logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அருகேயுள்ள களத்திடல்கரை கிராமத்தில் அமைந்துள்ள பழமையான திருஇருதய ஆண்டவர் ஆலயத்தின் ஆண்டுப்பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக, மின் அலங்கார பெரிய திருத்தேர்பவனி கோலாகலமாக நடைபெற்றது. இந்த தேர்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர். கடந்த மே மாதம் 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த ஆண்டுப்பெருவிழாவின் ஒரு பகுதியாக, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் இருதய ஆண்டவர், மிக்கேல் அதிதூதர், தேவமாதா ஆகியோர் எழுந்தருளினர். ஆலய பங்குத்தந்தை டேவிட்செல்வகுமார் தலைமையில் நவநாள் ஜெபம் உள்ளிட்ட சிறப்புத் திருப்பலிகள் நடத்தப்பட்டு, சப்பரம் புனிதம் செய்யப்பட்டு பவனி துவக்கி வைக்கப்பட்டது. ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த சப்பரப்பவனி களத்திடல்கரை கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தது. இந்த தேர்பவனியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

2 hrs ago
user_MAHENDRAN
MAHENDRAN
Local News Reporter Kilvelur, Nagapattinam•
2 hrs ago
6c70d3ad-ad9b-49d4-92eb-db9574d768e6

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அருகேயுள்ள களத்திடல்கரை கிராமத்தில் அமைந்துள்ள பழமையான திருஇருதய ஆண்டவர் ஆலயத்தின் ஆண்டுப்பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக, மின் அலங்கார பெரிய திருத்தேர்பவனி கோலாகலமாக நடைபெற்றது. இந்த தேர்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர். கடந்த மே மாதம் 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த ஆண்டுப்பெருவிழாவின் ஒரு பகுதியாக, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் இருதய ஆண்டவர், மிக்கேல் அதிதூதர், தேவமாதா ஆகியோர் எழுந்தருளினர். ஆலய பங்குத்தந்தை டேவிட்செல்வகுமார் தலைமையில் நவநாள் ஜெபம் உள்ளிட்ட சிறப்புத் திருப்பலிகள் நடத்தப்பட்டு, சப்பரம் புனிதம் செய்யப்பட்டு பவனி துவக்கி வைக்கப்பட்டது. ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த சப்பரப்பவனி களத்திடல்கரை கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தது. இந்த தேர்பவனியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

More news from Tamil Nadu and nearby areas
  • நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள ஆந்தகுடியில், மாற்று கட்சிகளிலிருந்து விலகிய 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் (TVK) இணையும் விழா சிறப்பாக நடைபெற்றது. கீழ்வேளூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஆந்தகுடி பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் மா. சுகுமார் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் விக்னேஷ், மத்திய செயலாளர் அசோக்குமார், மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்கன்னாபூர், கீழகன்னாபூர், சிகார், வலிவலம், ஆதமங்கலம், மானலூர், ஆந்தகுடி மற்றும் கூரத்தார்குடி ஆகிய எட்டு ஊராட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இக்கட்சியில் இணைந்தனர். இந்த நிகழ்வில், அஞ்சலையம்மாளின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து கட்சியின் கொள்கை உறுதிமொழி பாடல் ஒலிபரப்பப்பட்டு, புதிய உறுப்பினர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பேசிய மாவட்ட செயலாளர் சுகுமார், முதலமைச்சர் விஜய் வழங்கும் வழிகாட்டுதலின்படி கட்சியை நேர்மையுடனும் உண்மையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார். நிகழ்ச்சியின் முடிவில், புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன், குழு புகைப்படம் எடுத்துக்கொள்ளப்பட்டது. பேரூர் கழக செயலாளர் கிருஷ்னராஜ், விவசாய அணி செயலாளர் மாரிமுத்து, இணை செயலாளர் நாகேந்திரன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஜெயசீலன், ஊடகப் பிரிவு அணி ரோஹித் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
    3
    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள ஆந்தகுடியில், மாற்று கட்சிகளிலிருந்து விலகிய 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் (TVK) இணையும் விழா சிறப்பாக நடைபெற்றது. கீழ்வேளூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஆந்தகுடி பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் மா. சுகுமார் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் விக்னேஷ், மத்திய செயலாளர் அசோக்குமார், மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர் விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்கன்னாபூர், கீழகன்னாபூர், சிகார், வலிவலம், ஆதமங்கலம், மானலூர், ஆந்தகுடி மற்றும் கூரத்தார்குடி ஆகிய எட்டு ஊராட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இக்கட்சியில் இணைந்தனர்.

