கொண்டடத்தில் கால்நடை பராமரிப்பு தொழில்நுட்ப ஒரு நாள் சிறப்பு முகாம் பயிற்சி. குண்டடத்தில் கால்நடை பராமரிப்பு தொழில்நுட்ப ஒருநாள் பயிற்சி முகாம். குண்டடம், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விவசாயிகளுக்கான கால்நடை பராமரிப்பு தொழில்நுட்பம் தொடர்பான ஒருநாள் பயிற்சி முகாம் குண்டடம் சமுதாயக் கூட்டத்தில் நடைபெற்றது. மண்டல இணை இயக்குநர் சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவர் உமாசங்கர் (பேட்டைகாளிபாளையம்), கால்நடை உதவி இயக்குநர் வெங்கடேஷ் பிரபு, உதவி மருத்துவர் மோகன்ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி வழங்கினர். சிறப்பு அழைப்பாளராக திமுக குண்டடம் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். பயிற்சி முகாமில் கால்நடைகளை முறையாக பராமரிக்கும் முறைகள், நோய்கள் ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மேலும், மினரல் மிக்சர் மற்றும் அறுப்பு சோளம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுமார் 200 விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் விவசாயிகளின் கேள்விகளுக்கு அதிகாரிகள் தெளிவான விளக்கங்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.
கொண்டடத்தில் கால்நடை பராமரிப்பு தொழில்நுட்ப ஒரு நாள் சிறப்பு முகாம் பயிற்சி. குண்டடத்தில் கால்நடை பராமரிப்பு தொழில்நுட்ப ஒருநாள் பயிற்சி முகாம். குண்டடம், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விவசாயிகளுக்கான கால்நடை பராமரிப்பு தொழில்நுட்பம் தொடர்பான ஒருநாள் பயிற்சி முகாம் குண்டடம் சமுதாயக் கூட்டத்தில் நடைபெற்றது. மண்டல இணை இயக்குநர் சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவர் உமாசங்கர் (பேட்டைகாளிபாளையம்), கால்நடை உதவி இயக்குநர் வெங்கடேஷ் பிரபு, உதவி மருத்துவர் மோகன்ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி வழங்கினர். சிறப்பு அழைப்பாளராக திமுக குண்டடம் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். பயிற்சி முகாமில் கால்நடைகளை முறையாக பராமரிக்கும் முறைகள், நோய்கள் ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மேலும், மினரல் மிக்சர் மற்றும் அறுப்பு சோளம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுமார் 200 விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் விவசாயிகளின் கேள்விகளுக்கு அதிகாரிகள் தெளிவான விளக்கங்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.
- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடைமாடும் படியுடன் மேம்பாலம் நடைபெற்று வருகிறது இதில் 3ோட்டமாக இன்று சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு விழாக்காக காத்திருக்கிறது.1
- தமிழ்நாடு முழுவதும் சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் , காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 16 தினங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 16வது நாளான இன்று திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.1
- Post by அன்பரசு1
- பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் தனியார் மதுபான கடை செயல்பட்டு வருகிறது இந்த கடையில் மது வாங்கிய அருந்திவிட்டு மது பிரியர்கள் தொடர்ந்தால் பகுதியில் ரகலையில் ஈடுபட்டு வருவதால் பெண்கள் மற்றும் மாணவர்கள் மிகவும் சிரமத்துடன் வசித்து வருகின்றனர் இதனால் இன்று தமிழக வெற்றி கழகம் சார்பாக புதிய பேருந்து நிலையம் பிரிவு பகுதியில் மதுபான கடையை அகற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்1
- திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி அருகே திண்டுக்கல் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் அடிப்படை பணியாளர்கள் மாவட்ட சங்கத்தில் பிளாஸ்டிக் பையில் மண்டை ஓடு இதனால் அங்கு இருப்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் சம்பவ இடத்திற்கு நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- அய்யலூரில் வனத்துறையினரை கண்டித்து 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வேட்டை நாய்களுடன் சாலை மறியல் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அய்யலூர் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள தெய்வங்களுக்கு திருவிழா நேரங்களில் வேட்டையாடு சென்று வருவது வழக்கம் அவ்வாறு வேட்டையாடிய பொருள்களை தெய்வங்களுக்கு வைத்து வழிபாடு செய்வது வழக்கம். அவ்வாறு வேட்டையாட சென்ற நபர்களை வனத்துறையினர் கைது செய்யப்பட்டதாகவும் எச்சரிக்கை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் வனத்துறையினரை கண்டித்து 20-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வேட்டை நாய்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் நிதி குமார் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்1
- திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சங்காராட்டிகோட்டையில் கருப்பசாமி என்பவரின் பசுமாடு அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடியது. தகவல் அறிந்த வத்தலகுண்டு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் கிணற்றுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசு மாட்டை உயிருடன் மீட்டு கருப்பசாமியிடம் ஒப்படைத்தனர் கிணற்றில் தண்ணீர் இல்லாததால் மாட்டிற்கு காயம் ஏற்பட்டது.1
- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சிஎஸ்ஐ தேவாலயத்தில் இன்று தவக்கால நிகழ்ச்சியின் முதல் நாளான சாம்பல் புதன் சிறப்பு பிராத்தனை ஆயிர் தீமை தீ அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதேபோன்று ஒட்டன்சத்திரம் ஆர்.சி லயோலா தேவாலயத்தில் சிலுவை பாதை நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.1