10.01.2026_ADP_2047 INDIA EXIBITION. பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவை கண்முன் காட்டும் விதமாக வளர்ச்சி பெற்ற இந்தியாவாக 2047ஆம் ஆண்டு இந்தியா எப்படி இருக்கும் என்ற கற்பனையை வைத்து விக்சித் பாரத் 2047 என்ற தலைப்பில்- ஆண்டிபட்டியில் உள்ள டைமன் வித்யாலயா தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் இந்திய ராணுவ வீரர்களுக்கான தொழில்நுட்ப கருவியுடன் கூடிய ஸ்மார்ட் யூனிபார்ம், அசுர வளர்ச்சி பெற்று வரும் A I பயன்பாடு , இயந்திர மனிதர்கள மூலம் நவீன மருத்துவம், நவீன விவசாய நீரேற்றும் கருவி உள்ளிட்ட பல்வேறு படைப்புகளை மாணவ மாணவிகள் படைத்திருந்தது பெற்றோர் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் அமைந்துள்ள டைமன் வித்யாலயா தனியார் பள்ளியில் வளர்ச்சி பெற்ற இந்தியா எப்படி இருக்கும் என்ற கற்பனையில் பாரத் விக்சித் 2047 என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.பள்ளியின் தாளாளர் டைமன் பாண்டி செல்வம் தலைமை தாங்கி இந்த அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்த நிலையில் பள்ளியில் உள்ள மூன்று தளங்களிலும் மாணவர்கள் தங்களது அறிவியல் கண்காட்சி படைப்புகளை செய்து காட்சிபடுத்தியிருந்தனர்.1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற இந்தியா 2047 ஆம் ஆண்ட வல்லரசு நாடாக உயர்ந்து வளர்ச்சி பெற்று எப்படி இருக்கும் என பராக் பிரதமர் நரேந்திர மோடி கூறிவரும் கற்பனையில் பல்வேறு அறிவியல் காட்சி படைப்புகள் படைக்கப்பட்டிருந்தன.அதில் குறிப்பாக நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ராணுவ வீரரின் நவீன தகவல் தொடர்பு கருவியுடன் கூடிய ஸ்மார்ட் யூனிபார்ம், நவீன விவசாய நீரேற்றும் கருவி, காற்றாலை மின்சாரம் தயாரித்தல், விண்வெளி மையம் மற்றும் இயந்திர மனிதர்கள் மூலம் நவீன மருத்துவம் தொடர்பான படைப்புகளும் தற்போது அசுர வளர்ச்சி அடைந்து வரும் A I பயன்பாடு குறித்த செயல் விளக்கங்களும் அறிவியல் கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டிருந்தது.இதனை வந்து பார்த்த பொதுமக்கள், மாணவ மாணவிகளின் பெற்றோர் ஏராளமானோர், மாணவ மாணவிகளின் அறிவியல் திறனை வியந்து பாராட்டினர்
10.01.2026_ADP_2047 INDIA EXIBITION. பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவை கண்முன் காட்டும் விதமாக வளர்ச்சி பெற்ற இந்தியாவாக 2047ஆம் ஆண்டு இந்தியா எப்படி இருக்கும் என்ற கற்பனையை வைத்து விக்சித் பாரத் 2047 என்ற தலைப்பில்- ஆண்டிபட்டியில் உள்ள டைமன் வித்யாலயா தனியார் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் இந்திய ராணுவ வீரர்களுக்கான தொழில்நுட்ப கருவியுடன் கூடிய ஸ்மார்ட் யூனிபார்ம், அசுர வளர்ச்சி பெற்று வரும் A I பயன்பாடு , இயந்திர மனிதர்கள மூலம் நவீன மருத்துவம், நவீன விவசாய நீரேற்றும் கருவி உள்ளிட்ட பல்வேறு படைப்புகளை மாணவ மாணவிகள் படைத்திருந்தது பெற்றோர் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் அமைந்துள்ள டைமன் வித்யாலயா தனியார் பள்ளியில் வளர்ச்சி பெற்ற இந்தியா எப்படி இருக்கும் என்ற கற்பனையில் பாரத் விக்சித் 2047 என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.பள்ளியின் தாளாளர் டைமன் பாண்டி செல்வம் தலைமை தாங்கி இந்த அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்த நிலையில் பள்ளியில் உள்ள மூன்று தளங்களிலும் மாணவர்கள் தங்களது அறிவியல் கண்காட்சி படைப்புகளை செய்து காட்சிபடுத்தியிருந்தனர்.1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற இந்தியா 2047 ஆம் ஆண்ட வல்லரசு நாடாக உயர்ந்து வளர்ச்சி பெற்று எப்படி இருக்கும் என பராக் பிரதமர் நரேந்திர மோடி கூறிவரும் கற்பனையில் பல்வேறு அறிவியல் காட்சி படைப்புகள் படைக்கப்பட்டிருந்தன.