தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் சிறுபான்மையின மக்களுக்காக செயல்படுத்தப்படும் தனிநபர் கடன், சுய உதவி குழுக் கடன், விராசத் (கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம்) மற்றும் கல்விக் கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டும் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் குறைந்த வட்டி விகிதத்தில் இக்கடன் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இந்தக் கடன் திட்டங்கள், பயனாளிகளின் வருமானத்தின் அடிப்படையில் திட்டம்-1 மற்றும் திட்டம்-2 என வகைப்படுத்தப்பட்டுள்ளன. திட்டம்-1-இன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் ரூ.3,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். திட்டம்-2-இன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000/- வரை இருக்க வேண்டும் (திட்டம்-1-இன் கீழ் பயன் பெற முடியாத நபர்களுக்கு). தனிநபர் கடனைப் பொறுத்தவரை, திட்டம்-1-இன் கீழ் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ.20,00,000/- வரையிலும், திட்டம்-2-இன் கீழ் ஆண்களுக்கு 8% மற்றும் பெண்களுக்கு 6% வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ.30,00,000/- வரையிலும் கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கான விராசத் திட்டத்தின் கீழ், மூலப்பொருட்கள், உபகரணங்கள், கருவிகள், இயந்திரங்கள் வாங்க அதிகபட்சமாக ரூ.10,00,000/- கடன், ஆண்களுக்கு 5% மற்றும் பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழுக் கடனாக நபர் ஒருவருக்கு ஆண்டுக்கு 7% வட்டி விகிதத்தில் ரூ.1,00,000/- வழங்கப்படுகிறது. திட்டம்-2-இன் கீழ், சுய உதவிக் குழுவில் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000/- கடன், ஆண்களுக்கு 10% மற்றும் பெண்களுக்கு 8% வட்டி விகிதத்தில் கிடைக்கும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுநிலை, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்கு, திட்டம்-1-இன் கீழ் 3% வட்டி விகிதத்தில் ரூ.20,00,000/- வரையிலும், திட்டம்-2-இன் கீழ் மாணவர்களுக்கு 8% மற்றும் மாணவியருக்கு 5% வட்டி விகிதத்தில் ரூ.30,00,000/- வரையிலும் கல்விக்கடனுதவி வழங்கப்படுகிறது. தனிநபர் கடன், சுய உதவி குழுக் கடன், விராசத் கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க மதச்சாதிச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை அல்லது இருப்பிடச் சான்றிதழ், ஆதார் அட்டை, திட்ட அறிக்கை மற்றும் வங்கிகள் கோரும் இதர ஆவணங்கள் தேவை. கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க மதச்சான்றிதழ்/சாதிச் சான்றிதழ் நகல், வருமானச் சான்றிதழ்/இருப்பிடச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை, ஆதார் அட்டை நகல், உண்மையான சான்றிதழ் (Bonafide Certificate) அசல், கல்விக் கட்டண இரசீது அசல், மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். தேனி மாவட்டத்தில் வசிக்கும் கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் மதத்தினர் உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகம், மாவட்ட/மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர் கூட்டுறவு வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகிய இடங்களில் விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் சிறுபான்மையின மக்களுக்காக செயல்படுத்தப்படும் தனிநபர் கடன், சுய உதவி குழுக் கடன், விராசத் (கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம்) மற்றும் கல்விக் கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டும் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் குறைந்த வட்டி விகிதத்தில் இக்கடன் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இந்தக் கடன் திட்டங்கள், பயனாளிகளின் வருமானத்தின் அடிப்படையில் திட்டம்-1 மற்றும் திட்டம்-2 என வகைப்படுத்தப்பட்டுள்ளன. திட்டம்-1-இன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் ரூ.3,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். திட்டம்-2-இன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000/- வரை