.*மூணாரில் உள்ள எராவிகுளம் தேசிய வன உயிரியியல் பூங்காவில் ஏராளமான வரையாடுகள் உள்ள நிலையில் வரையாடுகளின் இனப்பெருக்க காலம் தொடங்கி உள்ளதால் பிப்-01 ஆம் தேதி முதல் மார்ச் - 31 ஆம் தேதி வரை வன உயிரியியல் பூங்கா அடைக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவிப்பு. கேரள இடுக்கி மாவட்டத்தின் முக்கிய தேசிய வனவிலங்கு சரணாலயம் வருகின்ற பிப்ரவரி முதல் மார்ச் வரை இரண்டு மாதங்கள் மூடப்படுவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று வனத்துறையினர் அறிவிப்பு . கேரள மாநிலம் மூணார் அருகேயுள்ளது இராவிகுளம் தேசிய வன உயிரியல் பூங்கா ஆண்டுதோறும் அங்கு ஏராளமான சுற்றுல பயணிகள் சென்று வருவது வழக்கமாகும். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வரையாடுகளைக் காண்பதற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஆண்டுதோறும் இனப்பெருக்க காலத்தில் பூங்கா அடைக்கப்படவது வழக்கமாகும். அதன்படி இந்தாண்டும் வரையாடுகளின் இனப்பெருக்க காலத்தையொட்டி பூங்கா அடைக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர் . பிப்ரவரி - 01 ஆம் தேதி முதல் மார்ச் - 31 வரை இரவிக்குளம் அடைப்படுவதாக வனத்துறையினர். தெரிவித்துள்ளனர். அதன்படி இரண்டு மாதக்காலம் பூங்காவிற்க்குள் சுற்றுலாபயணிகளுக்கு தற்காலிமாக அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த வருடம் 827 வரையாடுகள் காணப்பட்ட நிலையில் 144 வரையாடுகளின் குட்டிகள் பிறந்திருந்தது குறிப்பிடதக்கது. தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகள் கேரளாவில் இனப்பெருக்கத்தில் முக்கியத்துவம் பெறுவதால் தமிழகத்தைக் காட்டிலும் கேரளாவில் இவற்றில் இனப்பெருக்கம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. பாதுகாக்கப்பட்ட உயிரினமான வரையாடுகளின் சரணாலயமாக விளங்கும் கேரளாவின் இரவிக்குளம் தேசிய பூங்கா முழுக்க முழுக்க வரையாடுகளை அடிப்படையாகக் கொண்ட தேசிய பூங்காவாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது. சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் தேசிய பூங்காவான இங்கு அச்சமின்றி சுற்றுலா பயணிகளுடன் வெகு சகஜமாக உரையாடுகள் சுற்றித் திரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
.*மூணாரில் உள்ள எராவிகுளம் தேசிய வன உயிரியியல் பூங்காவில் ஏராளமான வரையாடுகள் உள்ள நிலையில் வரையாடுகளின் இனப்பெருக்க காலம் தொடங்கி உள்ளதால் பிப்-01 ஆம் தேதி முதல் மார்ச் - 31 ஆம் தேதி வரை வன உயிரியியல் பூங்கா அடைக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவிப்பு. கேரள இடுக்கி மாவட்டத்தின் முக்கிய தேசிய வனவிலங்கு சரணாலயம் வருகின்ற பிப்ரவரி முதல் மார்ச் வரை இரண்டு மாதங்கள் மூடப்படுவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று வனத்துறையினர் அறிவிப்பு . கேரள மாநிலம் மூணார் அருகேயுள்ளது இராவிகுளம் தேசிய வன உயிரியல் பூங்கா ஆண்டுதோறும் அங்கு ஏராளமான சுற்றுல பயணிகள் சென்று வருவது வழக்கமாகும். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வரையாடுகளைக் காண்பதற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஆண்டுதோறும் இனப்பெருக்க காலத்தில் பூங்கா அடைக்கப்படவது வழக்கமாகும். அதன்படி இந்தாண்டும் வரையாடுகளின் இனப்பெருக்க காலத்தையொட்டி பூங்கா அடைக்கப்பட உள்ளதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர் . பிப்ரவரி - 01 ஆம் தேதி முதல் மார்ச் - 31 வரை இரவிக்குளம் அடைப்படுவதாக வனத்துறையினர். தெரிவித்துள்ளனர். அதன்படி இரண்டு மாதக்காலம் பூங்காவிற்க்குள் சுற்றுலாபயணிகளுக்கு தற்காலிமாக அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த