத்தில் பிரமாண்டமாக காட்சியளித்த அங்காளம்மனை வழியெங்கும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். டிரோன் காட்சிகள் உள்ளன. ----------------------------- பெரிய காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலையம் அருகே பெருமாள் தெருவில் உள்ள பட்டினத்தார் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசி மாதம் அமாவாசை அன்று மயான கொள்ளை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு மயான கொள்ளை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. மயான கொள்ளை பெருவிழாவை ஒட்டி கோவிலில் மக்காச்சோளம், ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துகுடி, அன்னாச்சி, செவ்வாழை போன்ற பழங்களால் கோவிலின் மடம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் 64 திருக்கரங்களுடன் மகிஷாசுரவர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது. புதிய ரயில்வே நிலையத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஜவஹர்லால் தெரு, செங்கழு நீரோடை வீதி, பூக்கடை சத்திரம், காமாட்சி அம்மன் சன்னதி தெரு வழியாக வந்து பழைய ரயில்வே நிலையம் அருகே நிறைவு பெற்றது. வழியெங்கும் பக்தர்கள் தீபாராதனை செய்து வழிபட்டனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழியெங்கும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் உடம்பு முழுவதும் எலுமிச்சம்பழம் குத்தியும், அலகு குத்தியும், விதவிதமாக காளி வேடங்கள் அணிந்தும் பேண்ட் வாத்தியங்களுடன் குத்தாட்டம் போட்டும் ஊர்வலமாக நடந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் மயான கொள்ளை திருவிழா முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் உடம்பு முழுவதும் எலுமிச்சை பழம் குத்தியும், அலகு குத்தியும் காளி வேடம் அணிந்து நேர்த்தி கடன் செலுத்தினர் 64 திருக்கரங்களுடன் மகிஷாசுரவர்த்தினி அலங்காரத்தில் பிரமாண்டமாக காட்சியளித்த அங்காளம்மனை வழியெங்கும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். டிரோன் காட்சிகள் உள்ளன. ----------------------------- பெரிய காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலையம் அருகே பெருமாள் தெருவில் உள்ள பட்டினத்தார் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசி மாதம் அமாவாசை அன்று மயான கொள்ளை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு மயான கொள்ளை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. மயான கொள்ளை பெருவிழாவை ஒட்டி கோவிலில் மக்காச்சோளம், ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துகுடி, அன்னாச்சி, செவ்வாழை போன்ற பழங்களால் கோவிலின் மடம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் 64 திருக்கரங்களுடன் மகிஷாசுரவர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது. புதிய ரயில்வே நிலையத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஜவஹர்லால் தெரு, செங்கழு நீரோடை வீதி, பூக்கடை சத்திரம், காமாட்சி அம்மன் சன்னதி தெரு வழியாக வந்து பழைய ரயில்வே நிலையம் அருகே நிறைவு பெற்றது. வழியெங்கும் பக்தர்கள் தீபாராதனை செய்து வழிபட்டனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழியெங்கும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் உடம்பு முழுவதும் எலுமிச்சம்பழம் குத்தியும், அலகு குத்தியும், விதவிதமாக காளி வேடங்கள் அணிந்தும் பேண்ட் வாத்தியங்களுடன் குத்தாட்டம் போட்டும் ஊர்வலமாக நடந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
- காஞ்சிபுரம் வையாவூர் சாலையில் அமைந்துள்ள காஞ்சி புத்த விகாருக்கு இலங்கையில் இருந்து பகவான் புத்தருடைய தாதுக்கள் (அஸ்தியை) இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழில் முதல் பட்டம் பெற்ற சிங்கள பிக்கு ரத்தின தேரர் அவர்கள் காஞ்சிபுரத்திற்கு எடுத்து வந்தார்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது அவரை தமிழகத்தில் உள்ள அனைத்து பிக்குகளும் ஒன்று சேர்ந்து வரவேற்பு அளித்தார்கள் காஞ்சி புத்த விகாரை சார்ந்த தலைவர் ஆர். திருநாவுக்கரசு செயலாளர் ஜி. நாகராஜன் பொருளாளர் எம். கௌதமன் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.1
