மாற்றுப்பணியில் உள்ள டாக்டர்கள், நர்ஸ்கள் விவரம் தாக்கல் செய்ய உத்தரவு. மாற்றுப்பணியில் உள்ள டாக்டர்கள், நர்ஸ்கள் விவரம் தாக்கல் செய்ய உத்தரவு மதுரை, பிப். 18- தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மாற்றுப்பணியில் (டெபுடேசன்) உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் விபரங்களை தாக்கல் செய்ய சுகாதாரத்துறைக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை அரசு மருத்துவமனையில் நர்ஸ்களாக பணியாற்றிய மெலன்ஷியா செல்வகுமாரி உள்ளிட்டோர், 2014 முதல் 2016 காலப்பகுதியில் மதுரை அரசு மருத்துவமனையில் மாற்றுப்பணியில் நியமிக்கப்பட்டனர். இவர்கள் 2025 நவம்பர் வரை பணியில் தொடர அனுமதிக்கப்பட்ட நிலையில், மாற்றுப்பணி உத்தரவை மருத்துவ இயக்குநர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி ரத்து செய்தார். இதனைத் தொடர்ந்து, அவர்களை முதலில் பணியாற்றிய இடங்களுக்கு திரும்ப அனுப்ப மதுரை அரசு மருத்துவமனை டீன் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து, மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள காலிப் பணியிடங்களில் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என மெலன்ஷியா செல்வகுமாரி உள்ளிட்ட 8 பேர் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை புதனன்று விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, நகர வாழ்க்கை வசதிகள் காரணமாக அனைவரும் நகரங்களில் பணியாற்ற விரும்புவது உண்மை என்றாலும், கிராமப்புற மக்களின் மருத்துவ தேவைகளும் கவனிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார். மாற்றுப்பணி நியமன மனப்பான்மை ஊக்குவிக்கப்படுமானால் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்களின் தேவைகள் புறக்கணிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, அரசு மருத்துவமனைகளில் மாற்றுப்பணியில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் முழு விவரங்களை சுகாதாரத்துறை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மாற்றுப்பணியில் உள்ள டாக்டர்கள், நர்ஸ்கள் விவரம் தாக்கல் செய்ய உத்தரவு. மாற்றுப்பணியில் உள்ள டாக்டர்கள், நர்ஸ்கள் விவரம் தாக்கல் செய்ய உத்தரவு மதுரை, பிப். 18- தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மாற்றுப்பணியில் (டெபுடேசன்) உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் விபரங்களை தாக்கல் செய்ய சுகாதாரத்துறைக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை அரசு மருத்துவமனையில் நர்ஸ்களாக பணியாற்றிய மெலன்ஷியா செல்வகுமாரி உள்ளிட்டோர், 2014 முதல் 2016 காலப்பகுதியில் மதுரை அரசு மருத்துவமனையில் மாற்றுப்பணியில் நியமிக்கப்பட்டனர். இவர்கள் 2025 நவம்பர் வரை பணியில் தொடர அனுமதிக்கப்பட்ட நிலையில், மாற்றுப்பணி உத்தரவை மருத்துவ இயக்குநர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி ரத்து செய்தார். இதனைத் தொடர்ந்து, அவர்களை முதலில் பணியாற்றிய இடங்களுக்கு திரும்ப அனுப்ப மதுரை அரசு மருத்துவமனை டீன் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து, மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள காலிப் பணியிடங்களில் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என மெலன்ஷியா செல்வகுமாரி உள்ளிட்ட 8 பேர் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை புதனன்று விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, நகர வாழ்க்கை வசதிகள் காரணமாக அனைவரும் நகரங்களில் பணியாற்ற விரும்புவது உண்மை என்றாலும், கிராமப்புற மக்களின் மருத்துவ தேவைகளும் கவனிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார். மாற்றுப்பணி நியமன மனப்பான்மை ஊக்குவிக்கப்படுமானால் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்களின் தேவைகள் புறக்கணிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, அரசு மருத்துவமனைகளில் மாற்றுப்பணியில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் முழு விவரங்களை சுகாதாரத்துறை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
- 30 ஆண்டுகளாக நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தாத ஆவின் நிர்வாகம்: தொழிலாளர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சொத்துகள் ஜப்தி மதுரை, பிப்.18- மதுரை பால் பண்ணையில் நீண்டகாலமாக பணியாற்றிய தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்களை 30 ஆண்டுகளாக வழங்காததால், தொழிலாளர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆவின் நிறுவனத்தின் சொத்துகள் ஜப்தி செய்யும் நடவடிக்கை புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது. மதுரை பால் பண்ணை நிர்வாகத்தில் 1985ஆம் ஆண்டு முதல் கேசுவல் தொழிலாளர்களாக பணியாற்றிய 23 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக கூட்டுறவு ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் மனு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1996ஆம் ஆண்டு தொழிற்சாலை ஆய்வாளர் 23 தொழிலாளர்களுக்கும் பணிநிரந்தர உத்தரவு வழங்கினார். இதற்கு எதிராக நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தது. ஆனால், உயர்நீதிமன்றம் ரிட் மனுவை தள்ளுபடி செய்து, நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கு நிகரான தொகையை வழங்க உத்தரவிட்டது. பின்னர் நிர்வாகம் மேற்கொண்ட மேல்முறையீடும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, தொழிலாளர்களில் ஒருவரான வெங்கடாசலம் மட்டும் நீதிமன்ற உத்தரவின்படி பணப்பலன்களை பெற்றுக்கொண்ட நிலையில், மற்ற 19 தொழிலாளர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் மதுரை