பாஜகவின் அருவருக்கத்தக்க நடவடிக்கை : சு. வெங்கடேசன் எம்பி கண்டனம் மதுரை: கரூர் எம்.பி. ஜோதிமணி மீதான பாஜவின் அருவருக்கத்தக்கத் தாக்குதலுக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பாஜவின் தரம் தாழ்ந்த அரசியலை வெளிப்படுத்துவதாக அவர் சாடியுள்ளார். நாடாளுமன்றத்திலும் களத்திலும் வலதுசாரிக் கருத்தியலுக்கு எதிராகப் போராடி வரும் ஜோதிமணியை, கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் பாஜவினர் தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து சு.வெங்கடேசன் தனது முகநூல் பக்கத்தில், "தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கரூர் பாஜ தலைவரின் தரம் தாழ்ந்த பேச்சுகள் தனித்தனி சம்பவங்கள் அல்ல; இது போராடும் பெண்களுக்கு எதிரான பாஜவின் கருத்தியல் வெளிப்பாடு" எனப் பதிவிட்டுள்ளார். பொதுச்சமூகத்தில் இயங்கும் பெண்களின் சுயமரியாதைக்கு எதிராகத் தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வரும் பாஜவினருக்கு அவர் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்
பாஜகவின் அருவருக்கத்தக்க நடவடிக்கை : சு. வெங்கடேசன் எம்பி கண்டனம் மதுரை: கரூர் எம்.பி. ஜோதிமணி மீதான பாஜவின் அருவருக்கத்தக்கத் தாக்குதலுக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பாஜவின் தரம் தாழ்ந்த அரசியலை வெளிப்படுத்துவதாக அவர் சாடியுள்ளார். நாடாளுமன்றத்திலும் களத்திலும் வலதுசாரிக் கருத்தியலுக்கு எதிராகப் போராடி வரும் ஜோதிமணியை, கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் பாஜவினர் தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து சு.வெங்கடேசன் தனது முகநூல் பக்கத்தில், "தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கரூர் பாஜ தலைவரின் தரம் தாழ்ந்த பேச்சுகள் தனித்தனி சம்பவங்கள் அல்ல; இது போராடும் பெண்களுக்கு எதிரான பாஜவின் கருத்தியல் வெளிப்பாடு" எனப் பதிவிட்டுள்ளார். பொதுச்சமூகத்தில் இயங்கும் பெண்களின் சுயமரியாதைக்கு எதிராகத் தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வரும் பாஜவினருக்கு அவர் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்
- மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் காத்திருப்பு போராட்டம் மதுரை, பிப்.17- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், மதுரை மாவட்டம் கரடிப்பட்டி மற்றும் மேலக் குயில்குடி பகுதிகளில் இடம்பெற்று வரும் நில ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், அப்பகுதி இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானம் அமைக்க வலியுறுத்தியும் நாளை காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டம் பிப் - 17 செவ்வாய்க்கிழமை pமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் என அமைப்பினர் தெரிவித்துள்ளனர். பொது மக்களின் பயன்பாட்டிற்கான நிலங்களை பாதுகாக்கவும், இளைஞர்களின் விளையாட்டு மற்றும் உடற்திறன் மேம்பாட்டிற்கான வசதிகளை உருவாக்கவும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.3
- மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளாகத்தில் இன்று (பிப்.17) தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம், தமிழ்நாடு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் துணை செவிலியர் பணியிடங்களை ஒப்படைப்பு செய்யக்கூடாது, தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி மருந்து வழங்கக்கூடாது ,பெண் ஊழியர் என்பதால் பாரபட்சம் காட்டக்கூடாது, தற்காலிக செவிலியர்களை தடுப்பூசி பணியில் ஈடுபடுத்தக் கூடாது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி சுமார் 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.1
- முன்னாள் மதுரை துணை மேயரும் திமுக பிரமுகருமன பி.எம். மன்னன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் இன்று சந்தித்தார்1
- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா குளத்துபட்டி அரசு மகளிர் கலை கல்லூரியில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது சுமார் 4 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கூடுதல் கட்டிடத்திற்கு நிலக்கோட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் கலந்து கொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார். நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தலைமை வகித்தார். மேலும் இவ்விழாவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் திமுக முக்கிய பிரமுகர்களான சேசுராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மலையாளம் துணை அமைப்பாளர் கந்த பிரபு, கல்லூரி பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.1
- சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் 14 வது நாளாக 22 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி 200க்கும் மேற்பட்ட பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் கடந்த 3 தேதியிலிருந்து 14 வது நாளாக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அவர்கள் 10 ஆண்டுகள் பணி முடித்த தகுதியான பணியாளர்களுக்கு அரசு பணியில் 50 சதவீத வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே கைகளில் தட்டுகளில் ஒலி எழுப்பி, ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு அங்கன்வாடி பணியாளர் நாங்கள் கெளரவமாக வாழ்ந்து இருப்போமே? இந்த வேலையை வழங்கி தெருவில் பிச்சை எடுக்க விட்டீர்களே என்று கண்ணீர் விட்டு கதறியது சோகத்தை ஏற்படுத்தியது.1
- தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, சிவகங்கை மாவட்டத்தில் நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் சிறப்பம்சங்கள்: இந்த விழாவில் கலந்துகொண்ட சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், விளையாட்டு உபகரணங்கள் ஏற்றிச் சென்ற வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, பல்வேறு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குக் கால்பந்து, கிரிக்கெட் மட்டை, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்களை நேரடியாக வழங்கினார். முக்கிய உரை: நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி சிதம்பரம் பின்வருவனவற்றைத் தெரிவித்தார்: * இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்க 'நம்ம ஊர் விளையாட்டுத் திடல்' போன்ற திட்டங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. * கிராமப்புறங்களில் மட்டுமல்லாது, தற்போது நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளிலும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். * விளையாட்டில் இளைஞர்கள் காட்டும் ஆர்வம் அவர்களின் உடல்நலத்திற்கும், எதிர்காலத்திற்கும் மிக முக்கியமானது. நிறைவு: இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். பொதுமக்களும், விளையாட்டு வீரர்களும் திரளாகக் கலந்துகொண்டு இத்திட்டத்திற்குத் தங்களது வரவேற்பைத் தெரிவித்தனர்.1
- இடையாத்தூர் கிராமம் ஜல்லிக்கட்டு விழா2
- மதுரை, பிப். 16- தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு அரசாணை எண் 5 (11.01.2021)ன் படி வழங்கப்பட வேண்டிய சட்டப்படியான பணிமேம்பாட்டு ஊதியத்தை நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக வழங்காமல் நிறுத்தி வைத்துள்ள தமிழக அரசைக் கண்டித்தும், பணிமேம்பாட்டு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையினை இனியும் தாமதிக்காமல் உடனடியாக வழங்க வலியுறுத்தியும், அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (ஏ.யூ.டி) மற்றும் அண்ணா, மதுரை காமராஜர், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா, அழகப்பா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (மூட்டா) சார்பில் மதுரை செல்லூர் மெயின் ரோட்டில் உள்ள கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான உயர் கல்வி ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்.1