Shuru
Apke Nagar Ki App…
கன்னியாகுமரி திமுக வேட்பாளர் நாகர்கோவிலில் வாக்களித்தார் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரெ. மகேஷ். நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட SLB அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள பூத் எண் 195-ல் குடும்பத்தினருடன் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் மக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Magson jones
கன்னியாகுமரி திமுக வேட்பாளர் நாகர்கோவிலில் வாக்களித்தார் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரெ. மகேஷ். நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட SLB அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள பூத் எண் 195-ல் குடும்பத்தினருடன் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் மக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் விஜயதரணி. இவர் திருப்பதி சாரம் அரசு தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி எண் 118 இன்று தனது வாக்கினை பொதுமக்களுடன் வரிசையில் நின்று பதிவு செய்தார்.வாக்காளர்கள் அனைவரும் இன்று தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.1
- நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பூத் எண் 271ல் வாக்களிக்கச் சென்ற பொதுமக்கள் மிகுந்த ஆபத்தான முறையிலேயே வாக்களிக்க சென்றனர். வாக்கு சாவடி அருகே ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டதால் ரயில்வே கேட் பின்புறம் வசிக்கும் உள்ள பொதுமக்கள் 4 கிலோ மீட்டர் சுற்றி வந்து வாக்களிக்க வேண்டிய சூழலில் ஆபத்தான முறையில் ரயில்வே கேட்டை கடந்து வந்து இன்று வாக்களித்துவிட்டு சென்றனர்2
- நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதிகளுக்கு சட்டமன்றத் தேர்தலில் முன்னிட்டு வாக்களிக்க வசதியாக இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது மாஞ்சோலை பகுதிகளுக்கு தற்போது வழக்கமாக ஒரு முறை மட்டுமே சென்று வரும் நிலையில், இன்றும் நாளையும் மூன்று முறை பேருந்துகள் இயக்கம்..2
- தென்காசி சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ராம்குமார் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார்1
- Post by மா.சுடலைமணி1
- தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வீட்டில் இருந்து ரூ.65 லட்சம் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஊர்வசி அமிர்தராஜ் போட்டியிடுகிறார். தூத்துக்குடி கணேஷ் நகர் பகுதியில் அவருக்குச் சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காகப் பெருமளவு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகத் தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், தேர்தல் பறக்கும் படை அதிகாரி பொன்மாரி தலைமையிலான குழுவினர் கணேஷ் நகரில் உள்ள வேட்பாளரின் வீட்டிற்குச் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வீடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத 65 லட்சம் ரொக்கப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததைத் தொடர்ந்து, அந்தப் பணத்தை அதிகாரிகள் முறைப்படி பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் உடனடியாகத் தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. பணம் பதுக்கியது தொடர்பாக, தூத்துக்குடி மாவட்டம் கச்சனாவிளைப் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரைத் தென்பாகம் போலீசார் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பணம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததா? என்பது குறித்துத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே ஓட்டப்பிடாரம் அமமுக வேட்பாளர் வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளர் வீட்டிலும் பெரிய அளவிலான தொகை சிக்கியிருப்பது தூத்துக்குடி மாவட்ட தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- MH 🌐 ONLINE.....1
- கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் இன்று தோவாளை அரசு பள்ளியில் தனது வாக்கைபதிவு செய்வதற்கு வருகை தந்தார். அப்போது அங்கு மக்களுடன் மக்களாக நீண்ட வரிசையில் நின்று அவர் தனது வாக்கினை பதிவு செய்தார். அவருடன் அவரது மகள் தம்பரசியும் தனது வாக்கினை பதிவு செய்தார்.1