தொழிலாளர் நீதிமன்றம் மூலம் வழக்கு தொடர்ந்தனர். தொழிலாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தபோதும், நிர்வாகம் மீண்டும் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீடும் 12.11.2025 அன்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்தாததால் தொழிலாளர் நீதிமன்றத்தில் நிறைவேற்ற மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, கடந்த 07.02.2026 அன்று மதுரை தொழிலாளர் நீதிமன்றம் ஆவின் பால்பண்ணை அலுவலகத்தில் உள்ள சொத்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதன்படி, இன்று (18.02.2026) அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் அலுவலகத்தில் உள்ள ஏசி இயந்திரங்கள், கணினிகள், விசிறிகள் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்யும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஜப்தி செய்யப்பட்ட பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தொழிலாளர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சுப்பிரமணியம் . தெரிவித்ததாவது: “இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிலர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்; பலர் ஓய்வு பெற்றுவிட்டனர். 2015ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட வேண்டிய கிராஜுவிட்டி, ஓய்வூதிய நிலுவை உள்ளிட்ட தொகைகள் இன்னும் வழங்கப்படவில்லை. நீதிமன்றம் ஒவ்வொரு தொழிலாளருக்கும் ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வட்டி சேர்த்து வழங்க உத்தரவிட்டுள்ளது,” என்றார். மேலும், பால் விநியோக சேவைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அத்தியாவசிய இயந்திரங்கள் ஜப்தி செய்யப்படாமல், அலுவலக பயன்பாட்டு பொருட்கள் மட்டுமே ஜப்தி செய்யப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். சுமார் ரூ.1.25 கோடி நிலுவைத் தொகை முழுமையாக செலுத்தப்பட்டால் ஜப்தி நடவடிக்கை நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த சம்பவம், அரசு நிறுவனமாக முன்மாதிரியாக இருக்க வேண்டிய அமைப்பு தொழிலாளர்களின் உரிமைகளை நீண்டகாலமாக நிலுவையில் வைத்திருப்பது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. தொடர்ந்து ஆவின் நிர்வாகம் சார்பாக மதுரை பொது மேலாளர் சிவகாமி தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கால அவகாசம் கேட்டுள்ளார்.2
- Post by Saba Saba1
- வாடிப்பட்டி தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடல் அருகில் உள்ள பஞ்சாயத்து யூனியன்க்கு சொந்தமான அரசு ஆரம்ப பள்ளி உள்ளது அரசுக்கு சொந்தமான பல கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது சமூக விரோதிகள் தவறு செய்யும் சூழல் உள்ளது இதைசீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சமூக ஆர்வலர்கள் விரும்புகிறார்கள்1
- திருப்பதி ரேணிகுண்டாவில் சாலையில் நகரின் அம்பேத்கர் சுற்றுவட்டச் சந்திப்பில் சம்பவம்… அடையாளம் தெரியாத இளைஞர் தன்னைத்தானே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்… இந்த சம்பவத்தால் உள்ளூர் மக்கள் பயமடைந்தனர்… தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்…1
- திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி அருகே திண்டுக்கல் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் அடிப்படை பணியாளர்கள் மாவட்ட சங்கத்தில் பிளாஸ்டிக் பையில் மண்டை ஓடு இதனால் அங்கு இருப்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் சம்பவ இடத்திற்கு நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சங்காராட்டிகோட்டையில் கருப்பசாமி என்பவரின் பசுமாடு அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடியது. தகவல் அறிந்த வத்தலகுண்டு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் கிணற்றுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசு மாட்டை உயிருடன் மீட்டு கருப்பசாமியிடம் ஒப்படைத்தனர் கிணற்றில் தண்ணீர் இல்லாததால் மாட்டிற்கு காயம் ஏற்பட்டது.1
- திண்டுக்கல் மாவட்டம் தவசிமடை ஊராட்சி விராலிப்பட்டியில். சக்தி கேந்திர அளவிலான. மக்கள் சந்திப்பு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் . நடைபெற்றது இதில் பாஜக என் ஜி ஓ பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ் உரையாற்றினார்1
- சென்னையில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்த்த கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யப்பட்டதை கண்டித்து - மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை, பிப்.18- தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மதுரை மாநகர் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைத்தொகை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சென்னை தலைமைச் செயலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்க மாநில தலைவர் ஜான்சி ராணி உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறை கைது செய்ததை கண்டித்து புதனன்று மதுரை ஆரப்பாளையம் கிராஸ்ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் மற்றும் தோழமை அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் உரிமைத்தொகையை உயர்த்துதல், வாழ்வாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் ஜான்ஸிராணி அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. கண்டன உரையாக, ஜெ. லெனின் (இந்திய ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர்) மற்றும் சங்கத்தின் மாவட்ட துணைச்செயலாளர் டி. குமரவேல் ஆகியோர் பேசினர். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.3