திண்டுக்கல் கொடைக்கானல் கூக்கால் வனப் பகுதியில் காட்டுத் தீ கொடைக்கானலில் தொடா்ந்து அதிகமான வெப்பம் நிலவுவதால் திங்கள்கிழமை கூக்கால் வனப் பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஜனவரி முதல் பகல் நேரங்களில் வெயிலும், மாலை, இரவு நேரங்களில் பனியின் தாக்கமும் அதிகரித்து வந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் 25 டிகிரி செல்சியஸ் வெப்பமும், இரவு நேரத்தில் 10 டிகிரி செல்சியஸில் குளிரும் நிலவியது.வழக்கத்தைவிட மாலை, இரவு நேரங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. நீரோடைகள் நீா்வரத்து இல்லாமல் வடு காணப்படுகின்றன. இதனால், வன விலங்குகளான காட்டுப் பன்றி, காட்டு மாடு, மான், செந்நாய் உள்ளிட்டவை பகல் நேரங்களில் நகா்ப் பகுதிகளுக்கு உணவு, தண்ணீரைத் தேடி தேடி வருகின்றன. தொடா்ந்து அதிகரித்து வரும் வெப்பத்தால் கொடைக்கானல் வில்பட்டி, அஞ்சுவீடு, கூக்கால் உள்ளிட்ட வனப் பகுதிகளில் காட்டுத் தீப் பற்றியது. வனத் துறையினா் காட்டுத் தீயை கட்டுப்படுத்தி வருகின்றனா். இது குறித்து கொடைக்கானல் வனத் துறை ரேஞ்சா் ஒருவா் கூறியதாவது: கொடைக்கானலில் கடந்த பல நாள்களாக பகல் நேரங்களில் அதிகமான வெப்பம் நிலவி வருகிறது. இதனால், வனப் பகுதிகளில் ஒரங்களில் உள்ள செடிகள், சிறு, சிறு மரங்கள், புற்கள் காய்ந்த நிலையில் உள்ளன.இவை எளிதாக தீப் பிடிக்கக் கூடியவை. இதனால், கொடைக்கானல்-பழனி-வத்தலக்குண்டு மலைச் சாலைகளில் பயணிக்கும் பயணிகள் புகை பிடித்த பீடி, சிகரெட் துண்டுகளை வீச வேண்டாம். விவசாய நிலங்களை சுத்தம் செய்வதற்காக தீ வைப்பதற்கு முன் அருகிலுள்ள வனப் பணியாளா்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். கொடைக்கானல் வனப் பகுதிகளில் தொடா்ந்து வனப் பணியாளா்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா். எங்காவது தீப் பிடித்தால் அது குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.
திண்டுக்கல் கொடைக்கானல் கூக்கால் வனப் பகுதியில் காட்டுத் தீ கொடைக்கானலில் தொடா்ந்து அதிகமான வெப்பம் நிலவுவதால் திங்கள்கிழமை கூக்கால் வனப் பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஜனவரி முதல் பகல் நேரங்களில் வெயிலும், மாலை, இரவு நேரங்களில் பனியின் தாக்கமும் அதிகரித்து வந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் 25 டிகிரி செல்சியஸ் வெப்பமும், இரவு நேரத்தில் 10 டிகிரி செல்சியஸில் குளிரும் நிலவியது.வழக்கத்தைவிட மாலை, இரவு நேரங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. நீரோடைகள் நீா்வரத்து இல்லாமல் வடு காணப்படுகின்றன. இதனால், வன விலங்குகளான காட்டுப் பன்றி, காட்டு மாடு, மான், செந்நாய் உள்ளிட்டவை பகல் நேரங்களில் நகா்ப் பகுதிகளுக்கு உணவு, தண்ணீரைத் தேடி தேடி வருகின்றன. தொடா்ந்து அதிகரித்து வரும் வெப்பத்தால் கொடைக்கானல் வில்பட்டி, அஞ்சுவீடு, கூக்கால் உள்ளிட்ட வனப் பகுதிகளில் காட்டுத் தீப் பற்றியது. வனத் துறையினா் காட்டுத் தீயை கட்டுப்படுத்தி வருகின்றனா். இது குறித்து கொடைக்கானல் வனத் துறை ரேஞ்சா் ஒருவா் கூறியதாவது: கொடைக்கானலில் கடந்த பல நாள்களாக பகல் நேரங்களில் அதிகமான வெப்பம் நிலவி வருகிறது. இதனால், வனப் பகுதிகளில் ஒரங்களில் உள்ள செடிகள், சிறு, சிறு மரங்கள், புற்கள் காய்ந்த நிலையில் உள்ளன.