வருடம் 827 வரையாடுகள் காணப்பட்ட நிலையில் 144 வரையாடுகளின் குட்டிகள் பிறந்திருந்தது குறிப்பிடதக்கது. தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகள் கேரளாவில் இனப்பெருக்கத்தில் முக்கியத்துவம் பெறுவதால் தமிழகத்தைக் காட்டிலும் கேரளாவில் இவற்றில் இனப்பெருக்கம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. பாதுகாக்கப்பட்ட உயிரினமான வரையாடுகளின் சரணாலயமாக விளங்கும் கேரளாவின் இரவிக்குளம் தேசிய பூங்கா முழுக்க முழுக்க வரையாடுகளை அடிப்படையாகக் கொண்ட தேசிய பூங்காவாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது. சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் தேசிய பூங்காவான இங்கு அச்சமின்றி சுற்றுலா பயணிகளுடன் வெகு சகஜமாக உரையாடுகள் சுற்றித் திரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- மோடி பொங்கல் விழா கொண்டாட்டம் பெரியகுளம் பகுதியில் இன்று தேனி மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பெரியகுளம் வள்ளுவர் சிலை பகுதியில் இருந்து பொங்கல் பானையை சுமந்து நகர் பகுதியில் ஊர்வலமாக வந்து பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.1
- 11.01.2026_ADP_ MARATHAN SPORTS. உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்டம் கடமலைகுண்டு பகுதியில் திமுக சார்பில் மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.கடமலைக்குண்டு பகுதியில் இருந்து வருசநாடு பகுதி வரை உள்ள 15 கிலோமீட்டர் தொலைவிற்காக நடைபெற்ற இந்த போட்டிகளில் சிறுவர்கள் முதியவர்கள் என 900க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் இதில் தேவராஜ்நகர் பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார் என்ற ராணுவ வீரர் முதல் இடத்தை பிடித்தார் பொங்கல் பண்டிகை மற்றும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட கடமலைக்குண்டு பகுதியில் கடமலை - மயிலை ஒன்றிய திமுக இளைஞரணி சார்பாக மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது.கடமலைக்குண்டு பகுதியிலிருந்து வருசநாடு பகுதி வரை 15 கிலோமீட்டர் தொலைவு தூரத்திற்காக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டிகளில் சிறுவர்கள், பெரியவர்கள் என 900க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இந்த மாரத்தான் போட்டிகளை ஆண்டிப்பட்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கொடியசைத்து துவங்கி வைத்த நிலையில் இந்தப் போட்டியின் முடிவில் கடமலைக்குண்டு பபகுதியிலிருந்து வருசநாடு பகுதி வரையிலான 15 கிலோமீட்டர் கொண்ட தூரத்தை முதலில் கடந்த தேவராஜ்நகரை சேர்ந்த நிதிஷ்குமார் முதல் இடத்தையும்,தூத்துக்குடியை சேர்ந்த கருத்தபாண்டி இரண்டாவது இடத்தையும்,கோயம்புத்தூரை சேர்ந்த தினகரன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.முதல் மூன்று இடங்களை பிடித்த நபர்களுக்கு திமுக சார்பில் பரிசுகளும் ரொக்க பணமும் பரிசாக வழங்கப்பட்ட நிலையில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.1
- கடமலை மயிலை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் சமத்துவம் பொங்கட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற முழக்கத்துடன் பள்ளி மாணவிகளுக்கான கோலப்போட்டி, ஓட்டப்பந்தயம் மற்றும் கோ-கோ போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளை கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் சுப்பிரமணி மற்றும் தங்கப்பாண்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளின் இறுதியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஒன்றிய செயலாளர்கள் சார்பில் சுழற்கோப்பைகளும், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட பிரதிநிதி குறிஞ்சி மாடசாமி, கடமலைக்குண்டு நகர செயலாளர் தென்னரசு, முன்னாள் கவுன்சிலர் மச்சக்காளை, தொழில்நுட்ப பிரிவு பிரபு, அருண்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்தினர்.1