அதில் குறிப்பாக நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ராணுவ வீரரின் நவீன தகவல் தொடர்பு கருவியுடன் கூடிய ஸ்மார்ட் யூனிபார்ம், நவீன விவசாய நீரேற்றும் கருவி, காற்றாலை மின்சாரம் தயாரித்தல், விண்வெளி மையம் மற்றும் இயந்திர மனிதர்கள் மூலம் நவீன மருத்துவம் தொடர்பான படைப்புகளும் தற்போது அசுர வளர்ச்சி அடைந்து வரும் A I பயன்பாடு குறித்த செயல் விளக்கங்களும் அறிவியல் கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டிருந்தது.இதனை வந்து பார்த்த பொதுமக்கள், மாணவ மாணவிகளின் பெற்றோர் ஏராளமானோர், மாணவ மாணவிகளின் அறிவியல் திறனை வியந்து பாராட்டினர்
- ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது எப்பொழுதும் கிடையாது அமைச்சர் பேச்சு திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுகவை பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பது என்பது எப்பொழுதும் கிடையாது என்றும், தனிப்பட்ட முறையில் ஆட்சி தான் என்றும், தமிழக முதல்வர் உறுதியாக உள்ளார் என்றும் தெரிவித்தார். மேலும், தைத்திருநாளை முன்னிட்டு பெண்களுக்கு இனிப்பான புதிய அறிவிப்பை தமிழக முதல்வர் அறிவிக்க உள்ளார் என்றும் அவர் கூறினார்.1
- கரூரை அடுத்த குளித்தலை அருகே மணத்தட்டை காவிரி ஆற்றின் படுகையிலிருந்து காவிரி குடிநீர் மணப்பாறை-குளித்தலை சாலையோரம் குழாய்கள் பதிக்கப்பட்டு மணப்பாறை மற்றும் மருங்காபுரி பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை மணப்பாறை அடுத்த கலிங்கப்பட்டி அருகே அமைத்துள்ள 2மீட்டர் அகலமும், 46.6 மீட்டர் நீளம் கொண்ட காவிரி குடிநீர் பிரதான குழாய் திடீரென உடைப்பு ஏற்பட்டு சுமார் 10 அடி தூரத்திற்கு குடிநீர் நாலாபக்கமும் பீறிட்டு அடித்து வருகிறது. இதையறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- இது உண்மையா இல்லை AI யா.1
- தென்காசி அருகே இன்ஜின் கோளாறால் செங்கோட்டை–நெல்லை பயணிகள் ரயில் நடுவழியில் நின்று, மாற்று என்ஜின் மூலம் தாமதமாக புறப்பட்டது.1
- திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகே சேலத்தில் இருந்து கொடுமுடி நோக்கிச் சென்ற வந்த ஆம்னி வேனுக்குள்இருந்து திடீர் புகை எழுந்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று காருக்குள் இருந்த பெண்களை மீட்டு தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ பிடிக்காமல் தடுத்தனர். கேஸ் வண்டி என்பதால் திடீரென புகை எழுந்துள்ளது.இதுகுறித்து விசாரித்தபோதுகொடுமுடியைச் சேர்ந்த அன்வர் அலி என்பவரது மகன் இமாம் ஜாபர் சாதிக் என்பவருக்கு சொந்தமான ஆம்னி வேனில் சேலத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு ஓட்டுநர், 5 பெண்கள் 2 குழந்தைகள் ஒரு குழுவினரும் மற்றவர்கள் ஒரு டெம்போ ட்ராவலர் வேனிலும் சென்றுள்ளனர். திருமணம் முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது டெம்போ ட்ராவலர் வேன் முன்னால் சென்றுவிட பின்னால் அன்வர் அலியின் மருமகன் அக்பர்லி ஓட்டி வந்தஆம்னி வேன் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகே வரும்போது ஆம்னி வேனுக்குள் திடீரென புகை எழ ஆரம்பித்தது உடனடியாக காரை அக்பர் அலி ஓரம் கட்டி நிறுத்திய நிலையில் புகையுடன் கார் நிற்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் காரின் கதவுகளை திறந்து காருக்குள் இருந்தவர்களை மீட்டு அருகில் அமர வைத்தனர்.அந்த வழியாக வந்த கார் மெக்கானிக் ஒருவர் கேஸ் வெடித்து தீ பரவாமல் தடுக்க கார் கேஸ் குழாயைதுண்டித்தார் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. உடனடியாக காருக்குள் இருந்து கீழே இறங்கி விடப்பட்ட ஐந்து பெண்கள் இரண்டு குழந்தைகளும் பதட்டம் அடைந்தனர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து சம்பவ இடத்திற்கு நிலைய அலுவர் கரிகாலன்உத்தரவன் பேரில், சிறப்பு உதவிநிலைய அலுவலர் நடராஜன் தலைமையில் வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர் மேலும் தீ விபத்து ஏற்பட்டு விடாமல் பாதுகாத்தனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காரை சாய்த்து காருக்குள் புகை வந்த இடம் முழுவதும் தண்ணீரை பீச்சி அடித்து புகையை கட்டுப்படுத்தினர்.