Shuru
Apke Nagar Ki App…
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை காவல் எல்லைக்குட்பட்ட குறிச்சி ராக்கி அண்ணன் கோயிலில் கடந்த 7-ம் தேதி பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்றது. இதுகுறித்து போலீசார் தேடி வந்த நிலையில், இன்று (11.7.26) சித்தார் அருகே வாகன சோதனையின் போது திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த சபாபதி (32) பிடிபட்டார். அவரை அம்மாபேட்டை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Reporter Meganathan
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை காவல் எல்லைக்குட்பட்ட குறிச்சி ராக்கி அண்ணன் கோயிலில் கடந்த 7-ம் தேதி பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்றது. இதுகுறித்து போலீசார் தேடி வந்த நிலையில், இன்று (11.7.26) சித்தார் அருகே வாகன சோதனையின் போது திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த சபாபதி (32) பிடிபட்டார். அவரை அம்மாபேட்டை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- ஈரோடு மாவட்டம் பவானி அருகே வரதநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் பவானி நர்சிங் கல்லூரி சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை பவானி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி கஸ்தூரி கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் கல்லூரியில் பயிலும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு போதைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பவானி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு தொடங்கிய இப்பேரணியானது, பவானி நகரின் பிரதான சாலைகள் வழியாக பவானி பழைய பேருந்து நிலையம் வரை சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.1
- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகரின் வடக்குப்பேட்டை பகுதியில் குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். புலிகள் காப்பக வனப்பகுதி சத்தியமங்கலத்திற்கு அருகே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நிலையில், அங்கிருந்து உணவு தேடி வரும் குரங்குகள் வடக்குப்பேட்டை பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலக மரத்தில் முகாமிட்டுள்ளன. இந்தக் குரங்குகள் காலை வேளைகளில் அப்பகுதியில் உள்ள வீடுகள், கடைகள், ஹோட்டல்கள் மற்றும் மருத்துவமனை வளாகங்களுக்குள் புகுந்து பொதுமக்களுக்குத் தொல்லை கொடுத்து வருகின்றன. குறிப்பாக, கடைகளில் இருக்கும் பொருட்களைத் தூக்கிச் செல்லும் குரங்குகள், மக்களை அச்சுறுத்தும் வகையிலும் செயல்படுகின்றன. மாலை நேரங்களில் மீண்டும் அந்த மரத்திற்கே திரும்பிச் சென்று தங்கும் இந்த குரங்குகளின் அட்டகாசத்தால், மக்கள் வீட்டின் கதவுகளைத் திறக்கவே அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. குரங்குகளின் இந்தத் தொல்லையிலிருந்து விடுபட, வனத்துறையினர் உடனடியாகக் கூண்டு வைத்து அவற்றைப் பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- சேலத்திலுள்ள நீட் எதிர்ப்பு கருத்தரங்கில் கலந்து கொண்ட பின்னர், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தென்னிந்திய திரையுலகின் முக்கிய பாடகியான ஜானகி அம்மாவின் மறைவு திரையுலகிற்குப் மிகப்பெரிய பேரிழப்பு என்றும், அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து நீட் தேர்வு குறித்துப் பேசிய அவர், 2026-ல் ஐந்து குழந்தைகள் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட போதிலும், கோவையில் ஒரு மாணவியின் குடும்பத்தினரை சிபிஎம் சந்தித்ததைத் தவிர வேறு யாரும் இதுபற்றிப் பேசவில்லை என்று குற்றம்சாட்டினார். நீட் தேர்வால் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் அமைதியாக இருப்பது ஏன் என்றும், நமது குழந்தைகளின் இறப்பு சாதாரணமானதாகி விட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே நீட் தேர்வு கூடாது என்பதே காங்கிரஸின் நிலைப்பாடு என்று கூறிய அவர், இதுவரை 90 முறை வினாத்தாள் கசிந்துள்ளதாகவும், இவை அனைத்தும் பாஜக ஆளும் மாநிலங்களிலேயே திட்டமிட்டபடி நடப்பதாகவும் சாடினார். ஆண்டுக்கு ₹1.26 லட்சம் கோடிக்கு கோச்சிங் சென்டர்கள் மூலம் வணிகம் நடப்பதாகக் குறிப்பிட்ட அவர், வினாத்தாள் கசிந்த இடங்களை விட்டுவிட்டு ராணுவ விமானங்கள் மூலம் வினாத்தாள்களை அனுப்பி மக்களை திசை திருப்பப் பார்ப்பதாகக் கூறினார். இவற்றுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்பதை குளிர்கால கூட்டத்தொடரில் எழுப்புவோம் என்றும், ராகுல் காந்தி பிரதமரானவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மாணிக்கம் தாகூர், மத்திய அரசு தமிழகத்திற்கு ஓரவஞ்சம் செய்யக்கூடாது என்றார். கர்நாடகாவில் அனைத்து அரசியல்வாதிகளும் ஒற்றுமையாக இருப்பதைப் போல தமிழகத்தில் ஒற்றுமை இல்லை என்று வருத்தம் தெரிவித்த அவர், காவிரி பிரச்சினையை தமிழக அரசு சட்டப்பூர்வமாக அணுகி, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்றார். ராகுல் காந்தி பிரதமரானதும் மேகதாது அணை பிரச்சினையில் சரியான தீர்வு கிடைக்கும் என்றும், தமிழக அரசிடம் கேட்காமல் அணை கட்ட முடியாது என்பதால் அதை ராகுல் காந்தி நியாயமான