logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் முதல் முறையாக மிக நீளமான சரக்குக்கப்பலை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், தனது வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு 335.23 மீட்டர் நீளம் கொண்ட 'எம்.வி. சி.எம்.ஏ சி.ஜி.எம் தோரியம்' என்ற மிக நீளமான பிரம்மாண்ட சரக்குப்பெட்டகக் கப்பலை வெற்றிகரமாக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த 2026 செப்டம்பர் 14 அன்று தூத்துக்குடி சர்வதேச சரக்குப் பெட்டக முனையத்திற்கு வந்தடைந்த இக்கப்பல் 335.23 மீட்டர் நீளமும், 51 மீட்டர் அகலமும், 13.5 மீட்டர் மிதவை ஆழமும் கொண்டது. பிரேசிலின் சான்டோஸ் துறைமுகத்திலிருந்து வந்த இக்கப்பல், மெத்தனால் மற்றும் கடல்சார் எரிபொருள் ஆகிய இருவகை எரிபொருட்களிலும் இயங்கும் நவீன தொழில் நுட்பம் கொண்டது. இக்கப்பலிலிருந்து மொத்தம் 3,276 டி.இ.யு சரக்குப் பெட்டகங்கள் கையாளப்பட உள்ளன. இதில் 1,324 டி.இ.யு இறக்குமதி சரக்குகளும், 1,952 டி.இ.யு மறுஏற்றம் செய்யப்படும் சரக்குகளும் அடங்கும். இக்கப்பல் தூத்துக்குடியிலிருந்து மீண்டும் சிங்கப்பூருக்குச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குமுன் கடந்த 2025 டிசம்பரில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் கையாளப்பட்ட 'எம்.வி. எம்.எஸ்.சி மிகாலா' என்ற 304 மீட்டர் நீளக் கப்பலின் சாதனையை இப் புதிய கப்பல் முறியடித்துள்ளது. இக்கப்பலின் வருகையை முன்னிட்டு நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில், வ.உ.சி துறைமுக ஆணையத்தின் துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தரராஜன், கப்பலின் மாலுமியை நேரில் வரவேற்றார். இச்சாதனை குறித்து துறைமுக ஆணையத்தின் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் தெரிவிக்கையில்: "வ.உ.சி துறைமுகம் இதுவரை கையாண்டுள்ள சரக்குக் கப்பல்களிலேயே மிக நீளமான இக்கப்பலை வெற்றிகரமாகக் கையாண்டிருப்பது, துறைமுகத்தின் சர்வதேசக் கடல்சார் உட்கட்டமைப்பின் தகைமையைக் காட்டுகிறது. இச்சாதனை சர்வதேசக் கப்பல் நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும்" என்று தெரிவித்தார்.

3 hrs ago
user_மா.சுடலைமணி
மா.சுடலைமணி
Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
3 hrs ago
f0074935-c154-4b1b-a46f-18c26bcfa2f2

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் முதல் முறையாக மிக நீளமான சரக்குக்கப்பலை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், தனது வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு 335.23 மீட்டர் நீளம் கொண்ட 'எம்.வி. சி.எம்.ஏ சி.ஜி.எம் தோரியம்' என்ற மிக நீளமான பிரம்மாண்ட சரக்குப்பெட்டகக் கப்பலை வெற்றிகரமாக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த 2026 செப்டம்பர் 14 அன்று தூத்துக்குடி சர்வதேச சரக்குப் பெட்டக முனையத்திற்கு வந்தடைந்த இக்கப்பல் 335.23 மீட்டர் நீளமும், 51 மீட்டர் அகலமும், 13.5 மீட்டர் மிதவை ஆழமும் கொண்டது. பிரேசிலின் சான்டோஸ் துறைமுகத்திலிருந்து வந்த இக்கப்பல், மெத்தனால் மற்றும் கடல்சார் எரிபொருள் ஆகிய இருவகை எரிபொருட்களிலும் இயங்கும் நவீன தொழில் நுட்பம் கொண்டது. இக்கப்பலிலிருந்து மொத்தம் 3,276 டி.இ.யு சரக்குப் பெட்டகங்கள் கையாளப்பட உள்ளன. இதில் 1,324 டி.இ.யு இறக்குமதி சரக்குகளும், 1,952 டி.இ.யு மறுஏற்றம் செய்யப்படும் சரக்குகளும் அடங்கும். இக்கப்பல் தூத்துக்குடியிலிருந்து மீண்டும் சிங்கப்பூருக்குச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குமுன் கடந்த 2025 டிசம்பரில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் கையாளப்பட்ட 'எம்.வி. எம்.எஸ்.சி மிகாலா' என்ற 304 மீட்டர் நீளக் கப்பலின் சாதனையை இப் புதிய கப்பல் முறியடித்துள்ளது. இக்கப்பலின் வருகையை முன்னிட்டு நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில், வ.உ.சி துறைமுக ஆணையத்தின் துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தரராஜன், கப்பலின் மாலுமியை நேரில் வரவேற்றார். இச்சாதனை குறித்து துறைமுக ஆணையத்தின் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் தெரிவிக்கையில்: "வ.உ.சி துறைமுகம் இதுவரை கையாண்டுள்ள சரக்குக் கப்பல்களிலேயே மிக நீளமான இக்கப்பலை வெற்றிகரமாகக் கையாண்டிருப்பது, துறைமுகத்தின் சர்வதேசக் கடல்சார் உட்கட்டமைப்பின் தகைமையைக் காட்டுகிறது. இச்சாதனை சர்வதேசக் கப்பல் நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும்" என்று தெரிவித்தார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • நெல்லை மாவட்ட பஞ்சாயத்து சார்பில் குடிநீர் திட்டத்துக்காக ரூ.1 1/4 கோடி ஒதுக்கீடு தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ் தலைமையில் தீர்மானம் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் இசக்கியப்பன் முன்னிலை வகித்தார். இதில் கவுன்சிலர்கள் கனகராஜ், சாலமோன் டேவிட், மகேஷ், அருண் தவசு பாண்டியன், தனி தங்கம், ஜான்ஸ்ரூபா, லிங்க சாந்தி, சத்தியவாணி முத்து, கிருஷ்ணவேணி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் 92 சதவீதம் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்த நிதியாண்டில் ரூ.1 கோடியே 20 லட்சம் நிதி உள்ளது. இதனை குடிநீர் திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டம் செயல்படுத்தப்படும். கடந்த நிதி ஆண்டுகளில் முடிக்கப்படாத பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். முடிக்கப்பட்ட பணிகளுக்கு திறப்பு விழா நடக்கும் போது கண்டிப்பாக கல்வெட்டு வைக்க வேண்டும். மாவட்ட கவுன்சிலர்கள் பணி பாராட்டுக்கு உரியது. இவ்வாறு அவர் பேசினார்.
