Shuru
Apke Nagar Ki App…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி சிறுத்தை ஜோதிமணி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து குமராட்சி பகுதியில் தமிழர் திருமாவளவன் தீவிரவாத சேகரிப்பு
Dhamodharan R
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி சிறுத்தை ஜோதிமணி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து குமராட்சி பகுதியில் தமிழர் திருமாவளவன் தீவிரவாத சேகரிப்பு
More news from தமிழ்நாடு and nearby areas
- மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துவரங்குச்சியில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் மனித நேயம் கட்சி வேட்பாளர் அப்துல் சமது அவர்களை ஆதரித்து செல்வகுமார் இன்று துவரங்குறிச்சி பூதநாயகம் கோவில் அருகில் உள்ள நாடக மேடையில் பேசும்போது பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் முத்தரைய சமுதாயத்தை அசிங்கப்படுத்திய ஏளனமாக பார்த்தார்கள் தமிழக முதல்வர் நல்லாட்சி நாயகன் சமூகநீதியுடன் பார்த்தார் இந்த நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு கடந்து கூட அரசியலில் புறந்தள்ள பட்டு ஒதுக்கப்பட்டு முத்தரையர் சமுதாயத்தில் சட்டமன்ற உறுப்பினராக வாய்ப்பு தந்த தாய் உள்ளம் கொண்ட முதல்வர் தான் நம்ம முதல்வர் என்று செல்வகுமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா, பழைய கோட்டை கிராமம் புறத்தாகுடியை சேர்ந்த அந்தோணி என்பவரின் மகள் ஜாஸ்மின் அந்தோணி பிரியா (40). இவர் பிறந்ததிலிருந்து மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவரின் தந்தை அந்தோணி கடந்த 2000 ஆம் ஆண்டும், தாயார் ஆரோக்கியமேரி கடந்த 2016 ஆம் ஆண்டும் இறந்துவிட்ட நிலையில், அவரின் பெரியப்பா மகனான ஜான்பால்ராஜ் என்பவரின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று 20.04.2026 மதியம் சுமார் 15:30 மணியளவில் தனது வீட்டின் பின்பக்கம் குளிக்க செல்லும் போது, சுமார் 2½ அடி தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்து விட்டார். இதை அறிந்த வையம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.1
- சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ராஜேந்திரனுக்கு ஆதரவாக, பிரபல நகைச்சுவை நடிகர் திருப்பாச்சி பெஞ்சமின் கடந்த 10 நாட்களாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து சேலம் வின்சென்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இது குறித்து நடிகர் பெஞ்சமின் கூறும் போது அமைச்சர் ஈடுபட்ட தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு தற்போது மருத்துவர்களின் தீவிர முயற்சியால் சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் இருப்பதாகவும், வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக முழுவதும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.1
- திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியில் தேர்தலை முன்னிட்டு நாளை (21.04.2026) முதல் மூன்று நாட்கள் டாஸ்மாக் மதுபானக் கடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பொதுமக்கள் பெருமளவில் திரண்டனர். விடுமுறை நாட்களை முன்னிட்டு மதுபானங்களை முன்கூட்டியே வாங்குவதற்காக மக்கள் அதிக அளவில் கடைகளுக்கு வருகை தந்ததால், பல இடங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. இதனால் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதற்காக காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் விதிமுறைகளின்படி அடுத்த சில நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதால், இந்த கூட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் ஒழுங்காக நடந்து கொள்ளவும், தேவையற்ற நெரிசலை தவிர்க்கவும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1
- மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெங்கடாஜலத்தை ஆதரித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மேச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அதே பகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யா ராணி வீரப்பன் திடீரென தனது ஆதரவாளர்களுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறியோ அல்லது பிரச்சாரத்திற்கு இடையூறு விளைவித்ததாகவோ கூறப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வித்யா ராணியை அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வடமதுரை மேற்கு ஒன்றிய பகுதிகளில் இன்று வேடசந்தூர் அதிமுக வேட்பாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் மக்களோடு மக்களாக தேவராட்டம் ஆடி பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார். அதிமுக ஆட்சியின் சாதனைகளையும் தேர்தல் வாக்குறுதிகளையும் மற்றும் வடமதுரையில் அதிமுக ஆட்சி காலத்தில் செய்த மேம்பாட்டு பணிகளையும் மக்களிடம் எடுத்துக் கூறி தீவிர பிரச்சாரம் செய்தார். இந்நிகழ்வில் வேடசந்தூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1
- சேலம் கோரிமேட்டில் பாமக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டு பாமக தலைவர் அன்புமணி, சேலம் வடக்கு தொகுதியில் எம்எல்ஏவாகவும் அமைச்சராகவும் உள்ள ராஜேந்திரன் இதுவரை இந்த தொகுதிக்கு என்ன செய்துள்ளார், கொள்ளையடிப்பவர்களுடன் கூட்டி வைத்துக் கொண்டு கமிஷன் வாங்கி அவர்களுக்கு ஆதரவாக தான் செயல்பட்டுக் கொண்டு உள்ளார். இந்தத் தொகுதி முன்னேற்றத்திற்காக இதுவரை எந்த நன்மையும் செய்யாத அவர், மறுபடியும் தேர்தலில் நிற்பதற்கு உங்களிடம் வாக்கு கேட்டு வந்தால் அவரை துரத்தி அடிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளது சேலம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.1
- மேட்டூர் அருகே மேச்சேரியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்தபோது, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யா ராணி அங்கு நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் அவரை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி, வாகனங்களைப் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். முன்கூட்டியே அனுமதி பெற்றும் போலீசார் தடுத்ததால், உரிமையோடு அன்புமணி ராமதாஸிடம் முறையிடச் சென்றதாக வித்யா ராணி கூறினார். ஆனால், அனுமதியின்றி பேரணி நடத்தியதாலும், மாற்றுக் கட்சி பிரச்சாரத்தில் நுழைந்ததாலும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணை முடிந்ததும் கைது செய்யப்பட்ட வித்தியா உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.1
- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் வாணியம்பாடி வேட்பாளர் சையத் புர்ஹானுதீன் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து நடனமாடி பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர் இதில் நகர நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1