logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கிருஷ்ணகிரி புளி கமிஷன் மண்டிகளில் காங்., வேட்பாளர் பிரசாரம் கிருஷ்ணகிரி, ஏப்.20: கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர்.செல்லக்குமார், தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள புளி கமிஷன் மண்டிகளில், கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி நகராட்சியில், திமுக ஆட்சியின்போது பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது. பெரும்பான்மையான சாலைகள் கான்கிரீட் சாலையாக போடப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். கடந்த முறை பாராளுமன்ற உறுப்பினராக நான் இருந்தபோது, ஓசூர் -ஜோலார்பேட்டை ரயில்வே திட்டத்திற்கு 11 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

3 hrs ago
user_USHA INDU
USHA INDU
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
3 hrs ago
68634253-2199-4bb5-b136-6e5ff8160857

கிருஷ்ணகிரி புளி கமிஷன் மண்டிகளில் காங்., வேட்பாளர் பிரசாரம் கிருஷ்ணகிரி, ஏப்.20: கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர்.செல்லக்குமார், தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள புளி கமிஷன் மண்டிகளில், கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி நகராட்சியில், திமுக ஆட்சியின்போது பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது. பெரும்பான்மையான சாலைகள் கான்கிரீட் சாலையாக போடப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். கடந்த முறை பாராளுமன்ற உறுப்பினராக நான் இருந்தபோது, ஓசூர் -ஜோலார்பேட்டை ரயில்வே திட்டத்திற்கு 11 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தேர்தல் நெருங்கும் நிலையில் அரூர் பகுதியில் பிடிக்கப்பட்ட ரூபாய் 22 லட்சத்து 3000 ரொக்கம் பறிமுதல் - கேட்பாரற்று கிடந்த ஸ்கூட்டி டிக்கியில் சோதனை. தர்மபுரி மாவட்டம் அரூர் அம்பேத்கர் நகர் அருகே இருக்கக்கூடிய பெட்ரோல் பங்க் முன்பு சுமார் 20க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் நின்று கொண்டிருந்ததாகவும், அப்போது அவ்வழியாக சென்ற தேர்தல் பறக்கும் படையினரை பார்த்ததும் அவர்கள் ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது. பின்பு அங்கே கேட்பாராற்று இருந்த இருசக்கர வாகனத்தை, சந்தேகம் அடைந்த தேர்தல் பறக்கும் படை குழுவினர் சோதனை செய்ததில் ஸ்கூட்டி டிக்கியில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததாகவும், அதில் 22 லட்சத்து 3 ஆயிரம் ரூபாயை கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படை குழுவினர் அரூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான செம்மலையிடம் ஒப்படைத்தனர். மேலும் கேட்பாரற்று கிடந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து ஆர்டிஓ அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் சந்தேகத்திற்கு இடமான பகுதியில் பணம் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என அருகே இருந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
    1
    தேர்தல் நெருங்கும் நிலையில் அரூர் பகுதியில் பிடிக்கப்பட்ட ரூபாய் 22 லட்சத்து 3000 ரொக்கம் பறிமுதல் - கேட்பாரற்று கிடந்த  ஸ்கூட்டி டிக்கியில் சோதனை.
தர்மபுரி மாவட்டம் அரூர் அம்பேத்கர் நகர் அருகே இருக்கக்கூடிய பெட்ரோல் பங்க் முன்பு சுமார் 20க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் நின்று கொண்டிருந்ததாகவும், அப்போது அவ்வழியாக சென்ற தேர்தல் பறக்கும் படையினரை பார்த்ததும் அவர்கள் ஓட்டம்  பிடித்ததாக கூறப்படுகிறது. பின்பு அங்கே கேட்பாராற்று இருந்த இருசக்கர வாகனத்தை, சந்தேகம் அடைந்த தேர்தல் பறக்கும் படை குழுவினர் சோதனை செய்ததில் ஸ்கூட்டி டிக்கியில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததாகவும், அதில் 22 லட்சத்து 3 ஆயிரம் ரூபாயை கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படை குழுவினர் அரூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான  செம்மலையிடம் ஒப்படைத்தனர். மேலும் கேட்பாரற்று கிடந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து ஆர்டிஓ அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் சந்தேகத்திற்கு இடமான பகுதியில் பணம் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என அருகே இருந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • Post by CONSUMER CHAIRMAN CHAIRMAN
    3
    Post by CONSUMER CHAIRMAN CHAIRMAN
    user_CONSUMER CHAIRMAN CHAIRMAN
    CONSUMER CHAIRMAN CHAIRMAN
    NGO Worker கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் அரசியல் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,உரிய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தா.உதயசூரியன் அவர்கள் இன்று வெள்ளிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் வருகையை முன்னிட்டு வெள்ளிமலை பகுதி மக்கள் உற்சாகக் கடலாக திரண்டனர். மேளதாளங்கள் முழங்க, மலர் தூவி,ஆர்ப்பாட்டக் குரல்களுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும், கட்சி நிர்வாகிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நடனமாடி,ஆர்வமுடன் அவரை வரவேற்றனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் தேர்தல் உற்சாகத்தை மேலும் உயர்த்தியது. வாக்கு சேகரிப்பின் போது, தா.உதயசூரியன் அவர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து,தங்களது தேர்தல் அறிக்கைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கினார்.மக்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், உள்ளூர் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு,தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தினர். வெள்ளிமலை பகுதியில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்வு,அந்த தொகுதியில் வேட்பாளருக்கு கிடைக்கும் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
    1
    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் அரசியல் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,உரிய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தா.உதயசூரியன் அவர்கள் இன்று வெள்ளிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவர் வருகையை முன்னிட்டு வெள்ளிமலை பகுதி மக்கள் உற்சாகக் கடலாக திரண்டனர். மேளதாளங்கள் முழங்க, மலர் தூவி,ஆர்ப்பாட்டக் குரல்களுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும், கட்சி நிர்வாகிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நடனமாடி,ஆர்வமுடன் அவரை வரவேற்றனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் தேர்தல் உற்சாகத்தை மேலும் உயர்த்தியது.
