திண்டுக்கல் ஊரக உட்கோட்டம் நத்தம் காவல் நிலையச் சரகம் நத்தம் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு நாளை 10.03.2026 ஆம் தேதி வழுக்குமரம் ஏறும் நிழ்வு அதனை தொடர்ந்து தீச்சட்டி மற்றும் பூக்குழி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கு நத்தம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து சுமார் ஒரு லட்சம் பேர் வரை கலந்து கொள்ள உள்ளனர். இந்த திருவிழா பாதுகாப்பு பணிக்கு திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் சார்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 4 காவல்துணைக்கண்காணிப்பாளர்கள் உட்பட சுமார் 500 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள். மேற்படி திருவிழா தொடர்பாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு தக்க அறிவுரை வழங்கினார்கள்.
திண்டுக்கல் ஊரக உட்கோட்டம் நத்தம் காவல் நிலையச் சரகம் நத்தம் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு நாளை 10.03.2026 ஆம் தேதி வழுக்குமரம் ஏறும் நிழ்வு அதனை தொடர்ந்து தீச்சட்டி மற்றும் பூக்குழி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கு நத்தம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து சுமார் ஒரு லட்சம் பேர் வரை கலந்து கொள்ள உள்ளனர். இந்த திருவிழா பாதுகாப்பு பணிக்கு திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் சார்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 4 காவல்துணைக்கண்காணிப்பாளர்கள் உட்பட சுமார் 500 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள். மேற்படி திருவிழா தொடர்பாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு தக்க அறிவுரை வழங்கினார்கள்.
- திண்டுக்கல் மாவட்டம் நாகல்புதூரில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் (குட்டவாத்தியார் பள்ளி) 100வது ஆண்டுவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள். மேலும் தற்போது பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.1
- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுநல ஆர்வலர் காளிராஜ் என்பவர் மனு அளித்தார். அந்த மனுவில்:- திண்டுக்கல்லை அடுத்த ரெட்டியார் சத்திரம் பகுதியில் அமைந்துள்ளது பாதாள செம்பு முருகன் கோவில். இக்கோயிலில் உள்ள சிலையை பற்றிய வரலாற்றின் உண்மைத் தன்மையை தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்திடவும், மேலும் தவறான வரலாற்று செய்திகளை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பி பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு கோவிலை நடத்தி வருகின்றனர். மேலும் கருங்காலி மாலை என்று சொல்லி ஒரு மாலை ரூ.1000 முதல் ரூ.5000 வரை விற்று பணம் சம்பாதிப்பதோடு மட்டுமல்லாமல், அந்த மாலையை அணிந்தால் பணம், புகழும் கிடைக்கும் பிரச்சனைகள் தீரும் என்று தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1
- Post by RAJA news1
- வேடசந்தூர் பூதிபுரம் ஊராட்சியில் தைலா கவுண்டனூர் சீதப்பட்டி பூதிபுரம் குரும்பபட்டி மகாலட்சுமிபுரம் இந்தப் பகுதிகளில் நிறைய தெரு விளக்குகள் பழுதடைந்து இரவு நேரங்களில் பெண்கள் குழந்தைகள் நடமாட அச்சமடைந்து வந்தனர் இதை மாற்றிக் கொடுக்க ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர் அதன் அடிப்படையில் இன்று அனைத்து தெருவிளக்குகளையும் மாற்றி கொடுத்தனர் இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்1
- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குமாரம் பகுதியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் முன்னாள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டு பேசினார்1
- திருச்சி: திமுக சார்பில் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் சிக்ஸர் அடித்து பிரம்மாண்ட வெற்றி பெற இப்போதே தயாராக வேண்டும் என அறைகூவல் விடுத்தார். மாநில உரிமைகளைத் தடுக்கும் நீட் தேர்வு, இந்தி திணிப்பு எனத் தமிழகத்திற்கு எதிராகச் செயல்படும் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்குத் தமிழகத்தில் எப்போதும் 'நோ என்ட்ரி' தான் எனத் தெரிவித்தார். திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ் மண்ணைக் காக்கவும் ஏழாவது முறையாக திமுகவே மீண்டும் வெல்லும் என அவர் உரையாற்றினார். (மாநாட்டின் பிரத்தியோக காட்சிகள்)1
- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த சிறுகனூரில் நேற்று திமுக மாநாடு நடைபெற்றது . இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார் . பின்னர் விமானம் மூலம் சென்னை திரும்பினார். அதேநேரம் முதல்வர் விமான நிலையம் செல்லும் திருச்சி -புதுக்கோட்டை சாலையில் நாளை 11 ஆம் தேதி திருச்சி வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்று, வைக்கப்பட்டிருந்த பேனர்களை மாநகராட்சியினர் மற்றும் போலீசார் அகற்றி சாலையில் வீசி எறிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.1
- Post by RAJA news1