இந்த நிகழ்வில், அஞ்சலையம்மாளின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து கட்சியின் கொள்கை உறுதிமொழி பாடல் ஒலிபரப்பப்பட்டு, புதிய உறுப்பினர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பேசிய மாவட்ட செயலாளர் சுகுமார், முதலமைச்சர் விஜய் வழங்கும் வழிகாட்டுதலின்படி கட்சியை நேர்மையுடனும் உண்மையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார். நிகழ்ச்சியின் முடிவில், புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன், குழு புகைப்படம் எடுத்துக்கொள்ளப்பட்டது. பேரூர் கழக செயலாளர் கிருஷ்னராஜ், விவசாய அணி செயலாளர் மாரிமுத்து, இணை செயலாளர் நாகேந்திரன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஜெயசீலன், ஊடகப் பிரிவு அணி ரோஹித் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
    user_Chakravarthy
    Chakravarthy
    Nagapattinam, Tamil Nadu•
    2 hrs ago
  • நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் அமைந்துள்ள பழமைவாய்ந்த அருள்மிகு வல்லாங்குளத்து முத்து மாரியம்மன் கோயிலில், வைகாசி விசாகம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றன. தொடர்ந்து, கோயில் வளாகத்தில் தனி சன்னதியில் அருள்பாலித்து வரும் ஸ்ரீசண்முகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனைகளும் நடத்தப்பட்டன. இந்த சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    1
    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் அமைந்துள்ள பழமைவாய்ந்த அருள்மிகு வல்லாங்குளத்து முத்து மாரியம்மன் கோயிலில், வைகாசி விசாகம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றன. தொடர்ந்து, கோயில் வளாகத்தில் தனி சன்னதியில் அருள்பாலித்து வரும் ஸ்ரீசண்முகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனைகளும் நடத்தப்பட்டன. இந்த சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    user_NAGAI BABU
    NAGAI BABU
    Reportar நாகப்பட்டினம், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    11 hrs ago
  • திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 39வது வார்டில் உள்ள விண் நகரில் கடந்த மூன்று மாதங்களாக பாதாள சாக்கடை நிரம்பி வழிந்து செல்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இதன் காரணமாக பொதுமக்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தக் கடுமையான பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
    2
    திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 39வது வார்டில் உள்ள விண் நகரில் கடந்த மூன்று மாதங்களாக பாதாள சாக்கடை நிரம்பி வழிந்து செல்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இதன் காரணமாக பொதுமக்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தக் கடுமையான பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
    user_பெரியசாமி
    பெரியசாமி
    Photographer திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • பொன்னமராவதி அருகே கீழவேகுபட்டி கிராமத்தில் உள்ள வேகு கண்மாயில், ஏகாளியம்மன் மற்றும் சின்ன கருப்பர் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை கீழவேகுபட்டி மற்றும் பி. உசிலம்பட்டி கிராமத்தார்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். முன்னாள் அமைச்சரும் திருமயம் தொகுதி எம்எல்ஏவுமான எஸ். ரகுபதி ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்தார். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளை உரிமையாளர்களும் மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். மேலும், திருமயம் அருகே கீழவேகுபட்டி ஏகாளியம்மன் மற்றும் சின்ன கருப்பர் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயமும் நடைபெற்றது.
    1
    பொன்னமராவதி அருகே கீழவேகுபட்டி கிராமத்தில் உள்ள வேகு கண்மாயில், ஏகாளியம்மன் மற்றும் சின்ன கருப்பர் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை கீழவேகுபட்டி மற்றும் பி. உசிலம்பட்டி கிராமத்தார்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

முன்னாள் அமைச்சரும் திருமயம் தொகுதி எம்எல்ஏவுமான எஸ். ரகுபதி ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்தார். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளை உரிமையாளர்களும் மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர்.

