logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தேனி அல்லிநகரம் நகராட்சியில் நல்லகண்ணு மறைவிற்கு இரங்கல் தீர்மானம் தேனியில் உள்ள தேனி அல்லிநகரம் நகராட்சியில் மாதந்திர கூட்டம் நடைபெற்றது,நகராட்சி சேர்மன் ரேணுப்பிரியா பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த நிகழ்வில் துணை சேர்மன், வார்டு கவுன்சிலர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்

4 hrs ago
user_Theni
Theni
Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
4 hrs ago

தேனி அல்லிநகரம் நகராட்சியில் நல்லகண்ணு மறைவிற்கு இரங்கல் தீர்மானம் தேனியில் உள்ள தேனி அல்லிநகரம் நகராட்சியில் மாதந்திர கூட்டம் நடைபெற்றது,நகராட்சி சேர்மன் ரேணுப்பிரியா பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த நிகழ்வில் துணை சேர்மன், வார்டு கவுன்சிலர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • தேனி அருகே அல்லிநகரத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது தனி சன்னதியில் அருள் பாலிக்கும் சிவசுப்பிரமணியருக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பலவித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து வஸ்திரம் கட்டி வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு கையில் வேலுடன் மயில் மேல் அமர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுப்ரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சி தந்தார் பின்னர் முருகனுக்கு தூபம் காட்டப்பட்டு மகா தீபாராதனை, பஞ்ச கற்பூர ஆரத்தி உடன் தீபாராதனை காட்டப்பட்டது இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடு பூஜையை கண்டு தரிசித்துச் சென்றனர்
    1
    தேனி அருகே அல்லிநகரத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது 
தனி சன்னதியில்  அருள் பாலிக்கும் சிவசுப்பிரமணியருக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பலவித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது 
அதனைத் தொடர்ந்து வஸ்திரம் கட்டி வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு கையில் வேலுடன் மயில் மேல் அமர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுப்ரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சி தந்தார் பின்னர் முருகனுக்கு தூபம் காட்டப்பட்டு மகா தீபாராதனை, பஞ்ச கற்பூர ஆரத்தி உடன் தீபாராதனை காட்டப்பட்டது 
இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடு பூஜையை கண்டு தரிசித்துச் சென்றனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    19 hrs ago
  • Post by RAJA news
    1
    Post by RAJA news
    user_RAJA news
    RAJA news
    பத்திரிகையாளர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    18 hrs ago
  • மதுரை சரவணா கிச்சன் சார்பில் 10 ருபாய் மலிவு விலையில் மதிய உணவாக தயிர்சாதம், தக்காளி சாதம் மற்றும் வெஜிடபிள் பிரியாணி விற்பனை துவக்கப்பட்டுள்ளது. அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் ஏற்பாட்டில் சரவணா மருத்துவமனை மற்றும் சூர்யா டிரஸ்ட் இணைந்து சரவணா கிச்சன் என்ற பெயரில் ஏழை மக்களுக்கான நடமாடும் மலிவு விலை உணவகத்தை துவக்கி கடந்த ஜனவரி 19 முதல் காலை உணவாக 10 ரூபாய்க்கு தேநீருடன் 3 இட்லி விற்பனையை துவக்கியது. அதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 12ம் தேதி முதல் இரவு உணவாக 20 ரூபாய் மலிவு லிலையில் சிக்கன் மற்றும் முட்டைப் பிரியாணி விற்பனை செய்து வரும் நிலையில், இன்று முதல் மதிய வேளையிலும் மக்களுக்கு மலிவு விலை உணவு வழங்கும் சேவையை சரவணா கிச்சன் விரிவுபடுத்தி உள்ளது. இன்று (9/3/2026 திங்கள்) கோ.புதூர் ஐடிஐ பஸ் நிறுத்தம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் மலிவு விலையில் 10 ரூபாய்க்கு தயிர்சாதம், தக்காளி சாதம் மற்றும் வெஜிடபிள் பிரியாணி ஆகியவை வழங்கும் திட்டத்தை இன்று கழக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் Ex.MLA அவர்கள் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரமணி, வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன், முத்தானந்தன், அஜித்குமார், பாண்டிச்செல்வி, லியாகத் அலி, ஜாகிர் உசேன், விருமாண்டி, ஆகியோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் கடந்த 50 நாட்களாக மக்களின் ஏகோபித்த வரவேற்பில் நடைபெற்று வரும் சரவணா கிச்சன் மலிவு விலை உணவகத்தில் காலை நேரத்தில் வழங்கப்படும் மலிவு விலை இட்லி தேநீர் திட்டத்தில் சுமார் 30,000 பேரும், மலிவு விலை இரவு உணவு பிரியாணி வழங்கும் திட்டத்தில் கடந்த 24 நாட்களில் 12,000 பேரும் ஆக இதுவரை சுமார் 42,000 பேர் பயன் பெற்றுள்ள நிலையில் இன்று முதல் 10 ரூபாய் மலிவு விலையில் மதிய உணவு வழங்கும் திட்டத்தை இன்று முதல் சரவணா கிச்சன் துவங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
    1
    மதுரை சரவணா கிச்சன் சார்பில் 10 ருபாய் மலிவு விலையில் மதிய உணவாக தயிர்சாதம், தக்காளி சாதம் மற்றும் வெஜிடபிள் பிரியாணி விற்பனை துவக்கப்பட்டுள்ளது.
அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் ஏற்பாட்டில் சரவணா மருத்துவமனை மற்றும் சூர்யா டிரஸ்ட் இணைந்து சரவணா கிச்சன் என்ற பெயரில் ஏழை மக்களுக்கான நடமாடும் மலிவு விலை உணவகத்தை துவக்கி கடந்த ஜனவரி 19 முதல் காலை உணவாக 10 ரூபாய்க்கு தேநீருடன் 3 இட்லி விற்பனையை துவக்கியது. அதைத் தொடர்ந்து கடந்த  பிப்ரவரி 12ம் தேதி முதல் இரவு உணவாக 20 ரூபாய் மலிவு லிலையில் சிக்கன் மற்றும் முட்டைப் பிரியாணி விற்பனை செய்து வரும் நிலையில், இன்று முதல் மதிய வேளையிலும் மக்களுக்கு மலிவு விலை உணவு வழங்கும் சேவையை சரவணா கிச்சன் விரிவுபடுத்தி உள்ளது.
இன்று (9/3/2026  திங்கள்) கோ.புதூர் ஐடிஐ பஸ் நிறுத்தம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் மலிவு விலையில் 10 ரூபாய்க்கு தயிர்சாதம், தக்காளி சாதம் மற்றும் வெஜிடபிள் பிரியாணி ஆகியவை வழங்கும் திட்டத்தை இன்று கழக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் Ex.MLA அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரமணி, வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன், முத்தானந்தன், அஜித்குமார், பாண்டிச்செல்வி, லியாகத் அலி, ஜாகிர் உசேன், விருமாண்டி, ஆகியோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கடந்த 50 நாட்களாக மக்களின் ஏகோபித்த வரவேற்பில் நடைபெற்று வரும் சரவணா கிச்சன் மலிவு விலை உணவகத்தில் காலை நேரத்தில் வழங்கப்படும் மலிவு விலை இட்லி தேநீர் திட்டத்தில் சுமார் 30,000 பேரும், மலிவு விலை இரவு உணவு பிரியாணி வழங்கும் திட்டத்தில் கடந்த 24 நாட்களில் 12,000 பேரும் ஆக இதுவரை சுமார் 42,000 பேர் பயன் பெற்றுள்ள நிலையில் இன்று முதல் 10 ரூபாய் மலிவு விலையில் மதிய உணவு வழங்கும் திட்டத்தை இன்று முதல் சரவணா கிச்சன் துவங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
    user_Madhubalaji vm
    Madhubalaji vm
    Local News Reporter வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    23 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் நாகல்புதூரில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் (குட்டவாத்தியார் பள்ளி) 100வது ஆண்டுவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள். மேலும் தற்போது பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் நாகல்புதூரில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் (குட்டவாத்தியார் பள்ளி) 100வது ஆண்டுவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள். மேலும் தற்போது பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    5 hrs ago
  • மதுரையில் இன்று போலீசார் அணிவகுப்பு நடைபெற்றது. மதுரையில் இன்று (மார்ச் 10) காலை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பு அண்ணாமலை தியேட்டர் முன்பாக ஆரம்பித்து முக்கிய சாலைகள் வழியாக முனிச்சாலை அருகே நிறைவு பெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படை போலீசார் மற்றும் உள்ளூர் போலீசாரும் கலந்து கொண்டனர்.
    1
    மதுரையில் இன்று போலீசார் அணிவகுப்பு நடைபெற்றது.
மதுரையில் இன்று (மார்ச் 10) காலை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பு அண்ணாமலை தியேட்டர் முன்பாக ஆரம்பித்து முக்கிய சாலைகள் வழியாக முனிச்சாலை அருகே நிறைவு பெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படை போலீசார் மற்றும்  உள்ளூர் போலீசாரும் கலந்து கொண்டனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    31 min ago
  • மதுரை : ​சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆகாஷ் என்ற பட்டியலின இளைஞர் காவல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது குறித்து புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மாவட்ட காவல்துறை ஆகாஷ் என்ற இளைஞரை கொலை செய்துவிட்டது. இந்த மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் ஒரே சாதியினராக இருந்து கொண்டு, சாதி சங்கங்களைப் போல செயல்படுகின்றனர். ​ஏற்கனவே மடப்புரம் கோவில் காவலாளி காவல்துறையினரால் கொல்லப்பட்ட சுவடு மறைவதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆகாஷ் என்ற இளைஞரின் காலை உடைத்தது காவல்துறைதான். ஆனால், அவர் பாலத்தில் இருந்து குதிக்க முயன்றதாக காவல்துறை பொய் சொல்கிறது என அவர் குற்றம் சாட்டினார்.
