logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஓசூரில் வளர்ந்து வரும் நகரத்தில் இளைய தலைமுறை முனைவோர்களுக்கு வியாபாரிகளுக்கான விழிப்புணர்வு நகர வளர்ச்சியோடு வியாபாரங்களும் முன்னேற வேண்டும் என்பதே வல்லுநர்களின் கருத்து. இதற்காக வியாபாரிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல்வேறு வழிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் ஓட்டலில் நடைபெற்ற கூட்டத்தில் YES அமைப்பின் சேர்மன் வி. நீதிமோகன் கலந்து கொண்டு, வியாபாரிகளுக்கு தேவையான நுணுக்கங்களை எடுத்துச் சொன்னார். அவர் உரையில், "வளர்ந்து வரும் நகரங்களில் வியாபாரிகள் முன்னோடிகளின் அனுபவத்தை கற்றுக்கொள்வதுடன், கருத்தரங்குகள், பயிற்சி முகாம்கள், நெட்வொர்க்கிங் நிகழ்வுகள் போன்றவற்றை பயன்படுத்திக் கொண்டு தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதேசமயம், டிஜிட்டல் உலகின் வாய்ப்புகளை சமூக ஊடகங்கள் மற்றும் இணையவழி கல்வி மூலமாக முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்" எனக் கூறினார். வியாபாரம் ஆரம்பிக்க உதவும் அரசு திட்டங்கள், நிதி உதவிகள், பங்குதாரர் வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், உள்ளூர் வெற்றிக் கதைகள் ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டால், சாதாரண வியாபாரிகளுக்கும் மிகப்பெரிய சாதனைகள் செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஊட்டப்படும் என்றார். இந்நிகழ்வில் பலரும் கலந்துகொண்டு, வியாபாரம் தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நகர வளர்ச்சியோடு வியாபாரிகளும் முன்னேற, இத்தகைய விழிப்புணர்வு நிகழ்வுகள் பெரும் பங்காற்றும் என கூட்டத்தில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

on 26 August
user_Selvam Selvam
Selvam Selvam
Journalist Krishnagiri•
on 26 August

ஓசூரில் வளர்ந்து வரும் நகரத்தில் இளைய தலைமுறை முனைவோர்களுக்கு வியாபாரிகளுக்கான விழிப்புணர்வு நகர வளர்ச்சியோடு வியாபாரங்களும் முன்னேற வேண்டும் என்பதே வல்லுநர்களின் கருத்து. இதற்காக வியாபாரிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல்வேறு வழிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் ஓட்டலில் நடைபெற்ற கூட்டத்தில் YES அமைப்பின் சேர்மன் வி. நீதிமோகன் கலந்து கொண்டு, வியாபாரிகளுக்கு தேவையான நுணுக்கங்களை எடுத்துச் சொன்னார். அவர் உரையில், "வளர்ந்து வரும் நகரங்களில் வியாபாரிகள் முன்னோடிகளின் அனுபவத்தை கற்றுக்கொள்வதுடன், கருத்தரங்குகள், பயிற்சி முகாம்கள், நெட்வொர்க்கிங் நிகழ்வுகள் போன்றவற்றை பயன்படுத்திக் கொண்டு தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதேசமயம், டிஜிட்டல் உலகின் வாய்ப்புகளை சமூக ஊடகங்கள் மற்றும் இணையவழி கல்வி மூலமாக முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்" எனக் கூறினார். வியாபாரம் ஆரம்பிக்க உதவும் அரசு திட்டங்கள், நிதி உதவிகள், பங்குதாரர் வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், உள்ளூர் வெற்றிக் கதைகள் ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டால், சாதாரண வியாபாரிகளுக்கும் மிகப்பெரிய சாதனைகள் செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஊட்டப்படும் என்றார். இந்நிகழ்வில் பலரும் கலந்துகொண்டு, வியாபாரம் தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நகர வளர்ச்சியோடு வியாபாரிகளும் முன்னேற, இத்தகைய விழிப்புணர்வு நிகழ்வுகள் பெரும் பங்காற்றும் என கூட்டத்தில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

More news from Namakkal and nearby areas
  • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் அத்தனூரில் மார்கழி மாத இரண்டாம் நாள் பஜனைகள் நடைபெற்றன
    1
    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் அத்தனூரில் மார்கழி மாத இரண்டாம் நாள் பஜனைகள் நடைபெற்றன
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Architect Namakkal•
    7 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent Ranipet•
    52 min ago
  • இரவின் மடியில்.