இவை எளிதாக தீப் பிடிக்கக் கூடியவை. இதனால், கொடைக்கானல்-பழனி-வத்தலக்குண்டு மலைச் சாலைகளில் பயணிக்கும் பயணிகள் புகை பிடித்த பீடி, சிகரெட் துண்டுகளை வீச வேண்டாம். விவசாய நிலங்களை சுத்தம் செய்வதற்காக தீ வைப்பதற்கு முன் அருகிலுள்ள வனப் பணியாளா்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். கொடைக்கானல் வனப் பகுதிகளில் தொடா்ந்து வனப் பணியாளா்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா். எங்காவது தீப் பிடித்தால் அது குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.
- திண்டுக்கல் மாவட்டம் நாகல்புதூரில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் (குட்டவாத்தியார் பள்ளி) 100வது ஆண்டுவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள். மேலும் தற்போது பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.1
- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுநல ஆர்வலர் காளிராஜ் என்பவர் மனு அளித்தார். அந்த மனுவில்:- திண்டுக்கல்லை அடுத்த ரெட்டியார் சத்திரம் பகுதியில் அமைந்துள்ளது பாதாள செம்பு முருகன் கோவில். இக்கோயிலில் உள்ள சிலையை பற்றிய வரலாற்றின் உண்மைத் தன்மையை தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்திடவும், மேலும் தவறான வரலாற்று செய்திகளை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பி பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு கோவிலை நடத்தி வருகின்றனர். மேலும் கருங்காலி மாலை என்று சொல்லி ஒரு மாலை ரூ.1000 முதல் ரூ.5000 வரை விற்று பணம் சம்பாதிப்பதோடு மட்டுமல்லாமல், அந்த மாலையை அணிந்தால் பணம், புகழும் கிடைக்கும் பிரச்சனைகள் தீரும் என்று தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1
- வேடசந்தூர் பூதிபுரம் ஊராட்சியில் தைலா கவுண்டனூர் சீதப்பட்டி பூதிபுரம் குரும்பபட்டி மகாலட்சுமிபுரம் இந்தப் பகுதிகளில் நிறைய தெரு விளக்குகள் பழுதடைந்து இரவு நேரங்களில் பெண்கள் குழந்தைகள் நடமாட அச்சமடைந்து வந்தனர் இதை மாற்றிக் கொடுக்க ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர் அதன் அடிப்படையில் இன்று அனைத்து தெருவிளக்குகளையும் மாற்றி கொடுத்தனர் இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்1
- Post by RAJA news1
- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குமாரம் பகுதியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் முன்னாள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டு பேசினார்1
- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த சிறுகனூரில் நேற்று திமுக மாநாடு நடைபெற்றது . இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார் . பின்னர் விமானம் மூலம் சென்னை திரும்பினார். அதேநேரம் முதல்வர் விமான நிலையம் செல்லும் திருச்சி -புதுக்கோட்டை சாலையில் நாளை 11 ஆம் தேதி திருச்சி வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்று, வைக்கப்பட்டிருந்த பேனர்களை மாநகராட்சியினர் மற்றும் போலீசார் அகற்றி சாலையில் வீசி எறிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.1
- மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அழகர் கோவில் பயங்கர தீபத்தில் உரிய நடவடிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் அறநிலைத்துறையில் கேட்டுக்கொள்கிறீர்களா1
- Post by RAJA news1