முறையில் செய்வார் என்றும் கூறினார். பிரதமர் மோடி மேகதாது விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது என்றும், தமிழக பாஜக தலைவர்கள் மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளையும் முதலமைச்சர்தான் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும், கூட்டணி அரசில் அங்கம் வகிப்பதால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தனிப்பட்ட முறையில் முதலமைச்சரிடம் தெரிவிப்போம், அதைப் பொதுவில் சொல்வது சரியாக இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார். ஏழைகளுக்கு ஏதாவது கிடைத்தால் பணக்காரர்களுக்குப் பொறுக்காது என்று சாடிய அவர், கரூரில் வழங்கப்பட்டுள்ள சிறிய அளவிலான வேலைவாய்ப்புகள் மூலம் ஏழைக் குடும்பங்கள் பாதுகாக்கப்படுவது மனிதாபிமான முறையில் வரவேற்புக்குரியது என்றார். மேலும், இடைத்தேர்தலைச் சந்திக்கப் பயந்து பாஜக யாரையாவது அனுப்பி நீதிமன்றத் தடை பெறுகிறது என்று குற்றம்சாட்டிய அவர், தேர்தல் ஆணையம் உரிய முறையில் 6 மாதத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்பதே தங்களின் நிலைப்பாடு என்று கூறினார்.2
- சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா முத்துநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரேம்ராஜ் பிரகாஷ், உஸ்பெகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சேலம் மாவட்டத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பெரும் பெருமை சேர்த்துள்ளார். ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் நகரில் இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் XI மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டியில், உஸ்பெகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனில் 6-வது வீரராகப் பிரேம்ராஜ் பிரகாஷ் களம் இறங்கி விளையாடினார். இதுபோன்ற ஒரு குக்கிராமத்தில் இருந்து வெளிநாட்டு தேசிய அணிக்காக ஒரு வீரர் விளையாடுவது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பெருமைக்குரிய விஷயமாகக் கருதப்படுகிறது. நமது ஊரின் இந்த மாபெரும் பெருமையை மற்றவர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துமாறு பெருமிதத்துடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.1
- கரூர் மாவட்டத்தில் உள்ள 3,084 ஏக்கர் கோயில் நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, புகழிமலை முருகன் கோயில் மற்றும் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களின் பத்திரப்பதிவுக்கான தடையும் விலக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட ஆட்சியர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், அறநிலையத்துறை ஆணையர் இந்த தடை நீக்க உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.1
- சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளாளபுரம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் – புவனேஸ்வரி தம்பதியினரின் மகள் கோபிகா, நீட் தேர்வு பயத்தால் கடந்த மாதம் உயிரிழந்தார். இந்த சோகமான சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த்குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கோபிகாவின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியையும் வழங்கினர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், அனிதா உயிரிழந்த சம்பவத்தில் இருந்து தற்போது வரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு காரணமாக 37 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக வேதனையோடு தெரிவித்தார். இந்த உயிரிழப்புகள் குறித்து நாடு முழுவதும் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், நீட் தேர்வு முறை முற்றிலும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மோடி அரசும் அமித் ஷாவும் தான் இதற்கு காரணம் என்றும், இதற்குப் பின்னால் கோச்சிங் சென்டர் மாபியாவின் ஆதிக்கம் இருப்பதாகவும் அவர் சாடினார். தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுதோறும் சுமார் ஐந்தாயிரம் கோடி ரூபாய் வரை கோச்சிங் மையங்கள் மூலம் வசூலிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், வரும் 2029-ஆம் ஆண்டு ராகுல் காந்தி பிரதமராக பதவியேற்றால், நாடு முழுவதும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அவர் உறுதியளித்தார். இதற்கிடையே, செய்தியாளர்கள் மேகதாது அணை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க மறுத்த மாணிக்கம் தாகூர், அங்கிருந்து உடனடியாக புறப்பட்டுச் சென்றார். இந்த நிகழ்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் கிரிஸ்டோபர் திலக், சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி, சேலம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரத்தினவேல் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் உடனிருந்தனர்.1
- கோயம்புத்தூர் தடாகம் சாலையில் ஓரமாக பைக்கில் சென்று கொண்டிருந்த நபர் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற அரசு பேருந்தின் காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதில் பைக் மீது அரசு பேருந்து மோதிய போதிலும், பைக்கில் வந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.1