logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஒரு நாள் இரவில் மட்டும் 25 மாடுகள் பறிமுதல். தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் மாடுகள் திரிவதால் வாகன ஓட்டுனர்களுக்கும் பொது மக்களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது கடந்த வாரம் 35 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவின்பேரில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆலோசனையின் படி நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா மேற்பார்வையில் சுகாதார அலுவலர் ராஜபாண்டி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் பணியாளர்கள் மாநகராட்சி பணியாளர்கள் வியாழக்கிழமை இரவு ஒரு மணி அளவில் பாளை ரோடு அரசு பாலிடெக்னிக் முன்பு சாலைகளில் திரிந்த எட்டு மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பின்பு முத்தையாபுரம், முள்ளக்காடு, ஸ்பிக் நகர் ஆகிய பகுதிகளில் சாலைகளில் இரவு நேரத்தில் போக்குவரத்து இடையூறாக தெரிந்த 17 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் இரவு 4 மணி நேரம் தொடர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 17 பெரிய மாடுகளும் 8 கன்றுக்குட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டு மாநகராட்சி கோசாலையில் கொண்டு ஒப்படைக்கப்பட்டது. பிடிக்கப்பட்ட மாடுகளுக்கு மாநகராட்சி சார்பில் நாத்து கொடுக்கப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட மாடுகளை மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா சுகாதார அலுவல ராஜபாண்டி நேரில் சென்று மாடுகளை பார்வையிட்டு மாடுகளுக்கு தேவையான உணவுகளை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்று அங்கு பணியில் இருந்த பணியாளர்களுக்கு உத்தரவிட்டனர். மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவிக்கையில்: பொதுமக்களுக்கு இடையூறாகவும் வாகனத்துக்கு இடையூறாகவும் மாநகராட்சி பகுதிகளில் மாடுகளை சாலைகளில் திரிவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. தொடர்ந்து இதுபோல செயல்களில் ஈடுபட்டால் மாடுகளை பறிமுதல் செய்யப்பட்டு தென்காசியில் உள்ள கோசாலைகளில் ஒப்படைக்கப்படும் என்று மேயர் ஜெகன் தெரிவித்துள்ளார். ஒரே நாளில் நள்ளிரவில் 25 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

1 hr ago
user_மா.சுடலைமணி
மா.சுடலைமணி
Journalist Thoothukkudi, Tuticorin•
1 hr ago
99d18018-9224-4f92-a7ba-c8eba3211519

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஒரு நாள் இரவில் மட்டும் 25 மாடுகள் பறிமுதல். தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் மாடுகள் திரிவதால் வாகன ஓட்டுனர்களுக்கும் பொது மக்களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது கடந்த வாரம் 35 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவின்பேரில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆலோசனையின் படி நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா மேற்பார்வையில் சுகாதார அலுவலர் ராஜபாண்டி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் பணியாளர்கள் மாநகராட்சி பணியாளர்கள் வியாழக்கிழமை இரவு ஒரு மணி அளவில் பாளை ரோடு அரசு பாலிடெக்னிக் முன்பு சாலைகளில் திரிந்த எட்டு மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பின்பு முத்தையாபுரம், முள்ளக்காடு, ஸ்பிக் நகர் ஆகிய பகுதிகளில் சாலைகளில் இரவு நேரத்தில் போக்குவரத்து இடையூறாக தெரிந்த 17 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் இரவு 4 மணி நேரம் தொடர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 17 பெரிய மாடுகளும் 8 கன்றுக்குட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டு மாநகராட்சி கோசாலையில் கொண்டு ஒப்படைக்கப்பட்டது. பிடிக்கப்பட்ட மாடுகளுக்கு மாநகராட்சி சார்பில் நாத்து கொடுக்கப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட மாடுகளை மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா சுகாதார அலுவல ராஜபாண்டி நேரில் சென்று மாடுகளை பார்வையிட்டு மாடுகளுக்கு தேவையான உணவுகளை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்று அங்கு பணியில் இருந்த பணியாளர்களுக்கு உத்தரவிட்டனர். மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவிக்கையில்: பொதுமக்களுக்கு இடையூறாகவும் வாகனத்துக்கு இடையூறாகவும் மாநகராட்சி பகுதிகளில் மாடுகளை சாலைகளில் திரிவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. தொடர்ந்து இதுபோல செயல்களில் ஈடுபட்டால் மாடுகளை பறிமுதல் செய்யப்பட்டு தென்காசியில் உள்ள கோசாலைகளில் ஒப்படைக்கப்படும் என்று மேயர் ஜெகன் தெரிவித்துள்ளார். ஒரே நாளில் நள்ளிரவில் 25 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