    1
    நெல்லை மாவட்ட பஞ்சாயத்து சார்பில் 
குடிநீர் திட்டத்துக்காக ரூ.1 1/4 கோடி ஒதுக்கீடு
தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ் தலைமையில் தீர்மானம் 
நெல்லை மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் இசக்கியப்பன் முன்னிலை வகித்தார்.
இதில் கவுன்சிலர்கள் கனகராஜ், சாலமோன் டேவிட், மகேஷ், அருண் தவசு பாண்டியன், தனி தங்கம், ஜான்ஸ்ரூபா, லிங்க சாந்தி, சத்தியவாணி முத்து, கிருஷ்ணவேணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் 92 சதவீதம் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
தற்போது இந்த நிதியாண்டில் ரூ.1 கோடியே 20 லட்சம் நிதி உள்ளது. இதனை குடிநீர் திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டம் செயல்படுத்தப்படும். கடந்த நிதி ஆண்டுகளில் முடிக்கப்படாத பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். முடிக்கப்பட்ட பணிகளுக்கு திறப்பு விழா நடக்கும் போது கண்டிப்பாக கல்வெட்டு வைக்க வேண்டும். மாவட்ட கவுன்சிலர்கள் பணி பாராட்டுக்கு உரியது.
இவ்வாறு அவர் பேசினார்.
    user_Subramanian
    Subramanian
    திருநெல்வேலி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • தவெகாவின் நிலைப்பாடு பிடிக்காததன் காரணமாகவே இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிடுகிறது- சிவகாசிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி... தவெக ஆட்சிக்கு, கூட்டணி கட்சிகள் கொடுக்கின்ற முட்டுக்கட்டை நிலையானது அல்ல, எந்த நேரத்திலும் தவெக ஆட்சிக்கு பேராபத்து வரக்கூடிய சூழலில்தான் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் விமர்சனம்... அறிஞர் அண்ணா அவர்களின் 118 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சிவகாசி காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள அவரது திருவுருவர் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மக்கள் விரும்புகின்ற ஆட்சியாகவும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டும் என்பதுதான் மக்கள் மனதில் ஆழமாக இருக்கிறது இடையில் ஏற்பட்ட சில சருக்கல்கள், கருத்து திணிப்புகள், அரசியல் கோல்மால்கள், வாட்ஸாப், பேஸ்புக், இன்டஸ்ட்ராகிராம் போன்ற குழப்பங்க அண்ணா திமுக ளால் ஆட்சி மாற்றம் வந்துள்ளது தற்போது நடைபெறும் ஆட்சி மக்களால் விரும்பும் ஆட்சி கிடையாது நகைப்புக்குரிய ஆட்சியாக விஜய் ஆட்சி உள்ளது இடைத்தேர்தலில் அதிமுக முதன்மையான கட்சியாக வெற்றி பெறும், தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் பெற்று அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும் எடப்பாடியார் தலைமை தமிழகத்திற்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு மக்கள் வாக்களிக்க தயாராகிவிட்டார்கள் தவெக ஆட்சிக்கு இடைத்தேர்தல் பாடம் புகட்டும் முதல்வரின் லண்டன் பயணம் குறித்து முதல்வர் சார்பில் வெளியிட்டுள்ள புகைப்படம் பேசுபொருளாக தமிழகத்தில் உலாவி வருகிறது, அதை தார்மீகமாக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, ஒரு நாட்டின் முதல்வர் எப்படி வாழ வேண்டும், எப்படி இருக்க வேண்டும், பிறருக்கு முன் உதாரணமாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு இருக்க வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள் ஆனால் அந்த நிலைப்பாட்டில் வாழக்கூடியவராக இன்றைய தமிழக முதல்வர் இருக்கவில்லை முதல்வரின் லண்டன் பயணத்தை சந்தேக கண்ணோடு தமிழக மக்கள் பார்க்கிறார்கள் வெளிநாட்டில் முதலீடை ஈர்க்க சென்றுள்ள முதல்வர், தொழில்துறை அமைச்சர் இல்லாமல் சென்றாலும் சம்பந்தப்பட்ட பணிகளை செய்து வெற்றிகரமாக திரும்பினால் சந்தோஷம் ஆனால் முதல்கட்டமாக ஊடகத்தில் வந்த செய்திகளை பார்க்கும்போது முதல்வர் வெளிநாடு சென்ற நோக்கமே வேறாக தெரிகிறது மக்கள், அரசியல் கட்சி தலைவர்களின் எதிர்ப்புகளை தொடர்ந்து சில பணிகளை செய்வதாக கேள்விப்படுகிறோம் மொத்தத்தில் முதல்வர் தடம் மாறி, தடம் புரண்டு நடவடிக்கையில் ஈடுப்பட்டுக்கொண்டிருப்பதாக தமிழக மக்கள் எண்ணுகிறார்கள், இதை முதல்வர் மாற்றிக்கொள்ள வேண்டும் தமிழக முதலமைச்சராக வந்த பின்னர், அனைத்து முதலமைச்சர்களும் முதல்வர்களுக்கான பண்போடும், தகுதியோடும், தன்மையோடு வாழ்ந்துகொண்டு தமிழகத்தை ஆண்டிருக்கிறார்கள் அதேபோல் விஜயும் முதல்வருக்கான