"பழனிசாமியின் அவல ஆட்சி.மக்களுக்கான திராவிட மாடலின் சாதனை ஆட்சி" : ஓசூரில் முதலமைச்சர் பேச்சு! கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையின் விவரம்:தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்துவிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு நான் வந்திருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு, தமிழ்நாட்டின் உரிமைகளைத் தி.மு.க.வால் மட்டும்தான் காப்பாற்ற முடியும் என்று நிரூபித்துவிட்டு, உங்கள் முன்னால் கெத்தாக நின்று கொண்டிருக்கிறேன். இப்போது சொல்லுங்கள், திராவிட மாடல் 2.0-வுக்கு நீங்கள் ரெடியா? ஒட்டுமொத்த தமிழ்நாடும் 'OK' சொல்லிட்டார்கள். கிருஷ்ணகிரி ரெடியா? நன்றி.அடுத்து, ஓசூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் எஸ்.ஏ. சத்யா அவர்கள். ஓசூர் நகராட்சி கவுன்சிலராக இருந்தவர், ஓசூர் நகராட்சித் தலைவராக வளர்ந்தவர், ஓசூர் மாநகர மேயராக உயர்ந்தவர். சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றிய இவருக்கு, உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் ஆதரவு தர வேண்டும். நாடு வளம் பெற - நல்லாட்சி தொடர்ந்திட, தமிழ்நாடு தமிழ்நாடாகவே என்றும் இருக்க, ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை! தமிழ்நாடு வெல்லட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
"பழனிசாமியின் அவல ஆட்சி.மக்களுக்கான திராவிட மாடலின் சாதனை ஆட்சி" : ஓசூரில் முதலமைச்சர் பேச்சு! கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையின் விவரம்:தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்துவிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு நான் வந்திருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு, தமிழ்நாட்டின் உரிமைகளைத் தி.மு.க.வால் மட்டும்தான் காப்பாற்ற முடியும் என்று நிரூபித்துவிட்டு, உங்கள் முன்னால் கெத்தாக நின்று கொண்டிருக்கிறேன். இப்போது சொல்லுங்கள், திராவிட மாடல் 2.0-வுக்கு நீங்கள் ரெடியா? ஒட்டுமொத்த தமிழ்நாடும் 'OK' சொல்லிட்டார்கள். கிருஷ்ணகிரி ரெடியா? நன்றி.அடுத்து, ஓசூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் எஸ்.ஏ. சத்யா அவர்கள். ஓசூர் நகராட்சி கவுன்சிலராக இருந்தவர், ஓசூர் நகராட்சித் தலைவராக வளர்ந்தவர், ஓசூர் மாநகர மேயராக உயர்ந்தவர். சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றிய இவருக்கு, உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் ஆதரவு தர வேண்டும். நாடு வளம் பெற - நல்லாட்சி தொடர்ந்திட, தமிழ்நாடு தமிழ்நாடாகவே என்றும் இருக்க, ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை! தமிழ்நாடு வெல்லட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
- தேர்தல் நெருங்கும் நிலையில் அரூர் பகுதியில் பிடிக்கப்பட்ட ரூபாய் 22 லட்சத்து 3000 ரொக்கம் பறிமுதல் - கேட்பாரற்று கிடந்த ஸ்கூட்டி டிக்கியில் சோதனை. தர்மபுரி மாவட்டம் அரூர் அம்பேத்கர் நகர் அருகே இருக்கக்கூடிய பெட்ரோல் பங்க் முன்பு சுமார் 20க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் நின்று கொண்டிருந்ததாகவும், அப்போது அவ்வழியாக சென்ற தேர்தல் பறக்கும் படையினரை பார்த்ததும் அவர்கள் ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது. பின்பு அங்கே கேட்பாராற்று இருந்த இருசக்கர வாகனத்தை, சந்தேகம் அடைந்த தேர்தல் பறக்கும் படை குழுவினர் சோதனை செய்ததில் ஸ்கூட்டி டிக்கியில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததாகவும், அதில் 22 லட்சத்து 3 ஆயிரம் ரூபாயை கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படை குழுவினர் அரூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான செம்மலையிடம் ஒப்படைத்தனர். மேலும் கேட்பாரற்று கிடந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து ஆர்டிஓ அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் சந்தேகத்திற்கு இடமான பகுதியில் பணம் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என அருகே இருந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.1
- கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் அரசியல் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,உரிய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தா.உதயசூரியன் அவர்கள் இன்று வெள்ளிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் வருகையை முன்னிட்டு வெள்ளிமலை பகுதி மக்கள் உற்சாகக் கடலாக திரண்டனர். மேளதாளங்கள் முழங்க, மலர் தூவி,ஆர்ப்பாட்டக் குரல்களுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும், கட்சி நிர்வாகிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நடனமாடி,ஆர்வமுடன் அவரை வரவேற்றனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் தேர்தல் உற்சாகத்தை மேலும் உயர்த்தியது. வாக்கு சேகரிப்பின் போது, தா.உதயசூரியன் அவர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து,தங்களது தேர்தல் அறிக்கைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கினார்.மக்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், உள்ளூர் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு,தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தினர். வெள்ளிமலை பகுதியில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்வு,அந்த தொகுதியில் வேட்பாளருக்கு கிடைக்கும் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.1
- சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அங்கு சுயேச்சையாகப் போட்டியிடும் பிரேம்குமாருக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். 'டிவி' சின்னத்தில் போட்டியிடும் பிரேம்குமார், விஜய் ரசிகர் மன்றத்தின் முன்னாள் கிளைச் செயலாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய பிரேம்குமார், "நான் நீண்டகாலமாக விஜய் ரசிகராகவும், நிர்வாகியாகவும் இருந்துள்ளேன். எடப்பாடி பழனிசாமியை நிச்சயம் தோற்கடிப்பேன். தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவுடன் 'டிவி' சின்னத்தை மக்களிடம் கொண்டு சென்று பெரும் வெற்றி பெறுவேன்," என்றார்.1
- இராசிபுரம் புரட்சிகர தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ராசிபுரம் சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பிரேம்குமார் அவர்களை ஆதரித்து தீவிரவாக்கு சேகரிப்பு பணியில் கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இடத்தில் வெற்றி பெற வாய்ப்பு கேட்டு வருகின்றனர்1
- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தாலுக்கா குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெய்வாசல் அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவரும் 100% வாக்களிப்போம் என்று உறுதி எடுக்க வேண்டும் என விளம்பர பலகையுடன் முக்கிய கடைவீதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்1
- ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேட்பாளர் லட்சுமிபதி அரக்கோணம் எஸ் ஆர் கே பகுதியில் இருந்து ஜோதி நகர் வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அக்கட்சி தொண்டர்களோடு மேளதாளங்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்1
- அவிநாசியில் பாஜக சார்பில் போட்டியிடக்கூடிய மத்திய இணை அமைச்சர் எல் முருகன் இன்று தேர்தல் பணிமனை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். பாராளுமன்றத்தில் மகளிர் சட்ட மசோதாவிற்கு எதிராக வாக்களித்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் உண்மையை மக்கள் புரிந்து கொண்டார்கள். சமூக நீதிப் பேசி ஏமாற்றும் திமுகவை பெண்கள் இனி மன்னிக்க மாட்டார்கள் என பேட்டி அளித்தார்.1
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் கடந்த ஒரு வருடமாக காட்டெருமைகள் கிராமப்புற விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இப்பகுதியில் நெல்,சோளம்,மரவள்ளிக்கிழங்கு,தக்காளி,பீன்ஸ்,மிளக,காப்பி, உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பெருமளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டெருமைகள் விவசாய நிலங்களில் நுழைந்து, அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்களை அழித்து வருகின்றன. குறிப்பாக கரியாலூர் ஊராட்சிக்குட்பட்ட புளுவப்பட்டி பகுதியில், அறுவடைக்கு தயாராக இருந்த மரவள்ளிக்கிழங்கு, நெற்பயிர் மற்றும் மிளகு செடிகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் பல மாதங்களாக உழைத்து வளர்த்த பயிர்கள் நாசமாகி, பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். “ஒரு வருட உழைப்பும் ஒரு இரவில் அழிகிறது” என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இதேபோன்ற சம்பவம் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மாவடிப்பட்டு பகுதியில் ஏற்பட்டதாகவும், அப்போது சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை காட்டெருமைகள் சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் வனத்துறையினருக்கு தகவல் அளித்தபோதும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். “அப்போது தக்க நடவடிக்கை எடுத்திருந்தால், தற்போது மீண்டும் மீண்டும் ஏற்படும் இழப்புகளைத் தடுக்க முடிந்திருக்கும்” எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், காட்டெருமைகளை உடனடியாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் இரவு நேரங்களில் கண்காணிப்பு அதிகரிக்க வேண்டும் சேதமடைந்த பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணாமல் இருந்தால், கல்வராயன் மலைப்பகுதி விவசாயிகள் கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்ற அச்சமும் நிலவி வருகிறது.1