காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சம்.. *வேடசந்தூர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்* திருச்சி துலுக்கப்பட்டி சேர்ந்த மகிமா(20) இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாடிக்கொம்பு அருகே உள்ள உண்டாரபட்டியில் உறவினர் வீட்டிற்கு திருவிழாவிற்கு வரும்பொழுது உண்டாரபட்டி சேர்ந்த பைக் மெக்கானிக் மாரிமுத்து(21) என்பவருடன் காதல் மலர்ந்தது. இதுகுறித்து மகிமா வீட்டிற்கு தெரிந்ததால் கண்டித்தனர் இந்நிலையில் இருவரும் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு வேடசந்தூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். வேடசந்தூர் காவல் நிலை ஆய்வாளர் கணேசன்மூர்த்தி தலைமையிலான போலீசார் இரு வீட்டு பெற்றோரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார் இதில் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் போலீசார் இருவருக்கும் எந்த இடையூறும் செய்யக்கூடாது என்று பெண் வீட்டாரிடம் எழுதி வாங்கி இருவரையும் மணமகன் வீட்டாருடன் அனுப்பி வைத்தனர்
காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி தஞ்சம்.. *வேடசந்தூர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்* திருச்சி துலுக்கப்பட்டி சேர்ந்த மகிமா(20) இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாடிக்கொம்பு அருகே உள்ள உண்டாரபட்டியில் உறவினர் வீட்டிற்கு திருவிழாவிற்கு வரும்பொழுது உண்டாரபட்டி சேர்ந்த பைக் மெக்கானிக் மாரிமுத்து(21) என்பவருடன் காதல் மலர்ந்தது. இதுகுறித்து மகிமா வீட்டிற்கு தெரிந்ததால் கண்டித்தனர் இந்நிலையில் இருவரும் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு வேடசந்தூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். வேடசந்தூர் காவல் நிலை ஆய்வாளர் கணேசன்மூர்த்தி தலைமையிலான போலீசார் இரு வீட்டு பெற்றோரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார் இதில் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் போலீசார் இருவருக்கும் எந்த இடையூறும் செய்யக்கூடாது என்று பெண் வீட்டாரிடம் எழுதி வாங்கி இருவரையும் மணமகன் வீட்டாருடன் அனுப்பி வைத்தனர்
- திண்டுக்கல் மாவட்டம் நாகல்புதூரில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் (குட்டவாத்தியார் பள்ளி) 100வது ஆண்டுவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள். மேலும் தற்போது பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.1
- Post by RAJA news1
- வேடசந்தூர் பூதிபுரம் ஊராட்சியில் தைலா கவுண்டனூர் சீதப்பட்டி பூதிபுரம் குரும்பபட்டி மகாலட்சுமிபுரம் இந்தப் பகுதிகளில் நிறைய தெரு விளக்குகள் பழுதடைந்து இரவு நேரங்களில் பெண்கள் குழந்தைகள் நடமாட அச்சமடைந்து வந்தனர் இதை மாற்றிக் கொடுக்க ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர் அதன் அடிப்படையில் இன்று அனைத்து தெருவிளக்குகளையும் மாற்றி கொடுத்தனர் இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்1
- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குமாரம் பகுதியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் முன்னாள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டு பேசினார்1
- மதுரை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆகாஷ் என்ற பட்டியலின இளைஞர் காவல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது குறித்து புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மாவட்ட காவல்துறை ஆகாஷ் என்ற இளைஞரை கொலை செய்துவிட்டது. இந்த மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் ஒரே சாதியினராக இருந்து கொண்டு, சாதி சங்கங்களைப் போல செயல்படுகின்றனர். ஏற்கனவே மடப்புரம் கோவில் காவலாளி காவல்துறையினரால் கொல்லப்பட்ட சுவடு மறைவதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆகாஷ் என்ற இளைஞரின் காலை உடைத்தது காவல்துறைதான். ஆனால், அவர் பாலத்தில் இருந்து குதிக்க முயன்றதாக காவல்துறை பொய் சொல்கிறது என அவர் குற்றம் சாட்டினார்.1
- திருமங்கலம் பன்னிரண்டாவது வார்டு முனிசிபல் காலனி பகுதியில் சுமார் மூன்று மாத காலமாக கழிவுநீர் சாக்கடை அடைத்துக் கொண்டிருக்கிறது அதில் கொசு புழு உற்பத்தி ஆகிறது சிறுவர்களுக்கு காய்ச்சல் அப்பப்போது வருகிறது அதனால் சாக்கடை மற்றும் சாக்கடை போகும் பாதையை சரி செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் நன்றி4
- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த சிறுகனூரில் நேற்று திமுக மாநாடு நடைபெற்றது . இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார் . பின்னர் விமானம் மூலம் சென்னை திரும்பினார். அதேநேரம் முதல்வர் விமான நிலையம் செல்லும் திருச்சி -புதுக்கோட்டை சாலையில் நாளை 11 ஆம் தேதி திருச்சி வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்று, வைக்கப்பட்டிருந்த பேனர்களை மாநகராட்சியினர் மற்றும் போலீசார் அகற்றி சாலையில் வீசி எறிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.1
- Post by RAJA news1