Shuru
Apke Nagar Ki App…
Available for Sale Locality : மூலனூர் Area (dimensions) : 2.17 acre Property Type : Agricultural / Farm Land 2.17 acr vetpanai
Kalaiselvan
Available for Sale Locality : மூலனூர் Area (dimensions) : 2.17 acre Property Type : Agricultural / Farm Land 2.17 acr vetpanai
More news from Tamil Nadu and nearby areas
- கோயம்புத்தூர் பகுதியில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில், தனது தாயுடன் இருந்த குட்டி அதன் பாதுகாவலருடன் விளையாடும் காட்சி வெளியாகியுள்ளது.1
- திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள அ. கலையமுத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மதுரை வீரன் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவில் இடைப்பட்ட பகுதியில் காவிரி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் வீணாக விவசாய நிலங்களுக்குள் செல்வதாக மாவட்ட ஆட்சியர் திருமதி துர்கா தேவி அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவலைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உடனடியாக களமிறங்கி குழாயைச் சீரமைக்க உத்தரவிட்டார். மாவட்ட நிர்வாகத்தின் இந்த விரைவான நடவடிக்கையை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.1
- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகரின் வடக்குப்பேட்டை பகுதியில் குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். புலிகள் காப்பக வனப்பகுதி சத்தியமங்கலத்திற்கு அருகே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நிலையில், அங்கிருந்து உணவு தேடி வரும் குரங்குகள் வடக்குப்பேட்டை பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலக மரத்தில் முகாமிட்டுள்ளன. இந்தக் குரங்குகள் காலை வேளைகளில் அப்பகுதியில் உள்ள வீடுகள், கடைகள், ஹோட்டல்கள் மற்றும் மருத்துவமனை வளாகங்களுக்குள் புகுந்து பொதுமக்களுக்குத் தொல்லை கொடுத்து வருகின்றன. குறிப்பாக, கடைகளில் இருக்கும் பொருட்களைத் தூக்கிச் செல்லும் குரங்குகள், மக்களை அச்சுறுத்தும் வகையிலும் செயல்படுகின்றன. மாலை நேரங்களில் மீண்டும் அந்த மரத்திற்கே திரும்பிச் சென்று தங்கும் இந்த குரங்குகளின் அட்டகாசத்தால், மக்கள் வீட்டின் கதவுகளைத் திறக்கவே அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. குரங்குகளின் இந்தத் தொல்லையிலிருந்து விடுபட, வனத்துறையினர் உடனடியாகக் கூண்டு வைத்து அவற்றைப் பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- கோவை மாவட்டம் எட்டிமடை வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, அந்த வனப்பகுதியில் உள்ள மலைகளில் இருந்து பாறைகள் உருண்டு விழுந்துள்ளன.1
- கோயம்புத்தூர் தடாகம் சாலையில் ஓரமாக பைக்கில் சென்று கொண்டிருந்த நபர் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற அரசு பேருந்தின் காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதில் பைக் மீது அரசு பேருந்து மோதிய போதிலும், பைக்கில் வந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.1