    1
    மதுரை :
​சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆகாஷ் என்ற பட்டியலின இளைஞர் காவல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது குறித்து புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மாவட்ட காவல்துறை ஆகாஷ் என்ற இளைஞரை கொலை செய்துவிட்டது. இந்த மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் ஒரே சாதியினராக இருந்து கொண்டு, சாதி சங்கங்களைப் போல செயல்படுகின்றனர்.
​ஏற்கனவே மடப்புரம் கோவில் காவலாளி காவல்துறையினரால் கொல்லப்பட்ட சுவடு மறைவதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆகாஷ் என்ற இளைஞரின் காலை உடைத்தது காவல்துறைதான். ஆனால், அவர் பாலத்தில் இருந்து குதிக்க முயன்றதாக காவல்துறை பொய் சொல்கிறது என அவர் குற்றம் சாட்டினார்.
    user_Nallendran
    Nallendran
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாதிற்கு உட்பட்ட அம்மச்சியாபுரம் கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. இங்குள்ள சுமார் 15 விவசாயிகள் தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் இயங்கும் தனியார் விதை விற்பனை நிலையத்தின் மூலம் விதைகள் வாங்கி சாகுபடி செய்தனர். நடவு, உரம்,மருந்து, களை எடுத்தல் 120 நாட்கள் பராமரிப்புக்கு பின் தற்போது அறுவடைக்கு தயாரான நெல் மணிகள் போதிய விளைச்சலின்றி பதராகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட தனியார் நெல் விதை விற்பனை நிலையத்தின் மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அம்மச்சியாபுரம் விவசாயிகள் சுமார் 10க்கும் மேற்பட்டோர் விளைச்சலின்றி உள்ள நெல் மணிகளுடன் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கி தங்கள் வாழ்வாதாரம் காத்திட கோரிக்கை விடுத்தனர். மேலும் சம்பந்தப்பட்ட தனியார் நெல் விதை விற்பனை நிலையத்தால் வேறு பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்ட நெல் விதைகளின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    1
    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாதிற்கு உட்பட்ட அம்மச்சியாபுரம் கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. இங்குள்ள சுமார் 15 விவசாயிகள் தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் இயங்கும் தனியார் விதை விற்பனை நிலையத்தின் மூலம் விதைகள் வாங்கி சாகுபடி செய்தனர். நடவு, உரம்,மருந்து, களை எடுத்தல் 120 நாட்கள் பராமரிப்புக்கு பின் தற்போது அறுவடைக்கு தயாரான நெல் மணிகள் போதிய விளைச்சலின்றி பதராகிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட தனியார் நெல் விதை விற்பனை நிலையத்தின் மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அம்மச்சியாபுரம் விவசாயிகள் சுமார் 10க்கும் மேற்பட்டோர் விளைச்சலின்றி உள்ள நெல் மணிகளுடன் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கி தங்கள் வாழ்வாதாரம் காத்திட கோரிக்கை விடுத்தனர். மேலும் சம்பந்தப்பட்ட தனியார் நெல் விதை விற்பனை நிலையத்தால் வேறு பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்ட நெல் விதைகளின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம், மூலச்சத்திரம் அருகே நரிக்கல்பட்டி பகுதியில் அதிவேகமாக வந்த காரை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி அவர்கள் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனை செய்ததில் அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ குட்கா பொருள் இருப்பது தெரியவந்து குட்கா பொருளையையும், காரையும் பறிமுதல் செய்தனர் அந்த காரில் வந்த நான்கு பேர் தப்பி ஓடிய நிலையில் அவர்களை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம், மூலச்சத்திரம் அருகே நரிக்கல்பட்டி பகுதியில் அதிவேகமாக வந்த காரை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி அவர்கள் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சோதனை செய்ததில் அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ குட்கா பொருள் இருப்பது தெரியவந்து குட்கா பொருளையையும், காரையும் பறிமுதல் செய்தனர் அந்த காரில் வந்த நான்கு பேர் தப்பி ஓடிய நிலையில் அவர்களை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறனர்.