பண்போடும், தகுதியோடும் தன்மையோடும் வாழ்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள், ஆனால் அதற்கு எதிர்மறையான நிலைப்பாட்டோடு முதல்வர் விஜய்யின் ஆட்சியும் அவரது செயல்பாடும் இருக்கிறது முதல்வர் விஜய் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகிறார்கள் தவெக ஆட்சி விளையாட்டுத்தனமான ஆட்சி காவல்துறையினர் மானிய கோரிக்கையின் போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் சார்பாக பல்வேறு கேள்விகளை முன் வைத்தபோது, எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காத முதல்வர் விஜய் அவருக்கே தெரிந்த பாணியில் வசனத்தை பேசி பதில் உரையை முடித்து விட்டார் முதல்வர் விஜயின் பதிலுரை பார்ப்பதற்கு வேண்டுமானால் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும், சிரிப்பாகவும், ஜோக்காகவும் இருக்கலாமே தவிர நல்ல விவரம் தெரிந்த, அரசியல் தெரிந்தவர்கள் முதல்வர் விஜயின் பேச்சை எள்ளி நகையாடுகிறார்கள் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள், முன்னாள் ஆட்சியாளர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு கூட முதல்வர் விஜய் பதிலளிக்கவில்லை காவல்துறை உள்ளிட்ட சீருடை பணியாளர்களுக்கு எந்தவிதமான முன்னேற்ற அறிவிப்புகளும் காவல்துறை மானிய கோரிக்கையில் வரவில்லை இதை காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை சங்கடத்துடன் வாழ்வதை காண முடிகிறது தமிழக மக்களுக்காக 24 மணி நேரமும் உழைக்கின்ற காவல் துறைக்கு எந்தவிதமான அறிவிப்புகளோ சலுகைகளோ வழங்கப்படாததை தமிழக மக்கள், காவல்துறையினரால் ஏற்றுக்கொள்ளவில்லை மொத்தத்தில் பிறரை ஏளனமாக பேசுவதற்கும், தமக்கு பிடிக்காதவர்களை எள்ளி நகையாடுவதற்கும் சட்டமன்றத்தை ஒரு கருவியாக முதல்வர் விஜய் பயன்படுத்திக்கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி ஆண்ட காலத்திலும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்திலும் சட்டமன்றத்தின் புனிதத் தன்மை காக்கப்பட்டது தற்போது சட்டமன்றத்தின் புனிதத் தன்மை குறைந்து பாலாகிவிட்டது, இந்த நிலை மாற வேண்டும் என்றால் முதல்வர் விஜய் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் தவெக ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள், அதே நேரத்தில் தவெக ஆட்சிக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் பணி செய்ய விரும்பவில்லை தவெகாவின் நிலைப்பாடு பிடிக்காததன் காரணமாகவே இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிடுகிறது ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது, மத்திய அரசின் மறைமுக ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காக மட்டுமே தவெகவிற்கு ஆதரவு கொடுத்தோமே தவிர தவெகாவின் தலைவரை பிடித்தோ, தவெகவின் கொள்கையை பிடித்தோ ஆதரவு கொடுக்கவில்லை என கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சொல்லிவிட்டார்கள் தவெக ஆட்சிக்கு, கூட்டணி கட்சிகள் கொடுக்கின்ற முட்டுக்கட்டை நிலையானது அல்ல, எந்த நேரத்திலும் தவெக ஆட்சிக்கு பேராபத்து வரக்கூடிய சூழலில்தான் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது நிலையான ஆட்சியமைக்கும் தன்மை முதல்வர் விஜய்கோ, தவெக கட்சிக்கோ கிடையாது ஆட்சி நிலைக்க முதல்வர் விஜய் தனது நிலைய மாற்றிக்கொள்ள வேண்டும் பிறரை பழி வாங்குவதற்கோ, பிறரை இகழ்ந்து, புகழ்ந்து பேசுவதற்கோ, தன்னை புகழ்ந்து பேசுவதற்கோ சட்டமன்றத்தை கருவியாக பயன்படுத்த நினைத்தால் தமிழக மக்கள் காலப்போக்கில் தூக்கி எறிந்து விடுவார்கள் இதற்கு ஆதரவு தர மாட்டார்கள் தமிழக மக்கள் எப்பொழுதும் முழிப்போடும் இருக்கக்கூடியவர்கள், தமிழக மக்களும், தமிழ் அறிஞர்கள், அரசியல் அறிந்தவர்கள் எள்ளி நகையாட கூடிய சூழ்நிலையை பார்க்கிறோம் இந்த நிலை மாற வேண்டும் என்றால் சட்டமன்றம் தனி சிறப்போடு இயங்க வேண்டும் சட்டமன்றத்தில் இன்றைக்கு என்ன பாடல் பாடப்போகிறார்கள், யார் பாடப் போகிறார்கள் என பட்டிமன்றம் போல் செயல்படும் சட்டமன்றத்தின் நிலையை மாற்ற வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள், முதல்வர் விஜய் அதனை மாற்றுவாரா என்றால் அது கேள்விகுறியாகவே இருக்கிறது
    1
    தவெகாவின் நிலைப்பாடு பிடிக்காததன் காரணமாகவே இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிடுகிறது- சிவகாசிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி...