More news from Tuticorin and nearby areas
  • இந்த *மழைக்காலத்தில்* *ஒழுகும்* *கூரை* வீட்டில் *சேறும்* *சகதியால்* அவதியுறும் மக்களுக்கு *மளிகைப்* *பொருட்கள்* மற்றும் *தார்ப்பாய்* போன்ற வேண்டியதை *கொடுக்க* *உங்களின்* உதவி கிடைக்குமா🙏🏻😞 தொடர்புக்கு பயன் படுத்தவும் :9487184721
    1
    இந்த *மழைக்காலத்தில்* *ஒழுகும்* *கூரை* வீட்டில் *சேறும்* *சகதியால்* அவதியுறும் மக்களுக்கு *மளிகைப்* *பொருட்கள்* மற்றும் *தார்ப்பாய்*  போன்ற வேண்டியதை *கொடுக்க* *உங்களின்* உதவி கிடைக்குமா🙏🏻😞
தொடர்புக்கு பயன் படுத்தவும் :9487184721
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    3 hrs ago
  • ரம்யா கிருஷ்ணன் கேரள Saree..❤️👍
    1
    ரம்யா கிருஷ்ணன் கேரள Saree..❤️👍
    user_Mr Mr. Gandhi
    Mr Mr. Gandhi
    Srivilliputhur, Virudhunagar•
    5 hrs ago
  • தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம் சார்பாக  கிழக்கு ஒன்றிய செயலாளரும் அம்மா பேரவை மாவட்ட செயலாளருமான துரை.சண்முகபிரபு ஏற்பாட்டில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளருமான ரெத்தினசாமி தலைமையில் ஏராளமான அதிமுகவினர் பாபநாசம் அரசு மருத்துவமனையில் இருந்து அமைதி ஊர்வலமாக சென்று புதிய பேருந்து நிலையத்தில் புதிதாக வெண்கலத்தினால் செய்யப்பட்டு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திரு உருவ சிலைக்கு  மாலை அணிவித்து மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    1
    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம் சார்பாக  கிழக்கு ஒன்றிய செயலாளரும் அம்மா பேரவை மாவட்ட செயலாளருமான துரை.சண்முகபிரபு ஏற்பாட்டில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளருமான ரெத்தினசாமி தலைமையில் ஏராளமான அதிமுகவினர் பாபநாசம் அரசு மருத்துவமனையில் இருந்து அமைதி ஊர்வலமாக சென்று புதிய பேருந்து நிலையத்தில் புதிதாக வெண்கலத்தினால் செய்யப்பட்டு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திரு உருவ சிலைக்கு  மாலை அணிவித்து மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    user_சிவகுமார்.மு
    சிவகுமார்.மு
    Journalist Papanasam, Thanjavur•
    3 hrs ago
  • ஜெயலலிதா அவர்களின் நினைவுதினம். அவருடைய அரசியல்.
    1
    ஜெயலலிதா அவர்களின் நினைவுதினம். அவருடைய அரசியல்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    4 hrs ago
  • முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாள்
    1
    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாள்
    user_M, கருணாகரன்
    M, கருணாகரன்
    Tailor Salem, Tamil Nadu•
    3 hrs ago
  • Post by தில்லை பசி தீர்த்தல் ஆதரவட்ட உணவு அளித்தல் அறக்கட்டளை கடலூர் மாவட்டம் சிதம்பரம்
    1
    Post by தில்லை பசி தீர்த்தல் ஆதரவட்ட உணவு அளித்தல் அறக்கட்டளை கடலூர் மாவட்டம் சிதம்பரம்
    user_தில்லை பசி தீர்த்தல் ஆதரவட்ட உணவு அளித்தல் அறக்கட்டளை கடலூர் மாவட்டம் சிதம்பரம்
    தில்லை பசி தீர்த்தல் ஆதரவட்ட உணவு அளித்தல் அறக்கட்டளை கடலூர் மாவட்டம் சிதம்பரம்
    Chidambaram, Cuddalore•
    17 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent Arcot, Ranipet•
    47 min ago
  • நயினார் நாகேந்திரன் கைதை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் (4-12-2025) வெள்ளிக்கிழமை அன்று இரவு முத்தையாபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    1
    நயினார் நாகேந்திரன் கைதை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் (4-12-2025) வெள்ளிக்கிழமை அன்று இரவு முத்தையாபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.