Shuru
Apke Nagar Ki App…
ஸ்ரீ பூங்காவனத்தம்மன் கோவிலில் மயான சூறை உற்சவம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியில் உள்ள இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழா, பக்தர்களின் ஆழ்ந்த பக்தி உணர்வை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. விழாவின் முக்கிய அம்சமான மயான சூறை நிகழ்வில், பக்தர்கள் மயானத்திற்கு சென்று படையல் வைத்து, பின்னர் மயானத்தை ஆக்ரோஷமாக சூறையாடும் மரபு வழக்கப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் அம்மனை வணங்கி நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
Vembarasi. A
ஸ்ரீ பூங்காவனத்தம்மன் கோவிலில் மயான சூறை உற்சவம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியில் உள்ள இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழா, பக்தர்களின் ஆழ்ந்த பக்தி உணர்வை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. விழாவின் முக்கிய அம்சமான மயான சூறை நிகழ்வில், பக்தர்கள் மயானத்திற்கு சென்று படையல் வைத்து, பின்னர் மயானத்தை ஆக்ரோஷமாக சூறையாடும் மரபு வழக்கப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் அம்மனை வணங்கி நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
More news from Tamil Nadu and nearby areas
- நாகை அருகே அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே உயிரிழப்பு: நாகை நகர போலீசார் விசாரணை. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த கருவேலங்கடை பகுதியில் அரசு பேருந்து மோதியதில் இருச்சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாகப்பட்டினத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதே திசையில் இருச்சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் பேருந்தினை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்பாராத விதமாக இருச்சக்கர வாகன ஓட்டுநர் நிலை தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.அப்போது கீழே விழுந்த வாலிபர் மீது பேருந்து ஏறி இறங்கியதால் அவரது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பலியான வாலிபரின் உடலை மீட்டு ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் (30) என்பது தெரியவந்தது.வேளாங்கண்ணியில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்ததும், திருச்சியிலிருந்து வேளாங்கண்ணிக்கு இருச்சக்கர வாகனத்தில் வந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.இந்நிலையில், பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் சம்பவத்திற்குப் பின்னர் தப்பியோடிய நிலையில், இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.1
- நெல்மணிகளை பறவைகளிடமிருந்து காப்பாற்ற, களக்காட்டூர் பெண் விவசாயி ஒருவர் நாள் முழுவதும் பாத்திரத்தை டமால் டமால்’ என தட்டி சத்தம் எழுப்பி குருவிகளை ஓட்ட பெரும்பாடு பட்டு வருகிறார். __________ காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர், பகுதியில் பெண் விவசாயி ஒருவரின் வித்தியாசமான முயற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பயிர் செய்த நெற்பயிர் முளைத்து வளரும் இந்த நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் குருவிகள் கூட்டமாக வந்து நெல்மணிகளைத் தின்றுவிட்டு செல்வதாக அவர் கூறுகிறார். இதைத் தடுக்க, தண்ணீர் நிரப்ப பயன்படுத்தப்படும் காலி அன்னக்கூடையை கையில் பிடித்து, குச்சியால் ‘டமால் டமால்’ எனத் தட்டி சத்தமிட்டு குருவிகளை விரட்டுகிறார். “சத்தம் போடாமல் இருந்தால் முளைத்துள்ள நெல்மணிகளை குருவிகள் முழுவதும் சேதப்படுத்தி விடும். அதனால் தினமும் இரண்டு வேளையும் இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது,” என்று அந்த பெண் விவசாயி வேதனையுடன் தெரிவித்தார். தன் உழைப்பின் பலனை காக்க, இயற்கையோடு போராடும் இந்த பெண் விவசாயியின் விடாமுயற்சி, கிராமப்புற விவசாய வாழ்க்கையின் சவால்களை வெளிப்படுத்துகிறது.1
- அன்னவால் அருகே 3 வைக்கோல் போர்கள் தீயில் எரிந்து நாசமானாது தீயணைப்புதுறை வீரர்கள் விரைந்து வந்து மேலும் தீபரவாமல் அனைத்தனர். அன்னவாசல் அருகே உள்ள காட்டுப்பட்டியை சேர்ந்தவர்கள் இளங்கோவன், லெட்சுமி, வசந்தா, இவர்களுக்கு சொந்தமான வைக்கோல் போர்கள் ஊரிற்குள் மைய பகுதியில் அடுத்தடுத்து உள்ளது இந்த 3 வைக்கோல் போர்களும் அடுத்தடுத்து திடிரென தீ பிடித்தது. இதில் மலமலவென பிடித்த தீயினால் 3 வைக்கோல் போர்களும் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்புதுறை வீரர்கள் போராடி மேலும் தீபரவாமல் தீயை அனைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது1
