Shuru
Apke Nagar Ki App…
9840358048 DIRECT PAY B2B SPA SERVICE ALL OVER CHENNAI NURU MASSAGE B2b massages 9840358048 B2B SPA SERVICE ALL OVER CHENNAI NURU MASSAGE B2b massages
Acara | No.1 Spa in Chennai
9840358048 DIRECT PAY B2B SPA SERVICE ALL OVER CHENNAI NURU MASSAGE B2b massages 9840358048 B2B SPA SERVICE ALL OVER CHENNAI NURU MASSAGE B2b massages
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் டிஎன்டியுசி ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது .நிகழ்விற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் எஸ்.சேகர் தலைமை தாங்கினார்.மாநில செயற்குழு உறுப்பினர் டி.கே. மாரிமுத்து முன்னிலை வகித்தார். நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில தொழிற்சங்க தலைவர் ஜி.ஆர்.மூர்த்தி, பொதுச் செயலாளர் செல்வமணி பங்கேற்றனர். நிகழ்வை ஒட்டி ஆட்டோ சங்கப் பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டதோடு, பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.4
- தங்க தாரகை, புரட்சி தலைவி அம்மா 78 வது பிறந்த நாளை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்ட கழகம், காஞ்சிபுரம் கிழக்கு பகுதி கழகம்,23 வது வார்டு சார்பில் திருவள்ளூவர் தெரு பகுதியில் கிழக்கு பகுதி கழக கைத்தறி பிரிவு செயலாளர் குமார் ஏற்பாட்டில் பகுதி கழக செயலாளர் பாலாஜி முன்னிலையில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் அம்மா திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் உடன் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வில்வபதி,பகுதி கழக செயலாளர் கோல்டு ரவி,பொது குழு உறுப்பினர் ஒ.வி.ரமேஷ்,மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் சிந்தன், மாவட்ட கைத்தறி பிரிவு இணை செயலாளர் கோபால்,மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் விஸ்வநாதன்,பகுதி கழக துணை செயலாளர் கபாலி, உத்திரமேரூர் நகர செயலாளர் ஜெய விஷ்ணு,பகுதி கழக இணை செயலாளர் கோல்டு கணேஷ்,பகுதி எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் செல்வகுமார், பகுதி அம்மா பேரவை செயலாளர் வினோத் பாபு சிங்,பகுதி அம்மா பேரவை தலைவர் காஞ்சி ராஜா, பகுதி கழக இளைஞர் அணி செயலாளர் என்.எஸ்.கே. ஸ்ரீதர்,பகுதி வர்த்தக அணி செயலாளர் ராஜா,வட்ட செயலாளர்கள் சம்பத் தனபால், சிவகுமார் ,மோத்திலால், ஆர்.டி.சேகர்,அம்மா பாலு,ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பார்த்தசாரதி,மற்றும் வட்ட நிர்வாகிகள் சந்திரசேகர்,ராதா பூபதி, சக்திவேல், பாலமுருகன்,தம்பிகா, சந்தானம், ராமசாமி, மகளிரணி நீலாவதி, மாதவி உள்ளிட்டோர் உள்ளனர்1
- Post by Kuppusamy4
- Post by Vinayagam Vinayagam1
- திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் வசிப்பவர் மோகன்தாஸ் இவரது மனைவி ரஞ்சிதா இவர்களது மகன் ரித்தீஷ் திருப்பத்தூர் நகராட்சிக்கு அருகாமையில் உள்ள அரசு நிதி உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இவர் அதே பள்ளியில் உதவி மாணவத் தலைவராகவும் (ASPL) இருந்து உள்ளார் இந்நிலையில் பள்ளி விடுமுறை நாள் என்பதால் ரித்தீஷ் தன்னுடைய சக மாணவர்களுடன் வெளியே சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டு மீண்டும் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது யாரும் வீட்டில் இல்லாத நிலையில் பள்ளி மாணவன் ரித்தீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்த குடும்பத்தார் கத்தி கூச்சலிட்டு ரித்தீஷின் சடலத்தை மீட்டு உள்ளனர். பின்பு தகவல் அறிந்த திருப்பத்தூர் கிராமிய காவல்துறை ரித்தீஷின் சடலத்தை உடற்கூறு ஆய்விற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சந்தேகப்படும்படியான காரணங்கள் ஏதேனும் உள்ளதா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.1
- ஊத்தங்கரை அருகே பல வருடங்களாக மின் இணைப்பு வழங்காமல் அலக்கலைப்பு விவசாயி சக்திவேல் பேட்டி. பெரியகவுண்டனூர் கிராமத்தில் லஞ்சம் கேட்டு கொடுக்காததால் விவசாய நிலத்தில் உள்ள மின்கம்பத்தில் இருந்த மின் கம்பிகளை முன்னறிவிப்பு இன்றி துண்டித்த ஏ.டி சத்தியநாராயணன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி சக்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பெரியகவுண்டனூர், எளச்சூர் கிராமத்தில் வசிக்கும் ஏழை விவசாயி கணபதி இவர் இலவச மின்சாரத்திற்கு முறையாக 2011 ஆம் வருடம் மனு அளித்து 50 ஆயிரம் பணம் கட்டி காத்திருப்போர் பட்டியலில் இருந்தார். விவசாயி கணபதி உடல்நிலை குறைவால் திடீர் என்று இறந்ததினால் அவருடைய மகன் சக்திவேல் தன்னுடைய தந்தை பெயரில் இருந்த விவசாய நிலத்தை தன்னுடைய பெயருக்கு மாற்றி தன்னுடைய தந்தை அரசுக்கு கட்டிய பணத்தின் வாரியாக இலவச மின்சாரத்தை வழங்க வேண்டும் என பலமுறை ஏ.டி யை அணுகியுள்ளார். ஆனால் அவருக்கு தனக்கு தனியாக பணம் தர வேண்டும் கம்ப்பத்திற்கு பணம், ஜெ.சி.பி, வாடகை, கம்பம் ஏற்றி வர வண்டி வாடகை, வேலை செய்ய வரும் மின்சார பணியாளர்களுக்கு கூலி, மொத்தம் 2 இலட்சம் கொடுத்துள்ளேன் செய்தேன். அதுமட்டுமின்றி மீட்டருக்கு பணம் கட்டியுள்ளேன். இவ்வளவும் பெற்று கொண்டு மின்சாரம் வழங்க வில்லை. மீண்டும் ஒன்றை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஏ.டி சத்தியநாராயணன் மற்றும் எல்.ஐ, கனகராஜ் பணம் வேண்டும் என கேட்டார், நான் பணம் தர மறுத்ததால் விவசாயம் நிலத்தில் உள்ள கம்பத்தில் இருந்த மின் கம்பிகளை முன்னறிவிப்பின்றி திடீரென துண்டித்து விட்டனர். பணத்தையும் பெற்றுக் கொண்டு மீட்டர் வைக்காமல் அலையவிடுகின்றனர். இதனால் விவசாய நிலத்தில் உள்ள பூ செடி, பச்சை மிளகாய், தென்னங் கன்றுகள், தண்ணீர் இல்லாமல் காய்ந்து 2 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து மாவட்ட நிர்வாகம் மின்சாரத்துறை ஊத்தங்கரை ஏ.டி, யை அழைத்து விசாரித்து என்னுடைய விவசாய நிலத்திற்கு மின்சாரம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயி கண்ணீர் மல்க தெரிவித்தார். இல்லையென்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1