குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களின் கைரேகை பதிவு (e-KYC) மேற்கொள்ள சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல்! தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் சுய உதவிக்குழுக்கள் மூலம் நடத்தப்படும் நியாய விலைக்கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்கள் பெற்று வரும் முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டையில் (AAY மற்றும் PHH) இணைக்கப்பட்டுள்ள அனைத்து (e-KYC) உறுப்பினர்களின் கைரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை தொடர்புடைய நியாய விலைக்கடையில் பதிவு மேற்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டை உறுப்பினர்களும் நியாய விலைக்கடையில் கைரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (e-KYC) 100% நிறைவு செய்யும் பொருட்டு, இதுவரை கைரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (e.KYC) மேற்கொள்ளாதவர்களுக்காக 02.08.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை அனைத்து நியாய விலைக்கடைகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை கைரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (e-KYC) மேற்கொள்ளாத அனைத்து குடும்ப அட்டை உறுப்பினர்களும் மேற்படி முகாமில் கலந்து கொண்டு கைரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (e-KYC) செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கு.ரவிகுமார்.இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்துள்ளார்.
குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களின் கைரேகை பதிவு (e-KYC) மேற்கொள்ள சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல்! தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் சுய உதவிக்குழுக்கள் மூலம் நடத்தப்படும் நியாய விலைக்கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்கள் பெற்று வரும் முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டையில் (AAY மற்றும் PHH) இணைக்கப்பட்டுள்ள அனைத்து (e-KYC) உறுப்பினர்களின் கைரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை தொடர்புடைய நியாய விலைக்கடையில் பதிவு மேற்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டை உறுப்பினர்களும் நியாய விலைக்கடையில் கைரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (e-KYC) 100% நிறைவு செய்யும் பொருட்டு, இதுவரை கைரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (e.KYC) மேற்கொள்ளாதவர்களுக்காக 02.08.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை அனைத்து நியாய விலைக்கடைகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை கைரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (e-KYC) மேற்கொள்ளாத அனைத்து குடும்ப அட்டை உறுப்பினர்களும் மேற்படி முகாமில் கலந்து கொண்டு கைரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (e-KYC) செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கு.ரவிகுமார்.இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்துள்ளார்.
- கல்நார்சன்பட்டி ஊராட்சியில் பலத்த மழை விவசாயிகள் உற்சாகம் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் கல்நார்சன்பட்டி ஊராட்சியில் கடந்த இரண்டு மணி நேரமாக பலத்த மழை பெய்தது1
- பொங்கலூர் ஊராட்சியில் ரூபாய் 3.50 லட்சம் மதிப்பீட்டில் பண்ணை குட்டை பூமி பூஜை! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்கா நாட்றம்பள்ளி ஒன்றியம் அம்பலூர் ஊராட்சியில் இன்று காலை 9 மணியளவில் VB-GRAMG திட்டத்தின் கீழ் ரூபாய் 3.50 லட்சம் மதிப்பீட்டில் பொதுநீர் சேகரிப்பு குளம் ( பண்ணை குட்டை ) அமைக்கும் பணி அம்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி.முருகேசன் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்கள். உடன் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் தேவேந்திரன் கோவிந்தன் லோகநாதன் ரவி மற்றும் அப்பகுதி விவசாயிகள் பணி தள பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.2