தவெக ஆட்சிக்கு, கூட்டணி கட்சிகள்  கொடுக்கின்ற முட்டுக்கட்டை நிலையானது அல்ல, எந்த நேரத்திலும் தவெக ஆட்சிக்கு பேராபத்து வரக்கூடிய சூழலில்தான்  கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் விமர்சனம்...
அறிஞர் அண்ணா அவர்களின் 118 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சிவகாசி காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள அவரது திருவுருவர் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி, 
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மக்கள் விரும்புகின்ற ஆட்சியாகவும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டும் என்பதுதான் மக்கள் மனதில் ஆழமாக இருக்கிறது 
இடையில் ஏற்பட்ட  சில சருக்கல்கள்,  கருத்து திணிப்புகள், அரசியல் கோல்மால்கள், வாட்ஸாப், பேஸ்புக், இன்டஸ்ட்ராகிராம் போன்ற குழப்பங்க அண்ணா திமுக ளால் ஆட்சி மாற்றம் வந்துள்ளது
தற்போது நடைபெறும் ஆட்சி மக்களால் விரும்பும் ஆட்சி கிடையாது 
நகைப்புக்குரிய ஆட்சியாக விஜய் ஆட்சி உள்ளது 
இடைத்தேர்தலில் அதிமுக முதன்மையான கட்சியாக வெற்றி பெறும், 
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில்  லட்சக்கணக்கான வாக்குகள் பெற்று அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும்
எடப்பாடியார் தலைமை தமிழகத்திற்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு மக்கள் வாக்களிக்க தயாராகிவிட்டார்கள் 
தவெக ஆட்சிக்கு இடைத்தேர்தல் பாடம் புகட்டும்
முதல்வரின் லண்டன் பயணம் குறித்து முதல்வர் சார்பில்  வெளியிட்டுள்ள புகைப்படம் பேசுபொருளாக தமிழகத்தில் உலாவி வருகிறது, அதை தார்மீகமாக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, 
ஒரு நாட்டின் முதல்வர் எப்படி வாழ வேண்டும், எப்படி இருக்க வேண்டும், பிறருக்கு முன் உதாரணமாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு இருக்க வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள் 
ஆனால் அந்த நிலைப்பாட்டில் வாழக்கூடியவராக இன்றைய தமிழக முதல்வர் இருக்கவில்லை 
முதல்வரின் லண்டன் பயணத்தை சந்தேக கண்ணோடு தமிழக மக்கள் பார்க்கிறார்கள்
வெளிநாட்டில் முதலீடை ஈர்க்க சென்றுள்ள முதல்வர், தொழில்துறை அமைச்சர் இல்லாமல் சென்றாலும் சம்பந்தப்பட்ட பணிகளை செய்து வெற்றிகரமாக திரும்பினால் சந்தோஷம்
ஆனால் முதல்கட்டமாக ஊடகத்தில் வந்த செய்திகளை பார்க்கும்போது முதல்வர் வெளிநாடு சென்ற நோக்கமே வேறாக தெரிகிறது 
மக்கள், அரசியல் கட்சி தலைவர்களின் எதிர்ப்புகளை தொடர்ந்து சில பணிகளை செய்வதாக கேள்விப்படுகிறோம் 
மொத்தத்தில் முதல்வர் தடம் மாறி, தடம் புரண்டு நடவடிக்கையில் ஈடுப்பட்டுக்கொண்டிருப்பதாக தமிழக மக்கள் எண்ணுகிறார்கள், இதை முதல்வர் மாற்றிக்கொள்ள வேண்டும் 
தமிழக முதலமைச்சராக வந்த பின்னர்,  அனைத்து முதலமைச்சர்களும் முதல்வர்களுக்கான பண்போடும், தகுதியோடும், தன்மையோடு வாழ்ந்துகொண்டு தமிழகத்தை ஆண்டிருக்கிறார்கள்
அதேபோல் விஜயும் முதல்வருக்கான பண்போடும்,  தகுதியோடும் தன்மையோடும் வாழ்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள், ஆனால் அதற்கு எதிர்மறையான நிலைப்பாட்டோடு முதல்வர் விஜய்யின் ஆட்சியும் அவரது செயல்பாடும் இருக்கிறது
முதல்வர் விஜய் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகிறார்கள்
தவெக ஆட்சி விளையாட்டுத்தனமான ஆட்சி
காவல்துறையினர் மானிய கோரிக்கையின் போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் சார்பாக பல்வேறு கேள்விகளை முன் வைத்தபோது, எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காத முதல்வர் விஜய் அவருக்கே தெரிந்த பாணியில்  வசனத்தை பேசி பதில் உரையை முடித்து விட்டார்
முதல்வர் விஜயின் பதிலுரை பார்ப்பதற்கு வேண்டுமானால் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும், சிரிப்பாகவும், ஜோக்காகவும் இருக்கலாமே தவிர 
நல்ல விவரம் தெரிந்த, அரசியல் தெரிந்தவர்கள் முதல்வர் விஜயின் பேச்சை எள்ளி நகையாடுகிறார்கள்