- மும்மதத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா திண்டுக்கல் மாநகராட்சி 44. வது வார்டு மேட்டுப்பட்டியில் திமுக சார்பில் மும்மதத்தினர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகராட்சி கவுன்சிலர் மார்த்தாண்டன் தலைமை வகித்த இந்த நிகழ்ச்சியில், திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி எம்எல்ஏயுமான ஐ. பி. செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார். ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சமத்துவ பொங்கலைத் துவக்கி வைத்தார். மேலும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கி, தனது பிறந்தநாளை முன்னிட்டு 10 கிலோ எடையில் கேக் வெட்டி திமுகவினருடன் கொண்டாடி மகிழ்ந்தார்.1
- திண்டுக்கல் மாவட்டம் மாநகராட்சிக்குட்பட்ட 44வது வார்டு பகுதியில் மாமன்றஉறுப்பினர் மார்த்தாண்டன் தலைமையில் சமத்துவப் பொங்கல் மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி .செந்தில்குமார் மற்றும் மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராசப்பா கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்1
- திருப்பூர் அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து1
- கரூரை அடுத்த குளித்தலை அருகே மணத்தட்டை காவிரி ஆற்றின் படுகையிலிருந்து காவிரி குடிநீர் மணப்பாறை-குளித்தலை சாலையோரம் குழாய்கள் பதிக்கப்பட்டு மணப்பாறை மற்றும் மருங்காபுரி பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை மணப்பாறை அடுத்த கலிங்கப்பட்டி அருகே அமைத்துள்ள 2மீட்டர் அகலமும், 46.6 மீட்டர் நீளம் கொண்ட காவிரி குடிநீர் பிரதான குழாய் திடீரென உடைப்பு ஏற்பட்டு சுமார் 10 அடி தூரத்திற்கு குடிநீர் நாலாபக்கமும் பீறிட்டு அடித்து வருகிறது. இதையறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- *திருப்பாவை சேவித்தல் நிகழ்ச்சியை முன்னிட்டு தேனியில் பழமை வாய்ந்த சிவ சக்தி விநாயகர் திருக்கோயிலில் ஆண்டாள் நகர்வள புறப்பாடு சிறப்பாக நடைபெற்றது* *ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு திருப்பாவை சேவித்தபடியே ஊர்வலமாக சென்றனர்* தேனி அருகே அல்லிநகரத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ சிவசக்தி விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று ஆண்டாளுக்கு நான்காம் ஆண்டு திருப்பாவை சேவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது முன்னதாக கோயில் வளாகத்தில் வண்ண மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அமர்ந்திருந்த ஆண்டாளுக்கு ஆபரணங்கள் அணிவித்து கிரீடம் வைத்து வண்ணமலர் மாலைகள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தார் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த ஆண்டாளுக்கு தீபம் காட்டப்பட்டு கற்பூரம் சுற்றி புறப்பாடு தொடங்கியது பக்தர்கள் சப்பரத்தை இழுத்துச் செல்ல பெண்கள் சீர் வரிசைகளுடன் திருப்பாவை சேவித்தபடியே ஊர்வலம் சென்றனர் தேனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஆண்டாளை வழிநடக பக்தர்கள் தரிசனம் செய்தனர் பின்னர் அல்லிநகரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலுக்கு சென்று புறப்பாடு நிறைவு பெற்றது இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திருப்பாவை சேவித்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆண்டாளை தரிசனம் செய்து சென்றனர்1