Shuru
Apke Nagar Ki App…
சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளர் அறிவிப்பு! சேலம் மாவட்டம் வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கான பாமக வேட்பாளராக, மேட்டூர் சட்டமன்ற உறுப்பினரும், பாமக மேற்கு மாவட்ட செயலாளருமான சதாசிவம் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி என்று அறிவித்துள்ளார். இந்நிலையில் சேலம் வடக்கு தொகுதியில் அமைச்சர் ராஜேந்திரன் திமுக சார்பில் போட்டியிடுவதால், திமுக பாமக என இருமுனைப்போட்டி ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Rajendran
சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளர் அறிவிப்பு! சேலம் மாவட்டம் வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கான பாமக வேட்பாளராக, மேட்டூர் சட்டமன்ற உறுப்பினரும், பாமக மேற்கு மாவட்ட செயலாளருமான சதாசிவம் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி என்று அறிவித்துள்ளார். இந்நிலையில் சேலம் வடக்கு தொகுதியில் அமைச்சர் ராஜேந்திரன் திமுக சார்பில் போட்டியிடுவதால், திமுக பாமக என இருமுனைப்போட்டி ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More news from தமிழ்நாடு and nearby areas
- சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளில் சார்பில், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினரும், பாமக மேற்கு மாவட்ட செயலாளருமான எம்எல்ஏ சதாசிவம், சேலம் வடக்கு தொகுதியில் பாமக வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் நடைபெற்ற, அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய அவர், வருகின்ற தேர்தலில் இந்த வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தான் முக்கியம் வெற்றி பெறுவேன் என்றும், தான் வெற்றி பெற்ற பிறகு வடக்கு தொகுதிக்கு ஏராளமான நன்மைகளை செய்ய உள்ளதாகவும் அவர் பேசினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- Post by Dharmaraj P1
- தவெக நாமக்கல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக சி.எஸ். திலீப் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதுச்சத்திரம் வடக்கு ஒன்றியத் தலைமை சார்பில் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டாடப்பட்டது. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கித் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த அறிவிப்பு நாமக்கல் மாவட்ட தவெகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.1
- சங்ககிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நித்யா அருண் ஏர் கலப்பையை சுமந்தபடி தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்... தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கிறது.சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் வேட்புமனு தாக்கல் இன்று 30ஆம் தேதி தொடங்குகிறது... இதனையடுத்து மாநிலம் முழுவதும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன... இந்நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் நித்யா அருண் வேட்புமனு தாக்கல் செய்ய தங்கள் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டவர்களுடன் உழவர் ஏர் கலப்பை தோலில் சுமந்தபடி இன்று சங்ககிரி மலைக்கோட்டையில் இருந்து கோட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று சங்ககிரி தேர்தல் நடத்தும் அலுவலர் கேந்திரியாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்...1
- கிருஷ்ணகிரிநகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டுபகுதியில் ரம்ஜான் மற்றும் உரூஸ் திருவிழாவினை முன்னிட்டு ஹக்கே பஞ்சத்தன் பொதுஅறக்கட்டளை சார்பாக ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி உணவுவழங்கும் விழா நடைபெற்றது. ஹக்கே பஞ்சத்தன்பொது அறக்கட்டளை நிறுவனர் அன்சர் தலைமையில் நடைபெற்றது.சையத் பாஷா மலையின் மேல் உள்ள தர்காவில் சிறப்பு துவா பாத்தியா நடைபெற்றது1
- திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடக் கூடிய சத்தியபாமா வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஆதரவாக வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் திமுக ஆட்சியை வீழ்த்தக்கூடிய ஒரே சக்தியாக தமிழக வெற்றிக் கழகமும் அதன் தலைவர் விஜயும் இருப்பதாக மக்கள் எண்ணுகிறார்கள் , அது நிறைவேறும் என பேட்டி அளித்தார்.1
- Post by K.S. PERIYASAMY1
- சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி குணசீலா, இன்று சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், சேலம் வடக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கோட்டை குமாரிடம், இன்று தனது தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர் இதுவரைக்கும் அவர் கூறும் போது சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி மக்கள், தன் மீது அளவு கடந்த அன்பும் பாசமும் வைத்துள்ளதால், தனக்கு இத்தொகுதியில் நிச்சயம் வெற்றி வாய்ப்பு உள்ளது என்றும், அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் நிச்சயம் வென்று காட்டுவேன் என நாம் தமிழர் வேட்பாளர் திருமதி குணசீலா தெரிவித்தார்.1