    1
    இரவின் மடியில்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore•
    9 min ago
  • பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள சர்க்கார் பதி (Sarkarpathi), இயற்கை எழில் கொஞ்சும் ஆனைமலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான இடமாகும். இதன் வரலாறு முக்கியமாக பரம்பிக்குளம் - ஆழியாறு (PAP) திட்டத்தோடும், மின்சார உற்பத்தியோடும் நெருங்கிய தொடர்புடையது. ​சர்க்கார் பதியின் முக்கிய வரலாற்று மற்றும் சிறப்பம்சங்கள் இதோ: ​1. மின் உற்பத்தி நிலையம் (Sarkarpathy Power House) ​சர்க்கார் பதியின் நவீன கால வரலாறு 1960-களில் தொடங்குகிறது. ​தொடக்கம்: இங்குள்ள நீர்மின் உற்பத்தி நிலையம் 1966-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. ​திறன்: இது 30 மெகாவாட் (30 MW) மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. ​செயல்பாடு: பரம்பிக்குளம் மற்றும் தூணக்கடவு அணைகளில் இருந்து வரும் தண்ணீர், ஒரு சுரங்கப்பாதை வழியாக சர்க்கார் பதிக்கு கொண்டு வரப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இங்கிருந்து வெளியேறும் தண்ணீர் மீண்டும் ஆழியாறு அணைக்குச் செல்கிறது. ​2. பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் (PAP Project) ​சர்க்கார் பதி என்பது இந்த பிரம்மாண்டமான நீர் மேலாண்மை திட்டத்தின் ஒரு முக்கியப் புள்ளியாகும். கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் ஒப்பந்தத்தின்படி, மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளைத் திருப்பி, விவசாயம் மற்றும் மின்சாரத்திற்காகப் பயன்படுத்தும் திட்டத்தில் சர்க்கார் பதி ஒரு பாலமாகச் செயல்படுகிறது. ​3. பழங்குடியினர் வரலாறு ​"பதி" என்ற சொல்லே பழங்குடியின மக்களின் வாழ்விடத்தைக் குறிப்பதாகும் (உதாரணமாக: ஒழலப்பதி, சர்க்கார் பதி). இந்தப் பகுதியில் காலங்காலமாக மலசர், மலை மலசர் போன்ற பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் முறைகள் ஆனைமலைக் காடுகளுடன் பிணைந்துள்ளன. ​4. இயற்கை மற்றும் சுற்றுலா ​அமைவிடம்: இது ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியில் அமைந்துள்ளது. அடர்ந்த காடுகள் மற்றும் யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாகும். ​சிறப்பு: இங்கிருந்து டாப்ஸ்லிப் (Topslip) செல்லும் பாதை மிகவும் அழகானது. இங்குள்ள "சர்க்கார் பதி நிலத்தடி மின் நிலையம்" ஆசியாவிலேயே குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ​சுருக்கமாக: சர்க்கார் பதி என்பது வெறும் ஊர் மட்டுமல்ல, தமிழகத்தின் மின்சாரம் மற்றும் விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு முக்கியத் தொழில்நுட்ப மையமாகவும், பழங்குடி மக்களின் பூர்வீக நிலமாகவும் விளங்குகிறது.
    1
    பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள சர்க்கார் பதி (Sarkarpathi), இயற்கை எழில் கொஞ்சும் ஆனைமலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான இடமாகும். இதன் வரலாறு முக்கியமாக பரம்பிக்குளம் - ஆழியாறு (PAP) திட்டத்தோடும், மின்சார உற்பத்தியோடும் நெருங்கிய தொடர்புடையது.
​சர்க்கார் பதியின் முக்கிய வரலாற்று மற்றும் சிறப்பம்சங்கள் இதோ:
​1. மின் உற்பத்தி நிலையம் (Sarkarpathy Power House)
​சர்க்கார் பதியின் நவீன கால வரலாறு 1960-களில் தொடங்குகிறது.
​தொடக்கம்: இங்குள்ள நீர்மின் உற்பத்தி நிலையம் 1966-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது.
​திறன்: இது 30 மெகாவாட் (30 MW) மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
​செயல்பாடு: பரம்பிக்குளம் மற்றும் தூணக்கடவு அணைகளில் இருந்து வரும் தண்ணீர், ஒரு சுரங்கப்பாதை வழியாக சர்க்கார் பதிக்கு கொண்டு வரப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இங்கிருந்து வெளியேறும் தண்ணீர் மீண்டும் ஆழியாறு அணைக்குச் செல்கிறது.
​2. பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் (PAP Project)
​சர்க்கார் பதி என்பது இந்த பிரம்மாண்டமான நீர் மேலாண்மை திட்டத்தின் ஒரு முக்கியப் புள்ளியாகும். கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் ஒப்பந்தத்தின்படி, மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளைத் திருப்பி, விவசாயம் மற்றும் மின்சாரத்திற்காகப் பயன்படுத்தும் திட்டத்தில் சர்க்கார் பதி ஒரு பாலமாகச் செயல்படுகிறது.
​3. பழங்குடியினர் வரலாறு
​"பதி" என்ற சொல்லே பழங்குடியின மக்களின் வாழ்விடத்தைக் குறிப்பதாகும் (உதாரணமாக: ஒழலப்பதி, சர்க்கார் பதி). இந்தப் பகுதியில் காலங்காலமாக மலசர், மலை மலசர் போன்ற பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் முறைகள் ஆனைமலைக் காடுகளுடன் பிணைந்துள்ளன.