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள், முன்னாள் ஆட்சியாளர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு கூட முதல்வர் விஜய் பதிலளிக்கவில்லை 
காவல்துறை உள்ளிட்ட சீருடை பணியாளர்களுக்கு எந்தவிதமான முன்னேற்ற அறிவிப்புகளும் காவல்துறை மானிய கோரிக்கையில் வரவில்லை
இதை காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை சங்கடத்துடன் வாழ்வதை காண முடிகிறது
தமிழக மக்களுக்காக 24 மணி நேரமும் உழைக்கின்ற காவல் துறைக்கு எந்தவிதமான அறிவிப்புகளோ சலுகைகளோ வழங்கப்படாததை  தமிழக மக்கள்,  காவல்துறையினரால் ஏற்றுக்கொள்ளவில்லை
மொத்தத்தில் பிறரை ஏளனமாக பேசுவதற்கும், தமக்கு பிடிக்காதவர்களை எள்ளி நகையாடுவதற்கும் சட்டமன்றத்தை ஒரு கருவியாக முதல்வர் விஜய் பயன்படுத்திக்கொண்டார்
எடப்பாடி பழனிச்சாமி ஆண்ட  காலத்திலும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்திலும் சட்டமன்றத்தின் புனிதத் தன்மை காக்கப்பட்டது
தற்போது சட்டமன்றத்தின் புனிதத் தன்மை குறைந்து பாலாகிவிட்டது,
இந்த நிலை மாற வேண்டும் என்றால் முதல்வர் விஜய் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்
தவெக ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள், அதே நேரத்தில் தவெக ஆட்சிக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் பணி செய்ய விரும்பவில்லை
தவெகாவின் நிலைப்பாடு பிடிக்காததன் காரணமாகவே இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி தனித்துப் போட்டியிடுகிறது
ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது, மத்திய அரசின் மறைமுக ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காக மட்டுமே தவெகவிற்கு ஆதரவு கொடுத்தோமே தவிர தவெகாவின் தலைவரை பிடித்தோ, தவெகவின்  கொள்கையை பிடித்தோ ஆதரவு கொடுக்கவில்லை என கம்யூனிஸ்ட் கட்சி  தலைவர்கள் சொல்லிவிட்டார்கள்
தவெக ஆட்சிக்கு, கூட்டணி கட்சிகள்  கொடுக்கின்ற முட்டுக்கட்டை நிலையானது அல்ல, எந்த நேரத்திலும் தவெக ஆட்சிக்கு பேராபத்து வரக்கூடிய சூழலில்தான்  கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது 
நிலையான ஆட்சியமைக்கும் தன்மை முதல்வர் விஜய்கோ,  தவெக கட்சிக்கோ கிடையாது 
ஆட்சி நிலைக்க முதல்வர் விஜய் தனது நிலைய மாற்றிக்கொள்ள வேண்டும் 
பிறரை பழி வாங்குவதற்கோ,  பிறரை இகழ்ந்து, புகழ்ந்து பேசுவதற்கோ, தன்னை புகழ்ந்து பேசுவதற்கோ சட்டமன்றத்தை கருவியாக பயன்படுத்த நினைத்தால் தமிழக மக்கள் காலப்போக்கில் தூக்கி எறிந்து விடுவார்கள் இதற்கு ஆதரவு தர மாட்டார்கள் 
தமிழக மக்கள் எப்பொழுதும் முழிப்போடும் இருக்கக்கூடியவர்கள், தமிழக மக்களும், தமிழ் அறிஞர்கள்,  அரசியல் அறிந்தவர்கள் எள்ளி நகையாட கூடிய சூழ்நிலையை பார்க்கிறோம் 
இந்த நிலை மாற வேண்டும் என்றால் சட்டமன்றம் தனி சிறப்போடு இயங்க வேண்டும் 
சட்டமன்றத்தில் இன்றைக்கு என்ன பாடல் பாடப்போகிறார்கள், யார் பாடப் போகிறார்கள் என பட்டிமன்றம் போல் செயல்படும் சட்டமன்றத்தின் நிலையை மாற்ற வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள், முதல்வர் விஜய் அதனை மாற்றுவாரா என்றால் அது கேள்விகுறியாகவே இருக்கிறது
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    1 hr ago
  • ஸ்ரீவில்லிபுத்தூரில்  பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் தொண்டர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.  இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு தமிழக வெற்றிக்கழக ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர்  இனிப்புகள்  வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்காக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    1
    ஸ்ரீவில்லிபுத்தூரில்  பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாடு முழுவதும்  தொண்டர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். 
இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு தமிழக வெற்றிக்கழக ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர்  இனிப்புகள்  வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்காக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    user_Prabakaran Praba
    Prabakaran Praba
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன, இதில் விநாயகருக்கு பல வண்ண மலர்களால் அலங்கரித்து பூஜை செய்து சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்
    1
    கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன, இதில் விநாயகருக்கு பல வண்ண மலர்களால் அலங்கரித்து பூஜை செய்து சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்
    user_Sathish
    Sathish
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • சுசீந்திரம் பழைய ஆற்றில் பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி தீயணைப்பு படையினர் நடத்திக் காட்டினார் வருகிற அக்டோபர் நவம்பர் மாதங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய இருக்கும் நிலையில் மலைச்சேதங்கள் மற்றும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்வது தொடர்பான பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் சுசீந்திரம் பழைய ஆற்றில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பது எப்படி என்பது குறித்து மீட்பு படகுகள் மூலமும் கயிறு கட்டியும் தீயணைப்பு படையினர் செய்து காட்டினார்கள் இதனை அந்தப் பகுதியில் இருந்த சுற்றுலா பகுதிகள் பயணிகளும் பொதுமக்களும் பார்வையிட்டனர்
    1
    சுசீந்திரம் பழைய ஆற்றில் பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி தீயணைப்பு படையினர் நடத்திக் காட்டினார்
வருகிற அக்டோபர் நவம்பர் மாதங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில்  வடகிழக்கு பருவமழை பெய்ய இருக்கும் நிலையில் மலைச்சேதங்கள் மற்றும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்வது தொடர்பான பேரிடர் கால ஒத்திகை நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் சுசீந்திரம் பழைய ஆற்றில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பது எப்படி என்பது குறித்து மீட்பு படகுகள் மூலமும் கயிறு கட்டியும் தீயணைப்பு படையினர் செய்து காட்டினார்கள் இதனை அந்தப் பகுதியில் இருந்த சுற்றுலா பகுதிகள் பயணிகளும் பொதுமக்களும் பார்வையிட்டனர்
    user_Sabarees
    Sabarees
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • தூத்துக்குடியில் அண்ணா பிறந்தநாள் சிலைக்கு திமுக முன்னாள் அமைச்சர் மாலை தூத்துக்குடி பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்த நாள் விழா தூத்துக்குடியில் அவரது திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள்  இன்று செப்டம்பர் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் தூத்துக்குடி, மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள பேரறிஞர் அண்ணாவின் முழு உருவச் சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் கீதா ஜீவன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் இதைத்தொடர்ந்து ஏராளமான திமுகவினர் மாலை அணிவித்தனர் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    1
    தூத்துக்குடியில் அண்ணா பிறந்தநாள் சிலைக்கு திமுக முன்னாள் அமைச்சர் மாலை
தூத்துக்குடி பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்த நாள் விழா தூத்துக்குடியில் அவரது திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்  மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர்   மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள்  இன்று செப்டம்பர் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் தூத்துக்குடி, மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள பேரறிஞர் அண்ணாவின் முழு உருவச் சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் கீதா ஜீவன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி  ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் இதைத்தொடர்ந்து ஏராளமான திமுகவினர் மாலை அணிவித்தனர் 
இந்த நிகழ்ச்சியில்  ஏராளமான திமுக நிர்வாகிகள்,  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    user_Mithun
    Mithun
    City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • பத்து நாட்களுக்கு மேலாக நெல்லை மாநகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீர் நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு குல வனிகர் புரம் பகுதியில் இருப்பு பாதையை மறித்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு திருநெல்வேலி மேலப்பாளையம் 31-வது வார்டுக்குட்பட்ட குலவணிகர்புரம் பாண்டித்துரை 1 முதல் 3-வது தெருக்கள், விநாயகர் தெரு 1 முதல் 3-வது தெருக்கள் உள்ளிட்ட 7 தெருக்களில் சுமார் 10 நாட்களாக மாநகராட்சி குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டால் அவதியடைந்து வந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பும் இதேபோன்று குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து குடிநீர் விநியோகம் சீரான நிலையில், தற்போது மீண்டும் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், அதனை சீரமைக்க 2 நாட்கள் மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்ட பின்னரும் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி, குலவணிகர்புரம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருவனந்தபுரம் சாலையில் மத்திய சிறைச்சாலை அருகே உள்ள குலவணிகர்புரம் ரயில்வே கேட் பகுதியில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிலர் திருநெல்வேலி–திருச்செந்தூர் இருப்புப்பாதையிலும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த மேலப்பாளையம் மற்றும் பெருமாள்புரம் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து பாளையங்கோட்டை வட்டாட்சியர் மாரிராஜா தலைமையில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, குடிநீர் பிரச்சினையை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் பிரதான சாலையில் பொதுமக்கள் திடீரென மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
    1
    பத்து நாட்களுக்கு மேலாக நெல்லை மாநகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீர் நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு குல வனிகர் புரம் பகுதியில் இருப்பு பாதையை மறித்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு 