    user_RAJA news
    RAJA news
    பத்திரிகையாளர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    18 hrs ago
  • விடியல் தருவோம் என்று சொல்லிவிட்டு தமிழக மக்களுக்கு விடியாத ஆட்சியைத்தான் திராவிட முன்னேற்ற கழகம் கொடுத்துள்ளது. தேர்தல் வருவதால் சேர்த்து வைத்துள்ள பணத்தை கொடுத்து மக்களை கூட்டி கூட்டம் நடத்துகின்றனர். ஓபிஎஸ் இணைப்பு விழா என்ற கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டதாக விளம்பரம் செய்தனர். அதற்கு அரசு பேருந்து, பிரியாணி, தலைக்கு 500 ரூபாய் பணம் கொடுத்து கூட்டம் சேர்த்தனர். தேர்தல் நேரம் அவப்பெயர் ஏற்படும் என்ற காரணத்தால் ஊழல் குற்றச்சாட்டு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளது திமுக அரசு. ஸ்டாலின் அரசு மீது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றச்சாட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பின்படி வருகிற 12-ஆம் தேதி மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது மதுரை மாநகராட்சியில் நிர்வாக சீர்கேடை கண்டித்தும் நடைபெற்ற வரி மோசடி ஊழல் புகார் ஐந்து மாதங்களாக மாநகராட்சி மேயர் மண்டல தலைவர் நிலை குழு தலைவர் நியமிக்காமல் மாமன்ற கூட்டம் நடத்தப்படவில்லை என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது இதைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசும் போது விடியல் தருவோம் என்று சொல்லிவிட்டு தமிழக மக்களுக்கு விடியாத ஆட்சியைத்தான் திராவிட முன்னேற்ற கழகம் கொடுத்துள்ளது. தேர்தல் வருவதால் சேர்த்து வைத்துள்ள பணத்தை கொடுத்து மக்களை கூட்டி கூட்டம் நடத்துகின்றனர். ஓபிஎஸ் இணைப்பு விழா என்ற கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டதாக விளம்பரம் செய்தனர். அதற்கு அரசு பேருந்து, பிரியாணி, தலைக்கு 500 ரூபாய் பணம் கொடுத்து கூட்டம் சேர்த்தனர். தேர்தல் நேரம் அவப்பெயர் ஏற்படும் என்ற காரணத்தால் ஊழல் குற்றச்சாட்டு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளது திமுக அரசு என்றார்
    1
    விடியல் தருவோம் என்று சொல்லிவிட்டு தமிழக மக்களுக்கு விடியாத ஆட்சியைத்தான் திராவிட முன்னேற்ற கழகம் கொடுத்துள்ளது.
தேர்தல் வருவதால் சேர்த்து வைத்துள்ள பணத்தை கொடுத்து மக்களை கூட்டி கூட்டம் நடத்துகின்றனர்.
ஓபிஎஸ் இணைப்பு விழா என்ற கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டதாக விளம்பரம் செய்தனர். அதற்கு அரசு பேருந்து, பிரியாணி, தலைக்கு 500 ரூபாய் பணம் கொடுத்து கூட்டம் சேர்த்தனர்.
தேர்தல் நேரம் அவப்பெயர் ஏற்படும் என்ற காரணத்தால் ஊழல் குற்றச்சாட்டு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளது திமுக அரசு.
ஸ்டாலின் அரசு மீது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றச்சாட்டு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பின்படி வருகிற 12-ஆம் தேதி மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது மதுரை மாநகராட்சியில் நிர்வாக சீர்கேடை கண்டித்தும் நடைபெற்ற வரி மோசடி ஊழல் புகார் ஐந்து மாதங்களாக மாநகராட்சி மேயர் மண்டல தலைவர் நிலை குழு தலைவர் நியமிக்காமல் மாமன்ற கூட்டம் நடத்தப்படவில்லை என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது இதைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசும் போது விடியல் தருவோம் என்று சொல்லிவிட்டு தமிழக மக்களுக்கு விடியாத ஆட்சியைத்தான் திராவிட முன்னேற்ற கழகம் கொடுத்துள்ளது.
தேர்தல் வருவதால் சேர்த்து வைத்துள்ள பணத்தை கொடுத்து மக்களை கூட்டி கூட்டம் நடத்துகின்றனர்.
ஓபிஎஸ் இணைப்பு விழா என்ற கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டதாக விளம்பரம் செய்தனர். அதற்கு அரசு பேருந்து, பிரியாணி, தலைக்கு 500 ரூபாய் பணம் கொடுத்து கூட்டம் சேர்த்தனர்.
தேர்தல் நேரம் அவப்பெயர் ஏற்படும் என்ற காரணத்தால் ஊழல் குற்றச்சாட்டு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளது திமுக அரசு என்றார்
    user_Madhubalaji vm
    Madhubalaji vm
    Local News Reporter வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    23 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.