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் கருப்பூர் கூட்டுறவு சங்கம் அருகே விவசாயி சங்கங்கள் ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் கரும்பூர் குமாரமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் கரும்பூரில் (இன்று ஆகஸ்ட்01) தமிமக விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளின் புகைப்படங்களை தள்ளுபடி செய்வதாக தேர்தலில் வாக்குறுதி அளித்த வாக்குகளைப் பற்றி வெற்றி பெற்றவுடன் விவசாயிகளை ஏமாற்றும் தமிழக அரசை கண்டித்து கண்ணனார் பாட்டம் யார் பட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆனந்தன், தலைமையில் மாநில பொது செயலாளர் உதயகுமார், ஜானகிராமன், குணசேகரன், காசிநாதன், ஜானகிராமன், சத்தியமூர்த்தி, வைத்தியநாதன், உட்பட பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.1
- ஜவ்வாதுமலை : அல்லேரிமலை அதானிக்கு ஜவ்வாதுமலை யாருக்கு? திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையின் ஜமுனாமருத்தூர் பகுதியில் ஹெலிகாப்டர் வட்டமிட்டதை தொடர்ந்து, அல்லேரி மலைப்பகுதியில் அதானி குழுமத்தின் பம்ப் செய்யப்பட்ட சேமிப்பு நீர்மின் திட்டங்கள் மற்றும் நில ஆக்கிரமிப்பு தொடர்பான செய்திகள் வெளியாகி மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. இச்சூழலில் ஜவ்வாதுமலையை யாருக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டதோ ? என்ற சந்தேகமும் அப்பகுதி மக்கள் மத்தியில் எழும்பியிருக்கிறது.1
- கிருஷ்ணகிரியில்மாநில அளவிலான இறகுபந்து மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டி துவங்கியது கிருஷ்ணகிரி மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் கட்டுமான பொறியாளர் சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டி துவங்கியதுஇப்போட்டியில் கருஷ்ணகிரி, தர்மபுரி,என தமிழகத்தின் பல்வேறு மாவடங்களில் இருந்து சுமார் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த வீரர் வீரங்கனைகள் கலந்துக் கொண்டனர்.இந்த விளையாட்டுப்போட்டியில் வீரர்வீராங்கனைகள ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர்.1
- காரிமங்கலம் ஸ்ரீ அஷ்ட வாராஹி அம்மன் கோயிலில் ஆடி மாத 3ம் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை ! பக்தர்கள் பங்கேற்பு! காரிமங்கலம் ஸ்ரீ அஷ்ட வாராஹி அம்மன் கோயிலில் ஆடி மாத 3ம் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை ! ஜூலை..31, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோட அள்ளி தானப்ப கவுண்டர் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட வாராஹி அம்மன் கோயிலில் ஆடி மாத 3ம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு ஹோமம் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம், பூஜைகள்,மகா தீபாராதனை ஆகியவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் வளையல், குங்குமம், மஞ்சள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி தலைவர் கே பி அன்பழகன் எம் எல் ஏ, தாளாளர் மல்லிகா அன்பழகன், முதன்மை நிர்வாக இயக்குனர் வித்யா ரவிசங்கர், நிர்வாக அலுவலர் தனபால், அர்ச்சகர் நீலகண்ட சாஸ்திரி மற்றும் பலர் செய்திருந்தனர். இதேபோல் மந்தை வீதி மாரியம்மன் கோயில், வெள்ளையன் கொட்டாவூர் மகா சக்தி மாரியம்மன் கோயில், பெரியாம்பட்டி காமாட்சி அம்மன் கோயில், கரகபட்டி தலை கொண்ட அம்மன் கோயில், பூலாப்பட்டி பச்சையம்மன் கோயில் உட்பட பல்வேறு அம்மன் கோயில்களில் ஆடி மாத 3ம் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஞ்சள் காப்பு அலங்காரம், தங்க கவசம் சாத்துபடி, தீபாராதனை நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது .1
- கேளூரில் சந்தைமேடு பகுதியில் மாட்டுச்சந்தை மாடுகள் வரத்து அதிகரிப்பு. கேளூரில் மாட்டுச்சந்தை மாடுகள் வரத்து அதிகரிப்பு. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கேளூர் தேப்பனந்தல் சந்தைமேடு பகுதியில் வாரம் தோறும் சனிக்கிழமை முன்னிட்டு மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம் இந்நிலையில் இன்று சனிக்கிழமை முன்னிட்டு மாட்டுச்சந்தை நடைபெற்றது. இதில் கேளூர் போலு ஆரணி வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தங்கள் மாடுகளை கொண்டு வந்து வியாபாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் எஸ்பி அதிரடி சோதனை நடத்தினர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் பகுதியில் திருப்பத்தூர் எஸ்பி அக்ஷயா அணில் வகாரே தலைமையில் (நேற்று ஜூலை.31.இரவு)ஆம்பூர் பஸ் நிலையம் முதல் கஸ்பா பகுதி வரை ரோந்து பணியில் ஈடுபட்டார் அப்போது சாலையில் உள்ள கடைகள் மற்றும் பங்கு கடைகளில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, போன்ற பொருட்கள் உள்ளதா என சோதனையிட்டனர் இது சோதனையில் ஆம்பூர் டிஎஸ்பி நாகலிங்கம், ஆம்பூர் டவுன் இன்ஸ்பெக்டர் சிவகுமார், மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.1