திருநெல்வேலி மேலப்பாளையம் 31-வது வார்டுக்குட்பட்ட குலவணிகர்புரம் பாண்டித்துரை 1 முதல் 3-வது தெருக்கள், விநாயகர் தெரு 1 முதல் 3-வது தெருக்கள் உள்ளிட்ட 7 தெருக்களில் சுமார் 10 நாட்களாக மாநகராட்சி குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டால் அவதியடைந்து வந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பும் இதேபோன்று குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து குடிநீர் விநியோகம் சீரான நிலையில், தற்போது மீண்டும் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், அதனை சீரமைக்க 2 நாட்கள் மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்ட பின்னரும் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி, குலவணிகர்புரம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருவனந்தபுரம் சாலையில் மத்திய சிறைச்சாலை அருகே உள்ள குலவணிகர்புரம் ரயில்வே கேட் பகுதியில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிலர் திருநெல்வேலி–திருச்செந்தூர் இருப்புப்பாதையிலும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த மேலப்பாளையம் மற்றும் பெருமாள்புரம் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து பாளையங்கோட்டை வட்டாட்சியர் மாரிராஜா தலைமையில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, குடிநீர் பிரச்சினையை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் பிரதான சாலையில் பொதுமக்கள் திடீரென மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
    user_Subramanian
    Subramanian
    திருநெல்வேலி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நடைபெற்று வருவதை விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பார்வையிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் விருதுநகர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் சமூக நீதி மற்றும் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் பிரச்சார இயக்கம் தொடங்கப்பட உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் தெரிவித்து உள்ளார். மேலும் ஜாதிவாரி கணக்கெடுப்பில் மோடி அரசு செய்துவரும் துரோகத்தை மக்களிடம் அம்பலப்படுத்தவும், அதன் விளைவாக 69% இடஒதுக்கீட்டுக்கு உருவாகியுள்ள ஆபத்தைத் தடுக்கவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஓபிசி பிரிவு சார்பில் செப்டம்பர் 17 அன்று மாலை 4 மணிக்குச் சென்னை சத்தியமூர்த்தி பவனில் பிரச்சார இயக்கம் தொடங்கப்படுகிறது. இந்த பிரச்சார இயக்கத்தை திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இந்த இயக்கத்தைத் தொடங்கி வைக்கிறார். மேலும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் குலாம் அகமது மீர், செயலாளர் நவீன் தீத் ஆல்வா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர் மேலும் 2022-23-இல் நடைபெற்ற பாரத் ஜோடா நியாய யாத்திரையின் போதிருந்தே காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஜாதிவாரி கணக்கெடுப்பைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) மற்றும் ஆதிதிராவிட சமூகங்களின் உண்மையான எண்ணிக்கையையும், அவர்களின் வாழ்வாதாரம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நிலையை அறிந்துகொள்ளவும், இடஒதுக்கீடு கிடைக்காத சமூகங்களுக்குச் சமமான வாய்ப்பை அளிக்கவும் (Equal Distribution) நம்பகமான தரவுகள் அவசியமாகும். மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களில் ஜாதிவாரி தகவல்களை 'Open-ended' ஆகப் பதிவிடாமல், 'Drop-down Drop-box' முறையில் துல்லியமாகப் பதிவுசெய்ய வேண்டும் என்று ஆகஸ்ட் 12 அன்று ராகுல் காந்தி கடிதம் எழுதியும் மத்திய அரசு அதை நிராகரித்துள்ளது. மேலும் மத்திய பாஜக அரசின் ஏமாற்று வேலையை கண்டித்துத் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் கீழ்க்கண்டவாறு கூட்டங்கள் நடைபெற உள்ளன என்றார். மேலும் மழை காலத்திற்குப் பிறகு 2027 ஜனவரி மாதத்தில் ராகுல் காந்தியைத் தமிழகத்திற்கு அழைத்துவந்து, அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் பிரம்மாண்ட சமூக நீதி மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரித்த நிலையில், அன்றைய தினம் திமுக செய்த அமளி காரணமாக அவையில் இருந்து வெளியேற்றப்பட்டு அந்த தீர்மானத்தில் பங்கெடுக்க முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது என்றார். தமிழகத்தில் த.வெ.க தலைமையில் நேர்மையான, லஞ்சமற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்கு ஆதரவளிக்கும் இடதுசாரி கட்சிகள், இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட எடுத்த முடிவு ஆச்சரியமளித்தாலும், அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மேலும் சட்டமன்றத்தில் ஆதரவு தரும் இடதுசாரிகள் மக்கள் மன்றத்தில் ஆதரவு தருவதை யோசிப்பது என்பதும் இடைத்தேர்தலில் தனித்து நிற்பதும் என்னை போன்றவர் களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது மேலும் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதை இடதுசாரிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விருப்பம் இருந்தாலும் அவற்றை அவர்கள் செய்ய மாட்டார்கள் என்றார் எனவும் அவர்களின் முடிவை கனத்த இதயத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். மேலும் வரவிருக்கும் இடைத் தேர்தலில் த.வெ.க வேட்பாளரின் வெற்றிக்கு காங்கிரஸ் கட்சித் தோழர்கள் தீவிரமாக பணியாற்று வார்கள் என்றார் மேலும் அரசு பேருந்துகளில் தவெக கட்சி கொடியின் வண்ணம் அடிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மாணிக்கம் தாகூர் எம்பி அரசு பேருந்துகளில் வண்ணம் மாற்றப்பட்டு உள்ளதை பார்க்காமல் பேருந்தினுள் இருக்கக்கூடிய வசதிகளை பார்க்க வேண்டும் முந்தைய காலங்களில் குடை பிடித்து சென்ற காலம் இருக்கிறதும் அப்படியில்லாமல் பேருந்தின் வசதிகள் முன்னேற்றப்பட்டு இருக்கிறது என பார்க்க வேண்டும். என்றும் தெரிவித்தார்
    1
    விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நடைபெற்று வருவதை விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பார்வையிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்
விருதுநகர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் சமூக நீதி மற்றும் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் பிரச்சார இயக்கம் தொடங்கப்பட உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் தெரிவித்து உள்ளார்.