இருக்க வேண்டும் (திட்டம்-1-இன் கீழ் பயன் பெற முடியாத நபர்களுக்கு). தனிநபர் கடனைப் பொறுத்தவரை, திட்டம்-1-இன் கீழ் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ.20,00,000/- வரையிலும், திட்டம்-2-இன் கீழ் ஆண்களுக்கு 8% மற்றும் பெண்களுக்கு 6% வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ.30,00,000/- வரையிலும் கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கான விராசத் திட்டத்தின் கீழ், மூலப்பொருட்கள், உபகரணங்கள், கருவிகள், இயந்திரங்கள் வாங்க அதிகபட்சமாக ரூ.10,00,000/- கடன், ஆண்களுக்கு 5% மற்றும் பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழுக் கடனாக நபர் ஒருவருக்கு ஆண்டுக்கு 7% வட்டி விகிதத்தில் ரூ.1,00,000/- வழங்கப்படுகிறது. திட்டம்-2-இன் கீழ், சுய உதவிக் குழுவில் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000/- கடன், ஆண்களுக்கு 10% மற்றும் பெண்களுக்கு 8% வட்டி விகிதத்தில் கிடைக்கும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுநிலை, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்கு, திட்டம்-1-இன் கீழ் 3% வட்டி விகிதத்தில் ரூ.20,00,000/- வரையிலும், திட்டம்-2-இன் கீழ் மாணவர்களுக்கு 8% மற்றும் மாணவியருக்கு 5% வட்டி விகிதத்தில் ரூ.30,00,000/- வரையிலும் கல்விக்கடனுதவி வழங்கப்படுகிறது. தனிநபர் கடன், சுய உதவி குழுக் கடன், விராசத் கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க மதச்சாதிச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை அல்லது இருப்பிடச் சான்றிதழ், ஆதார் அட்டை, திட்ட அறிக்கை மற்றும் வங்கிகள் கோரும் இதர ஆவணங்கள் தேவை. கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க மதச்சான்றிதழ்/சாதிச் சான்றிதழ் நகல், வருமானச் சான்றிதழ்/இருப்பிடச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை, ஆதார் அட்டை நகல், உண்மையான சான்றிதழ் (Bonafide Certificate) அசல், கல்விக் கட்டண இரசீது அசல், மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். தேனி மாவட்டத்தில் வசிக்கும் கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் மதத்தினர் உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகம், மாவட்ட/மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர் கூட்டுறவு வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகிய இடங்களில் விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.
- தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சன்னாசி (34) என்பவர், தனது மனைவி தனலட்சுமி மீது திருமண மோசடி புகார் அளித்துள்ளார். தனலட்சுமி தன்னை ஏமாற்றி, நகைகளை அபகரித்து, தற்போது வேறொருவருடன் நான்காவது திருமணம் செய்துகொண்டதாகவும், காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சன்னாசி குற்றம்சாட்டியுள்ளார். ஓட்டுனராகப் பணிபுரியும் சன்னாசி, 2024 ஆம் ஆண்டு தேனி அம்மாபுரத்தைச் சேர்ந்த தனலட்சுமியை திருமணம் செய்துள்ளார். இருவரும் ஒன்றாக வசித்து வந்த சமயத்தில், சன்னாசி பணி நிமித்தமாக வெளியூர் சென்றபோது, தனலட்சுமி வீட்டில் இருந்த 6 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு தனது அம்மா வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் வீடு திரும்பிய சன்னாசி நகைகள் குறித்து கேட்டபோது, அவற்றை அடமானம் வைத்திருப்பதாகவும், மீட்டுத் தருவதாகவும் தனலட்சுமி கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளார். தனலட்சுமி வீட்டிற்கு வராமலும், நகைகளைத் திருப்பிக் கொடுக்காமலும், தனது மனைவியும் அவரது தாயாரும் தன்னை ஏமாற்றி வந்ததாகவும் சன்னாசி குறிப்பிட்டுள்ளார். நேரில் சென்று கேட்க முயன்றபோது, தனது மனைவி கோயம்புத்தூர் சென்றுவிட்டதாக அவரது தாயார் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பின்னர் விசாரித்ததில், தனலட்சுமி கோயம்புத்தூரில் வேறு ஒரு நபரை