- மயான கொள்ளை என்பது மாசி மாத அமாவாசையன்று சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதைக் குறிக்கும் வகையில் அங்காள பரமேஸ்வரி அம்மனை வழிபடும் திருவிழாவாகும். பிரம்மாவின் ஆணவத்தை அழித்து, அவரது மண்டை ஓட்டைத் தன் காலால் மிதித்து மயானத்தில் அம்மன் நிலைநிறுத்திய நிகழ்வை இது உணர்த்துகிறது. இந்த விழா, முக்கியமாக வட தமிழ்நாட்டில் மேல்மலையனூர் போன்ற இடங்களில் சிறப்பாக நடைபெறும். விழாவில் காஞ்சிபுரத்தில் பல்வேறு பகுதிகளில் மக்கள் திரளாக கலந்து கொண்டு மயான கொள்ளை விழாவில் சிறப்பு பூஜை செய்து பக்தர்களும் பொதுமக்களும் வழிபட்டனர்.1
- Post by Vinayagam Vinayagam1
- திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த துவரங்குறிச்சி தெத்தூர் அருகே உள்ள மான் பாஞ்சான்பட்டியில் குடியிருப்பு நிறைந்த பகுதியில் பாம்பு ஒன்று உலா வந்ததுள்ளது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் - அதிர்ச்சி அடைந்து உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பு பிடிக்கும் கருவி உதவியுடன் மலை பாம்பினை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அதை வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதியில் விடுவித்தனர்.1
- பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சடன் பிரேக் அடித்து நின்ற லாரி மீது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் கன்டெய்னர் லாரி டிரைவர் இடுப்பாடுகளில் சிக்கி படுகாயம். தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் லாரியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஓட்டுநரை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாயில் சுமார் அரை மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிப்பு __________ பெங்களூர் சென்னை மார்கமாக நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த தேசிய நெடுஞ்சாலை கடந்து செல்கின்றது. இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே வெள்ளகேட் பகுதியில், வேலூரில் இருந்து சென்னை மார்கமாக சென்று கொண்டு இருந்த கண்டெய்னர் லாரி ஒன்று, "முன்னாள் சென்ற லாரி திடீரென சடன் பிரேக் போட்டு நின்ற காரணத்தினால்" அதன் மீது கன்டெய்னர் லாரி பயங்கரமாக மோதியது. மோதிய விபத்தில் கன்டெய்னர் லாரி முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த இடுப்பாடுகளில் கண்டெய்னர் லாரியின் ஓட்டுனர் சிக்கி கொண்டு உயிருக்கு க்கு போராடிக் கொண்டிந்தார். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் கிரேன் உதவியுடன் இடுப்பாடுகளில் சிக்கியிருந்த கன்டெய்னர் லாரி ஓட்டுனரை மிகவும் சிரமப்பட்டு வெளியே எடுத்தனர். இந்த விபத்தில் கன்டெய்னர் லாரி ஓட்டுனரின் கால் உடைந்து படு காயத்துடன் இருந்தவரை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளை கேட் அருகே சுமார் 30 நிமிடத்திற்க்கு மேல் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. முன்னால் சென்ற லாரி டிரைவரின் அஜாக்கிரதையினால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக பேட்ரோல் காவல்துறையினர் தெரிவித்தனர்.1
- காஞ்சிபுரத்தில் சமூதயா கர்ப்பிணி தாய்மார்களின் வளைகாப்பினை தொடக்கி வைத்தார் கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பில், சமுதாய வளைகாப்பு விழாவினை நடத்தி வைத்து, 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்கள். சீர்வரிசை பொருட்களை பெற்ற கர்ப்பிணி தாய்மார்கள் கூறுகையில்: எங்கள் வீட்டில் இதுவரை வளைகாப்பு நிகழ்ச்சி மண்டபங்களில் வைத்து மிகச் சிறப்பாக செய்தது இல்லை. எனக்கு வளைகாப்பு நிகழ்ச்சி மண்டபத்தில் வைத்து செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னை போன்று ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கும் இதுபோன்று வளைகாப்பு நடைபெற்றால் அவர்களும் மகிழ்ச்சியடைவார்கள் என்றும், இந்த நிகழ்ச்சியின் மூலம் நாங்கள் மனமகிழ்ச்சி அடைவதுடன் நல்ல ஆரோக்கியமான குழந்தை பெறுவதற்கும் நல்லதொரு சூழ்நிலை ஏற்படுகின்றன தமிழ்நாடு அரசு இதுபோன்று பல திட்டங்கள் ஏற்படுத்தி செய்வது பொருளாதார வசதியற்ற எங்களை போன்றவர்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்களுடைய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் பா. முருகேசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் சார் ஆட்சியர் ஆஷிக் அலி, காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்தலைவர் நித்தியா சுகுமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா.மலர்விழி, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள். அரசு அலுவலர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1
- Post by Vinayagam Vinayagam1