​4. இயற்கை மற்றும் சுற்றுலா
​அமைவிடம்: இது ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியில் அமைந்துள்ளது. அடர்ந்த காடுகள் மற்றும் யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாகும்.
​சிறப்பு: இங்கிருந்து டாப்ஸ்லிப் (Topslip) செல்லும் பாதை மிகவும் அழகானது. இங்குள்ள "சர்க்கார் பதி நிலத்தடி மின் நிலையம்" ஆசியாவிலேயே குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
​சுருக்கமாக: சர்க்கார் பதி என்பது வெறும் ஊர் மட்டுமல்ல, தமிழகத்தின் மின்சாரம் மற்றும் விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு முக்கியத் தொழில்நுட்ப மையமாகவும், பழங்குடி மக்களின் பூர்வீக நிலமாகவும் விளங்குகிறது.
    user_Varun pradeep B
    Varun pradeep B
    Political party office Coimbatore•
    4 hrs ago
  • Post by Mr Mr. Gandhi
    1
    Post by Mr Mr. Gandhi
    user_Mr Mr. Gandhi
    Mr Mr. Gandhi
    Virudhunagar•
    3 hrs ago
  • Post by N balu Nbalu
    1
    Post by N balu Nbalu
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukudi•
    1 hr ago
  • தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித்தலைவர் தங்கத்தளபதி அவர்கள் உத்தரவுகிணங்க,* கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் Ex.MLA,. வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மத்திய மாவட்ட கழக செயலாளர் மதன்ராஜா தலைமையில், தூத்துக்குடி மத்திய மாவட்ட நிர்வாகிகள்:சுதாகர், வசந்தி, கெளதம் பாண்டியன் வழக்கறிஞர் நிர்மல், அருண்பிரகாஷ், தீனதயாளன், ஆகியோர் முன்னிலையில், தூத்துக்குடி மத்திய மாவட்டம், தூத்துக்குடி வடக்கு ஒன்றியம் இந்திராநகர் பகுதியில், தூத்துக்குடி வடக்கு ஒன்றியச் செயலாளர் சேவியர் ஏற்பாட்டிலும், தூத்துக்குடி மத்திய ஒன்றியம் கோரம்பள்ளம் பகுதியில், தூத்துக்குடி மத்திய ஒன்றியச் செயலாளர் ஜெபஸ்துராஜ் அவர்கள் ஏற்பாட்டிலும், அந்தந்த ஒன்றியக் கழகங்கள் சார்பில், ஆலோசனைக்கூட்டங்கள் நடைபெற்றது.. இந்நிகழ்வில், கழக வழக்கறிஞர் தவிஜூ மாவட்ட அணி நிர்வாகிகள்: அருள்ராஜ் முனிஸ்வரன் செல்வன்.ஈஸ்வர் உறுப்பினர் சேர்க்கை அணி தொகுதி இணை ஒருங்கிணைப்பாளர் செல்வன்.கரண் குமார் மற்றும் தூத்துக்குடி வடக்கு மற்றும் மத்திய ஒன்றிய மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
    1
    தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித்தலைவர் தங்கத்தளபதி அவர்கள் உத்தரவுகிணங்க,*
கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் Ex.MLA,.  வழிகாட்டுதலின்படி,
தூத்துக்குடி மத்திய மாவட்ட கழக செயலாளர் மதன்ராஜா தலைமையில்,
தூத்துக்குடி மத்திய மாவட்ட நிர்வாகிகள்:சுதாகர்,
வசந்தி,
கெளதம் பாண்டியன் வழக்கறிஞர் நிர்மல்,
அருண்பிரகாஷ்,
தீனதயாளன்,
ஆகியோர் முன்னிலையில்,
தூத்துக்குடி மத்திய மாவட்டம், தூத்துக்குடி வடக்கு ஒன்றியம் இந்திராநகர் பகுதியில், தூத்துக்குடி வடக்கு ஒன்றியச் செயலாளர் சேவியர்  ஏற்பாட்டிலும்,
தூத்துக்குடி மத்திய ஒன்றியம்  கோரம்பள்ளம் பகுதியில், தூத்துக்குடி மத்திய ஒன்றியச் செயலாளர் ஜெபஸ்துராஜ் அவர்கள் ஏற்பாட்டிலும்,
அந்தந்த ஒன்றியக் கழகங்கள் சார்பில், ஆலோசனைக்கூட்டங்கள் நடைபெற்றது..
இந்நிகழ்வில்,
கழக வழக்கறிஞர் தவிஜூ
மாவட்ட அணி நிர்வாகிகள்:
அருள்ராஜ்
முனிஸ்வரன்
செல்வன்.ஈஸ்வர்
உறுப்பினர் சேர்க்கை அணி தொகுதி இணை ஒருங்கிணைப்பாளர் செல்வன்.கரண் குமார்
மற்றும்
தூத்துக்குடி வடக்கு மற்றும் மத்திய ஒன்றிய மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukudi•
    4 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent Ranipet•
    53 min ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.