வாக்கு சேகரிப்பின் போது, தா.உதயசூரியன் அவர்கள்  பொதுமக்களை நேரில் சந்தித்து,தங்களது தேர்தல் அறிக்கைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கினார்.மக்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண உறுதியளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், 
உள்ளூர் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு,தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தினர். வெள்ளிமலை பகுதியில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்வு,அந்த தொகுதியில் வேட்பாளருக்கு கிடைக்கும் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    கல்வராயன் மலைகள், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அங்கு சுயேச்சையாகப் போட்டியிடும் பிரேம்குமாருக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். 'டிவி' சின்னத்தில் போட்டியிடும் பிரேம்குமார், விஜய் ரசிகர் மன்றத்தின் முன்னாள் கிளைச் செயலாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய பிரேம்குமார், "நான் நீண்டகாலமாக விஜய் ரசிகராகவும், நிர்வாகியாகவும் இருந்துள்ளேன். எடப்பாடி பழனிசாமியை நிச்சயம் தோற்கடிப்பேன். தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவுடன் 'டிவி' சின்னத்தை மக்களிடம் கொண்டு சென்று பெரும் வெற்றி பெறுவேன்," என்றார்.
    1
    சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அங்கு சுயேச்சையாகப் போட்டியிடும் பிரேம்குமாருக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். 'டிவி' சின்னத்தில் போட்டியிடும் பிரேம்குமார், விஜய் ரசிகர் மன்றத்தின் முன்னாள் கிளைச் செயலாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய பிரேம்குமார், "நான் நீண்டகாலமாக விஜய் ரசிகராகவும், நிர்வாகியாகவும் இருந்துள்ளேன். எடப்பாடி பழனிசாமியை நிச்சயம் தோற்கடிப்பேன். தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவுடன் 'டிவி' சின்னத்தை மக்களிடம் கொண்டு சென்று பெரும் வெற்றி பெறுவேன்," என்றார்.
    user_Salem_Updates
    Salem_Updates
    News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
    20 hrs ago
  • இராசிபுரம் புரட்சிகர தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ராசிபுரம் சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பிரேம்குமார் அவர்களை ஆதரித்து தீவிரவாக்கு சேகரிப்பு பணியில் கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இடத்தில் வெற்றி பெற வாய்ப்பு கேட்டு வருகின்றனர்
    1
    இராசிபுரம் புரட்சிகர தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ராசிபுரம் சட்டமன்ற பொதுத் தேர்தலில்  போட்டியிடும் பாஜக வேட்பாளர் பிரேம்குமார் அவர்களை ஆதரித்து தீவிரவாக்கு சேகரிப்பு பணியில் கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இடத்தில் வெற்றி பெற வாய்ப்பு கேட்டு வருகின்றனர்
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    6 hrs ago
  • கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தாலுக்கா குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெய்வாசல் அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவரும் 100% வாக்களிப்போம் என்று உறுதி எடுக்க வேண்டும் என விளம்பர பலகையுடன் முக்கிய கடைவீதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்
    1
    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தாலுக்கா குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெய்வாசல் அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவரும் 100% வாக்களிப்போம் என்று உறுதி எடுக்க வேண்டும் என விளம்பர பலகையுடன் முக்கிய கடைவீதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்
    user_Dhamodharan R
    Dhamodharan R
    காட்டுமன்னார்கோயில், கடலூர், தமிழ்நாடு•
    1 hr ago
  • ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேட்பாளர் லட்சுமிபதி அரக்கோணம் எஸ் ஆர் கே பகுதியில் இருந்து ஜோதி நகர் வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அக்கட்சி தொண்டர்களோடு மேளதாளங்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
    1
    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம்  சட்டமன்ற தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேட்பாளர் லட்சுமிபதி அரக்கோணம் எஸ் ஆர் கே பகுதியில் இருந்து ஜோதி நகர் வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அக்கட்சி தொண்டர்களோடு மேளதாளங்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
    user_BADRI PRASAD YADAV
    BADRI PRASAD YADAV
    Local News Reporter அரக்கோணம், ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    6 hrs ago
  • Post by CONSUMER CHAIRMAN CHAIRMAN
    2
    Post by CONSUMER CHAIRMAN CHAIRMAN
    user_CONSUMER CHAIRMAN CHAIRMAN
    CONSUMER CHAIRMAN CHAIRMAN
    NGO Worker கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    23 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.