- நெல்மணிகளை பறவைகளிடமிருந்து காப்பாற்ற, களக்காட்டூர் பெண் விவசாயி ஒருவர் நாள் முழுவதும் பாத்திரத்தை டமால் டமால்’ என தட்டி சத்தம் எழுப்பி குருவிகளை ஓட்ட பெரும்பாடு பட்டு வருகிறார். __________ காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர், பகுதியில் பெண் விவசாயி ஒருவரின் வித்தியாசமான முயற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பயிர் செய்த நெற்பயிர் முளைத்து வளரும் இந்த நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் குருவிகள் கூட்டமாக வந்து நெல்மணிகளைத் தின்றுவிட்டு செல்வதாக அவர் கூறுகிறார். இதைத் தடுக்க, தண்ணீர் நிரப்ப பயன்படுத்தப்படும் காலி அன்னக்கூடையை கையில் பிடித்து, குச்சியால் ‘டமால் டமால்’ எனத் தட்டி சத்தமிட்டு குருவிகளை விரட்டுகிறார். “சத்தம் போடாமல் இருந்தால் முளைத்துள்ள நெல்மணிகளை குருவிகள் முழுவதும் சேதப்படுத்தி விடும். அதனால் தினமும் இரண்டு வேளையும் இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது,” என்று அந்த பெண் விவசாயி வேதனையுடன் தெரிவித்தார். தன் உழைப்பின் பலனை காக்க, இயற்கையோடு போராடும் இந்த பெண் விவசாயியின் விடாமுயற்சி, கிராமப்புற விவசாய வாழ்க்கையின் சவால்களை வெளிப்படுத்துகிறது.1
- Post by Vinayagam Vinayagam1
- மக்களிடம் அலட்சியம் அடாவடி வசூல் மக்கள் உங்கள் கமெண்ட்1
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- Post by ர. சசி குமார்6
- कैमरे पर: तमिलनाडु के वेल्लोर में मयाना कोल्लाई के दौरान 60 फुट लंबा मंदिर रथ गिरने से 7 लोग घायल। वेल्लोर के मयाना कोल्लाई उत्सव के दौरान, 60 फुट लंबा मंदिर का रथ गिर गया, जिससे सात लोग घायल हो गए और दहशत फैल गई। वेल्लोर में वार्षिक मयाना कोल्लाई उत्सव के दौरान 16 फरवरी की रात को उस समय नाटकीय घटना घटी जब श्रद्धालुओं की भारी भीड़ के बीच 60 फुट लंबा मंदिर रथ पलट गया। इस घटना में कम से कम सात लोग घायल हो गए और भीड़ में कुछ देर के लिए अफरा-तफरी मच गई।1
- பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சடன் பிரேக் அடித்து நின்ற லாரி மீது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் கன்டெய்னர் லாரி டிரைவர் இடுப்பாடுகளில் சிக்கி படுகாயம். தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் லாரியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஓட்டுநரை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாயில் சுமார் அரை மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிப்பு __________ பெங்களூர் சென்னை மார்கமாக நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த தேசிய நெடுஞ்சாலை கடந்து செல்கின்றது. இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே வெள்ளகேட் பகுதியில், வேலூரில் இருந்து சென்னை மார்கமாக சென்று கொண்டு இருந்த கண்டெய்னர் லாரி ஒன்று, "முன்னாள் சென்ற லாரி திடீரென சடன் பிரேக் போட்டு நின்ற காரணத்தினால்" அதன் மீது கன்டெய்னர் லாரி பயங்கரமாக மோதியது. மோதிய விபத்தில் கன்டெய்னர் லாரி முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த இடுப்பாடுகளில் கண்டெய்னர் லாரியின் ஓட்டுனர் சிக்கி கொண்டு உயிருக்கு க்கு போராடிக் கொண்டிந்தார். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் கிரேன் உதவியுடன் இடுப்பாடுகளில் சிக்கியிருந்த கன்டெய்னர் லாரி ஓட்டுனரை மிகவும் சிரமப்பட்டு வெளியே எடுத்தனர். இந்த விபத்தில் கன்டெய்னர் லாரி ஓட்டுனரின் கால் உடைந்து படு காயத்துடன் இருந்தவரை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளை கேட் அருகே சுமார் 30 நிமிடத்திற்க்கு மேல் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. முன்னால் சென்ற லாரி டிரைவரின் அஜாக்கிரதையினால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக பேட்ரோல் காவல்துறையினர் தெரிவித்தனர்.1