காருக்குள் காரை ஓட்டி வந்த அக்பர் அலி அவரது மனைவி,அன்வர் அலியின் மனைவியும், அக்பர் அலியின் மாமியார் மற்றும் அன்வர் அலியின் தங்கை தம்பி மகள்கள் இரண்டு பேர் மற்றும் இரண்டு குழந்தைகள் இருந்து உள்ளனர். அதில்காருக்குள் புகை எழுந்ததால் அன்வர் அலியின் மனைவி மிகவும் பதட்டமான நிலையில் காணப்பட்டார். உடனடியாகதகவல் அறிந்து விரைந்து வந்த உறவினர்கள் அவரை ஆசுவாசப் படுத்திய வேறு காரில் அவரை ஊருக்கு அழைத்துச் சென்றனர்.சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சம்பவத்தால் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு பரபரப்பு ஏற்பட்டது.1
- ♦️மாண்புமிகு துணை முதலமைச்சர் கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48 -வது பிறந்தநாள் மற்றும் திராவிட பொங்கலை முன்னிட்டு 11.01.2026 அன்று காலை 11மணியளவில், டவுன் அருணகிரி தியேட்டர் அருகில் லிட்டில் பிலோவேர் மெட்ரிகுலேஷன் பள்ளி மைதானத்தில் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர், பாளை சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மு. அப்துல் வஹாப் அவர்கள் தலைமையில் 1000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வட்ட கழக செயலாளர் களுக்கு , சட்டை, T. சர்ட் வழங்கும் நிகழ்ச்சி சீறும் சிறுப்புடன் நடைபெற்றது கலந்து கொண்ட கழக நிர்வாகிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி🙏 ♦️KR. ராஜூ* ♦️துணை மேயர் - ⭐திருநெல்வேலி மாநகராட்சி⭐ ♦️தலைமை பொதுக்குழு உறுப்பினர்♦️1
- தேவதானப்பட்டி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தில் கூடாரவல்லி முன்னிட்டு பெண்கள் திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் செய்தனர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதியில் அமைந்துள்ள இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் மார்கழி மாதம் 27ஆம் தேதி கூடாரவல்லி முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜை நடைபெற்றது இதில் பெண்கள் வாழை இலையில் வளையல் மஞ்சள் குங்குமம் மற்றும் குத்துவிளக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு குடும்ப பிரச்சினைகள், மாணவர்களின் கல்வி, தொழில், விவசாயம் உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர் அதனைத் தொடர்ந்து ஸ்ரீ பத்ரகாளியம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரணைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் அதன்பின்பு இந்து நாடார் உறவின்முறை சமுதாயம் சார்பாக திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண் பக்தர்களுக்கு அன்பளிப்பு மற்றும் பிரசாதங்கள் வழங்கினார்1
- திண்டுக்கல் திமுகவில் இணைந்த தவெகவினர் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தவெக தெற்கு ஒன்றிய செயலாளர் பால்பாண்டி தலைமையில் 37 நிர்வாகிகள் 300 உறுப்பினர்கள் சித்தரேவு ஊராட்சியில் இருந்து கொடைக்கானல் திமுக கீழ் மலை தெற்கு ஒன்றிய செயலாளர் ஐயப்பன் மூலமாக 15 க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக வந்து திண்டுக்கல் மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சரும் திமுக துணை பொதுச்செயலாளரும் ஆத்தூர் சட்டமன்றத் உறுப்பினர் ஐ பெரியசாமி மற்றும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர் தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி செந்தில் குமார் வாழ்த்துக்களை தெராவித்தனர்1
- தெரிந்து கொள்ள வேண்டிய நூல்கள் பாட்டு மற்றும் பரதம் வடிவில்.1