Shuru
Apke Nagar Ki App…
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாள் விழா காஞ்சிபுரத்தில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் போக்குவரத்து கழகம் மற்றும் காஞ்சிபுரம் பனிமலை சார்பில், காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் 500க்கும் மேற்பட்ட வேலைக்குச் செல்லும் மக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் விநாயகமூர்த்தி, மதிவாணன், செல்வகுமார், இரவி, சரவணன், ஸ்ரீதர், கிருஷ்ணன், கந்தவேல், ஜெயராஜ், பிரபு, பாலமுருகன், செல்வம், நந்தகுமார், செல்வம், பாலா, சுரேஷ், குட்டியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, முதலமைச்சரின் பிறந்தநாள் விழாவை விமர்சியாகக் கொண்டாடினர்.
காஞ்சி குமார்
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்தநாள் விழா காஞ்சிபுரத்தில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் போக்குவரத்து கழகம் மற்றும் காஞ்சிபுரம் பனிமலை சார்பில், காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் 500க்கும் மேற்பட்ட வேலைக்குச் செல்லும் மக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் விநாயகமூர்த்தி, மதிவாணன், செல்வகுமார், இரவி, சரவணன், ஸ்ரீதர், கிருஷ்ணன், கந்தவேல், ஜெயராஜ், பிரபு, பாலமுருகன், செல்வம், நந்தகுமார், செல்வம், பாலா, சுரேஷ், குட்டியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, முதலமைச்சரின் பிறந்தநாள் விழாவை விமர்சியாகக் கொண்டாடினர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- இன்றைய தினம் பிறந்தநாள் காணும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும், தொடர்ந்து பொதுவாழ்வில் சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் இந்த வாழ்த்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.1
- தமிழக முதல்வர் C. ஜோசப் விஜய்யின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, விருத்தாசலத்தை அடுத்த கோணான்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள புனித பெரியநாயகி செவித்திறன் குறைவுடையோர் மேல்நிலைப் பள்ளியில் தவெகவினர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். விருத்தாசலம் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் சாமுவேல் கென்னடியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட செயலாளர் எருமனூர் விஜய் கலந்துகொண்டார்.1
- தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம் சார்பில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரில் மாபெரும் சிலம்பாட்ட சாலை பேரணி நடைபெற்றது. 38 மாவட்டங்களில் நடைபெறவுள்ள இந்த சிலம்பாட்டப் பேரணியை மத்திய மாவட்ட தவெக செயலாளர் சுரேஷ் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகளான கோல்டன் சுரேஷ், தென்னரசு, வேலன், ஆனந்த், டாக்டர் ஐயப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.1
- தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கொட்டுமாரன அள்ளி ஊராட்சிக்குட்பட்ட கிட்டேசம் பட்டி கிராமத்தில், பொது வழித்தடம் தொடர்பான தகராறில் விவசாயி ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் ஜூன் 21 அன்று நடந்தது. கிட்டேசம் பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் (51) என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முனியப்பன் (56) என்பவருக்கும் இடையே பொது வழித்தடம் தொடர்பாக நீண்ட நாட்களாகப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த சூழலில், முனியப்பன் அந்த வழித்தடத்தில் கொட்டகை அமைக்க முயன்றபோது, மாரியப்பன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், முனியப்பன் மற்றும் அவரது பேரன்களான திவாகர் (20) மற்றும் ஜெய் தீபன் (19) ஆகியோர் சேர்ந்து இரும்பு கம்பியால் மாரியப்பனை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் மாரியப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். இது குறித்து மாரியப்பனின் மனைவி வாணி அளித்த புகாரின் பேரில், காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முனியப்பன் மற்றும் அவரது இரண்டு பேரன்களையும் கைது செய்தனர்.1
- கட்டா குஸ்தி திரைப்படம் வரும் ஜூலை 3ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தத் திரைப்படத்தை வேல் இன்டர்நேஷனல் (Vel Intl) மற்றும் விவிஸ்டுடியோஸ் (Vvstudioz) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.1
- காட்டுமன்னார்குடியில், சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான தொடர் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்தும், பாலியல் குற்றவாளிகளுக்கு உடனடியாக தூக்கு தண்டனை வழங்கக் கோரியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் தெற்கு மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது. 21-06-2026 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் காட்டுமன்னார்குடி யூனியன் அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை இந்தப் பேரணி நடந்தது. இந்தக் கண்டனப் பேரணி TNTJ கடலூர் தெற்கு மாவட்டத் தலைவர் ஃபஹத் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலைவர் மஹ்பூப், செயலாளர் ஜபருல்லாஹ், பொருளாளர் அப்துல் அஹத், துணைச் செயலாளர் மைதீன், மருத்துவ அணிச் செயலாளர் அப்துல்லாஹ், மாணவர் அணிச் செயலாளர் அசார், தொண்டர் அணிச் செயலாளர் யாசீன் ஆகியோர் உட்பட 800-க்கும் அதிகமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் எனப் பெருந்திரளான பொதுமக்கள் கண்டனக் கோஷங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் கலந்து கொண்டனர். மாநிலச் செயலாளர் அல் அமீன் அவர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்று இறுதியில் கண்டன உரை ஆற்றினார்.1
- தூத்துக்குடியில், தூத்துக்குடி விமான நிலையம் அருகே உள்ள வாகைகுளம் பகுதியில் சூறைக்காற்றுடன் கூடிய புழுதிப்புயல் ஏற்பட்டது. இந்த நிகழ்வின் பிரத்யேக காட்சிகள் வெளியாகியுள்ளன.1