மேலும் ஜாதிவாரி கணக்கெடுப்பில் மோடி அரசு செய்துவரும் துரோகத்தை மக்களிடம் அம்பலப்படுத்தவும், அதன் விளைவாக 69% இடஒதுக்கீட்டுக்கு உருவாகியுள்ள ஆபத்தைத் தடுக்கவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஓபிசி பிரிவு சார்பில் செப்டம்பர் 17 அன்று மாலை 4 மணிக்குச் சென்னை சத்தியமூர்த்தி பவனில் பிரச்சார இயக்கம் தொடங்கப்படுகிறது. 
இந்த பிரச்சார இயக்கத்தை திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இந்த இயக்கத்தைத் தொடங்கி வைக்கிறார். 
மேலும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் குலாம் அகமது மீர், செயலாளர் நவீன் தீத் ஆல்வா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்
மேலும் 2022-23-இல் நடைபெற்ற பாரத் ஜோடா  நியாய யாத்திரையின் போதிருந்தே காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஜாதிவாரி கணக்கெடுப்பைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) மற்றும் ஆதிதிராவிட சமூகங்களின் உண்மையான எண்ணிக்கையையும், அவர்களின் வாழ்வாதாரம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நிலையை அறிந்துகொள்ளவும், இடஒதுக்கீடு கிடைக்காத சமூகங்களுக்குச் சமமான வாய்ப்பை அளிக்கவும் (Equal Distribution) நம்பகமான தரவுகள் அவசியமாகும்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களில் ஜாதிவாரி தகவல்களை 'Open-ended' ஆகப் பதிவிடாமல், 'Drop-down Drop-box' முறையில் துல்லியமாகப் பதிவுசெய்ய வேண்டும் என்று ஆகஸ்ட் 12 அன்று ராகுல் காந்தி கடிதம் எழுதியும் மத்திய அரசு அதை நிராகரித்துள்ளது.
மேலும் மத்திய பாஜக அரசின் ஏமாற்று வேலையை கண்டித்துத் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் கீழ்க்கண்டவாறு கூட்டங்கள் நடைபெற உள்ளன என்றார்.
மேலும் மழை காலத்திற்குப் பிறகு 2027 ஜனவரி மாதத்தில் ராகுல் காந்தியைத் தமிழகத்திற்கு அழைத்துவந்து, அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் பிரம்மாண்ட சமூக நீதி மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரித்த நிலையில், அன்றைய தினம் திமுக செய்த அமளி காரணமாக அவையில் இருந்து வெளியேற்றப்பட்டு அந்த தீர்மானத்தில் பங்கெடுக்க முடியாமல் போனது வருத்தம்  அளிக்கிறது என்றார்.
தமிழகத்தில் த.வெ.க தலைமையில் நேர்மையான, லஞ்சமற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்கு ஆதரவளிக்கும் இடதுசாரி கட்சிகள், இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட எடுத்த முடிவு ஆச்சரியமளித்தாலும், அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். 
மேலும் சட்டமன்றத்தில் ஆதரவு தரும் இடதுசாரிகள்  மக்கள் மன்றத்தில் ஆதரவு தருவதை யோசிப்பது என்பதும் இடைத்தேர்தலில் தனித்து நிற்பதும் என்னை போன்றவர் களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது
மேலும் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதை இடதுசாரிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விருப்பம் இருந்தாலும் அவற்றை அவர்கள் செய்ய மாட்டார்கள் என்றார் எனவும் அவர்களின் முடிவை கனத்த இதயத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். 
மேலும் வரவிருக்கும் இடைத் தேர்தலில் த.வெ.க வேட்பாளரின் வெற்றிக்கு காங்கிரஸ் கட்சித் தோழர்கள் தீவிரமாக பணியாற்று வார்கள் என்றார்
மேலும் அரசு பேருந்துகளில் தவெக கட்சி கொடியின் வண்ணம் அடிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மாணிக்கம் தாகூர் எம்பி  அரசு பேருந்துகளில் வண்ணம் மாற்றப்பட்டு உள்ளதை பார்க்காமல் பேருந்தினுள் இருக்கக்கூடிய வசதிகளை பார்க்க வேண்டும் முந்தைய காலங்களில்  குடை பிடித்து சென்ற காலம் இருக்கிறதும் அப்படியில்லாமல் பேருந்தின் வசதிகள் முன்னேற்றப்பட்டு இருக்கிறது என பார்க்க வேண்டும். என்றும் தெரிவித்தார்
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    4 hrs ago
  • தூத்துக்குடியில் பெண் நிர்வாகியை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் கண்டனத்தை தெரிவித்தார்.
    1
    தூத்துக்குடியில் பெண் நிர்வாகியை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் கண்டனத்தை தெரிவித்தார்.
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Local News Reporter ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    23 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.