மேலும், திருமயம் அருகே கீழவேகுபட்டி ஏகாளியம்மன் மற்றும் சின்ன கருப்பர் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயமும் நடைபெற்றது.
    user_Mayilvaganan
    Mayilvaganan
    திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    1 hr ago
  • விராலிமலை சட்டமன்ற உறுப்பினராக நான்காவது முறையாக அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அன்னவாசல் மற்றும் இலுப்பூர் பேரூராட்சி பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். தான் ஒரு சொட்டு ரத்தம் இருக்கும் வரை விராலிமலை தொகுதிக்கு தொடர்ந்து பணியாற்றுவேன் என்று அவர் உறுதியளித்தார். தேர்தல் பிரச்சாரத்தின்போது அளித்த வாக்குறுதிகளான அன்னவாசலுக்கு தாலுகா அலுவலகம் உருவாக்குதல், பேரூராட்சி குப்பை கிடங்கை மாற்றுதல், பெண்கள் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுதல் போன்ற அனைத்தையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என விஜயபாஸ்கர் குறிப்பிட்டார். மேலும், காவேரி-வைகை-குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற சட்டமன்றத்தில் தனது குரல் ஓங்கி ஒலிக்கும் என்றும், அனைவருக்கும் சீரான காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். தனது ஆயுள் உள்ளவரை வாக்களித்த மக்களுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன் என்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
    1
    விராலிமலை சட்டமன்ற உறுப்பினராக நான்காவது முறையாக அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அன்னவாசல் மற்றும் இலுப்பூர் பேரூராட்சி பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். தான் ஒரு சொட்டு ரத்தம் இருக்கும் வரை விராலிமலை தொகுதிக்கு தொடர்ந்து பணியாற்றுவேன் என்று அவர் உறுதியளித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது அளித்த வாக்குறுதிகளான அன்னவாசலுக்கு தாலுகா அலுவலகம் உருவாக்குதல், பேரூராட்சி குப்பை கிடங்கை மாற்றுதல், பெண்கள் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுதல் போன்ற அனைத்தையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என விஜயபாஸ்கர் குறிப்பிட்டார். மேலும், காவேரி-வைகை-குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற சட்டமன்றத்தில் தனது குரல் ஓங்கி ஒலிக்கும் என்றும், அனைவருக்கும் சீரான காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். தனது ஆயுள் உள்ளவரை வாக்களித்த மக்களுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன் என்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    8 hrs ago
  • திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த தாதகவுண்டம்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ புது மாரியம்மன் கோவிலில் வைகாசி மாத திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், அப்பகுதியைச் சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
    1
    திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த தாதகவுண்டம்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ புது மாரியம்மன் கோவிலில் வைகாசி மாத திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், அப்பகுதியைச் சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள இராங்கியன்விடுதி கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலின் திருவிழாவை முன்னிட்டு, முளைப்பாரி எடுப்பு விழா மிகுந்த ஆரவாரத்துடன் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பெண்கள் பங்கேற்று, முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாகச் சென்று, கோயிலில் வைத்து கும்மியடித்து, குலவையிட்டு, சுவாமி தரிசனம் செய்தனர். இது அப்பகுதியில் பாரம்பரியமாக நடத்தப்படும் ஒரு முக்கியமான நிகழ்வாகும். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் நடைபெறும் இக்கோயில் திருவிழா, இந்த ஆண்டிற்கான வைகாசி திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கி, வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக, இராங்கியன்விடுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பெண்கள், நவதானியங்களால் பயிரிடப்பட்ட மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முளைப்பாரிகளை மேள தாளங்கள் முழங்க, தலையில் சுமந்தபடி ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அவர்கள் முத்துமாரியம்மன் கோயில் வாசலில் உள்ள அரச மரத்தடியில் முளைப்பாரிகளை வைத்து, பாரம்பரிய நடனமான கும்மியடித்து, மங்கள ஒலியான குலவையிட்டபடி இறைவனை வழிபட்டனர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள இராங்கியன்விடுதி கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலின் திருவிழாவை முன்னிட்டு, முளைப்பாரி எடுப்பு விழா மிகுந்த ஆரவாரத்துடன் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பெண்கள் பங்கேற்று, முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாகச் சென்று, கோயிலில் வைத்து கும்மியடித்து, குலவையிட்டு, சுவாமி தரிசனம் செய்தனர். இது அப்பகுதியில் பாரம்பரியமாக நடத்தப்படும் ஒரு முக்கியமான நிகழ்வாகும்.

ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் நடைபெறும் இக்கோயில் திருவிழா, இந்த ஆண்டிற்கான வைகாசி திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கி, வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக, இராங்கியன்விடுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பெண்கள், நவதானியங்களால் பயிரிடப்பட்ட மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முளைப்பாரிகளை மேள தாளங்கள் முழங்க, தலையில் சுமந்தபடி ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அவர்கள் முத்துமாரியம்மன் கோயில் வாசலில் உள்ள அரச மரத்தடியில் முளைப்பாரிகளை வைத்து, பாரம்பரிய நடனமான கும்மியடித்து, மங்கள ஒலியான குலவையிட்டபடி இறைவனை வழிபட்டனர்.
    user_Prabaharan Reporter
    Prabaharan Reporter
    Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    7 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே புதுப்பட்டியிலிருந்து கறம்பக்குடி நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரின் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே புதுப்பட்டியிலிருந்து கறம்பக்குடி நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரின் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    user_Prabaharan Reporter
    Prabaharan Reporter
    Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    7 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.