Shuru
Apke Nagar Ki App…
மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்களிடம் கைவரிசை காட்டிய இருவர் கைது நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்றும் நாளையும் நத்தம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பக்தர்களிடம் நகை திருட்டில் ஈடுபட்ட நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த வள்ளி, விராலிமலை பகுதியை சேர்ந்த செல்லத்துரை ஆகிய இருவரையும் கைது செய்த நத்தம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். பக்தர்கள் தங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைக்கும் படி நத்தம் காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Madhubalaji vm
மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்களிடம் கைவரிசை காட்டிய இருவர் கைது நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்றும் நாளையும் நத்தம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பக்தர்களிடம் நகை திருட்டில் ஈடுபட்ட நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த வள்ளி, விராலிமலை பகுதியை சேர்ந்த செல்லத்துரை ஆகிய இருவரையும் கைது செய்த நத்தம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். பக்தர்கள் தங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைக்கும் படி நத்தம் காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குமாரம் பகுதியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் முன்னாள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டு பேசினார்1
- திருச்சி: திமுக சார்பில் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் சிக்ஸர் அடித்து பிரம்மாண்ட வெற்றி பெற இப்போதே தயாராக வேண்டும் என அறைகூவல் விடுத்தார். மாநில உரிமைகளைத் தடுக்கும் நீட் தேர்வு, இந்தி திணிப்பு எனத் தமிழகத்திற்கு எதிராகச் செயல்படும் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்குத் தமிழகத்தில் எப்போதும் 'நோ என்ட்ரி' தான் எனத் தெரிவித்தார். திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ் மண்ணைக் காக்கவும் ஏழாவது முறையாக திமுகவே மீண்டும் வெல்லும் என அவர் உரையாற்றினார். (மாநாட்டின் பிரத்தியோக காட்சிகள்)1
- திண்டுக்கல் மாவட்டம் நாகல்புதூரில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் (குட்டவாத்தியார் பள்ளி) 100வது ஆண்டுவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள். மேலும் தற்போது பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.1
- தேனி மாவட்டம் குன்னூர் அருகே அம்மாச்சியாபுரம் வைகை ஆற்றின் நீர் தேக்கத்தின் அடிப்படையில் பல ஏக்கர் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த மழையினால் இந்த பகுதியில் உள்ள நெற்கதிர்கள் அனைத்தும் சாய்ந்து விட்டது இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றன1
- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுநல ஆர்வலர் காளிராஜ் என்பவர் மனு அளித்தார். அந்த மனுவில்:- திண்டுக்கல்லை அடுத்த ரெட்டியார் சத்திரம் பகுதியில் அமைந்துள்ளது பாதாள செம்பு முருகன் கோவில். இக்கோயிலில் உள்ள சிலையை பற்றிய வரலாற்றின் உண்மைத் தன்மையை தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்திடவும், மேலும் தவறான வரலாற்று செய்திகளை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பி பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு கோவிலை நடத்தி வருகின்றனர். மேலும் கருங்காலி மாலை என்று சொல்லி ஒரு மாலை ரூ.1000 முதல் ரூ.5000 வரை விற்று பணம் சம்பாதிப்பதோடு மட்டுமல்லாமல், அந்த மாலையை அணிந்தால் பணம், புகழும் கிடைக்கும் பிரச்சனைகள் தீரும் என்று தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1
- மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அழகர் கோவில் பயங்கர தீபத்தில் உரிய நடவடிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் அறநிலைத்துறையில் கேட்டுக்கொள்கிறீர்களா1
- பெரியகுளம் அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருவிழா 8 வது நாளான இன்று யாதவர் சமுதாயம் மண்டகப்படி முன்னிட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பெரியகுளம் முக்கிய வீதிகள் ஆன அரண்மனை தெரு தேரடி வீதி மேலரத வீதி சுப்பிரமணியர் சாவடி தெரு உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் இளைஞர்களின் ஆட்டம் மற்றும் மேளதாளத்துடன் சுவாமி வீதி உலா நடைபெற்றது இதில் தெருக்களில் இருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்1
- மதுரை சரவணா கிச்சன் சார்பில் 10 ருபாய் மலிவு விலையில் மதிய உணவாக தயிர்சாதம், தக்காளி சாதம் மற்றும் வெஜிடபிள் பிரியாணி விற்பனை துவக்கப்பட்டுள்ளது. அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் ஏற்பாட்டில் சரவணா மருத்துவமனை மற்றும் சூர்யா டிரஸ்ட் இணைந்து சரவணா கிச்சன் என்ற பெயரில் ஏழை மக்களுக்கான நடமாடும் மலிவு விலை உணவகத்தை துவக்கி கடந்த ஜனவரி 19 முதல் காலை உணவாக 10 ரூபாய்க்கு தேநீருடன் 3 இட்லி விற்பனையை துவக்கியது. அதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 12ம் தேதி முதல் இரவு உணவாக 20 ரூபாய் மலிவு லிலையில் சிக்கன் மற்றும் முட்டைப் பிரியாணி விற்பனை செய்து வரும் நிலையில், இன்று முதல் மதிய வேளையிலும் மக்களுக்கு மலிவு விலை உணவு வழங்கும் சேவையை சரவணா கிச்சன் விரிவுபடுத்தி உள்ளது. இன்று (9/3/2026 திங்கள்) கோ.புதூர் ஐடிஐ பஸ் நிறுத்தம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் மலிவு விலையில் 10 ரூபாய்க்கு தயிர்சாதம், தக்காளி சாதம் மற்றும் வெஜிடபிள் பிரியாணி ஆகியவை வழங்கும் திட்டத்தை இன்று கழக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் Ex.MLA அவர்கள் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரமணி, வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன், முத்தானந்தன், அஜித்குமார், பாண்டிச்செல்வி, லியாகத் அலி, ஜாகிர் உசேன், விருமாண்டி, ஆகியோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் கடந்த 50 நாட்களாக மக்களின் ஏகோபித்த வரவேற்பில் நடைபெற்று வரும் சரவணா கிச்சன் மலிவு விலை உணவகத்தில் காலை நேரத்தில் வழங்கப்படும் மலிவு விலை இட்லி தேநீர் திட்டத்தில் சுமார் 30,000 பேரும், மலிவு விலை இரவு உணவு பிரியாணி வழங்கும் திட்டத்தில் கடந்த 24 நாட்களில் 12,000 பேரும் ஆக இதுவரை சுமார் 42,000 பேர் பயன் பெற்றுள்ள நிலையில் இன்று முதல் 10 ரூபாய் மலிவு விலையில் மதிய உணவு வழங்கும் திட்டத்தை இன்று முதல் சரவணா கிச்சன் துவங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.1