Shuru
Apke Nagar Ki App…
காஞ்சிபுரம்: பதற்றமான வாக்குச்சாவடி குறித்து ஆய்வு கூட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், திருப்பெரும்புதூர் (தனி), உத்திரமேரூர் மற்றும் ஆலந்தூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பதற்றமான மற்றும் பிரச்சனைக்குரிய வாக்குச்சாவடிகள் (Vulnerability Mapping and Identification of Critical Polling Station) தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.சண்முகம், காவல் துறை அலுவலர்கள், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.
Naga Rajan
காஞ்சிபுரம்: பதற்றமான வாக்குச்சாவடி குறித்து ஆய்வு கூட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், திருப்பெரும்புதூர் (தனி), உத்திரமேரூர் மற்றும் ஆலந்தூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பதற்றமான மற்றும் பிரச்சனைக்குரிய வாக்குச்சாவடிகள் (Vulnerability Mapping and Identification of Critical Polling Station) தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.சண்முகம், காவல் துறை அலுவலர்கள், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- காஞ்சிபுரம் வையாவூர் சாலையில் அமைந்துள்ள காஞ்சி புத்த விகாருக்கு இலங்கையில் இருந்து பகவான் புத்தருடைய தாதுக்கள் (அஸ்தியை) இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழில் முதல் பட்டம் பெற்ற சிங்கள பிக்கு ரத்தின தேரர் அவர்கள் காஞ்சிபுரத்திற்கு எடுத்து வந்தார்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது அவரை தமிழகத்தில் உள்ள அனைத்து பிக்குகளும் ஒன்று சேர்ந்து வரவேற்பு அளித்தார்கள் காஞ்சி புத்த விகாரை சார்ந்த தலைவர் ஆர். திருநாவுக்கரசு செயலாளர் ஜி. நாகராஜன் பொருளாளர் எம். கௌதமன் ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.1
- நெல்மணிகளை பறவைகளிடமிருந்து காப்பாற்ற, களக்காட்டூர் பெண் விவசாயி ஒருவர் நாள் முழுவதும் பாத்திரத்தை டமால் டமால்’ என தட்டி சத்தம் எழுப்பி குருவிகளை ஓட்ட பெரும்பாடு பட்டு வருகிறார். __________ காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர், பகுதியில் பெண் விவசாயி ஒருவரின் வித்தியாசமான முயற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பயிர் செய்த நெற்பயிர் முளைத்து வளரும் இந்த நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் குருவிகள் கூட்டமாக வந்து நெல்மணிகளைத் தின்றுவிட்டு செல்வதாக அவர் கூறுகிறார். இதைத் தடுக்க, தண்ணீர் நிரப்ப பயன்படுத்தப்படும் காலி அன்னக்கூடையை கையில் பிடித்து, குச்சியால் ‘டமால் டமால்’ எனத் தட்டி சத்தமிட்டு குருவிகளை விரட்டுகிறார். “சத்தம் போடாமல் இருந்தால் முளைத்துள்ள நெல்மணிகளை குருவிகள் முழுவதும் சேதப்படுத்தி விடும். அதனால் தினமும் இரண்டு வேளையும் இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது,” என்று அந்த பெண் விவசாயி வேதனையுடன் தெரிவித்தார். தன் உழைப்பின் பலனை காக்க, இயற்கையோடு போராடும் இந்த பெண் விவசாயியின் விடாமுயற்சி, கிராமப்புற விவசாய வாழ்க்கையின் சவால்களை வெளிப்படுத்துகிறது.1
- Post by Vinayagam Vinayagam1
- மக்களிடம் அலட்சியம் அடாவடி வசூல் மக்கள் உங்கள் கமெண்ட்1
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- Post by ர. சசி குமார்6
- कैमरे पर: तमिलनाडु के वेल्लोर में मयाना कोल्लाई के दौरान 60 फुट लंबा मंदिर रथ गिरने से 7 लोग घायल। वेल्लोर के मयाना कोल्लाई उत्सव के दौरान, 60 फुट लंबा मंदिर का रथ गिर गया, जिससे सात लोग घायल हो गए और दहशत फैल गई। वेल्लोर में वार्षिक मयाना कोल्लाई उत्सव के दौरान 16 फरवरी की रात को उस समय नाटकीय घटना घटी जब श्रद्धालुओं की भारी भीड़ के बीच 60 फुट लंबा मंदिर रथ पलट गया। इस घटना में कम से कम सात लोग घायल हो गए और भीड़ में कुछ देर के लिए अफरा-तफरी मच गई।1
- பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சடன் பிரேக் அடித்து நின்ற லாரி மீது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் கன்டெய்னர் லாரி டிரைவர் இடுப்பாடுகளில் சிக்கி படுகாயம். தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் லாரியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஓட்டுநரை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாயில் சுமார் அரை மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிப்பு __________ பெங்களூர் சென்னை மார்கமாக நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த தேசிய நெடுஞ்சாலை கடந்து செல்கின்றது. இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே வெள்ளகேட் பகுதியில், வேலூரில் இருந்து சென்னை மார்கமாக சென்று கொண்டு இருந்த கண்டெய்னர் லாரி ஒன்று, "முன்னாள் சென்ற லாரி திடீரென சடன் பிரேக் போட்டு நின்ற காரணத்தினால்" அதன் மீது கன்டெய்னர் லாரி பயங்கரமாக மோதியது. மோதிய விபத்தில் கன்டெய்னர் லாரி முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த இடுப்பாடுகளில் கண்டெய்னர் லாரியின் ஓட்டுனர் சிக்கி கொண்டு உயிருக்கு க்கு போராடிக் கொண்டிந்தார். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் கிரேன் உதவியுடன் இடுப்பாடுகளில் சிக்கியிருந்த கன்டெய்னர் லாரி ஓட்டுனரை மிகவும் சிரமப்பட்டு வெளியே எடுத்தனர். இந்த விபத்தில் கன்டெய்னர் லாரி ஓட்டுனரின் கால் உடைந்து படு காயத்துடன் இருந்தவரை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளை கேட் அருகே சுமார் 30 நிமிடத்திற்க்கு மேல் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. முன்னால் சென்ற லாரி டிரைவரின் அஜாக்கிரதையினால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக பேட்ரோல் காவல்துறையினர் தெரிவித்தனர்.1