திருமணம் செய்துகொண்டு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்ததாக சன்னாசி கூறியுள்ளார். தனக்கு முன்னால் தனலட்சுமி இரண்டு நபர்களை திருமணம் செய்து அவர்களிடமிருந்தும் நகைகளைப் பறித்து ஏமாற்றியுள்ளதாகவும், இப்போது தன்னிடமும் நகைகளை அபகரித்து கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒருவரை நான்காவது திருமணம் செய்துகொண்டு தன்னை ஏமாற்றியதாகவும் சன்னாசி புகார் தெரிவித்துள்ளார். தன்னைப்போல் வேறு யாரும் ஏமாறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தேனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், மோசடி செய்த தனது மனைவி மற்றும் அவரது தாயார் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனது நகைகளை மீட்டுத் தர வேண்டும் என்றும் சன்னாசி கோரிக்கை விடுத்துள்ளார்.1
- தேனி மாவட்டம் பெரியகுளம் செங்கரையில் அமைந்துள்ள 1500 ஆண்டு பழமையான அருள்மிகு பாலசுப்பிரமணியம் திருக்கோவிலில், இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு யாக பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றன. கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, ஓம் என்ற வடிவத்தில் சங்குகள் அடுக்கி வைத்து சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர், வள்ளி, தெய்வானை மற்றும் முருகப்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர், விபூதி, பேரிச்சம்பழம், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. யாகசாலையில் வைக்கப்பட்ட சங்குகளில் உள்ள தீர்த்தங்களைக் கொண்டு 108 சங்க அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சுவாமிக்கு வண்ணப் பட்டுத் துணிகள் மற்றும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் காட்டப்பட்டன. பெரியகுளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு "அரோகரா அரோகரா" எனக் கோஷங்களை எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.1
- Post by Maatram World news Theni1
- பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, திருத்தேர் விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த முக்கிய நிகழ்வின் ஒரு பகுதியாக, அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோயிலின் தேரோட்டமும் இன்று சிறப்பாக இடம்பெற்றது. திருத்தேர் விழா நடைபெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.1
- திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகாவில் உள்ள சித்தரேவு ஊராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பிற பகுதிகளிலும் தற்போது கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலூகா பகுதியில் கடும் வெயிலின் காரணமாக அதிக வெப்பம் நிலவி வந்த நிலையில், தற்போது சித்தரேவு ஊராட்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது. மேலும், விவசாயத்திற்கு மிகவும் ஏற்ற மழையாக இது அமைந்திருப்பதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- மதுரை போக்குவரத்து காவல் உதவி ஆணையர் செல்வின் அவர்களின் பணி நிறைவு நிகழ்வு இன்று (மே.30) மதுரை தெப்பக்குளம் காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் காவல்துறை உயர் அதிகாரிகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு உதவி ஆணையர் செல்வின் அவர்களின் சிறப்பான பணியைப் பாராட்டி, அவருக்கு பொன்னாடை அணிவித்து பரிசுப் பொருட்களை வழங்கி வழியனுப்பி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய போக்குவரத்து காவல் உதவி ஆணையர் செல்வின், தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கும் பாராட்டுக்களுக்கும் நெகிழ்ச்சியுடன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.1
- பெரியகுளத்தில் உள்ள அருள்மிகு பாலசுப்ரமணியர் கோவிலில் வைகாசி விசாக திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை அமைக்கப்பட்டு, 'ஓம்' என்ற வடிவத்தில் 108 சங்குகள் அடுக்கப்பட்டு சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த பூஜைகளைத் தொடர்ந்து தீபாராதனைகள் நடைபெற்றன.1